தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

மழை புராணம்: 27 

மழை புராணம்: 27 ஞாபகப் பருவ மழை********************************** ஐம்புலக் காகம்ஞாபகத் தோலை கொத்திப் புரட்டும்பெருந்துயருடன் மழையை கவனிக்கும்போதுயாவற்றையும் ஆனந்தமாய்க் கருதும்மழை வெள்ளிக்கொலுசுடன் குதிக்கிறது உடலை நனைத்துச் சென்ற பருவ மழை.

‘ரிஷி’ [லதாராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்

ரிஷி’  [லதா ராமகிருஷ்ணன்] யின் கவிதைகள் 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை அழுக்காக்கிவிட அவர் எறிவது இவர் கண்ணுக்குள் விழுந்துவிட…

சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதை உலகம்

ஆர் சீனிவாசன் நவீன அமெரிக்க கவிஞர்களுள் சார்லஸ் புக்கோவ்ஸ்கிக்கு தனித்துவமான இடம் உண்டு (Charles Bukowski). அமெரிக்க கவிதை இயக்கம் ராபர்ட் ஃபிராஸ்டின் உருவக படிமங்களில் துவங்கி, வால்ட் விட்மனின் கொள்கை வரிகளை கடந்து…

அதுவும் கவிதைதான்

                            வளவ. துரையன் எங்கள் அப்பா ஏரியில் துணி துவைப்பதே ஒரு கவிதைதான். பெரிய கவிதை எழுத முயல்பவர் போல அகலமான கல்லைத்தான் அவர் தேர்ந்தெடுப்பார். வழக்கமாக அது அவருக்காகக் காத்திருக்கும். பணி ஓய்வு பெற்றபின்…

கனவுகள் மொட்டைப் பாறையில் காய்ந்து கொண்டிருக்கின்றன

வசந்ததீபன் ____________________________________________ காப்பிப் பூக்கள் பூத்திருக்கின்றன.. ஒரே கசப்பு மணமாய் காற்றில். முடிவெட்டும் நிலையத்தை மூடிவிட்டு முத்துக் கருப்பன் வறண்டு கிடக்கும் ஆற்றின் நாறும் கஜகெடங்கில் மீன்பிடிக்கிறான். காச நோயில் அவதியுறும் கணவனையும் விபரமறியா…

மழை புராணம்: 26 – இரும்பு வாழ்வு

இரும்பு வாழ்வு************************* அதிக அழுத்தமின்றிவழி நடத்திக் கிடப்பதுவும்வலி மீறி உணர்வதுவும் செய்குது பார்இரவை நனைத்த மழைவிடியற்காலைக் காற்றில் மிச்ச குளிர்சூரியச் சூடு பட்டு காயும் காற்றுசற்று நேரத்தில் கவ்வி இழுபடும்மண்ணில் மாந்தர்க்குஉணர்ச்சியற்ற இரும்புவாழ்வு.- பா.சத்தியமோகன்

மௌனம் பேசும்

கடிகாரமின்றி கதவு தாண்டியதில்லை அன்றும் அப்படித்தான் காலையில் ஒரு திருமணம் பிறகு ஒரு நூல் அறிமுகம் மாலையில் சந்திப்பு இரவில் ஒரு விருந்து எல்லாம் முடித்து  வீடு வந்தேன்  கடிகாரம் பார்த்தேன் அட! அதுவே…

மழை புராணம்: 25

காலடிவிஷம் இந்த இடம் இன்னும்கொஞ்சநேரம் அமைதியுடனிருக்கும்ஆம்இரவை நனைத்து காற்றைத் தடவிகுருடனாய் நடந்த நேற்றிரவு மழையின்மிக விசித்திரமுள்ள மண் கையெழுத்தைமணல் வரிகளை எவரும்கலைக்க வராத கால்களால்இப்பிரதேசம் இன்னும் மெளனம் சூழ்ந்துள்ளதுஅதோ பேச்சு சப்தம் கேட்கிறதுகால் புதைய…

அழகுமீனாட்சியும் அரசனும்

   லாவண்யா சத்யநாதன்  ஒற்றனாயிருந்திருந்தால்  நெற்குதிரில் பொன் நிரப்பியிருக்கலாம்..  உலகைச் சுற்றி வந்திருக்கலாம்.  உல்லாசங்களில் மகிழ்ந்திருக்கலாம்.  அரசவாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.  கால்கட்டென்ற பெரியோர் சொல்பொருள்  விளங்காமல் வாய்ப்புகளை தவறவிட்டோமென்று  விரக்தியிலெண்ணாதவன் உலகிலில்லை..  குடும்பத் தலைவன் பதவி…

ஒரு ஏவுகணையின் புலம்பல்

பத்மநாபபுரம் அரவிந்தன் நானொரு ஏவுகணை எனக்கென்று மதமில்லை நாடில்லை மொழியில்லை சதையுடைந்து தெறிக்கின்ற உதிரத்தின் மணம் கூட எனக்கேதும் தெரிவதில்லை நீ நினைக்கும் இடத்திற்கு என்னை இயக்கி பெருவானில் மிகுவேகமெடுத்து நீ தகர்க்க நினைத்த உயிர்களோடு இடத்தினையும் ஒருமித்து அழித்து என்னையும் அழிக்கும் நான் ஏனென்றோ எதற்காக செய்தேனென்றோ ஒன்றுமே புரியாமல் என்னுயிர் அழிந்து கிடக்கின்றேன்.. என்னை எத்தனை பத்திரமாய் இத்தனைநாள் காத்து வந்தாய் நான் வெடித்து சிதறுகையில் பச்சிளம் குருந்துகளும் துகள்களாய் சிதறி அழிகையில்…