முற்றுபெறாத கவிதை

This entry is part 13 of 34 in the series 17 ஜூலை 2011

இன்னும் என் கவிதை
முடிக்கப்படவில்லை ….

ரத்தம் பிசுபிசுக்கும்
வலிமிகுந்த வரிகளால்
இன்னும் என் கவிதை
தொடர்ந்துகொண்டே இருக்கிறது …..

பதில் கிடைக்காமல்
விக்கித்து நிற்கையில்
கேள்விக்குறி ஒன்று
தொக்கி நிற்கிறது .

திடுமென நிகழ்ந்த
நிகழ்வொன்றில் ,
கண்களை அகல விரித்து
ஆச்சர்ய குறி ஒன்று
இடைசொருகப்படுகிறது ..!

ஏதும் சொல்லொண்ணா நேரங்களில்
வெறும் கோடுகளாய்
நீள்கிறது…….

புலம்பியது போதும்
என முற்றுபுள்ளி வைத்தேன் !

அதன் அருகிலேயே
மேலும் சில
புள்ளிகள் இட்டு
காலம் என் கவிதையை
தொடரச்செய்கிறது …..

கைவசம் யாரிடமாவது
முற்றுபுள்ளி இருக்கிறதா ?

–க. உதயகுமார்

Series Navigationஎன் கைரேகை படிந்த கல். தகிதா பதிப்பகத்தின் மிகச்சிறந்த கவிதைத் தொகுப்புஜென் ஒரு பு¡¢தல் – பகுதி -2
author

க.உதயகுமார்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *