புழுங்கும் மௌனம்

This entry is part 32 of 48 in the series 15 மே 2011
 

ஒரு மௌனத்தை 

எவ்வளவு நேரம் சுமப்பது

உன் பொய்களையும்

கனவுகளையும்

போதையாய்

புணர்ந்த வலிகளோடு …

பெருத்த பாலைவனங்களில்

உடைந்த பீரங்கிகள்

சொல்லும் மௌனங்களை

உரசிப் பார்த்ததுண்டா நீ ?

முழுமையின் பிரவாகத்தில்

ஒரு புள்ளியை

தனக்குள் புதைத்து

புளுங்கியதுண்டா நீ ?

தனிமை குவிந்திருந்தும்

மேலோட்டமாய்

ஒரு இரைச்சலுக்குள்

சலனப்பட்டதுண்டா நீ ?

பாலைவனத்தின்

கள்ளிச் செடியில்

வடியும் ,

கடைசி சொட்டு

மௌனத்தை புசித்து செல் !

அல்லது

ஒரு ஆணின் செருக்கோடு

மௌனத்தின் முலைதேடு …

உன் கர்வத்தின் மௌனத்திற்கு

பதில் சொல்வாள்

உன் தாய்

அல்லது உன் மகள் …

– கவிதா ரவீந்தரன்

Series Navigationசிதறல்விழி மூடித் திறக்கையில்
author

கவிதா ரவீந்தரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *