செந்தில்… சந்தைக்குப் பல வழிகள்… தனியார் கடைப் பொருளுக்கு பொது வீதியன்றி… வேறுவழியில்லை… சன்னிதானத்திற்க்கு ஏது வழி? எதற்க்காக இத்தனை வழிகள்? தெற்க்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி…சந்தை களைகட்டுகிறது…கோவில் சன்னிதானத்திற்க்கு செல்லும் வழிகள் ஆயினும்… கடை விரித்தும்கருத்துளம் கொள்வாரின்றிசந்தை விட்டு சயனக்கிரகம் வீற்றிருக்கும்உண்மைப் பொருள் ஓங்குயர்பெருமாள் நோக்கிதான் நகரும் எவ்வழியும்.. தனி வழி ஏதும் இல்லைவைகுந்தப் பெருமாளுக்கு என்றுணர்த்தத்தான்இப்படி பலப்பல பொது வழிகள்… உண்மைக்கு ஏது ஒரு வழி…படிகள் இல்லா உலகிற்க்குதிசைகள் இல்லா […]
அமீதாம்மாள் மகள் வீட்டில் எல்லாருக்கும் கொரொனா விமானத்தைத் தவறவிட்டு தவிக்கிறான் மகன் தைவானில் மனைவி தாலிக்கொடியில் தாயத்தைக் காணோம் இலக்கியப் பரிசுக்கு என் நூல் தேர்வு இணையத் திருட்டில் என் இரண்டாயிரம் காணோம் பள்ளியில் விபத்தாம் மருத்துவமனையில் பேத்தி நன்கொடைக்கான என்நூல் வெளியீட்டில் பத்தாயிரம் திரண்டது மாத்திரை போதாதாம் சர்க்கரைக்கு இனி இன்சுலினாம் கிழிபட்டு கிழிபட்டு தைக்கப்படுகிறது வாழ்க்கை வாசலில் நித்தியகல்யாணி எல்லாநாளுமே புதுப்புதுப் பூக்களால் சிரிக்கிறது
முரளி அகராதி காய்ந்து உதிர்ந்ததால் சருகுகள் சவமாய் காற்றினால் காதல்வயப்பட்டு கடத்திச் செல்லப்படுவதாகவே உயிர்பிக்கப்படுகிறது
முரளி அகராதி நெடுநேரம் கொண்ட முத்தத்தில் கணநேரம் யோசிக்கலானேன். இப்படியே இருந்த இடத்திலே வெகுதூரம் பயணிக்கலானோம். இலக்கில்லை என்றறிந்தும் வழிமறக்க வகைசெய்யக் கூடும். இறுதிவரை வழி தேடியே நிதம் வாழ வேண்டும்.
சி. ஜெயபாரதன், கனடா ஆப்பம் சுட்டுத் தின்ன முதலில் அகிலம் ஒன்று உருவாக வேண்டும். எப்படித் தோன்றியது நமது அற்புதப் பிரபஞ்சம் ? தற்செயலாய் உண்டானதா ? தானாய் உருவாக வில்லை யா ? சூனியத்தில் வடிவாக வில்லை, நியூட்டன் புற இயக்கி முடுக்க கரும் பிண்டம், கருஞ்சக்தி இருந்தன மறைவாய். பூகோளம். சூரிய மண்டலத்தில் பயிரினம் விளைந்திடவும் உயிரினம் உருவாக பூமி மட்டும் ஏன் சீராக அமைப்பானது காரண நிகழ்வு நியதியால். பூரணத் திறனுடை மானுடம், பூமியில் மட்டும் தோன்றியது […]
சி. ஜெயபாரதன், கனடா சிறுமூளை ! ஆத்மாவைத் தேடித் தேடி மூளை வேர்த்துக் கலைத்தது ! மண்டை ஓட்டின் மதிலைத் தாண்டி அண்டக் கோள்களின் விளிம்புக்கு அப்பால் பிரபஞ்சக் காலவெளி எல்லை கடக்க முடியாமல் தவழ்ந்து முடக்கம் ஆனது, சிறுமூளை ! பெரு மூளை தூங்கிக் கொண்டுள்ள பெரு மூளை, தூண்டப் பட்டு எப்போது ஆறறிவு ஏழாம் அறிவாய்ச் சீராகுமோ, எப்போது போதி மரம் தேடிப் போய் தாடி வளர்ந்து, நரை உதிர்ந்து வாடிப் பல்லாண்டு தவமிருக்குமோ அப்போது ஓர் பெரு வெடிப்பு நேர்ந்து கீழ்வானம் சிவந்து ஆத்மா சிந்தையில் […]
