உன்னைப்போல் ஒன்று

This entry is part 34 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அதைப் போலொரு
பறவையைப் பலியிட்டு
படையலுடன்
பிரார்த்தனனகளுடன்
அண்ணாந்து வானம் நோக்கி
அழைத்த படியிருந்தான்.

குறித்த நேரத்தில்
அவ்விடத்தைத்தினம்
வந்தடைகிற அது
அன்று வரவே இல்லை.

ஆளற்ற வானந்தரத்தில்
நாற்றமடிக்கத்தொடங்கியிருந்த
அவனை போலொரு
அழுகிய ஒன்றை
கொத்தி தின்று கொண்டிருந்தது அது
.
ரவிஉதயன் raviuthayan@gmail.com

Series Navigationஉறுதியின் விதைப்புஅழகியல் தொலைத்த நகரங்கள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *