ஹிந்து ஆலயங்களில் பிராமணர் அல்லாதாரை அர்ச்சகராக நியமிக்கும் நடைமுறை செயல்பட முடியாமல் உள்ளதாகப் பலருக்குப் பெரிய குறை இருந்து வருகிறது. இதில் வேடிக்கை, இப்படிக் குறைப்பட்டுக் கொள்பவர் களில் மிகப் பெரும்பான்மையினர் ஹிந்து கோயில்களைப்பற்றி அக்கறை ஏதும் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று தேடுவதற்காகவே ஹிந்து ஆலயங்களுக்கு உள்ளே நுழைபவர்கள். இன்னுமொரு வேடிக்கை இதுபற்றி ஆழமான புரிதல் இன்றியும் தற்போதைய நிலவரம் என்ன என்பதையும் அறியாமல் சிலர் இது பற்றிச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் விஸ்தாரமாக ஏதோதோ எழுதிக்கொண்டு போவதுதான்.
பிராமணர் அல்லாதார் அர்ச்சகர் ஆக முடியாதபடி முட்டுக்கட்டை போட்டுக் கொண்டிருப்பவர்கள் சாதி வெறி பிடித்த பிராமணர்கள்தான் என்று குற்றம் சாட்டுவதில் பலருக்கு அலாதியான விருப்பம் இருப்பதும் வெளிப்படை.யாகவே தெரிகிறது. உண்மையில் இதில் ஒரு முடிவு சீக்கிரம் வரவிடாமல் தாமதப்படுத்தி வந்தது அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த கருணாநிதி அரசுதான்!
முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். புராதனமான ஹிந்து ஆலயங்களில் அர்ச்சகராக இருக்கும் சிவாசாரி யார்கள், குருக்கள், பட்டாச்சாரியார் போன்றவர்கள் சமூக அமைப்பின் பிரகாரம் பிராமணர்கள் என்று கருதப்படுபவர்களா என்பதில் கருத்து வேறுபாடுகள் உண்டு.
ஸிந்து மாகாணத்தில் ஹுசைனி பிராமணர்கள் என்றே ஒரு பிரிவு இன்றளவும் உள்ளது. இவர்களின் முன்னோர்கள் கர்பலாவில் ஹுசைன் அலிக்குத் துணையாக இணைந்து போரிட்டு மடிந்தவர்களாம்! பொதுவாக அறியப்பட்ட பிராமணப் பிரிவுகளைவிட இப்படி அறியப்படாத பிராமணப் பிரிவுகள் பல உள்ளன. இது தவிர ரங்காச்சாரி என்பவர் உதவியுடன் எட்கர் தர்ஸ்டன் திரட்டிப் பதிவு செய்துள்ள சாதிகள் பற்றிய விவரங் களிலும் பிராமணர்கள் என்று கருதப்படுகிற, பிராமணர்கள் என்று தங்களைப் பற்றி சொல்லிக் கொள்கிற பல பிராமணப் பிரிவுகளும் உண்டு( அவற்றை ஒரு தகவல் விவரத்திற்காகப் பார்வையிடலாமேயன்றி அவர் பதிவு செய்துள்ளவற்றையெல்லாம் வேத வாக்காக ஏற்றுக்கொண்டு விட முடியாது. காலின் மெக்கென்ஸியின் பதிவுகள் அளவுக்கு அவை ஆய்வுச் செறிவும் நம்பகத்தன்மையும் சரியான தகவல்களும் உள்ளவை அல்ல. இருந்தாலும் இந்த விஷயத்தில் உடனே என் நினைவுக்கு வருவது ‘விஸ்வ கர்ம பிராமணர்கள்.’ ஸ்தபதிகள் பல பிராமண விற்பன்னர்களைக் காட்டிலும் ஆகம விதிகளிலும் சாஸ்திர முறைகளிலும், சமஸ்க்ருதம், கிரந்தம் ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி மிக்கவர்கள். இவர்களை பிராமண சிரேஷ்டர்கள் என்றே நான் அடையாளப் படுத்துவேன். ஆனால் சமூக அமைப்பு அவர்களை பிராமணர்களாக வகைப்படுத்துவதில்லை.
இவையெல்லாம் சமூகவியல், மானிடவியல் ரீதியாக ஆராயப்பட வேண்டிய சமூக விஷயங்களேயன்றி சமய விஷயங்கள் அல்ல. இவ்வளவும் சொல்லக் காரணம், அர்ச்சகர்கள் பிராமணர்கள் என்பதால்தான் அவர்கள் சார்பாக நீதி மன்றங்களில் வாதாடுவதும் பொது மன்றங்களில் விவாதிப்பதுமாக பிராமணர்கள் இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு சிலரால் முன்வைக்கப்படுகிறது. இவர்கள் காமாலைக் கண்ணுடன் எந்தவொரு விஷயமானாலும் அதை பிரமணர் – பிராமணர் அல்லாதார் என்கிற பார்வையுடன்தான் அணுக வேண்டும் என்கிற ஈ.வே.ரா. அவர்களின் உபதேசப்படியே நடந்து பழக்கப்பட்ட விசுவாசம் மிக்க சீடப் பிள்ளைகள் போலும்,. வெங்காயம் என்று அவர் எரிச்சலுடன் சொல் வதைக்கூட நுணுகி ஆராய்ந்து அவர் மகா பெரிய தத்துவத்தைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் சொல்லிவிட்டதாகப் பரவசப்படுபவர்கள், இவர்கள். மிகுந்த எரிச்சலில், – அது உடல் உபாதைகளின் கரணமாகக் கூட இருக்கலாம் – பொதுக்கூட்ட மேடை என்றுகூடப் பாராமல் அவர் உதிர்க்கும் எழுத்தில் குறிப்பிட இயலாத சில சொற்களைக் கேட்கும் பாக்கியம் எனக்கு வாய்த்ததுண்டு. ஆனால் அவற்றுக்கும் பகுத்தறிவுடன் கூடிய உட்பொருளை அவரது சீடப் பிள்ளைகள் யாரும் கண்டறிந்திருந் தாலும் ஆச்சரியமில்லை.
ஒருவர் சொன்னதைச் சொல்லவில்லை என்பதுபோல் சொல்லிச் செல்வது, சொல்லாததைச் சொன்னதாகக் குறிப்பிட்டு அதற்கு பதில் சொல்வது, சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ஆனால் புரிந்துகொண்டதுபோல பாவனை கொண்டு அதற்கேற்ப சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது, சொன்னதைத் திரித்துச் சொல்வது, சொன்னதற்கு பதில் சொல்ல ஏதுமில்லாவிட்டால் சொன்னவரை மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது, தெரிந்தே திசை மாறிப் போவது இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் திராவிட அரசியல் சம்பிரதாயம். இவையெல்லாம் இந்த அர்ச்சகர் விவகாரங்களிலும் தப்பாமல் இடம் பெற்று வருகின்றன.
பொதுவாக எனக்குக் கோயில் ஒழுங்குகளில் ஈடுபாடு இல்லை. வழிபாட்டுக்காக நான் கோயில்களுக்குச் செல்வதென்பது மிகவும் துர்லபமே. சில விக்கிரக வழிபாடுகளை எனது அவசியமும் சந்தோஷமும் கருதி நான் வீட்டிலேயே வைத்துக்கொண்டிருந்தாலும் எனது லயிப்பு வேத மார்க்கத்தில்தான். ஹிந்து மதம் என்பதைவிட ஹிந்து சமூகம், ஹிந்து கலாசாரம் ஆகியவற்றில்தான் எனக்கு அக்கறை. ஏனெனில் ஆன்மிகத்தில் ஒரு நிலையைக் கடந்துவிட்டால் மதம் என்பதற்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடுகிறது. எனினும் ஹிந்து மதம் என்பதே ஹிந்து சமூக, கலாசார, தத்துவ ஞான ஆதாரங்களூக்கெல்லாம் அடிப்படையாக இருந்து கட்டிக் காப்பதால் அதுபற்றிய அக்கறையையும் கொள்வது இன்றியமையாததாகிறது. ஆகையால்தான் மதத்தோடு நெருங்கிய பிணைப்புள்ள இந்த அர்ச்சகர் என்கிற விவகாரத்தையும் கவனிப்பது எனக்கு அவசியமாகப் பட்டாலும் இதையும் ஒரு சமூகப் பிரச்சினை யாகவே கண்டு இதுபற்றிப் பேசலானேன். இதில் எனக்கு மதம் என்கிற கண்ணோட்டம் இல்லை யென்றாலும் கோயில் அமைப்பு, கோயில் நடைமுறைகள் முதலனவை மதத்தைச் சார்ந்திருந்து ஒரு கொடி தனது கொழு கொம்பைத் தாண்டி வேறு ஒரு மரத்தையும் பற்றிக்கொள்வதுபோல் பின்னர் மதத்தையும் தாண்டி சமூக விவகாரங்களாக இருப்பதைக் காண்கிறேன். இதற்குப் பல எடுத்துக் காட்டுகளைக் காட்ட முடியும். கோயில் மண்டபங்களில் நாட்டியாஞ்சலி, இசைக் கச்சேரி போன்ற கலாசார நிகழ்வுகள் சமூகக் கூறுகளேயன்றி அன்றாட வழிபாட்டுச் சடங்காச் சாரங்களில் ஒன்றாக இருப்பவை அல்ல.
ஹிந்து ஆலயங்களில் குழந்ததைளுக்குப் பெயர் சூட்டுவதென்பதோ, ஈமச் சடங்குகள் செய்வதோ நமது வழிபாட்டுச் சடங்கு சம்பிரதாய நடைமுறை யில் இல்லை. குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் ஓராண்டு நிறைவு பெறும் குழந்தைகளுக்குச் சோறு கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஆனால் அது கருவறையில் உன்னிக் கிருஷ்ணன் முன்னிலையில் அல்லாமல் வெளித் தாழ்வாரத்தில் நடக்கிறது. திருக்கடையூரில் அறுபதாம் கலியாணம் செய்துகொள்ளும் வழக்கமும் பிராகாரங்களில்தான். பிறந்த நாட்களின்போது விசேஷ அர்ச்சனை செய்து வழிபடும் வழக்கம் உள்ளது. இது தவிர திருமணம் செய்துகொள்வோருக்கு அதைச் செய்து வைத்து அங்கீகாரம் உள்ள சான்றிதழை அதிகார பூர்வமாக வழங்கும் செயல் பாடும் கோயில் நிர்வாகத்தில் உள்ளது. இவை எல்லாவற்றிலும் அர்ச்சகரின் பங்கு பிரதானமாக உள்ளது. ஆனால் அவற்றை யெல்லாம் சமூக நடைமுறைகளாகக் கொள்ள இயலுமேயன்றி கோயில்களில் வழக்கப்படி நடைபெறும் ஆறு கால பூஜை போன்ற விதிக்கப்பட்ட சடங்காசாராமாக எடுத்துக்கொள்ள இயலாது. அர்ச்சகர் பணி என்று சொன்னால் அது அவர் கருவறையில் நின்று உரிய கால நேரப்படி நியமிக்கப்பட்ட பூஜையை முறையாகச் செய்து வருவதே மத சம்பந்தமான பணி எனக் கொள்ள வேண்டும். மற்றவை சமூக நடைமுறைப் பணிகளேயாகும். அவற்றைச் செய்ய மறுக்கவும் அர்ச்ச்கர் என்ற முறையில் அவருக்கு அதிகாரம் உண்டு. ஆனால் பொதுவாக எவரும் அவ்வாறு மறுக்க முன் வருவதில்லை. இதற்குப் பிரதான காரணம் அதில் அவருக்கு வருமானம் கிட்ட வாய்ப்புண்டு.
இன்று 1972-ன் அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற திருத்தச் சட்டம், 2006ன் அவசரச் சட்டம் ஆகியவற்றுக்கெல்லாம் அர்ச்சகர் சங்கத் தரப்பிலேயிருந்து ஆட்சேபம் வருகிறதென்றால் அதற்கு முக்கிய காரணம் உலகாயதமாக இருக்குமே யன்றி முற்றிலும் மத நம்பிக்கை, மதத்தின் மீதான ஆழ்ந்த ஈடுபாடு, சாதி அபிமானம் ஆகியனவாக இருக்க வாய்ப்பில்லை. இதற்கு ஒருசில விதி விலக்குகள் வேண்டுமானால் இருக்கலாம்.
இந்தத் திருத்தச் சட்டம், பின்னர் வந்த அவசரச் சட்டம் ஆகியவற்றால் நேரடியாகப் பணி நிமித்தமாகப் பாதிப்படையக் கூடியவர்கள் அர்ச்சகர்களே. அவர்கள்தாம் இன்று தொழிற்சங்க அமைப்புபோல அமைத்துக் கொண்டு சங்கத்தின் சார்பில் வாதிகளாக அவசரச் சட்டத்தை எதிர்த்து வழக்காடிக் கொண்டிருக்கிறார்கள். இதில் திராவிட அரசியல் வழக்கப்படி பிராமணர்-பிராமணர் அல்லாதார் துவேஷப் பிரசாரத்தைத் திணிப்பது முடி பிளக்கும் வேலையேயன்றி வேறல்ல. வழக்கம் போல் ஹிந்து சமூகத்தில் பிளவுண்டாக்கிக் காரியம் சாதித்துக்கொள்ளப் பார்க்கும் செயல்திட்டம் என்றுதான் இதனைக் காண இயலும். ஏனெனில் நாங்கள் பிராமணர்கள், ஆகவே நாங்கள்தான் கோயிலில் அர்ச்சகர்களாக இருக்க முடியும். பிராமணர் அல்லாதாருக்கு அர்ச்சகராக அருகதையில்லை என்று அவர்கள் வாதாடவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஆகமவிதிப் படியிலான கோயில்களில் அர்ச்சகர்களாக பிராமணர்கள் முற்பட்டால் அதையும் தங்கள் நலன் கருதி அவர்கள் எதிர்க்கவே செய்வார்கள்.
வேதகால சம்பிரதாயத்தில் கோயில்களோ அர்ச்சகர்களோ, ஏன் புரோகிதர்களோகூட இருந்ததில்லை. வர்ண அமைப்பில் பிராமணக் குடும்பத்தில் குடும்பத் தலைவனே சடங்காரசாரங்கள் அனைத்தையும் வீட்டினுள் செய்து வைப்பான். விக்கிரகங்களின் பிரதிமை, உருவங் களுக்குக் கூட அவசியமின்றி சிறு குடத்தில் உயிர்கள் அனைத்தின் தோற்றத்திற்கும் அடிப்படையாக உள்ள ஜீவாதாரமான நீரை ஒரு சிறு குடத்தில் நிரப்பி அதில் இறைச் சக்தியை ஆவாஹனம் செய்து மந்திரங்கள் ஓதி பூஜையைச் செய்து முடிப்பான். இறுதியாக அந்த பூஜையின் பலனையும் இறைச் சக்திக்கே அர்ப்பணம் செய்வதாக “ஸகலம் பரஸ்மை” -எனக்கானது அல்ல- என்று பூஜா பலனையும் இறைவனுக்கே சமர்ப்பணம் செய்து முடிப்பான். அக்னியை இறைச் சக்தியின் பிரதிநிதி யாகக் கொண்டு வீட்டிலேயே அக்னிக் குண்டம் செய்து வைத்துக்கொண்டு ஹோமம் வளர்த்து காலையும் மாலையும் அக்னி ஹோத்ர வழிபாட்டை நிறைவு செய்வான்.
அக்னி என்பது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருப்பினும் அது ஒரு தனி மூலகமாகத் தானாகவே இயங்குவதல்ல. அது தோன்றவும் இயங்கவும் வேறு பொருள்கள் வேண்டும். அது சுயம்பு அல்ல. எனவே அது இறைச் சக்தியின் தூதுவனாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்னிக்கே அவ்வறான மரியாதை அளிக்கப்படுகிறது. மனிதன் தேவர்களுக்குத் தான் அளிக்க விரும்புவதை அக்னியின் மூலமாகவே கொடுத்தனுப்புகிறான். அக்னி அணைந்தால் அதன் கூறு எதுவும் மிஞ்சுவதில்லை. அக்னியுடன் சம்பந்தப்பட்டிருந்தது மட்டுமே வேறொரு தோற்றத்தில் எஞ்சிக் கிடக்கிறது.
ஆக, வெளியிலிருந்து ஒரு புரோகிதன் வந்து சடங்குகளைச் செய்து வைக்கும் வழக்கம் வேத கால பிராமண வீடுகளில் இருந்ததில்லை. சமூகத்திற்குப் பொதுவான நோக்கங்களில் மட்டுமே பிராமணர் திரண்டு அனைவரின் பொது நன்மைக்காகவும் ஊருக்குப் பொதுவாக ஹோமம், யாகம் முதலானவை செய்வதுண்டு. பிராமணன் வைதிக காரியங்களைச் செய்து வைப்பதென்பது க்ஷத்திரிய, வைசியக் குடும்பங்களில்தான். க்ஷத்திரியர் அரசாள்வோராதலால் அவர்களின் ராஜ்ஜிய நலன் கருதியும் பிராமணர்கள் புரோகிதராய் இருந்து யாகம், ஹோமம் முதலானவை செய்து வைப்பர். அவ்வாறான தருணங்களில் மட்டுமே பிராமணர்கள் புரோகிதராக இருப்பர். சில மன்னர்கள் தமது அவையில் நிரந்தரமாகவே பிராமணரை வைத்துக்கொண்டு சமயச் சடங்குகளைச் செய்து வர விரும்பியதுண்டு. இவ்வாறு அரசவைகளில் இடம் பெறும் பிராமணரும் புரோகிதர் என்று கருதப்படாமல் குரு என மதிக்கப்பட்டனர்.
ஆகவே அர்ச்சகர் என்கிற ஒரு நிரந்தரமான பிரிவிற்கே வேத கால சமூகக் கட்டமைப்பில் இடமோ அவசியமோ இருந்ததில்லை. ஆகமங்கள் இயற்றப்பட்டு அவை விதித்த நிபந்தனைகளின்படிக் கோயில்கள் என்ற அமைப்பு வந்த பிறகே அர்ச்சகர் என்ற பிரிவு உருவாகியிருக்கிறது. இவ்வாறு உண்டான பிரிவுகளில் இடம் பெற்றோர் சம்பிரதாயமான சாதி முறை பிராமணர்களாகத்தான் இருந்திருக்க வேண்டுமென்பதில்லை. சாதி முறை பிராமணர்கள், விஸ்வகர்ம பிராமணர்கள், பண்டாரங்கள், திருக் குலத்தாருங்கூட அர்ச்சகராகப் பொறுப்பேற்றுக் கடமையாற்றி, சுய அடையாளங்களை இழந்து அர்ச்ச்கர் என ஒரு பிரிவாகியுள்ளனர்.
இன்று வட நாட்டில் ஹிந்துக்களின் புனிதத் தலங்களில் உள்ள மிகப் பெரும்பாலான கோயில்கள் இடைவிடாத அந்நியத் தாக்குதல்களால் முற்றிலும் அழிந்து திரும்பவும் கட்டப்பட்டு மீண்டும் தரை மட்டமாக்கப் பட்டு, தமக்கென ஒரு வழிபாட்டுத்தலம் இல்லையே என்ற ஆதங்கத்துடன் அவரசர அவசரமாகக் கட்டப்பட்டவையேயன்றிப் புராதனமானவை அல்ல. . முற்றிலும் பக்தி வேகத்தில் கண்ணீர் மல்கி, மனம் கசிந்து ஆவேசத்துடன் கட்டப்பட்டவை. புனித பக்தியின் பீறிட்டெழுந்த உணர்ச்சி வேகமே அவற்றின் சாந்நியத்திற்குப் போதுமானவை. அவற்றுக்கு ஆகம விதிகளின் இலக்கணமோ நிபந்தனைகளோ அவசியம் இல்லை. பொங்கிவரும் பக்தி வெள்ளம் எல்லா அழுக்குகளையும் அடித்துக்கொண்டு போய்விடும். எனவேதான் காசி விசுவநாதரையோ உஜ்ஜயினி மஹா காலேஸ்வரையோ எவரும் தொட்டு வணங்கி மெய் சிலிர்க்க முடியும். என் எஜமானன் விட்டல நாதனைக் கூடக் கட்டி அணைத்து மார்புறத் தழுவிக்கொள்ள முடியும். அவனது திருப்பாதங்களில் சிரம் வைத்துக் கண்ணீரால் அவற்றைக் கழுவ முடியும். அல்லது நண்பா எனத் தோளில் கைபோட முடியும். மகனே என்று கொஞ்ச முடியும். ஆசானே என்று பாதங்களைப் பற்றிக் கொள்ள முடியும். அங்கெல்லாம் ஆகமக் கட்டுப்பாடுகளை களங்கமற்ற பக்திச் சூறாவளி அடித்துக்கொண்டு போய்விட்டது.
இன்று ஹிந்துக்களின் தலையாய புனிதத் தலமான காசியிலேயே விசுவநாதரின் ஆலயம் மிகவும் குறுகலாகத்தான் இருக்கிறது. காசியின் அதிபதியாகவே இருந்து மந்திரம் ஓதி மோட்சத்திற்கு உத்தரவாதம் அளிக்கிற மகோன்னத நிர்மூலனே மிகச் சிறிய வடிவில்தான் தொட்டுணர வாய்ப்பளிக்கிறான். அதற்கு அருகிலேயே ஏளனம் செய்வதுபோல் இடத்தை அடைத்துக்கொண்டு வானளாவி நிற்கிறது ஞானவாபி மசூதி! இங்கே ஆகம விதிகளுக்கு எங்கே இடம் இருக்க முடியும்?
ஆகையால் அதிகம் அந்நிய பாதிப்புக்குள்ளாகாது ஓரளவு இடையூறுகளோடு தப்பித்த மிகப் பெரும்பாலான தென்னகக் கோயில் கள்தாம் ஆகம விதிப்படி இயங்கி வருகின்றன. குறிப்பாகத் தமிழ் நாட்டில்தான் ஆகம விதிகளை அனுசரிக்கும் கோயில்கள் மிக அதிகம். ஆனால் தமிழ் நாட்டில் உள்ள கோயில்கள் அனைத்துமே ஆகம விதிப்படி அமைந்தவை எனக் கூற முடியாது. ஆகம விதிப்படி அமையாத ஆலயங்களை வைதிகக் கோயில்கள் எனலாம். இங்கெல்லாம் அர்ச்சகர் பணி தொடர்பாக எவரும் உரிமை பாராட்ட முடியாது. இங்கு எவரும் அர்ச்சகராகலாம். ஆகியும் உள்ளனர்.
இங்கிலாந்திலேயே ஆக்ஸ்ஃபோர்டு வளாகத்தில் மிகவும் மரியாதையுடன் வாழ்ந்து மறைந்த முதுபெரும் வரலாற்று அறிஞரும் ஹிந்து சமய சமூக அமைப்புகளுக்கு அந்நிய மதத்தவரால் விளைந்த பாதிப்புகளையும் தங்கு தடையின்றி விவரித்து மேகத்திய அறிவுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவருமான வங்காளப் பெருமகன் நிரத் சந்திர செளதரி ஹிந்து ஆலயங்கள் பொது சகாப்தம் மூன்று முதல் ஐந்தாறு நூற்றாண்டுகளுக் குள்ளாகத்தான் தோன்றின என்று ஆய்வாதாரங்களுடன் கூறுகிறார். பழைமையான அக்கால கட்டத்து ஹிந்து ஆலயங்கள் இருந்தமைக்கான தடையங்கள் ஆஃப்கானிஸ்தானம் தொடங்கி ஹிந்துஸ்தானத்தில் பல இடங்களில் இடிபாடுகளாகவும் வெறும் அஸ்திவாரக் கட்டமைப்புகளாகவும் காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். இவை மடாலயங்களாக மட்டுமே இருந்திருக்கவும் கூடும். வழிபாட்டுக்குரிய ஆலயங்களுக்கும் மடாலயங் களுக்கும் வேறுபாடுகள் இருப்பது இயல்புதானே?