கனவுகள் நம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் காலத்தை வெல்லக்கூடியது. யார் சொன்னது “காலத்தை கடக்க முடியாது என்று “? நம் தாத்தா , பாட்டி சொன்ன ; சொல்லிக்கேட்ட கதைகள் -ஏராளம் ,ஏராளம். இந்த கதைகளை காலத்தின் எல்லையை வைத்து நிர்ணயிக்க முடியாது. நான் ஒரு நாள் என்பாட்டியிடம் கேட்டேன். கடவுள் யார்? கண்ணை மூடிப்பார் கடவுள் தெரிவார்!!! கண்ணை மூடினேன், தெரியவில்லை என்றேன். திரும்பவும் செய்யச் சொன்னாள் என் அம்மாச்சி!!! நான் ‘கவிஞர் இல்லை’ கடவுளை […]
சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு தேரை ஒலியில் பசலை நோன்ற சேயிழை இறையின் செறிவளை இறங்க சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ காந்தளஞ்சிறு குடி கௌவை முரல பல்லியம் கறங்க பாழ்நீடு இரவின் அரிவாய் குரலின் அஞ்சிறைப்பூச்சி பகுவாய்த் தெள்மணி அலம்பல் மாக்கடல் ஓதம் நிறைத்தன்ன பாயல் பரவி ஊடிய நுண்மாண் நுழை ஊசி ஊர்பு துன்பியல் செவ்வழி உய்த்த […]
____________________________________ ருத்ரா சாட்ஜிபிடி எனும் செயற்கை மூளை பல்கலைக்கழகம் எனும் அடிப்படைக்கட்டுமானத்தையே அடித்து நொறுக்கி விட்டது. தேர்வு எழுத வரும் மாணவர்கள் இந்த செல்லமான பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு புயல் கிளப்புகிறார்கள். உண்மை அறிவு காணாமல் போய்விட்டது. செயற்கை அறிவின் இந்த கருவி வெறும் மண்ணாங்கட்டியைக்கூட நோபல் பரிசு வாங்க வைத்து விடும். மனிதர்களின் மூளையின் நிழலே இனி ஆட்சி செய்யும். அமெரிக்க பள்ளிக்கூடங்கள் மாணவர்கள் இந்த சேட்ஜிபிடியை பயன்படுத்த தடை விதித்துக்கொண்டிருக்கிறது. கணினியுகம் கண்மூடித்தன்மான ஒரு யுகத்துள் […]
கு.அழகர்சாமி (1) பாழ் ஒன்றும் இல்லாதிருத்தலே இருத்தலாகிய இருத்தல் பிடிபடாது போய்க் கொண்டே இருத்தலின் வியாபகமா? ஒன்றும் விளையாதவைகள் வேர் விட்டு கிளைத்து விளைந்த வெற்றின் வெறுங்காடா- விதானமில்லாதலிருந்து தனக்குத் தானே தூக்கிலிட்டுக் கொண்ட சூன்யம் எதுவோ அதுவா- பாழ்? (2) பொட்டல் ஊரில் தெருத் தெருவாய் சைக்கிள் விட்டுத் தேடினாலும் தேட முடியுமா, இப்போது ஊராகிப் போன, சிறு வயதில் நான் வியர்க்க வியர்க்க சைக்கிள் ஓட்டிப் பழகிய தெருக்களென்று இல்லாத பொட்டலின் ஒரே தெருவில்லாத […]
பின்னூட்டங்கள்