கொடும் மழையினூடே கரைந்தோடும்
ஆற்றோர மணல் படுகைகளைப் போல்
ஓர் முழு நாளிற்கான மனச் சலனங்களை
கழுவித் தூரெடுக்கும் ஆற்றல் மிக்கதாய்
மாலைத் தேநீர்கள் உருப்பெற்று விடுகின்றன
பின் பிடரி வழியாய் உங்கள் உயிர் குடிக்கும்
சில எம காத உருவங்களையோ
பாத விரல்களினிடையேயான
சேற்றுப் புண் எரிச்சல்களையோ
ஓர் தேநீரின் இதமான கதகதப்பில்
சில மணித்துளிகளாவது அவைகளையற்று
இன்புற்றுக் கிடக்கக்கூடும் நீங்கள்
மென்னிருள் கொண்ட ஓர் பொன் மாலைப் பொழுதோ
எப்பலன்களுமற்ற உங்களையொத்தாருடையேயான
எவ்விஷயங்களுமற்ற வெற்று சம்பாஷனைகளோ
தேநீர்களன்றி சேயில்லா மலடி போல்
நிறைவுறக்கூடும் அவைகள்.
உங்களையும் மீறிய ஓர் கொடுஞ் சம்பவமொன்றில்
நாவிடறும் துர் வார்த்தைப் பிரயோக நிலையில்
உட்கொள்ளுங்கள் ஓர் தேநீரை.
சில நிமிடங்கள் வரையாவது நிறுத்தப்படக்கூடும்
சில துர் நிகழ்வுகள்.
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ
- இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்
- சாம்பல்வெளிப் பறவைகள்
- என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை
- நாதம்
- சாகச விரல்கள்
- 5 குறுங்கவிதைகள்
- அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்
- நினைவுகளின் சுவட்டில் – (70)
- எதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து
- காலாதி காலங்களாய்
- உருவு கண்டு எள்ளாமை வேண்டும்
- சின்னாண்டியின் மரணம்
- விஜிதாவுக்கு நடக்கவிருப்பது என்ன?
- முதுகெலும்பா விவசாயம் ?
- கட்டங்கள் சொற்கள் கோடுகள்
- இரண்டு கவிதைகள்
- தியாகச் சுமை:
- ஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்
- புள்ளி கோலங்கள்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)
- எனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)
- கறுப்புப்பூனை
- பழமொழிகளில் பணம்
- இலை துளிர்த்துக் கூவட்டும் குயில்
- விக்கிப்பீடியா – 3
- உறவுகள்
- தனித்திருப்பதன் காலம்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா
- முதுகில் பதிந்த முகம்
- ராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்
- கம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”
- இலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….
- அரச மாளிகை ஊக்க மருத்துவர்
- ஒற்றை எழுத்து
- சென்னை வானவில் விழா – 2011
- மாலைத் தேநீர்
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 40
- தமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் நிறைவுவிழா
- 2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4
- தற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:
- காங்கிரஸ் ஊடகங்களின் நடுநிலைமை
- அறிவா உள்ளுணர்வா?
- இப்போதைக்கு இது – 2
- யாதுமானவராய் ஒரு யாதுமற்றவர்
Tea seems to be a panacea to the writer. He believes that tea makes things happen, averts or holds up temporarily unspillable words and brings in completeness to non-serious chats etc. Every moment worth its salt only with a cup of tea. Tea drives out cup of woes even. An unusual obsession with tea but well brewed.