வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]
ஜெயானந்தன் நடைப்பயணத்தில் எதிர் திசையில் மழலை ஒன்று கையசைத்து மழலை பள்ளிக்கு தவழ்ந்தது. திரும்பிப்பார்க்கையில் ரோஜா மொட்டவிழ்த்து புன்னகை பூத்தது. முதல் மாடியில் சாருகேசி வீணை வருடினாள். மூன்றாம் மாடியில் மாலி புல்லாங்குழல் தவழ்ந்தது. நேற்று சென்ற அதே பூங்காவிற்கு சென்றேன். கொஞ்சம் பட்டாம்பூச்சிகளும் புறாக்களும் பறந்தன. சில பூக்கள் எனக்காக பூத்திருந்தன. சிலர் அமர்ந்திருந்தார்கள் யாரும் யாரோடும் பேசவில்லை. நான் என் கவிதை பிரசவத்திற்கு தவம் கிடந்தேன். -ஜெயானந்தன்.
வசந்ததீபன் வானத்தில் மிதக்கிறது குளத்தில் மிதக்கிறது என் கனவிலும் மிதக்கிறது நிலா மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான் இலக்கியம் புனைவானது கண்காணிப்பு காமிரா வருபவர்களை கண்டுபிடிக்கணும் அவள் மீது அவன் கண்காணிக்கிறான் காகிதத்தில் எழுதி மகிழ்கிறான் 500 கோடி ஆயிரம் கோடி அடித்து வெளியே எறிந்தபடியே இருந்தேன் அந்த கரப்பான்பூச்சி வந்தபடி இருந்தது தனியனான என்னோடு இருக்கட்டுமென விட்டுவிட்டேன் இருளைக் குடித்தது ஒளியாய் உருவெடுத்தது தீபத்தின் சுடர் தெருவோரத்தில் உட்காருகிறான் இந்த நாட்டுக் குடிமகன் வீடற்ற […]
வசந்ததீபன் பிச்சைப் பாத்திரம் ஏந்தித் திரிகிறான் வீடுகளெல்லாம் மூடப்பட்டிருக்கின்றன புத்தன் அலுக்காமல் அலைகிறான் பொம்மைகளிடம் பேசக் கற்றுக் கொண்டேன் குழந்தைகளிடம் பாடக் கற்றுக் கொண்டேன் கண்ணாடியிடம் சிரிக்கக் கற்றுக்கொண்டேன் கவிதைகள் பூக்கின்றன பூக்கள் பூக்கின்றன ஈர இதயம் போர்க்களம் பூக்களம் பாக்களம் மன்னிப்பதா ? தண்டிப்பதா ? மனசைக் கேட்டுச் சொல்கிறேன் புனைவுகளால் நெய்யப்பட்டது என் உள்ளம் அதிர்வுகளை தாங்காது எழுப்பிடும் சப்தம் கனவுகளையே ஜனித்துக் கொண்டிருக்கிறது குமிழியிட்டுக் கொண்டிருக்கிறது நின்றபாடில்லை தூர்ந்து போன கிணறு.
ரவி அல்லது மேகத்தைப்போர்த்தியபொழுதினில்பெய்திட்ட மழையின்எஞ்சிய துளிகளால்வெள்ளக் காடானாதுபூமிநடக்கும் மரங்களால். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
ஜெயானந்தன் தர்மராஜா கோவில் மைதானத்தின் வடக்கு ஒரத்தில் கூத்துக்கொட்டகை எப்போதும் நிற்கும், சித்திரை மாதத்தில். மணி மாமா திரெளபதி ஆட, வர்ண புடவைகளை வெய்யிலில் உலர்த்துவார் வாயில் கறீம் பீடியோடு . கட்டியங்காரனுக்கு பிஸ்மில்லா பிரியாணி வாழை இலையோடு காத்திருக்கும். காளி மார்க் கோலி சோடா பெட்டியில் நிற்கும் வரிசையாக. வாலை ஆட்டும் பேட்டை நாய்கள் எப்போதும் நிற்கும் அவரோடு. குத்தாலம் நல்லக்கண்ணு ஆர்மோனியத்தை ஸ்ருதி பார்ப்பார். மிருதங்கம் சோமு கர்ணத்தை சூடேற்றுவார். வாலாஜா வரதராஜன் தவிலுக்கு […]
சசிகலா விஸ்வநாதன் அடைக்கலம் என்று வந்தோர் அனைவரும் அவனை அடைந்து அவலம் நீத்தார். அவர் தகுதி நோக்கான்; அன்பினால் தன் தகுதி ஒன்றே தேறுவான் படகோட்டும் குகனும், சுக்ரீவ ராசனும், அசுர விபீடணும், ஒன்றே;அந்தப் பரமார்த்த பரபிரும்மத்திற்கு. சிரக்கம்பம் வைத்து இறைஞ்சிய பாஞ்சாலியும், ஒன்றுமே கேளாத வறியவன் குசேலனும் கண்ணன் கண்ணுக்கு ஒன்றே நிகர். பக்த அம்பரீசனும், பிரஹலாத சிறுவனும், உத்தவனும், விதுரனும், வீட்டுமனும்,அவன் கழலே நிழல் என்ற கொண்டு வென்றார் பரமபதம்.
சொற்கீரன் என்னைச்சுற்றிக்கொண்டுஇருக்கிறது.ஆனால் என் உள்ளெலும்புகளைஇன்னும் முறிக்கவில்லை.எனக்குள் ஊர்கிறது.என் மூளைச்செதில்களிலுமாஅது பொந்து வைக்கும்?உள்ளிருந்து ஊசிக்குருவிகளைசிறகடிக்கச்செய்கிறது.என் ஒவ்வொரு மயிர்க்கண்களிலும்வெர்ச்சுவல் பிம்பங்களைசமைத்துக்கொட்டுகிறது.சிந்தனைப்பசிக்குசோறு போடஇந்த ஆயிரம்பேரலல் யுனிவெர்ஸ் தியரியால்முடியுமா?விஞ்ஞானத்தின் பசியேவிஞ்ஞானத்துக்கு உணவு.ஆனால்இந்த அனக்கொண்டாஎன்னை இன்னும் விழுங்கவில்லை.விழுங்க முடியாதுஅதனுடைய இரையாகஇருப்பது போய்என்னுடைய இரையேஇப்போது இது தான்.அறிவுக்குஆயிரம் திசைகளிலும்வேர்!
ரவி அல்லது முளைத்துக்கிடந்த அறிவுச் செடிகள் வறண்ட நிலமென கொள்ள வைத்தது கொஞ்சம் காகிதக் குப்பைகளை கையில் திணித்து. பிரபஞ்சம் யாவருக்கும் பொதுவென பொருள் கொண்ட பொழுதும் பெரு மதிப்புக் கருணையைக் காணவே இல்லை உதிர்ந்த சொற்களைத்தவிர. மரபணுவில் பொதிந்த மாறிடாத அன்பை இழந்த தருணமொன்றில் சிலையெனத்தான் வாய்த்தது மலர்தலின் உதிர்தலென. நகலென நாற்புறமோடிய பிள்ளையின் குறும்பினை பேருவகையாக ரசித்தபொழுது நோவினையொன்றிக்காக வழிந்தோடும் கண்ணீர் கடந்த வாழ்வில் புதிதினும் புதிதுதாம். யாவினும் வியத்தலாக நோவினையை எப்புறம் காண்கிலும் […]
வசந்ததீபன் உயிருக்குள் உயிர் என்றாய் உடலின் பாதி என்றாய் உதிர்த்த இறகாக்கி நீ பறந்தாய் அவரவர்க்கு அவரது நியாயம் எனக்கும் இருக்கிறது உனக்கும் உள்ளது அறம் குறித்தோ அவகாசமில்லை சிறு நாவாய் அசைந்து போகிறது நீர்ப்பாலை விரிந்து கிடக்க கரை தொடும் ஏக்கம் கொடுங்காற்றாய் வீசுகிறது காற்றில் கண்ணீர் வாசம் இறக்கை முளைக்காத புறாக்குஞ்சுகளின் ரத்தக்கவிச்சியில் நனைந்தபாடல் கடந்து செல்ல… மிதந்து செல்கின்றன வார்த்தைகள் கனிந்து உதிரப்போகிறது வாழ்க்கை உயிர்காற்றே என்னோடு சற்று பேசிவிடு நீந்திப் போகிறேன் […]