திங்கள் முதல் வெள்ளிவரை
நெடுந்தொடர்களின்
நாயகிகளின்
குடும்பப் பிரச்சினைகளில்
ஒன்றிப்போன மனைவி
வார விடுமுறையின் துவக்கத்தில்
காரணமின்றி கோபித்துக்கொண்டு
மகளின் அறையில் படுத்துக்கொள்ள
என்னுடன் படுத்துக்கொண்ட
சின்னவன்
நெடுநேரமாகியும்
தூக்கமில்லாமல்
என் தோளிலேயே தவித்திருந்தான்
டைனோஸர் கதை
கேசம் துழாவிய வருடல்
என
எந்த முயற்சியும்
அவனுக்குத் தூக்கம் வரவழைப்பதில் தோற்க
சட்டென எழுந்து
மேசையின் இழுவரையில்
மடித்திருந்த
மனைவியின்
இரவு அங்கி ஒன்றை
எடுத்துவந்து
அதன்
முன்கழுத்து வளைவில் தொங்கிய
நாடாக்களின் குஞ்சத்தினை
நெருடிக்கொண்டிருந்தவன்
சடுதியில் உறங்கிப்போனான்
புதுமையான வடிவங்களிலும்
எழிலான வண்ணங்களிலும்
எத்தனையோ
நவீன
கவர்ச்சியான இரவு அங்கிகள்
வந்துவிட்டப்போதிலும்
அந்தக்
குஞ்சம் வைத்த
பழைய வடிவத்து அங்கியையே
அவள் தேடித்தேடி வாங்கியது நினைவுக்கு வர
அடுத்த அறைக்குச் சென்று
அவன் அம்மாவின்
ஆழ்ந்த உறக்கத்தை
நெடுநேரம்
பார்த்துக்கொண்டு நின்றேன்.
——————————————-
- கட்டாய உழைப்பு முகாம்களை சீர்திருத்த போவதாக சீனா கூறுகிறது.
- கணேஷ் vs மூன்றாம் பேரரசு – நாடக அறிமுகம்
- ‘எனது பர்மா குறிப்புகள்’ பற்றிய ஒரு வாசகனின் சில குறிப்புகள்
- சென்னை 2013ம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் என்னுடைய 4 நூல்கள்
- மெய்ப்பொருள்
- ‘கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நூல் வெளியீடு
- தேவமுகுந்தன் – ஒரு புதிய வரவு ஒரு புதிய குரல்
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -42
- இட்லிப்பாட்டி
- செவ்விலக்கியங்களில் பரத்தையர்
- முகம்
- சரித்திர நாவல் “போதி மரம்” பாகம் 1- யசோதரா அத்தியாயம் 3
- ராம்சரண் ( தெலுங்கு மொழி மாற்றப் படம் )
- மணிராமின் “ தமிழ் இனி .. “
- அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் தமயந்தியின் குரல்
- பெண்ணுடலும் பாலியல் வன்முறையும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……….12 க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’
- பொல்லாதவளாகவே
- வால்ட் விட்மன் வசனகவிதை -6 ஒரு நூலை வாசிக்கும் போது (When I Read the Book)
- சாதி….!
- “சேர்ப்பிறைஸ் விசிட்” – சிறுகதை
- மணலும், (வாலிகையும்) நுரையும் – 7
- தாகூரின் கீதப் பாமாலை – 48 நான் பிரியும் வேளையில்
- அம்மாவின் அங்கி!
- அக்னிப்பிரவேசம்-18
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -1 பாகம் -1 மூன்று அங்க நாடகம் [முதற் காட்சி]
- இன்னொரு வால்டனைத் தேடி…..
- சாய்ந்து.. சாய்ந்து
- “சின்னப்பயல் எண்டால் சரியாகத்தானிருக்கு”
- சுரேஷ்குமார இந்திரஜித் ”நானும் ஒருவன்” (புதிய சிறுகதைத் தொகுப்பு) ஒரு வாசிப்பனுபவம்
- ஐன்ஸ்டைனின் பிண்ட சக்தி சமன்பாடு (E=mc^2) வளைந்த பிரபஞ்சக் கால வெளியில் பயன்படுமா ?
- இரு கவரிமான்கள் – 5
சபீர்,
நன்றாக இருக்கிறது. ஆனாலும் கவிதையை சற்று இறுக்குங்கள். உதாரணமாக கடைசி பத்தி தேவையற்றது. கவிதையில் ‘பேச’ ஆரம்பிக்காதீர்கள், ‘காட்ட’, ‘உணர்த்த’ நினையுங்கள்.
ஒரு வாசகனாய் எனது இரு சதங்கள், அவ்வளவே, தவறாக நினைக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன் :)
திரு முத்துக்குமார் .
