வித்தொன்றை சிதைத்துப் பார்த்தேன்
எதுவும் இல்லாமல் போனது…
இன்னொன்றை
மண்ணுள் புதைத்துப் பார்த்தேன்
மரமாக வந்து கதை பேசியது…
இலைகளையும் பூக்களையும்
உனக்குள்
எப்படித்தான் சுமந்தாயோ என்றேன்..
மண்ணைப் போட்டு மூடினாலும்
உன்னை
மீறி வரும் சக்தி எங்கே என்றேன்…
மறுபடியும் வித்தொன்றை
சிதைத்தொருக்கால் பார்த்தேன்…
மாய வரம் ஏதேனும்
அங்குள்ளதுவா தேடினேன் –
“வித்திலைகள்” மட்டும் தான்
எனைப் பார்த்து முறைத்தன….,
மற்றதெல்லாம் எனை விட்டு
என் கண்ணை மறைத்தன…
பூவின் நிறமேதும் அங்கு இல்லை..,
கனியின் தீஞ்சுவையும் காணவில்லை…!
விருட்சம் அதன் தலைவிதியை
வித்தினுள்ளே தேடிப் பார்த்தேன் –
ஒன்றும் புரியவில்லை…,
ஒரு வித்தை நாட்டிப் பார்த்தேன் –
கன்றாய் எழுந்தது
மரமாய் விரிந்தது
பூக்கள் சிரித்தன
பூச்சிகள் வளைத்தன
கனிகள் விளைந்தன..
என் கண்கள் வியந்தன..
வித்திற்கு நன்றி சொல்ல
தேடிப் பார்த்தேன் –
காணவில்லை…
விந்தை தான்..!,
இறைவனுக்கே நன்றி சொல்வேன்.
ஜுமானா ஜுனைட், இலங்கை.
- “தமிழகத்தில் பெருகும் பீஹாரிகள்”
 - காற்றின் கவிதை
 - மகளிர் தினமும் காமட்டிபுரமும்
 - நன்றி கூறுவேன்…
 - நன்றி. வணக்கம்.
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 9)எழில் இனப் பெருக்கம் ஓர் எச்சரிக்கை
 - நிஜங்களுக்கான பயணிப்புக்கள்
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 2
 - பாதுஷா என்னும் ஒரு பாதாசாரி
 - பழமொழிகளில் ‘பணமும் மனித மனமும்’
 - ஜென் ஒரு புரிதல்- பகுதி 33
 - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
 - பூதளச் சுரங்கங்களில் புதைக்கப்படும் கனடாவின் அணு உலைக் கதிரியக்கக் கழிவுகள்
 - பூவரசி காலாண்டிதழ். எனது பார்வையில்.
 - தென்கச்சியார் கூறும் மருத்துவக் குறிப்புகள்
 - சிலப்பதிகாரத்தில் காட்சிக்கலை
 - பிரக்ஞை குறித்தான ஒரு வேண்டுகோள்
 - மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 16
 - வியாசனின் ‘ காதல் பாதை ‘
 - கணையாழி பிப்.2012 இதழ் ஒரு பார்வை
 - கன்யாகுமரியின் குற்றாலம்
 - முல்லை முஸ்ரிபாவின் “அவாவுறும் நிலம்” கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை
 - தாகூரின் கீதப் பாமாலை – 2 புண்பட்ட பெருமை
 - வழிமேல் விழிவைத்து…….!
 - அந்த முடிச்சு!
 - கசீரின் யாழ்
 - ஷிவானி
 - வசந்தபாலனின் ‘ அரவான் ‘
 - உழுதவன் கணக்கு
 - மார்க்ஸின் கொடுங்கனவு – தனியுடமை என்பது தொடர்கதையா ? – புதிய சித்தாந்தத்திற்கான நேரம்?
 - பருந்தானவன்
 - வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து.
 - நீ, நான், நேசம்
 - அமீரகத் தமிழ் மன்றத்தின் 12-ஆம் ஆண்டு விழா
 - முன்னணியின் பின்னணிகள் – 30
 - விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தொன்பது
 - பஞ்சதந்திரம் தொடர் 33- பாருண்டப் பறவைகள்
 - ”சா (கா) யமே இது பொய்யடா…!”
 - ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 13
 - விளையாட்டும் விதியும்
 - காதலில் கதைப்பது எப்படி ?!
 - மறுமலர்ச்சிக் கவிஞர் மு. முருகுசுந்தரம் வாழ்வும் அவரின் படைப்புகளும்
 - அச்சாணி…
 - கணேசபுரத்து ஜமீன்
 - எழுத்தாளர்கள் ஊர்வலம் (4 ம் பாகம்)