வழி தவறிய கவிதையொன்று
நடுச்சாமத்தில்
உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையே
மனம் ஓடும் எல்லா இடங்களுக்கும்
அறியா வெளிகளுக்கும்.
‘டொக் டொக் டொக்’
யாரது? உள்ளம் கேட்கும்
‘யார் நீ?’
உரத்த குரலில் வினவுகிறேன் நான்.
‘நான். வந்து… வந்து…
வழி தவறிய கவிதையொன்று.
கதவைக் கொஞ்சம் திறக்க இயலுமா?’
கவிதையொன்றாம்.
வழி தவறி விட்டதாம்.
திறப்பதா கதவை?
எனது கதவைத் திறக்காது விடின்
வழி தவறிப் போகும் கவிதை.
கதவைத் திறப்பின்….
வழி தவறிப் போவேன் நான்.
பரவாயில்லை வருவது வரட்டும்.
மெதுவாகக் கதவைத் திறந்து
கவிதை உள்ளே வர விடுகிறேன்.
எப்படியும் எந்நாளும்
எனதிதயம் வழிதவறிக் கொண்டுதானே இருக்கிறது
டீ.திலக பியதாஸ
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை
- ஒவ்வொரு கல்லாய்….
- பசிலிகுருவியின் குஞ்சு ரத்தம் வழியகிடக்கிறது
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -43
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! கெப்ளர் விண்ணோக்கியின் அற்புதக் கண்டுபிடிப்பு : இரட்டைப் பரிதிகள் சுற்றும் இரு கோள்கள்
- All India Tata Fellowships in Folklore 2012-2013
- விவசாயி
- ஏக்கங்களையும் ஏமாற்றங்களையும் எழுதியிருக்கிறது காலம்.
- அக்னிப்பிரவேசம் -1
- அம்மா
- மணிபர்ஸ்
- மெல்ல இருட்டும்
- நம்பிக்கைகள் பலவிதம்!
- பேராசிரியர் பழ.முத்துவீரப்பன் மணிவிழா
- (100) – நினைவுகளின் சுவட்டில்
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -2
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -28
- “ஆத்மாவின் கோலங்கள் ”
- தமிழ்ப்பேராய விருதுகள் பெற்றோர் பட்டியல்
- கால் செண்டரில் ஓரிரவு
- சிற்றிதழ் பார்வை – கல்வெட்டு பேசுகிறது
- பிரான்ஸ் வொரெயால் தமிழ்க்கலாச்சார மன்றம் புகைப்பட கண்காட்சி
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 37) பன்மடங்கு பூரிப்பு எனக்கு
- துண்டிப்பு
- எகிப்து : சிதைந்த கனவுகள் – திரைப்படம்
- பருத்தி நகரம் : திருப்பூர் படைப்பாளிகளின் தொகுப்பு
- இலக்கிய நிகழ்வு: கோவை இலக்கியச் சந்திப்பு / நிகழ்வு 22
- தாகூரின் கீதப் பாமாலை – 31 நீ அருகில் உள்ள போது… !
- தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் நூற்றாண்டு விழாவையொட்டி நடாத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள் – 2012
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- இந்தியத் தலைநகரிலிருந்து உலகத் தமிழர்களுக்கு..
- வழி தவறிய கவிதையொன்று
உள்ளத்துள்ளது கவிதை
இன்பம் உருவெடுப்பது கவிதை
தெள்ளத்தெளிந்த தமிழில்
தெரிந்துரைப்பது கவிதை
என்பார் கவிமணி.
உள்ள்த்தக்கு வெளியே காட்சிகள்தான் இருப்பன. அவ்ற்றின் அனுபவங்கள் உள்ளத்துள்சென்று கவிதையாக வளர்ந்து வெளியே வருவன, உள்ளத்துள்ளே உருவாகும்போது ஒரு கவிஞர் ஒரு பெண்ணின் பிள்ளைப்பேறு வேதனயடைந்து, பின்னர் குழந்தை பிறந்தவுடன் அவள் பெரும் பேரானந்தம் அவன் கவிதை வெளியே குதிக்கும்போது அவனடைவது. படைப்பின் துன்பமும் பின்வரும் இன்பமும்.
இக்கவிதை இந்த இயற்கை நிகழ்வை நிராகரித்து புதிதாக ஒன்றைச்சொல்கிறது.
கவிதை வெளியே உருவாகி இவனுள் வர அனுமதி கேட்கிறது. எப்படியாம்? அதற்கு போக்கிடமே தெரியாமல் இவனிடம் வந்ததாம். இவனும் வேறு வழிதெரியாமல், அல்லது வேண்டா விருப்பாக உள்ளே ஏற்றுக்கொண்டானாம். அல்லது அது வழி தவறி எங்காவது போய்ச்சிரமத்தில் மாட்டிக்கொள்ளக்கூடாதே என்ற கழிவிரக்கத்தில் உள்ளே நுழைய விட்டானாம். மேலும், தானும் அக்கவிதையும் ஒரேயினம். இருவரும் வழிதவறிப்போய்க்கொண்டிருப்பவர்கள் என்கிறான்.
இக்கவிதையை எப்படி எடுப்பது? கவிதை உள்ளே வருகிறதென்றால், அதை எழுதியவர் ஆர்? இவன் ஆர்? இருவரும் வெவ்வேறு என்னும்போது ஆருக்கு நம்பட்சாபிதம்? இடமில்லாமல் வெளியே அலைபவனா? இடமிருந்தும் (இவனுக்கு உள்ளமிருக்கு!) இல்லையென நினைத்து கற்ப்னையாக வாடும் இவனுக்கா?
வெரிகுட் அப்ஸ்டராக்ட் பொயட்ரி. வெல்டன் பியதாஸ் !
Thinnai’s poetry page is improving ! Congrats !!