உங்கள் கருத்தில் தவறு இல்லை அது வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.
அன்புள்ள அலி,
வாசகர்கள் அனைவருக்கும் பயனுள்ளதான ஒரு எழுத்து இருக்கவே முடியாது. கவிதை-யின் வடிவமே வேறு. உரைநடையை மடித்து மடித்து (கணினியில் எழுதும்போது சில வார்த்தைகளுக்கு ஒருமுறை Enter விசையை தட்டி) எழுதுவது கவிதையாகாது.
கவிதையில் வாசகனின் பங்கேற்பு அவசியம். சொன்னவற்றில் இருந்து சொல்லாத பலவற்றை கற்பனை செய்து விரித்துப்புரிந்துகொள்ள இடம் வேண்டும். எல்லாவற்றையும் விளக்கமாக எழுத கட்டுரை போதும். கவிதை தேவையில்லை. ‘சுருங்கச்சொல்லி விளங்கவைத்தல்’ கவிதையின் குணங்களுள் ஒன்று.
உதாரணத்துக்கு ஒரு குறள் :
கழாக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாத்துப் பேதை புகல்
இதில் கழாக்கால், பள்ளி போன்ற வார்த்தைகளை கற்பனை மூலம் விரிவாக பொருள் விளக்கம் கொள்ள இயலும்.
அன்பிற்குரிய பொன்.முத்துக்குமார் அவரகளுக்கு,
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி. கவிதையை இறுக்கி எழுதச் சொல்வதை ஏற்கிறேன். அப்படியே இனி முயற்சிப்பேன். தங்களின் கற்றுத்தரும் பாணி பிடித்திருக்கிறது. மறுபடியும் நன்றி.
என் பார்வையில் கவிதை என்பது குறைந்தபட்சம் ஓர் உணர்வை அல்லது ஒரு பொருளையாவது உள்ளடக்கி இருக்க வேண்டும். அதைத் தெளிவாக, இலகுவாக வாசிப்பவருக்குள் புகுத்திவிட வேண்டும். அவ்வளவே.
இந்தப் பதிவில் அம்மா மேலான மகனின் ஈர்ப்பை மட்டும் சொல்லி நிற்க நினைத்திருந்தால் கடைசி பத்தி அவசியம் இல்லைதான். நானோ, அம்மாவுக்கு மகனின்மீதான அன்பையும் மகனின் நிம்மதியான உறக்கத்தின் அவசியத்தையும் சொல்ல நினைத்தேன்.
நீங்கள் மேற்சொன்ன குறள் ஒரு விதம் எனில், எனக்குப் பிடித்தது “சின்னச் சின்ன ஆசை; சிறகடிக்க ஆசை” என்று எதையும் மறைக்காமல், உள்ளடக்காமல், சுவையாகப் பேசிச்செல்லும் இலகுவான கவிதைகள்தான்.
மாறுபட்ட ரசனை குறைபாடாகாது என்பதைச் சொல்வது என் கடமை.
அன்புள்ள சபீர்,
நன்றி. கவிதையில் எல்லாவற்றையும் சொல்ல தேவையில்லை. அதற்கு கட்டுரை என்ற வடிவம் இருக்கிறது. நீங்கள் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் செறிவாக எழுதலாம் (‘தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் மூழ்கி இருக்கும் என் மனைவி வார இறுதியில் பிரச்சினையில் கோபித்துக்கொள்ள, சின்னவன் என்னுடன் படுத்துக்கொள்ள நேர ….. பலவண்ண நவீன வடிவ அங்கிகள் இருப்பினும் குஞ்சலம் வைத்த பழையபாணி அங்கியை என் மனைவி தேடி தேடி வாங்கியது நினைவுக்கு வந்தது’ என்பது போல)
கவிதையில் வாசகனின் பங்கேற்பு அவசியம். அவன்மேல் கொஞ்சம் நம்பிக்கை வைக்கலாம் நீங்கள் :) நீங்கள் சொல்லாதவற்றையும் கற்பனை செய்து புரிந்துகொள்ள இயல்பவன்தான் வாசகன். எல்ல்ல்ல்லாவற்றையும் நீங்கள் சொல்லிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பவன் கவிதை படிப்பவன் மட்டுமே, வாசகன் அல்ல.
மறுபடியும் சொல்கிறேன், எல்ல்லாவற்றையும் சொல்லி விளக்கி விளக்கி சொல்ல கவிதை தேவை இல்லை. கட்டுரை போதும். எழுத்தின் ஒவ்வொரு வடிவத்திற்கும் அதற்கே உரிய தேவையும், வடிவமும் பேசுபொருளும் உண்டு.
மறுபடி நன்றி.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.