இரு கவிதைகள்

This entry is part 6 of 7 in the series 11 மே 2025

.பசுமையும் பதற்றமும்                    சில துளிகள் மழை பெய்தால் கூட  வந்துவிடுகின்றன  எங்கிருந்தோ தவளைக் குஞ்சுகள். கூட்டமாக அவை  குதித்துத் தாவுகின்றன.  கும்மாளமிடுகின்றன. சிறிய முன்னங்கால்களால்  உடலைத் தாங்கும்  அவற்றின் மகிழ்வுக்கெல்லையில்லை. பழுப்பு நிறப் புள்ளிகளாய்  பாய்ந்து பாய்ந்து செல்லும். வாய்க்கால் மழைநீரில் வளைந்து வளைந்து செல்லும் வட்டமிடும் படகுகள். ஓடுகின்றன ஓடுகின்றன வாழ்வின் எல்லை நோக்கி. பார்க்கும் கண்களில்  பசுமையும் பதற்றமும்  பதுங்கிக் கொள்கின்றன. —-வளவ. துரையன்            தேடுதல்                           ஆடுகளுக்குத் தழை ஒடிப்பவன்                            கொழுந்துகளைத் தேடுவது போல […]

இரு கவிதைகள் – 1) வாழ்வின் விரிபரப்பு 2) தன்வரலாற்றுப்புனைவு

This entry is part 4 of 7 in the series 11 மே 2025

(*சமர்ப்பணம்: சிறுமீனுக்கு) தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருந்தேன் தொட்டிமீனை அந்தச் சதுரக் கணாடிவெளியினுள்ளான நீரில் சுற்றிச் சுற்றிப்போய்க்கொண்டேயிருந்ததுமூலைகளில் முட்டிக்கொண்டபடி. எதிர்பாராமல் மோதிக்கொள்கிறதா? ஏதோவொரு தெளிந்த கணக்கிலா? அவ்வப்போது நீரின் மேற்பரப்பிற்கு வந்து  குட்டிவாய் திறந்து  பின் மீண்டும் உள்ளோடி சதுரப்பரப்பின் மையத்திலிருந்த உருளையருகே சென்று  அங்கே அதற்கென்று வைக்கப்பட்டிருந்த உணவை ஓரிரு கவளங்கள் அவசர அவசரமாய் விழுங்கிவிட்டு மீண்டும் சதுரமாய் வட்டமிடத் தொடங்குகிறது. சமுத்திரவாசி எத்தனை சிறிய சதுரநீர்ப்பரப்பிற்குள்…. ஆனால், நானுமோர் சமுத்திரவாசிதான் – நிலம் நீராக காற்றாக – […]

மக்களே! 

This entry is part 1 of 7 in the series 11 மே 2025

ஓடும் நதியில்தான்  எல்லா அசடுகளும் ஓடுகின்றன. கற்பை எண்ணி  எந்த பத்தினியும் இறங்க வில்லை ஆற்றில்.  யோனிக்கழுவ  ஒரு கை  நீர் போதும்  கண்ணகிக்கும், மாதவிக்கும் . கோவலன்தான்  யாழை வாசிக்கின்றான் பெண்துணை தேட.  பூத்துக் குலுங்கும்  மலர்ச்சோலை  வருணப்பாக்களில்  கவிதை படுவதில்லை.  பாடும் வண்டும்  பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி விழும்  அருவிகளும்  காலடிச்சுவடுகளில்  ஜாதகம் தேடுவதில்லை.  ஆணோ பெண்ணோ  அனைத்து மகிழ  காமதேவன் பாடலில்  கறுப்பு வெண்மை  நிறங்கள் இல்லை.  மனோரத தேரில் ஏறி  பயணம் […]

தாயுமானவள்

ஆர் வத்ஸலா  தனியே நின்று மகளை வளர்த்ததால்  என்னை தலை சிறந்த  தாய் என கூறினார்கள்  யாவரும்  அதை நானும் நம்பத் தொடங்குகையில் புரிய வைத்தாள் எனது மகள்  என்னை விட சிறந்த தாய் உண்டு என தன் மக்களோடு எனக்கும் தாயாகி

நிரந்தரம்

This entry is part 2 of 2 in the series 4 மே 2025

ஆர் வத்ஸலா மறுபடியும் அவன் மௌனம் நீளுகிறது காத்திருந்து கோபித்துக் கொண்டு அவனை சபித்து பின்  நாக்கை கடித்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அவன் தரப்பு சாக்குகளை- அவன் அம்மாவுக்கு உடம்பு சுகமில்லை அவன்‌ நண்பனுக்கு பெரிய பிரச்சினை அவனுக்கு மனச் சோர்வு- இப்படி ஏதாவது  கற்பித்துக் கொண்டு  பின்  சலித்து  அழுது சூளுரைக்கிறேன் ‘இன்றோடு  அவன் உறவை துண்டித்துக் கொள்கிறேன் நிரந்தரமாக’ என்று தயவு செய்து கேட்காதீர்கள் யாரும் எத்தனையாவது முறையாக என்று 

மனசு

This entry is part 4 of 7 in the series 27 ஏப்ரல் 2025

ஆர் வத்ஸலா தெரியும் என்னை சந்திக்க வர மாட்டாய் நீ என்று  தெரியும் பணியில் மூழ்கி இருக்கும்  உன்னை  சந்திக்க நான் வருவதை விரும்ப மாட்டாய் நீ  என்று தெரியும் என்னை கைபேசியில் அழைக்க மாட்டாய் நீ என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும்  உன்னை  நான்  கைபேசியில் அழைப்பதை  விரும்ப மாட்டாய் நீ  என்று தெரியும் எனக்கு நீ குறுஞ்செய்தி  அனுப்ப மாட்டாய் என்று தெரியும் பணியில் மூழ்கி இருக்கும்  உனக்கு  நான்  குறுஞ்செய்தி அனுப்புவதை  […]

“தமிழ்ச் சென்ரியு கவிதைகள்”

This entry is part 1 of 7 in the series 27 ஏப்ரல் 2025

கவிஞர் கன்னிக்கோவில் இராஜா, சென்னை  @ பாண்டவர் கூத்தில் தருமர் மகிழுந்தில் சென்ற பாட்டி வீட்டிற்கு நடந்து வந்தார் வாக்குச்சாவடி  @ விடாமுயற்சியே வெற்றி  பேச வந்தவரின் ஒலிவாங்கியில் தொடர் சிக்கல் @ பிள்ளையார் சிலை மறைத்தபடி பேசிக்கொண்டிருக்கிறார் கைபேசியில் பூசாரி  @ வீட்டைப் பூட்டிய பின் இழுத்து உறுதி செய்தார் பணிக்குச் செல்லும் திருடன் @ பசிக்கும் வயிறு அவசரமாய் சாப்பிட்டான் ஆகாரத்துக்கு முன் மாத்திரை  @ குத்துச்சண்டை வீரர் கதறி கதறி அழுகிறார் சொத்தைப் […]

மெளனத்தின் முன் அலைக்கழியும் சொற்கள்

This entry is part 2 of 6 in the series 13 ஏப்ரல் 2025

கு. அழகர்சாமி (1) சொற்காட்டில் அர்த்தங்களின் பறவை இரைச்சல். இரைச்சலின் புழுதியில் வானுயரும் ஒலிக் கோபுரம். மொழியின் செங்கற்கள் உருவி சொற்கள் சரிகின்றன ஒலிகளில். அலற பிரபஞ்சம் எப்படி கேட்டது ஒருவனுக்கு மட்டும் அது- அவன் ஓவியத்தில் நிறங்களும் அலற?* ஒரு பூவைப் பறிக்கும் போது உலகு குலுங்குவது யாருக்கு கேட்கிறது? நிலத்தினுள் விதைக்கப்பட்ட பிணங்களெல்லாம் முளைக்க அன்றிரவைப் பொடிப்பொடியாக்கி இடித்த இடி என்ன கூறிற்று?**- பிறந்த சிசுவின் முதல் அலறலிடம் கேட்க வேண்டும் அதை. *குறிப்பு: […]

சந்தி

This entry is part 1 of 6 in the series 13 ஏப்ரல் 2025

சசிகலா விஸ்வநாதன் சொல்லிய சொல்லுக்கும், சொல்லப் போகும் அடுத்த சொல்லுக்கும் இடையே, நெருடலாக; அது.. ஒரு நொடியா? ஒரு யுகமா? இடைவெளி கடினம். சொல்லும் நேரம்  தவற, சொல் தடுமாற, சொல்லும் பொருளும் மாற்றம் அடைய, சொல் மாறி வரும் நாவில்.  சந்தியில், மனம் பொருந்தா சந்தியில் சந்தி சிரிக்க; சொற்கள் தனித்தனியாக;  சந்தியின்  சந்தியில்  என் சொற்கள். சசிகலா விஸ்வநாதன் சசிகலா விஸ்வநாதன்

பழையமுது

This entry is part 3 of 6 in the series 6 ஏப்ரல் 2025

சசிகலா விஸ்வநாதன் நட்சத்திர உணவு விடுதியில், குதிக்கும் மெழுகுவர்த்தியின்  மங்கின ஒளியில், இருள் கவிந்த குளிரூட்டப்பட்ட உணவு கூடத்தில், மெத்தென்ற நுரையிருக்கையில் நான் அமர; பனி வெள்ளை கையுறையுடன்,  வெண் சீருடையில் பணிவுடன் பணியாள் ஒருவன்; பிழிந்து  வைத்த  பழைய சோறு; அலங்கார  பளிங்கு வட்டிலில் வகுந்து வைத்த பச்சை மிளகாய்; சிறு குத்து குச்சிகளுடன்; திருத்தின பச்சை வெங்காய சிதறல் சிறு தாமரையென அலங்காரமாய், பங்குனி வெயிலில், பசித்த வயிற்றில்  இறங்கும்  நேரம் நினைவில்  வரும் […]