Posted in

எமதுலகில் சூரியனும் இல்லை

This entry is part 32 of 39 in the series 4 டிசம்பர் 2011

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்

பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்

இறப்பர் விலை அதிகரித்த போதும்

நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென

உணர்கிறது இதயம் எப்போதும்

 

அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்

பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே

இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்

இரு பாதங்களையும் வைத்தபடி

மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து

நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி

 

தாயும் தந்தையும் வாழ்ந்த குடிசையின்

உரிமை எமக்கில்லை பிள்ளையே

ஊருமற்று நாடுமற்று

லயன் தான் வாழ்க்கையே

 

கிணற்றுத் தவளைகள் போல

லயத்திலிருக்கும் நம் எல்லோருக்கும்

உரிமையில்லை எதற்கும்

இது பற்றிக் கதைக்கவும் கூட

 

– ஹெரல்ட் மெக்ஸிமஸ் ரொட்ரிகோபுள்ளே

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

Series Navigationகூர்ப்படையும் மனிதன்…சூர்ப்பனையும் மாதவியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *