எங்கோ தொலைந்த அவள் . ..

This entry is part 17 of 43 in the series 14 ஆகஸ்ட் 2011

யன்னல்கள் ஏதுமற்றிருந்த
அந்த ஒற்றையறையின் கதவுகள்
சாத்தப்பட்டே இருந்தன

எப்போதும் அலறல்களும்
கூச்சல்களும் அங்கே
கசிய விடப்பட்டிருக்கும்

ஒலித்துகள்கள் ஒவ்வொரு
அணுவிலும் ஏற்றப்பட்ட
உடல் அதிரத்துவங்கும்

மௌனமான நேரங்களில் கூட
செவிகளில் ரீங்காரமிடும்
அந்த அழுகையின் ஒலி

அவளிலிருந்து
அந்த அறைக்கு
விடுதலை தந்தது
ஒர் மரணம்

மீண்டும் பூட்டப்பட்ட
அந்த அறைக்குள்
அவள் தனித்து

கூச்சல்களும் அலறல்களும்
அழுகைகளும்
மீண்டு வரமுடியாத் தொலைவொன்றில் ..

ஷம்மி முத்துவேல்

Series Navigationபாசாவின் உறுபங்கம்சொல்வலை வேட்டுவன்

4 Comments

  1. கவிதை அருமைதான்.. ஆனால் அது ஏற்படுத்திய தாக்கம் வலிதான்.. நன்று ஷம்மி..

  2. கவிதை அருமை – படித்ததும் இதயம் வலிக்கிறது….

Leave a Reply to shammi muthuvel Cancel reply

Your email address will not be published. Required fields are marked *