ஆக, வேத கால வாழ்க்கை முறையுடன் ஒப்பிடுகையில் கோயில்களின் தோற்றம் மிகவும் பிற் காலத்தவைதான். மேலும் அவை தோற்றம் கொள்வதற்கென்றே உருவானவைதாம், ஆகமங்கள். ஸ்மிருதிகளின் காலத்திற்கும் பின்னதாகக்கூட ஆகம காலம் இருக்கலாம். மேலும் ஆகமங்கள் தோன்றியது தெற்கில்தான் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவை சமஸ்க்ருதத்திலும் கிரந்தத்திலும் இருந்தாலும்கூட!. மேலும் கிரந்தம் தென்னாட்டிற்கே உரித்தானதாகவும் கருதப்படுகிறது. மட்டுமல்ல, தென்னாடு பல மூல சமஸ்க்ருத நூல்களை இயற்றிய பெருமைக்கும் உரியதுதான்.
ஆலயங்களில் எது எவ்வாறாக இருக்க வேண்டும் என்ற கட்டமைப்பு விதிகளுடன் ஆராதனைக்கான விக்கிரகங்களைப் பிராண பிதிஷ்டை செய்யும் முறை, எத்தனை கால எவ்வாறான பூஜை முறை, யார் பூஜைகளையும் வழிபாட்டு முறையையும் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆகமங்கள் நிபந்தனைகளாகவே விதித்துள்ளன. குறிப்பாகத் தென்னாட்டவர் வாசிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆகம விதிகளுக்கு கிரந்த எழுத்து பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை யூகிப்பதில் சிரமம் இருக்காது.
தமிழ்நாட்டில் குறிப்பாக சோழர், பாண்டியர், பல்லவர் ஆட்சிக் காலத்திலும் தொடக்க கால சேரர் ஆட்சியிலும்தான் கோயில்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை இரண்டு முதல் ஐந்து பொது சகாப்த ஆண்டுகளில் கட்டப் பட்டவையாகக் கொள்ளலாம். சிலப்பதிகாரம் கண்ணகிக்குக் கோயில் கட்டப்பட்டதைப் பேசுகிறது. காவிரிப் பூம்பட்டினத்தில் கோயில்கள் இருந்தமைக்கும் அதில் குறிப்புகள் உள்ளன. ஆனால் இவையெல்லாம் வேத காலத்திற்கு மிகவும் பிற்பட்டவை. இக்கால கட்டத்தை ஆகம காலம் எனக் குறிப்பிடலாம். இறை வணக்கத்துக்காகப் பிரத்தியேகமாக ஓர் பொது இடம் தேவை என உணரத் தலைப்பட்டு, கலைத் தாகங்களையும் கலாசாரக் கூட்டங்கள், சமுகக் கலந்துறவாடல்கள் ஆகியவற்றையும் அதோடு கூடவே நிறைவு செய்துகொள்ளவும் அரசர்களும் குறு நில மன்னர்களும் பிற் காலத்தில் ஊர் பிரமுகர்களும் பிறகு மக்களே ஒன்று சேர்ந்தும் மேற்கொண்ட ஏற்பாடுதான் கோயில்களாகத் தோற்றம் கொண்டிருக்க வேண்டும். ஆனல் சிலம்பில் கோயில்களில் அர்ச்சகராகப் பணியாற்றியோர் யார் என்பதற்குத் தெளிவான குறிப்பு இல்லை.
நாயக்க மன்னர்கள் ஆதிக்கத்தின் கீழ் தமிழகம் வந்த பிறகுதான் தமிழகக் கோயில்களில் ஆகம விதிகள் கடுமையாக அனுசரிக்கப் பட்டன என்றும் தகவல் உண்டு. இது ஐநூறு ஆண்டுகளுக்கும் முற்பட்ட நிலைமை. ஒரு வழக்கத்தைச் சம்பிரதாய நடைமுறை எனச் சட்டம் ஏற்றுக்கொள்ள ஒரு நூற்றாண்டுக் காலமே போதுமானது. இதனைத்தான் ஆங்கிலத்தில் கன்வென்ஷன் என்கிறோம். பொதுவாக கன்வென்ஷனுக்கு ஆட்சேபம் எழுவதில்லை- அது இயற்கை நீதிக்கு விரோதமானதாக இருந்தாலன்றி. சதி என்கிற உடன்கட்டை ஏற்றப்படுதலையும் தாழ்த்தப்பட்டோர் ஆலயப் பிரவேசத்தையும் சட்ட ரீதியாக எதிர்த்தபோது கன்வென்ஷன் என்கிற ஆயுதத்தைத்தான் முன்வைத்தனர். இயற்கை நீதிக்கு முரணானது என்ற அடிப்படையில் அது புறந்தள்ளப்பட்டது. ஆனால் அர்ச்சகர் விவகாரம் இத்தகையது அல்ல. இதில் உடலுக்கோ உள்ளத்திற்கோ வன்முறைத் தாக்குதலுக்கு வழி இல்லை. அர்ச்சகர் வாய்ப்பு எனக்கு மறுக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன் என்றோ தாழ்த்தப்பட்டவன் என அவமதிக்கப்படுகிறேன் எனவோ ஆகம விதிப்படி நடக்கும் ஆலயத்தின் விஷயத்தில் ஒருவர் வாதாட முடியாது. நம்பிக்கையுள்ள ஹிந்துவான நான் ஆலயத்தின் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப் படுவதால் அவமானத்திற்குள்ளாகிறேன் என்றுதான் புகார் அளிக்க முடியும். ஏனெனில் இது சமூக உரிமை. முன்னது மத நடைமுறை.
அடுத்தபடியாக, மக்கள் பிரிவுகளே அவரவர் சாதிக்கெனக் கோயில்களைக் கட்டிக் கொண்டதும் இவ்வாறான தூண்டுதலின் விளவாகவே இருக்கக் கூடும். சுய ஆர்வம், சுயாபிமானம் காரணமாகவே இக்கோயில்கள் உருவானமையால் இங்கு நியமனம் பெற்ற அர்ச்சகர்கள் சம்பத்தப்பட்ட சுய சாதியினராகவோ அல்லது அவர்களின் புரோகிதர்களான பிராமணர் களாகவோ இருக்கலாம். அவர்கள் யாராயினும் அவ்வாறான கோயில்களில் காலங் காலமாக இருந்து வரும் சமயம் சார்ந்த சம்பிரதாயம் அடிப்படை இயற்கை நீதியின்படியோ நியதியின்படியோ மாற்றப்படக் கூடியதல்ல. அவரவர் சாதிக்கான இத்தகைய சாதிக் கோயில்கள் ஆகம விதியின்படிக் கட்டப்படாதனவாகவே இருந்தாலுங் கூட அந்தந்தச் சாதியினரே மனமுவந்து ஏற்றுக் கொண்டாலன்றி அத்தகைய கோயில்களில் அரசாங்கம் தலையிட்டு சமய நடைமுறை களில் சட்டத்திருத்தமோ அவசரச் சட்டமோ கொண்டு வந்து மாற்றிவிட இயலாது. ஏனெனில் அர்ச்சகரின் பணி என்பது முழுக்க முழுக்க மதம் தொடர்பான சடங்காச்சாரச் செயல்பாடாகும். கோயில் நிர்வாகம், வரவு செலவு, துப்புரவு, ஊதியம் வழங்கல் முதலான சமூகம் சார்ந்த பணிகளுக்கும் அர்ச்சகருக்கும் தொடர்பில்லை. அரசாங்கம் கொண்டு வரக்கூடிய சட்டத் திருத்தங்களோ அவசரச் சட்டங்களோ சமயச் சடங்காச்சாரம் சார்ந்த அர்ச்சகர் நியமனம் பற்றி இயற்றப்பட்டதால் அவை செல்லத்தக்கதல்ல என்றுதான் அர்ச்சகர்கள் சார்பில் வழக்கு முன் வைக்கப்பட்டது. பிராமணர்கள்தான் அர்ச்சகராக முடியும் என்ற வாதம் அதில் முன்வைக்கப் படவில்லை. மத ரீதியிலான ஆகம விதிகள் மீறப்பட முடியாதவை, அரசியல் சாசனத்திற்கு முரணானவை என்றுதான் வழக்காடப்பட்டது. 1972 சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்காடுகையில் அர்ச்சகர் பணிக்குப் பாரம்பரிய உரிமை கொண்டாடியபோது உச்ச நீதி மன்றம் அதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டது.
மேலும் அர்ச்சகர் சங்கங்கள் சார்பில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பதால் இது ஒரு தொழிற் சங்க வழக்காடுதலுக்கும் பொருத்தமான லட்சணத்திற்குரியதாகிறது. காலங்காலமாக அர்ச்சகர் என்கிற ஒரே பணியைச் செய்துவரும் எமக்கு வேறு பணி செய்வதற்கான அனுபவமோ திறமையோ இல்லை, இந்நிலையில் அர்ச்சகத் துறையில் இம்மாதிரி வேலை வாய்ப்பைப் பெருக்க வழி செய்வது காலப் போக்கில் எமது வேலை வாய்ப்பினைக் குறைத்துவிடும், இது எங்களின் ஜீவாதார உரிமையைத் தடுப்பதாகும் என அவர்கள் தொழிற் சங்க பாணியில் வாதாட வாய்ப்புண்டு. ஏனெனில் ஹிந்து அறநிலையச் சட்டம் 1959 க்கு 1972-ல் கருணாநிதியின் தி.மு.க. அரசு கொண்டு வந்த ஹிந்துக் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்தலாகாது எனக் கோரி உச்ச நீதி மன்றத்தில் சேஷம்மாளும் மற்றவர்களும் தாக்கல் செய்த ரிட் மனுக்களை அர்ச்சகர்கள் பாரம்பரிய உரிமை கோர இயலாது என்றும் அவர்கள் மதத் தலைவர்களோ மடாதிபதிகளோ அல்ல, அவர்கள் வெறும் கோயில் வழிபாட்டு நடைமுறைகளைச் செய்யும் ஊழியர்களே எனவும் கூறித்தான் தள்ளுபடி செய்தது. கோயில் நிர்வாகத்தில் உள்ள எல்லாப் பணியாளர் களையும் போலத்தான் அர்ச்சகர்களும் எனத் தனது தீர்ப்பில் அது சொல்லிவிட்டது. ஆனால் ரிட் மனுக்கள்தாம் தள்ளுபடி செய்யப் பட்டனவேயன்றி வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் தீர்ப்பு வராமல் தாமதம் ஆவதற்கும் கருணாநிதி அரசுதான் காரணம். ஏனெனில் 1976 வரையிலும் பின்னர் 1989 லிலும் மீண்டும் 1996 லிலும் அடுத்து 2004 லிலும் தி மு க தான் ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.
1972 ரிட் மனு விசாரணையில் ஐந்து நீதிபதிகளின் அமர்வு கொண்ட உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு மிக விரிவானதாக உள்ளது. முழுவதையும் எழுதிக் காட்டினால் கட்டுரை மிகவும் சலிப்பூடுவதாக மேலும் நீண்டு விடும். இப்போதே இது சலிப்பூட்டிவிட்டிருக்குமோ என்று அஞ்சுகிறேன். ஏனெனில் எகத்தாளமாகவும் காரசாரமாகவும் அதிகப் பிரசங்கித்தனமாக, எதிலும் சரியான புரிதல் இல்லாவிட்டாலும் தடாலடியாக எதையாவது சொல்லி திசை திருப்புவதாகவும் விதண்டா வாதம் செய்ய இதில் வாய்பு ஏதும் கண்டிபிடிப்பது எளிதல்லவே!
சேஷம்மாள் மற்றும் பலர் வழக்கில் அவர்கள் சார்பிலும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் வாதாடியவர்களில் பார்ஸிக்காரரான பால்கிவாலாவும் ஒருவர்! அவரை ஒருவளை பிராமண அடிவருடி என நியாயப் படுத்தினா லும் வியப்பில்லை! ஏனெனில் சுப்பிரமணிய சாமி இதில் வாதாடுவ திலிருந்தே அர்ச்சகர்கள் பிராமணர் என்பதால்தானே என்றுகூட குதர்க்க வாதம் செய்பவர்களுக்கு நம்மிடையே பஞ்சமேயில்லை! சுப்பிரமணிய சாமி என்கிற பார்ப்பனர் இரண்டு ஜீ வழக்கில் ராஜா மீது குற்றம் சுமத்தியது அவர் ஒரு தலித் என்பதல்தான் என்று விமர்சனம் செய்தவர்கள்தானே! இதுவும் சொல்வார்கள், இன்னமும் சொல்வார்கள்!
சேஷம்மாள் மற்றும் பலர் தாக்கல் செய்த ரிட் மனுக்கள் யாவும் முக்கியமாக அர்ச்சகர் பணி பாரம்பரிய உரிமை என்ற முறையில் வாதிப்பதாகவே இருந்ததால்தான் அர்ச்சகர்கள் பாரம்பரிய உரிமை கோர முடியாது என்று உச்ச நீதிமன்றம் ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்து விட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து (நானே பல பொது நல வழக்குகளிலும் நுகர்வோர் வழக்கிலும் வழக்கறிஞர் துணையின்றி ‘Party in Person’ (பார்ட்டி இன் பெர்ஸன்) என்ற தகுதியுடன் வாதாட அனுமதி பெற்று வழக்காடி வெற்றியும் பெற்றிருக்கிறேன்! நான் வழக்குரைஞன் அல்ல என்றாலும்! அதன் அடிப்படையிலேயே இக்கருத்தை வெளியிடுகிறேன்). தொழிற் சங்கப் பிரச்சினை என்ற ரீதியில் இவ்வழக்கைக் கொண்டு போயிருக்கலாம்!
1972 –ன் ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட போதிலும் ஆகம விதிகள் என்கிற வலுவான அடிப்படை இதில் இருப்பதால், ஆகம விதி மீறல் ஏதும் நடைபெற்றால் அப்போது அதனை ஆட்சேபிக்கலாம் என ஒரு முட்டுக் கட்டையை அப்போதைய உச்ச நீதி மன்றம் போட்டுவிட்டதால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு கருணாநிதி அரசால் தீவிர நடவடிக்கை எடுக்க இயல வில்லை. நிலுவையில் உள்ள வழக்கில் திருப்திகரமாக ரிட்டன் ஆர்கியுமெண்ட் (எழுத்து மூல வாதம்) செய்தாக வேண்டுமே! என்னவென்று வாதாடுவது? மேலும் அப்போதைய நேரம் பலவாறான அரசியல் கொந்தளிப்புகள் இருந்த கால கட்டம். ஒருபுறம் எம் ஜி ஆர் எதிர்ப்பு, இந்திரா காந்தியுடன் பகைமை, எம் ஜி ஆர் தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதாலேயே ஏற்பட்ட பெரும் தலைவலி, நெருக்கடி நிலை எனப்பல சங்கடங்களில் பாவம், இந்த அர்ச்சகர் சமாசாரம் அவருக்கு மறந்தே போயிருக்கலாம். ஒருவேளை இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஹிந்துக்களின் மத சம்பந்தமான விஷயங்களில் வேறு தலையைக் கொடுத்து வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமா என்று சிலர் கருணாநிதிக்கு ஆலோசனை கூறியிருக்கலாம். கொள்கையைவிடப் பதவியில் நாட்டம் மிக்க கருணாநிதியும் சட்டத் திருத்தத்தைக் கிடப்பில் போட்டிருக்கலாம்.
தமிழ் நாட்டில் கருணாநிதி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது என்பதால் 2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை ஓர் அவசரச் சட்டமாகப் பிறப்பித்தார். இதை ஆட்சேபித்து சிவாசாரியார் சங்கமும் , அர்ச்சகர் சங்கமும் உச்ச நீதி மன்றம் சென்றதில் அந்த அவசரச் சட்டமும் இன்றளவும் நிலுவையில் உள்ளது.
முதலில் அவசரச் சட்டம் இயற்றும் அளவுக்கு இது ஒன்றும் தலை போகிற காரியம் அல்ல. பல்வேறு காரணங்களுக்காகப் பல்லாயிரம் பேர் வேலையின்றி வருஷக் கணக்கில் வேலையின்றித் திண்டாடுகையில் சில நூறுபேர் அர்ச்சகர் வேலைக்காக முதலில் ஓராண்டு பின்னர் இரண்டு ஆண்டுகள் பயிற்சி என்று பெறும் அளவுக்கு அப்படியொன்றும் நுணுக்கமான தொழிலை அவர்கள் கற்றுவிடவில்லை என்பதாலும் பொறியியற் கல்வி போன்றவற்றில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரம் பேரே வேலையின்றித் திண்டாடுகையில் இது பெரிதல்ல என்று சான்றோரான நீதிபதிகள் கருதியிருக்கலாம். மேலும் இன்றைய இளம் தலைமுறை அர்ச்சகர்களே அதில் வருமானம் போதாமல் பகுதி நேர வேலையாக மத சம்பந்தம் சிறிதுமில்லாத பணிகளில் ஈடுபடும் நிலையினையும் சான்றோரான நீதிபதிகள் எண்ணிப் பார்த்திருக்கலாம். அத்துடன் அவர்கள் இந்த மனுக்களை விசாரிக்கையில் இது ஆகம விதிகள் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சினை; அவசரப்பட்டு இதில் முடிவு செய்யலாகாது எனக் கருதியே தமிழக அரசுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறினர்.
தமிழ் நாட்டில் ஆகம விதிப்படி நடைபெறும் கோயில்கள் 3500-க்கும் அதிகமாக இருப்பதால் அங்குள்ள நிலைமைகளை யெல்லாம் விசாரித்துத் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் போதிய அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசுதான் மறு தேதி கேட்டுக் கொண்டது.
ஆக, கருணாநிதியின் தி.மு.க. அரசுதான் இவ்வழக்கில் தீர்ப்பு வராமல் கால தாமதம் செய்தது.
2011 மார்ச் மாதம் வரை காருணாநிதியின் ஆட்சிதான் தமிழ் நாட்டில் நடந்து வந்தது. அவசரச் சட்டத்தை முறைப்படுத்த வேண்டியுருப்பதால் உடனடியாக இவ்வழக்கில் தீர்ப்பு வந்தாக வேண்டும் என்று சட்டத் துறையை அவர் ஏன் துரிதப் படுத்தவில்லை?
பெரியாரின் உண்மைத் தொண்டனான நான் இதைச் செய்து முடிக்காவிட்டால் முதல்வராக இருந்தும் பயனில்லை எனச் சூளுரைத்து வழக்கை முடிவுக்குக் கொண்டு வர வேண்டியவர் தமது தரப்புக் கடமைகளை ஆற்றவிடாமல் தடுத்தது எது?
சன் டிவியுடன் பங்காளிப் பிணக்கு கொண்டு போட்டித் தொலைக் காட்சியைத் தன் பெயரில் தொடங்குவதில் காட்டிய அவசரத்தை அவசரச் சட்டத்திற்குத் தீர்வு கிடைக்கச் செய்வதில் அவர் ஏன் காட்டியிருக்கக் கூடாது? மானாட மயிலாட பார்ப்பதில் செலவிட்ட நேரத்தை ஏன் இதில் செலவிட்டிருக்கக் கூடாது? எந்தப் பார்ப்பனன் அவரைக் கைபிடித்துத் தடுத்தான்? கனவிலும் பார்ப்பன சதி கண்டு திடுக்கிட்டுத் தூக்கம் கலையும் வீரமணியாவது கருணாநிதிக்குத் தார்க்குச்சி போட்டிருக்கலாமே!
இதெல்லாம் போகட்டும், அர்ச்சகர் விவகாரம் பற்றியெல்லாம் வெறும் ஆளான என்னிடம் பொருத்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் கருணாநிதிக்கே ஒரு கடிதம் எழுதி விளக்கம் கேட்க எது தடுக்கிறது? 2006 ஆம் வருட அவசரச் சட்ட வழக்கில் தீர்ப்பு வருவதற்குக் காலதாமதம் ஆகிறதே அதற்கு யார் காரணம் என நேரடியாக பதில் சொல்லுமாறு அவரைக் கேட்பதுதானே?
ஆகம விதிகள் யாவும் பிற்காலத்தவையே. பழமையான கோவில்கள் மட்டுமே முற்றிலும் ஆகம விதிகளின் பிரகாரம் நடப்பதாகக் கொள்வது சரியாக இருக்கும். புதிது புதிதாகக் கட்டப்படும் கோயில்களில் பல ஆகம விதிகளின்படிக் கட்டப் பட்டிருக்குமானால் அங்கும் அர்ச்சகர் நியமனம் உள்ளிட்ட சகல நடைமுறைகளும் ஆகம விதிகளின்படியே செயல்பட்டு வரவேண்டும். அவ்வாறின்றி பக்தியின் தூண்டுதலால் கட்டப்படும் வைதிக ஹிந்து ஆலயங்களில் அர்ச்சக நியமங்களை நன்கு அறிந்த நிலையும் அவற்றில் ஆழ்ந்த நம்பிக்கையும் உள்ள எவராயினும் அர்ச்சகராகலாம். உண்மையில் இவ்வாறான வைதிக ஹிந்து ஆலயங்கள் நிரம்ப இருக்கவே செய்கின்றன. அவற்றில் பிராமணரல்லாதாரும் அர்ச்சகராக உண்டு. உடனே எனக்கு நினைவு வருவது பண்டார சாதியினர்.
சாதிக் கோயில்களில் அந்தந்தச் சாதியினர்தான் அர்ச்சகராக முடியும். ஆனால் போலி கவுரவம் காரணமாக பிராமணர்களை அர்ச்சகர்களாக்கிக் கொள்ளும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியிருக்கிறது. மேலும் பிற சாதியினர் வேறு அலுவல்களில் ஈடுபட்டுப் பொருள் தேடுவதில் கவனமாக இருப்பதால் சும்மா இருக்கிற அய்யரைக் கூப்பிடு என்று பிராமணரை அர்ச்சகராக்கும் வழக்கம் சில இடங்களில் வந்துவிட்டது. பிராமணர் பூஜை செய்தால் கோவிலுக்கு சாந்நித்தியம் ஏற்படும் என்கிற தவறான எண்ணத்தாலும் சாதிக் கோயில்களில் பிராமணைரைத் தேடிப் பிடித்து அர்ச்சகராக்கும் நிலை உள்ளது.
குலம் என்பது ஒரு பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகள் பெருகி, கொடிவழி தழைத்துப் பங்காளிகள் நிறைந்து அவர்களுக்குள் ஆயிரம் சச்சரவுகள் இருந்தாலும் பிற குலத்தாருடன் ஏதேனும் மோதல் வரும்போது சொந்தப் பிணக்குகளை விட்டுக் கொடுத்து ஒன்று சேர்ந்து கொள்வதுதான். ஒரே சாதியில் பல குலங்கள் உண்டு. ஒவ்வொரு குலக் கோயிலுக்கும் அந்தக் கோயில் அர்ச்சகராக அந்தக் குலத்தவர்தான் வரமுடியும். அவ்வாறு நியமிக்கப் படுபவரின் சந்ததியே பாரம்பரிய அர்ச்சக உரிமை பெறுகிறது. அந்தக் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லாது போகையில் அதே குலம் சேர்ந்த அக்குடும்பத்தாரின் பங்காளிக்கு அர்ச்சக உரிமை கை மாறுகிறது. இதைத்தான் குல மரபில் பூசாரிகள் வருவதாகக் குறிப்பிட்டேன். தன வணிகரான நகரத்தார் ஒரே சாதியினராயினும் குல அடிப்படையில் தனித் தனிக் கோயிலை முன்வைத்துத் தமக்குள் பிரிவுகள் வைத்துள்ளனர். பிராமணர்களிலும் குலத்தின் அடிபடையில் பிரிவுகள் உண்டு.
மேலும் பறையர் சாதியைச் சேர்ந்தோரில் ஒரு பிரிவினரே வள்ளுவ குலத்தினர். மற்றபடி பறையர் சாதியினரே வள்ளுவர்கள் அல்ல. இது மற்ற சாதிகளுக்கும் பொருந்தும். இதையே பூசாரி குல மரபு எனக் குறிப்பிடுகிறேன். இதைப் பூசாரி சாதி எனக் கொள்ளலாகாது.
பறையர் சாதியில் வள்ளுவர் குலத்தினரே சுத்தமாக அருகிப் போனாலோ எந்த வள்ளுவராவது பூசாரியாக இருக்க மனமின்றி வேறு உத்தியோகம் தேடிப் போய்விட்டாலோ வேறு வழியின்றி சுத்த பத்தம் என்றெல்லாம் உள்ளவராகப் பார்த்து ஒருவரை பூசாரியாகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு ஊர்ப் பெரியவர்கள் விண்ணப்பித்துக் கொள்வார்கள். இவர் வள்ளுவராக ஏற்றம் பெறுவார். பின்னர் அவரது பரம்பரை பூசாரியாகத் தொடரும். இது தாழ்த்தப்பட்டவர்கள் அட்டவணைச் சலுகை பெற்றுப் பலவாறான வேலை வாய்ப்புகள் பெற்றதால் ஏற்பட்ட மாற்றம். அதற்கு முன் பட்டாளத்தில் ஏராளமாகச் சேர்ந்ததாலும் கிறிஸ்தவ மிஷனரிகளின் ஈர்ப்பால் மதம் மாறிப்போனதாலும் வள்ளுவ குலம் அருகிப் போனது. அதனால்தான் பறைச் சாதியினரே தம்மில் தகுதி வாய்ந்த ஒருவரை வள்ளுவராகத் தேர்ந்துகொள்ளும் நிலை ஏற்பட்டது. நான் பல பறைச் சேரிக் குடிசைகளில் வசித்து, அவர்கள் தரும் உணவை உண்டு, அவர்களூடைய சமூகப் பழக்க வழக்கங்களை நெருக்கத்தில் பார்த்து விவரங்களைத் தெரிந்துகொண்டவன். சாமிக் கண்ணு என்ற நெருங்கிய நண்பர் சிதம்பரம் பறைச் சேரியில் எனக்கு உறுதுணையக இருந்தவர். அவரது குடிசையில்தான் நான் வசித்தேன்.
திருமாவளவனின் உறவினர் தடா பெரிய சாமி, எம் எல் ஏ வாக இருந்த நல்ல கவிஞரான ரவிக்குமார் இப்படிப் பலரும் என்மீது நெருங்கிய அன்பு பூண்டவர்கள். என் மீது பாசம் மிகுந்த பூங்கொடி என்கிற மார்கரெட் இன்று பெங்களூர் செயின்ட் பேட்ரிக் இண்டஸ்ட்ரியல் இன்ஸ்ட்டியூட்டில் பிரின்ஸிபாலாக இருக்கிறாள். இவள் மிகச் சிறு பெண்ணாகச் சாதாரண நிலையில் இருக்கையிலே அவளது சிதிலமான குடியிருப்பில் எனக்காக உணவு சமைத்தது மட்டுமின்றி ஒரே தட்டில் நானும் அவளுமாக உணவு உண்டும் இருக்கிறோம். இவ்வளவும் பதிவு செய்யக் காரணம் நேரடியாகக் கேட்டும் பார்த்தும் அறிந்த விவரங்களே நான் ஆவணப் படுத்துவனவற்றில் கூடுtதல்.
நிறுவனப்படுத்தப்பட்ட எந்த அமைப்பிலும் நான் இல்லை. எனவே விசுவ ஹிந்து பரிஷத்தை இவ்வாறு செயல் படுங்கள் என்றெல்லாம் பரிந்துரைக்கிற உரிமை எனக்குக் கிடையாது. நான் சொன்னதெல்லாம் அர்ச்சகர் பயிற்சி பெற்றும் வேலை கிட்டாமல் சில இளைஞர்கள் சிரமப் படுகிறார்கள் என்றால் அவர்கள் விசுவ ஹிந்து பரிஷத்தை அணுகலாம் என்பதுதான். ஆகம விதிகளின் பிரகாரம் அமையாத வைதிகக் கோயில் களில் அர்ச்சகர் வேலையில் அவர்களை அமர்த்த விசுவ ஹிந்து பரிஷத் நண்பர்களிடம் நான் விண்ணப்பித்துக்கொள்ள முடியும். ஆனால் யார் யார் அப்படி இருக்கிறார்கள் என்று நானோ விசுவ ஹிந்து பரிஷதோ தேடிக் கொண்டு போக இயலாது. பிரச்சினை உள்ளவர்கள்தான் அணுக வேண்டும். அல்லது பிரச்சினை உள்ளது என்று அங்கலாய்ப்பவர்கள் வெறும் வாய் உபசாரம் செய்துகொண்டிராமல் முன்னெடுத்து உதவிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆர் எஸ் எஸ் பேரியக்கம் பல்வேறு துணை அமைப்புகளைத் தொடங்கி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வேலைத் திட்டத்தைக் கொடுத்துள்ளது. அதனிடம் திடீரென்று அர்ச்சகர் பணிக்கான பயிற்சி பெற்று வேலை யில்லாமல் இருப்பவர்களுக்கு அர்ச்சகர் வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்க முடியாது. இந்த அமைப்புகள் யாவும் பல நிலைகளில் கூடி விவாதித்து முன்னதாகச் செயல் திட்டமும் இலக்கும் நேர ஒழுங்கும் வகுத்துக் கொண்டு செயல்படுபவை. உடனே இதில் தலையிடுங்கள் என்று ஒரு புதிய வேலைத் திட்டத்தை அவர்கள் மீது திணிக்க இயலாது. முதலில் அவர்களை ஏதோ மடக்கிவிட்டோம் என்று நினைத்து அக மகிழ்ந்து கொண்டிருக்காமல் நம்பிக்கையுடனும் நல்லெண்ணத்துடனும் எவரையும் அணுகினால் பலன் கிட்டும். மேலும் இந்த விவகாரம் நீதி மன்ற நிலுவையில் உள்ளது. இதற்கு ஒரு குறிப்பிட்ட சாதியார் மீது பழி போடுவது அறியாமை மட்டுமல்ல, அப்பட்டமான துவேஷமும் ஆகும்.
இதில் இன்னொரு விஷயமும் முக்கியம். தற்போது 2006 அவசரச் சட்டம் தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை மேதகு மூன்று நீதிபதிகள் விசாரிக்கின்றனர். ஆனால் 1972-க்கான உச்ச நீதி மன்ற வழக்கை விசாரித்து ரிட் மனுக்களைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்தது ஐந்து அறிவார்ந்த நீதிபதிகள் அமர்ந்த முழு பெஞ்ச்சு. ஆகவே 2006 சம்பந்தமான வழக்கை முழு பெஞ்ச்சே விசாரித்துத் தீர்ப்பளிப்பதே நடைமுறை. அநேகமாக 2006 வழக்கு முழு பெஞ்ச்சுக்கு மாற்றபடும் நிலை வரக்கூடும்.
முடிவாக இது அர்ச்சகர் பணி உரிமை கோரும் வழக்காக அல்லாமல், கிட்டத் தட்ட வேலை நிரந்தரம் பெற்ற தொழிலாளர்கள் தற்காலிகத் தொழிலாளர் நியமனத்தை ஆட்சேபிக்கும் வழக்கைப் போல வடிவெடுக்க முகாந்திரம் உள்ளது.
ஏனெனில் 1972 சட்டத் திருத்தத்தை ஆட்சேபித்து ரிட் தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அர்ச்சகர் பணியில் பாரம்பரிய உரிமை கோர முடியாது, அவர்களும் எல்லா ஆலயப் பணியாளர்களையும்போல வெறும் ஊழியர்களே எனத் தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம் வேலை நியமனத்தில் ஆகம விதி மீறல் இருந்தால் அவர்கள் நீதி மன்றத்தை அணுக வாய்ப் புள்ளது என்றும் சொல்லியிருக்கிறது. இப்போதே ஏன் இந்த அச்சம் எனவும் கேட்டுள்ளது.
எனவேதான் இந்நிலையில் மூன்றாவது நபராக 2006 வழக்கில் நான் ஒரு எதிர் வக்காலத்து தாக்கல் செய்தால் இந்த வழக்கில் நான் தனிப்பட்ட முறையில் எந்த விதத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன் என நீதிமன்றம் முதலில் கேட்பது வழக்கமான நடைமுறைதான் என்பதால் அதை நான் நினைவூட்ட வில்லை. மாறாக எதிர் மனுதாரர் நான் ஒரு நம்பிக்கையுள்ள மத சடங்காராங்களை அனுசரிக்கும் ஹிந்து என்ற முறையில் எனக்கு இந்த விஷயத்தில் ஈடுபாடு உள்ளது என்று சொல்லி அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள ஜீவாதார உரிமைகளை முன்வைத்தால் இது முற்றிலும் சமய நடைமுறை, சமூக நடைமுறை அல்ல என்று எடுத்த எடுப்பிலேயே மனுவைத் தள்ளுபடி செய்துவிடும் என்று சொன்னேன்.
ஏனெனில் சமூகப் பிரச்சினையான வழிபாடு செய்வதற்காக ஆலயப் பிரவேசம் செய்வதும் சமயச் சடங்கின் பிரகாரம் அர்ச்சகர் பணி செய்யக் கருவறைக்குள் போவதும் ஒன்றல்ல. தாழ்த்தப்பட்டோர் ஆலயம் வந்து வழிபாட்டில் பங்கேற்பதும் கோயில் கருவறையில் அர்ச்சகராகப் பூசைகள் செய்வதும் வெவ்வேறானவை. முன்னது சமூகப் பிரச்சினை, பின்னது சமயப் பிரச்சினை ஆகவே இதில் இறுதித் தீர்ப்பு வராமல் இந்த எதிர் மனுவை ஏற்க இயலாது என்று உச்ச நீதி மன்றம் மனுவைத் தள்ளுபடி செய்துவிடும்! சட்டம் அறிந்தவர்கள் இவ்வாறுதான் எடுத்துக் காட்டுவார்கள்.
பல வழக்குகளில் நேரடியாகப் பங்கேற்றும், பல வழக்குகளைப் பற்றிய விரிவான பதிவுகளை ஆழ்ந்து படித்தும் பெற்ற அனுபவத்தின் அடிப்-படையிலேயே இதனைக் குறிப்பிடுகிறேன். எனது அனுமானத்தில் தவறு இருக்குமானால் சட்ட நிபுணர்கள் அதனைச் சுட்டிக் காட்டுவது எனக்கு மட்டுமின்றி இதில் ஈடுபாடுள்ள அனைவருக்குமே நன்மை பயக்கும்.
+++++
- அதிகார நந்தீசர் – புத்தக வெளியீட்டு விழா
- தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது 2012 ஆம் ஆண்டு பெறுபவர் அம்ஷன் குமார்
- ஆகமங்கள், அர்ச்சகர்கள், இரண்டுங் கெட்டானில் அவசரச் சட்டம்
- வேதனை – கலீல் கிப்ரான்
- வாழ்வியல் வரலாற்றின் சிலபக்கங்கள் –24
- நினைவுகளின் சுவட்டில் (96)
- கான் அப்துல் கஃபார் கான் மற்றும் இஸ்லாமிய சான்றோர்கள்
- முள்வெளி அத்தியாயம் -20
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 37
- எஸ்ராவின் உறுபசி – தீராத மோகம்
- இறப்பின் விளிம்பில். .
- ஒரு தாயின் கலக்கம்
- ஆனந்த் ராகவ் வின் இரண்டு நாடகங்கள்
- அமேசான் கதை – 2 வாழ்வு தரும் மரம்
- குந்துமணியும் கறுப்புப் புள்ளியும்
- தார் சாலை மனசு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் -6
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 31) காதலின் மனக்காட்சி
- சாகித்திய அகாடமி நடத்திய க.நா.சு. நூற்றாண்டு விழா.
- ம.தவசியின் ‘சேவல் கட்டும்’ வெற்றிமாறனின் ‘ஆடுகளமும் ‘
- உனக்கான பாடல் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு
- வேர் அறுதலின் வலி நூலுக்கான இரசனைக்குறிப்பு
- “ இவர்கள் சாகக்கூடாதவர்கள் ”
- அவளின் கண்கள்……
- ’ செம்போத்து’
- மலேசியாவில தமிழ் நாவல் பயிற்சிப் பட்டறை
- சுஜாதாவின் மத்யமர் புத்தக விமர்சனம்
- வானவில்லின்……வர்ணக் கோலங்கள்..!
- மாத்தி யோசி…!
- ரமளானில் ஸகாத் சுட்டெரித்தலும் – வளர்ச்சியும்
- தொலைந்த காலணி..
- மஹாளயத்தில் பொன்னம்மா யார்?
- பா. சத்தியமோகன் கவிதைகள்
- 2013 ஆண்டில் செந்நிறக்கோள் நோக்கி இந்தியா திட்டமிடும் விண்ணுளவி
- பாகிஸ்தான் : சிறுபான்மையினரது குரலை நசுக்கும் பாகிஸ்தான் கலாச்சாரம்
- தாகூரின் கீதப் பாமாலை – 25 ஆத்ம நாடகம்.
- பஞ்சதந்திரம் தொடர் 55
- விஸ்வரூபம் பாகம் 2 – அத்தியாயம் நூற்று ஒன்று
Fantastically written, malarmannan. Keep it up.
இவ்வளவு நீளமான கட்டுரையைப்படிப்பவருக்கு மிகவும் மென்டல் ஸடாமினா தேவை. பாதிவரை படித்து நிறுத்திவிட்டேன்.
சிந்து சமவெளி, சேர சோழ பாண்டியர்கள் சிலப்பதிகாரம், காசி விசுவநாதர் ஆலயம், இசுலாமியர் படையெடுப்பு என்றெல்லாம் போய்க்கொண்டேயிருக்கிறது.
கடைசிப்பத்தியில்:
//ஏனெனில் சமூகப் பிரச்சினையான வழிபாடு செய்வதற்காக ஆலயப் பிரவேசம் செய்வதும் சமயச் சடங்கின் பிரகாரம் அர்ச்சகர் பணி செய்யக் கருவறைக்குள் போவதும் ஒன்றல்ல. தாழ்த்தப்பட்டோர் ஆலயம் வந்து வழிபாட்டில் பங்கேற்பதும் கோயில் கருவறையில் அர்ச்சகராகப் பூசைகள் செய்வதும் வெவ்வேறானவை. முன்னது சமூகப் பிரச்சினை, பின்னது சமயப் பிரச்சினை //
கோயிலில் போய் வழிபடுவதென்ன சமூகப்பிர்ச்சினையா?
என்றெல்லாம் எழுதும் மலர்மன்னன் ஏன் கருவறைக்குள் செல்வது தமிழ்ப்பார்ப்பனருக்கு மட்டும் என்று ஆகம விதிகள் சொல்கின்றன என்பதை எதிர்நோக்க அஞ்சுகிறார். ஆகம விதிகள் எப்பொழுது எழுதப்பட்டன என்று எவர் கேட்டார்கள் உங்களை ? இப்பொழுது அதைக்காட்டித்தானே நீங்களே சொல்கிறீர்கள் அல்லது உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியம் சுவாமி வாதிடுகிறார்: பார்ப்ப்னர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக முடியுமென்று.
அப்படியே அவை சொன்னாலும், இக்காலத்தில் நாமேன் அவற்றை மாற்றக்கூடாதென்பதற்கு பதில் சொல்ல அவரால் முடியவில்லை ? உள்ளே வராதீர்கள் என்று தாலிபானித்தனமாக எழுதியிருக்கிறார் புதிய மாதவியின் கட்டுரைக்கான பின்னூட்டத்தில். அப்படியென்றால் இசுலாமியர்களை எப்படி நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள்> அவர்கள் தங்கள் மதக்கொள்கையை குரங்குப்பிடிபோட்டு வைத்திருக்கிறார்கள் என்று பரிகாசம் செய்கிறீர்களே! நீங்களும் அந்தப்பிடியைப்போடடுத்தானே ‘ஆகம விதிகள் பார்ப்ப்னரை மட்டும்தான் ஏற்றுக்கொள்கின்றன! உங்கள் வசதிக்கேற்ற பேச்சுத்தானே இது?
ஆலயப்பிரவேசம் தடைசெய்யப்பட்டது தீண்டாமை. கருவறைக்குள் நுழைய ஒரு ஜாதியினர் மட்டும்தான் மதத்தில் அனுமதிக்கப்படவேண்டுமென்பது எந்த ஆமை சார்? சொல்லுங்கள்.
இங்கு சமூகப்பிரச்சினை, மதப்பிரச்சினை என்ற ஜோடனை வேண்டாம். எந்த ஆமை என்று சொன்னால் போதும். இன்றும் ஏன் அந்த ஆமையை நாம் உள்ளே விடவேண்டும்?
அந்த ஆமையினால்தானே தேவநாதன் வந்தான்? இல்லையா? அவனைப்போன்றோரை எப்படி நிறுத்தப்போகிறீர்கள்?
இந்த லட்சணத்தில் சொல்கிறார்: இந்துமதத்தில் பிளவு ஏற்படுத்த இப்பிரச்சினையை கிளப்புகிறார்களாம். அவர்களைப்பற்றி நீங்கள் ஏன் கவலைபடுகிறீர்கள்?
என் குற்றச்சாட்டு; ஒரு ஜாதியை மட்டும் தூக்கினால், இந்து மதத்தில் பிளவு ஏற்படத்தான் செய்யும். அதைச்செய்வது நீங்கள்’ அவர்களல்ல நண்பரே.
உங்கள் எழுத்துக்களில் ஜாதிப்பாசம்தான் தெரிகிறதே தவிர, மதப்பாசம் இல்லை. இருந்தால் கண்டிப்பாக இவ்வளவு நீளமான கட்டுரை எழுதாமல், “எந்த விதி நமக்கு இடைஞ்சலோ அவ்விதி நமக்கு வேண்டாம்; அல்லது அதை கொஞ்சம் மாற்றிப்பார்ப்போமென்றல்லவா சொல்ல மன வந்திருக்கும்?
Where there is a will, there is a way! அந்த வில் ஏனில்லை? ஏனென்றால் ஜாதிப்பாசம். பாசங்கள் களையட்டும். இந்துமதம் தானாகவே வளரும்.
Under Art.14,every citizen are equal before law.Caste syestem is a sin.It is just to permit every one to perform pooja as like in Kaasi Viswanaathar temple,Varanasi.
Malarmannan is a bundle of contradictions.He says that he is least interested in the temple worship.But he is annoyed in Archagar issue.He says that he is beyond religion.But unduly worried about the presence of huge Gnanavapi mosque very near the Kasi Visvanathar temple..He used to say that he is a sanyasi.What is the definition of sanyasi in his dictionary?.A sanyasi should not have likes and dislikes.Why then he lauds Varadarajulu Naidu as the first Hinduthva leader?.In the north,there is no need for Agama rules since those temples were constructed with utmost religious fervour according to him.So temples were constructed by South Indian Kings only to show off their wealth.South Indians are not having such religious fervour according to him..He says that Archagars are not recognised as Brahmins.According to him Subramaniya Swamy is a social crusader.That is why Swamy stalled Sethusamudhram project by objecting on the basis of religious superstitions.He is proud to say that he shared food with Dalits.But has he shed his caste supremacy?.He is consistent in attacking Karunanidhi and the persons questioning the rationale behind the objections to the ordinance.Whoever supports his view points are his disciples and whoever oppose his view points are not having deep knowledge.When he is not able to answer,he will drag Dravidian movement and EVR.According to him 207 Archagar trainees are not bodily and mentally affected.The so called convention here is not against natural justice.He wrote a long essay.But till the end,he has not disclosed the mystery called AGAMA RULES like a Modi Masthan or a Snake charmer.Another final point.A sanyasi talks about Maanaada Mayilaada?.
” சமூகப் பிரச்சினையான வழிபாடு செய்வதற்காக ஆலயப் பிரவேசம் செய்வதும் சமயச் சடங்கின் பிரகாரம் அர்ச்சகர் பணி செய்யக் கருவறைக்குள் போவதும் ஒன்றல்ல. தாழ்த்தப்பட்டோர் ஆலயம் வந்து வழிபாட்டில் பங்கேற்பதும் கோயில் கருவறையில் அர்ச்சகராகப் பூசைகள் செய்வதும் வெவ்வேறானவை. முன்னது சமூகப் பிரச்சினை, பின்னது சமயப் பிரச்சினை “
நாத்திகர்களுக்கு இரண்டுமே ஒன்றுதான். அவர்களுக்கு சமயம் என்ற ஓன்றே சமூகத்தின் ஒரு பங்குதானே என்று வாதிக்க கூடும். சமயம், சமூகம் என்றெல்லாம் இரண்டாயிருப்பது பிடிக்காத அத்வைதிகள். இந்த பிரச்சனை பற்றி இன்னும் கொஞ்சம் விவாதித்தால் (சட்டப்பூர்வமாய்) தெளிவு பிறக்கும்.
எனது அறிவுக்காக கேட்கிறேன். மற்ற மதங்களில் எப்படி ? உதாரணமாய் இஸ்லாமிய மத்த்தில் ஒரு இந்திய முஸ்லீம் எல்லா முஸ்லீம்களுக்கு இணையா ? ரோமிலும் இதே நிலைதானா? மற்ற மதங்கள் சமயம், சமூகம் என்று இரு வேறு பிரிவுகளை வைத்துள்ளனவா ?
அந்த இடங்களில் வழிபாட்டு தலங்கள் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வருவனவா ? சாதி என்ற பிரிவு இல்லாவிட்டாலும் மற்ற பிரிவுகள் எவ்வாறு ஆட்சி செலுத்துகின்றன ?
Still Few temples will not allow other religion people. Recently catholic charges admitted women as priest.. ?
சுருங்க்க் கூறின் நீங்கள் சொல்லவருவது அ) கோவில் என்பது ஹிந்துமத்த்தின் பிற்காலத்திய ஏற்பாடு ஆ) அர்ச்சகர்கள் என்பவர்கள் எல்லாரும் சமூக அளவில் பிராமணர்களாக இருக்க வேண்டியதில்லை. இ) கோர்ட் ஏற்க்னவே அர்ச்சகர் என்பது பராம்பரிய உத்தியோகமல்ல என்று அறிவித்துவிட்ட்து. ஈ) ஆனாலும் நீங்கள் அது சமய பிரச்சனையாக இருப்பதால், ஆகம் கோவில்களில் கருவறைக்குள் அர்ச்சகர்கள் மட்டுமே நுழையமுடியும் என்று நினைக்கிறீர்கள் சரியா ?
உங்களது நீண்ட பதிலுக்கு நன்றி ஐயா..
ஐயா
இன்னொரு கேள்வி, மடங்கள் எந்த வகையை சார்ந்தவை. சைவ மடங்களும், சங்கர மடங்களும் – சமயம் சார்ந்தவையா, சமூகம் சார்ந்தவையா.. ?
Kavya,
Frankly jaadhi paasam is better than your (hindu) madha dvesham.
உங்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன் வெளிப்படையாகப்பேசியதற்கு.
ஜாதிப்பாசம் என்பதற்கும் ஜாதிவெறி என்பதற்கும் தூரமில்லை. இந்த ஊர்வழியாக அந்த ஊர்சென்றடைவார்கள். ஜாதிவெறி அருவாள் வெட்டில் முடியும் மதுரையில், பரமக்குடியில், தூத்துக்குடியில்.
நேற்று மதுரை பெருங்குடியில், அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகளின் தலைகள் துண்டித்து எறியப்பட்டன. போலீசு குவிப்பு. இன்று தமிழ்ச்செய்தித்தாள்களைப்படிக்கவும்.
அதைச்செய்தவனிடம் கேளுங்கள். உங்கள் வசனத்தைப்பேசுவான்: “ஜாதிப்பாசம் இருக்கவேண்டும். எங்களாட்களை அவன் வெட்டுகிறான். அவுங்களை நாங்கள் போட்டுத்தள்ளுவோம். அவங்களுக்கு ஜாதிப்பாசம் இருக்கலாம். எங்களுக்கு இருக்ககூடாதோ!”
சபாஷ்!
உங்கள் கதை கொஞ்சூண்டு வித்தியாசம். மதம் வெர்சஸ் ஜாதி. அவங்களுக்கு அஃதன்று பிரச்சினை. மனிதர் வெர்சஸ் மனிதர்தான்.
இப்போது சொல்லுங்கள். உங்களுக்கு எது வேண்டும்? இந்துமதமா? ஜாதிப்பாசமா?
காவ்யாக்களுக்கு : (திராவிட அர்ச்சனை)
அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை கொண்டு வந்த்து சரிதான், அதே முறையைத்தான் இன்னும் எத்தனை வருடங்களானாலும் கடைபிடிப்பேன் என்பது எப்படி சரியாகும்.
ஆத்திகராகவும், ஹிந்துமதம் கலாச்சாரத்தின் ஆதரவளாராகவும் இருப்பது எவ்வள்வு கடினம். எத்தனை கருமாந்திர கேள்விகளுக்கும், எதிர்மறை எண்ணங்களுக்கும், பதில் சொல்லி மாயவேண்டியிருக்கிறது. அதற்கான தெளிவான, விரிவான பதில் இல்லையென்றால் ஆள் அம்பேல் தான்.
திடீரென்று ராமனுஜரை பகுத்தறிவுவாதியாய் சேர்த்துவிட்ட பின்பு காவ்யா, விவேகானந்தார், ராமகிருஸ்ணர், அரவிந்தர், ராய் போன்ற எல்லா இந்து சீர்திருத்தவாதிகளையும் இந்து மத்த்திலிருந்து வெளியேற்றுவிடுவார். அவர்களையும் பகுத்தறிவுவாதிகளாய் அறிவித்துவிட்டால், மிச்சமிருப்பது யார்.. ) அதனால் நானே இப்போதே கட்சி மாறி பகுத்தறிவாளனாய் மாறிவிடலாம் என்று கூட தோன்றுகிறது..
2. ”ஒருவர் சொன்னதைச் சொல்லவில்லை என்பதுபோல்
சொல்லிச் செல்வது, சொல்லாததைச் சொன்னதாகக் குறிப்பிட்டு அதற்கு பதில் சொல்வது, சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ஆனால் புரிந்துகொண்டதுபோல பாவனை கொண்டு அதற்கேற்ப சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது, சொன்னதைத் திரித்துச் சொல்வது, சொன்னதற்கு பதில் சொல்ல ஏதுமில்லாவிட்டால் சொன்னவரை மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது, தெரிந்தே திசை மாறிப் போவது இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் திராவிட அரசியல் சம்பிரதாயம்.
“
அர்ச்சகர் விவகாரம் பற்றியெல்லாம் வெறும் ஆளான என்னிடம் பொருத்தமில்லாத கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள் கருணாநிதிக்கே ஒரு கடிதம் எழுதி விளக்கம் கேட்க எது தடுக்கிறது? “
மேலே சொன்னதை போல சிறந்த விமர்சனம் திராவிட ப்ரேமிற்கு இருக்க முடியாது..
காவ்யா, புமாதவி, பரமசவம் – மாற்றங்களை கொண்ட வர முயற்சிக்கிற உங்களை பாராட்டுகிறேன். ஏன் திராவிட அரசியல் சம்பிரதாயத்தில் மாற்றங்களை கொண்டுவர நீங்கள் பாடுபடக்கூடாது.
பயப்படவேண்டாம் – பிராமணர்களை திட்டுவதை நிறுத்தவேண்டாம் ( அது மெயின் ஜாப்..) பார்ட் டைமாய்.. திருந்த வேண்டிய திராவிட அரசியல் ( ஆஹா.. டாபிக் நல்லாயிருக்கே..) பற்றிய பரமசிவன், காவ்யா, புமாதவி சேர்ந்து ஒரு கட்டுரை விளாசித் தள்ளுங்களேன்.
சில தலைப்புகள் : பகுத்தறிவாளானாகலாம், பண்பட்டவனாகமுடியுமா ?
காவ்யா, பு.மாதவி அவர்களே – கொஞ்சமாவது நோக்கில், விஸனில் தெளிவு வேண்டாமா.. ?
I am not diverting. I honestly feel the mind set of yours has to be evaluated and need self analysis.. I don’t have any right to say you all don’t have right. Every body in India / hindu has right to ask the question about hinduism. That what the open source mechanism we had. But at least try to keep the same logic to do @ your home too. Still all his formulas or relevant.. Is it need to have division between Br & NBr. The social forces are working towards bringing Dalit in to the main stream.
Some how your talks are bringing that process in to slowness. In the whole issue, see all our Mind set. We Never talked about the Dalit friends in the whole picture. Because EV ramasamy gave only lip services. And he is restricted himself only to Tamil nadu and against Brahmin..
How we approach one issue will show what is the school of thought we belong to.. Every organization is changing their mind set according to time. Only periyar followers and few staunch hindu organisation don’t want to change their mind set and grow up.
//Under Art.14,every citizen are equal before law.Caste syestem is a sin.It is just to permit every one to perform pooja as like in Kaasi Viswanaathar temple,Varanasi -Somasundaram//
ஸ்ரீ சோமசுந்தரம், நீங்கள் ஆர்ட்டிக்கிள் 14 சொல்வதைத் தவறான முறையில் இதில் சம்பந்தப்படுத்தியிருக்கிறீர்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதற்கும் ஹிந்து சமய ஆலயங்களனைத்தின் கருவறைக்குள்ளும் ஹிந்து சமயத்தினர் அனைவரும் நுழையலாம் என்று வாதாடுவதற்கும் என்ன சம்பந்தம்? ஆகம விதிகளின்படி அமைந்த ஹிந்து ஆலயங்களில் அர்ச்சக்ர்கள் தவிர வேறு எவரும் நுழையலாகாது என்பது மதம் சம்பந்தப்பட்ட மத ரீதியிலான நிபந்தனை. இந்த நிபந்தனை பிராமண சாதியினரையும் கட்டுப்படுத்துவதுதான். ஆகையால் இதில் சாதிப் பிரச்சினைக்கு இடமில்லை. அர்ச்சகர்கள் பிராமணர்கள் என்கிற கண்ணோட்டத்துடன் பார்ப்பதால்தான் சாதியை இங்கு கொண்டு வரும் மனப் போக்கு உண்டாகிறது. ஆகம விதிகளின் நிபந்தனைக்கு இணங்க அர்ச்சகர்களை அர்ச்சகர்களாகப் பார்க்கும் பார்வை இருந்தால் பிராமண சாதியினருக்கும் கருவறைக்குள் நுழைய முடியாதுதானே என்கிற புரிதல் உண்டாகும். ஆக, ஆகம விதிகளில் திருத்தம் செய்தாலன்றி அனைவரும் கருவறைக்குள் பிரவேசிக்கலாம் என்கிற நடைமுறையைக் கொண்டு வரலாம். ஆனால் ஆகம விதிகளை மாற்றும் அதிகாரம் யாரிடம் உள்ளது? நிச்சயமாக ஒரு மதச் சார்பற்ற அரசுக்கு இல்லை. நீங்கள் குறிப்பிடும் ஆர்ட்டிக்கிள் 14 அரசியல் சாசனம் குடிமக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் அடிப்படை உரிமைகளின்கீழ் வருவது. இந்தப் பகுதி ஒருவரின் மத வழிபாட்டு நடைமுறைகளில் அரசு தலையிடாது என வாக்களிக்கிறது. எனவே ஆகம விதிகளில் திருத்தம் செய்வதோ அல்லது அவற்றை முற்றிலுமாகக் கைவிடுவதோ சட்டம் இயற்றும் அமைப்புகள், இயற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப் படுத்தும் அரசுகள் ஆகியவற்றின் அதிகார எல்லைக்குள் எக்காலத்தும் வர முடியாது. ஏனெனில் சாசனத்தின் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான பாகத்தில் திருத்தங்கள் எதுவும் கொண்டுவர இயலாது, அவை நிலையான கோட்பாடுகள் என்றும் சாசனம் கூறியுள்ளது. ஆக, ஆகம விதிகளில் திருத்தம் செய்வதோ, அவற்றை முற்றிலுமாகக் கைவிடுவதோ ஒட்டுமொத்த ஹிந்து மதத் தலைமையிடம்தான் இருக்க முடியும். ஆனால் ஹிந்து மதத்தில் ஒரு புத்தகம் ஒரு தலைமை என்பதாக ஒரு ஏற்பாடு இல்லை. ஆகவேதான் ஆகம விதிப்படியிலான நடைமுறை உள்ள ஆலயங்களில் இப்போதுள்ள நிலைமையே நீடித்துக்கொண்டு போக முடியும் என்று கருதுகிறேன். இதை லத்தின் வழி ஆங்கிலத்தில் ஸ்டேட்டஸ்கோ என்பார்கள். மற்றபடி எனக்கு சாதியும் இல்லை. சாதிப் பாசம் என்பதாக ஒன்றும் இல்லை! இந்த அரசியல் சாசனம், அர்ச்சகர் விவகாரம் இரண்டுக்கும் உள்ள நிலவரத்திற்கு மீண்டும் ஒரு தனிக் கட்டுரை எழுதுகிறேன்.
பொறுமையும் இந்த விஷயத்தில் மெய்யான ஈடுபாடும் உள்ளவர்கள் படிக்கலாம்!
ஆகம விதிகளைச் சொல், சொல், சொல் என்று எவ்வித அதிகாரமும் இல்லாத என்னை வற்புறுத்துகிறார்கள்.
அவற்றை விவரிக்கப் புகுந்தால் ஒரு தனி நூலே எழுத வேண்டியதாகும். என் பேச்சை மதிக்கிற ஒரு சில பதிப்பாளர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன். அவர்கள் ஒப்புக் கொண்டால் எழுதுகிறேன். ஏனெனில் நான் புத்தகம் எழுதுவதற்காகவே நூல்கள் வாங்கவும், நூலகங்களுக்குச் செல்லவும், பிரதிகள் எடுக்கவும் போக்குவரத்துச் செலவுக்காகவும் எவ்வித வரையறையும் இன்றித் தனியாக மிகவும் கணிசமான தொகையை முன்பணமாக அவர்கள் தரவேண்டியுள்ளது. ஆகையால் அர்ச்சகர் சம்பந்தமாக உள்ள விதியை மட்டும் நான் அறிந்தவரை இங்கு விவரிக்கிறேன்:
ஆகமங்கள் மிகவும் பிற்காலத்தவை. சைவத்தில் 28 உம், வைணவத்தில் நான்கும் உள்ளன. ஆனால் நடைமுறை வசதிக்காக சைவ ஆலயங்களில் ஒன்றும் வைணவ ஆலயங்களில் இரண்டும் கடைப்பிடிக்கப்படுகின்றன.
வர்ணாசிரம தர்மப்படி சமயத் தத்துவங்களையும் ஆன்மிக விஷயங்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிராமண வர்ணத்திற்கு இருப்பதால் அர்ச்சகராகப் பொறுப்பு ஏற்கும் கடமையை இவை பிராமண வர்ணத்திற்கு அளிக்கின்றன. ஆனால் பிறப்பின் அடிபடையினால் அல்லாமல் குண கர்ம விசேஷத்தின்படி அமையும் பிராமண வர்ணத்திடம் அர்ச்சகப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகீறது. எனவேதான் அர்ச்ச்கர் என்கிற ஒரு தனிப் பிரிவு ஏற்பட்டு அது பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிறது. அர்ச்சகர் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் மிகக் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கடமைகளிருந்து தவறும் அல்லது அவற்றை மீறத் துணியும் அர்ச்சகரை அர்ச்சகர் பொறுப்பிலிருந்து தூக்கி எறியவும் ஆகம விதி உள்ளது. இப்படி அர்ச்ச்கரை நீக்க்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட்ட ஆலயத்தின் அறங்காவலர் குழுவிற்கு உண்டு.
எப்படி முறை தவறும் பாதிரிமார்கள் கிறிஸ்தவ மதத்திலும், முத்தலிப்புகள் முகமதிய மதத்திலும் இருக்கிறார்களோ அதே போல் ஹிந்து சமய ஆலயங்களின் அர்ச்சகர்களிலும் முறை தவறும் அர்ச்சகர்கள் சிலர் இருப்பார்கள்தான். அவர்கள் மீது ஆலய அறங் காவலர் குழுவே நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கங்கையே சூதகமானால் எங்கு போய் நீராடுவது என்று கேட்க வேண்டிய நிலையில்தான் பல அறங் காவலர் குழுக்கள் உள்ளன. இதற்குக் காரணம் அறங்காவலர் நியமனம் அரசின் அதிகாரங்களில் ஒன்றாக இருக்க அனுமதித்து விட்டதுதான். அதற்கு முன் முறை தவறும் அறங் காவலரை ஊரே கூடி நீக்கும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதா என்பது வேறு விஷயம்.
காசி விசுவநாதர் ஆலயம் அவுரங்கசீபு காலத்தில் இடிக்கப்பட்டு, பிற்காலத்தில் மீண்டும் கட்டப்பட்ட ஆலயம். ஆனால் ஆகம விதிகளின்படி கட்டபட்டது அல்ல. ஆகவே காசி விசுவநாதர் ஆலயம் போல எல்லாருக்கும் கருவறைக்குள் சென்று வழிபடும் உரிமை கோருவதில் பொருள் இல்லை. கருவறைக்குள் சென்று வழிபட விரும்பும் பக்தர்கள் அவ்வாறு செல்ல அனுமதிக்கும் கோயில்களுக்குப் போக வேண்டுமேயன்றி, ஆகம விதிக்சளீன்படி உள்ள கோயில்களிலும்
அந்த உரிமை வேண்டும் எனப் பிடிவாதம் செய்ய இயலாது.
-மலர்மன்னன்
வர்ணாசிரம தர்மப்படி சமயத் தத்துவங்களையும் ஆன்மிக விஷயங்களையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பிராமண வர்ணத்திற்கு இருப்பதால் அர்ச்சகராகப் பொறுப்பு ஏற்கும் கடமையை இவை பிராமண வர்ணத்திற்கு அளிக்கின்றன. ஆனால் பிறப்பின் அடிபடையினால் அல்லாமல் குண கர்ம விசேஷத்தின்படி அமையும் பிராமண வர்ணத்திடம் அர்ச்சகப் பொறுப்பு ஒப்படைக்கப்படுகீறது. எனவேதான் அர்ச்ச்கர் என்கிற ஒரு தனிப் பிரிவு ஏற்பட்டு அது பரம்பரை பரம்பரையாகத் தொடர்கிறது. அர்ச்சகர் எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் மிகக் கடுமையாக விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கடமைகளிருந்து தவறும் அல்லது அவற்றை மீறத் துணியும் அர்ச்சகரை அர்ச்சகர் பொறுப்பிலிருந்து தூக்கி எறியவும் ஆகம விதி உள்ளது. இப்படி அர்ச்ச்கரை நீக்க்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட்ட ஆலயத்தின் அறங்காவலர் குழுவிற்கு உண்டு.
எப்படி முறை தவறும் பாதிரிமார்கள் கிறிஸ்தவ மதத்திலும், முத்தலிப்புகள் முகமதிய மதத்திலும் இருக்கிறார்களோ அதே போல் ஹிந்து சமய ஆலயங்களின் அர்ச்சகர்களிலும் முறை தவறும் அர்ச்சகர்கள் சிலர் இருப்பார்கள்தான். அவர்கள் மீது ஆலய அறங் காவலர் குழுவே நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் கங்கையே சூதகமானால் எங்கு போய் நீராடுவது என்று கேட்க வேண்டிய நிலையில்தான் பல அறங் காவலர் குழுக்கள் உள்ளன. இதற்குக் காரணம் அறங்காவலர் நியமனம் அரசின் அதிகாரங்களில் ஒன்றாக இருக்க அனுமதித்து விட்டதுதான். அதற்கு முன் முறை தவறும் அறங் காவலரை ஊரே கூடி நீக்கும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதா என்பது வேறு விஷயம்.
பிராமண வர்ணம் என்றால் இன்றைய காலத்தில் எவர்?
சமயத்தத்துவங்களயும் ஆன்மிக விசயங்களையும் அவர்களுக்கு மட்டுமே பார்த்துக்கொள்ளும் பொறுப்பு ஏன் கொடுக்கப்பட்டது? சரி, அன்று கொடுக்கப்பட்டது என்றாலும், இன்றும் ஏன்?
பிறப்பின் அடிப்படையின் இல்லாமல் குண கர்ம விசேசங்களையுடையவன் இவன்; எனவே இவந்தான் அர்ச்சகராகத் தகுதியுடையோன் என்று எப்படி கண்டுபிடிக்கமுடியும்?
இன்று அப்படி கண்டுபிடித்துத்தான் அர்ச்சகரார்களாகிறா?
அப்ப்டியே கண்டிபிடித்தாலும் எப்படி அது ஒரே ஜாதியில் மட்டுமே தென்படுகிறது?
அறங்காவலர் குழுவுக்குத் தெரிந்தால்தான் அர்ச்ச்கர் விலக்கப்படுவார். திருப்பரங்குன்றத்தில் பெண் சகவாசத்தில் பிடிபட்டு விலக்கப்பட்ட அர்ச்சகர் மொட்டைக்கடுதாசியினாலே பிடிபட்டார். அவர் பலநாட்கள் அப்பெண்ணுடன் உறவில் இருன்தார். அவர் எப்படி தேர்ன்தெடுக்கப்பட்டார் அவ்வளவு பெரிய கோயிலில். குணகர்ம விசேசங்களினாலா?
ஒரே ஒரு சம்பவம் என்று காயை நகர்த்தி விட முடியாது. அச்சம்பவம் எப்படி நிகழாமல் செய்வது? குணகர்மவிசேசங்களைக்கண்டிபிடிக்கமுடியாது மலர்மன்னன். அது ஒரு வேக் டேர்ம்.
//Keep it up-ஸ்மிதா//
மிகவும் உற்சாகப்படுதியிருக்கிறீர்கள். ஆனால் விரல்களில் உண்டாகும் வலி பொறுத்துக்கொள்ள முடியாத அளாவுக்கு உள்ளதே! உடம்பைத் தேற்றிக்கொள்வதற்கான பொருள் வசதியும் இல்லையே! எல்லாம் ”அவளு”க்குத் தெரியாதா, “அவளே” பார்த்துக்கொள்வாள் என்றுதானே உற்சாகமாகவும் மனம் நொந்துகொள்ளாமலும் இருந்து வருகிறேன்!
-மலர்மன்னன்
//இந்த பிரச்சனை பற்றி இன்னும் கொஞ்சம் விவாதித்தால் (சட்டப்பூர்வமாய்) தெளிவு பிறக்கும்.
எனது அறிவுக்காக கேட்கிறேன். மற்ற மதங்களில் எப்படி ?
இன்னொரு கேள்வி, மடங்கள் எந்த வகையை சார்ந்தவை. சைவ மடங்களும், சங்கர மடங்களும் – சமயம் சார்ந்தவையா, சமூகம் சார்ந்தவையா.. ? -Ramesh//
ஸ்ரீ ரமேஷ்,
இன்னொரு கட்டுரை எழுத வைத்திருக்கிறீர்கள். பரவாயில்லை என எழுதத் தொடங்கிவிட்டேன்!
ஆனாலும் சுருக்கமாக-
மற்ற மதங்களில் ஒரு தலைமை, ஒரு புத்தகம் என்பதாக உள்ளது. ஹிந்து சமூகத்தில் அவ்வாறு இல்லை. எனவே ஒப்பீடு செய்ய வாய்ப்பில்லை. இங்கே நீ என்ன சொல்வது, நீ யார் சொல்வதற்கு என்று கேட்கிற வசதி இருப்பதால்தான் ஆளாளுக்குப் பேச முடிகிறது. நான் இப்படிச் சொல்வதை ஒரு தலைமை ஒரு புத்தகம்தான் வேண்டும் என்று நான் விரும்புவதாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாகாது. ஆனால் எந்த ஒரு அம்சத்திலும் வசதிகளும் உண்டு, தர்ம சங்கடங்களும் உண்டு. சகித்துக்கொண்டு போக வேண்டியதுதான்! குறைந்தபட்சத் தீமை விளைவிப்பது என்பதால்தான் ஜனநாயகம் ஏற்கப்படுகிறது அல்லவா? அதுபோலத்தான் இதுவும்!
செக்யூலர்- மதச் சார்பின்மை என்பதே நமக்கு அந்நியமானது
தான். ஐரோப்பாவெங்கும் ஆட்சியாளர்களை கிறிஸ்தவ மதத்
தலைமை ஆட்டிப்படைத்ததால் அதிலிருந்து விடுபட மதச் சார்பின்மை என்பதை ஐரோப்பிய ஆட்சிகள் மேற்கொண்டன. மற்றபடி வழி பாட்டுச் சுதந்திரத்தை மக்களுக்கு வழங்க வேண்டும் என்கின்ற பெருந்தன்மையினால் அல்ல! இங்கிலாந்து சரித்திரத்தைப் படித்தால் மதத் தலைமைக்கும் ஆட்சித் தலைமைக்கும் ஏற்பட்ட மோதல்கள் சுவாரசியமாக இருக்கும்!
நம்மிடம் சண்மதங்கள் என்கிற ஆறு பிரிவுகள் மட்டுமே இருந்து அவை வழி பாட்டுச் சுதந்திரம் என்ற அடிப்படையில் நல்லிணக்கத்துடன் இயல்பாகவே வாழப் பழகியிருந்ததால் மதச் சார்பின்மை என்ற கருதுகோளை ஆட்சியாளர் எண்ணிப் பார்க்கவும் அவசியம் ஏற்படவில்லை!
ஆனால் விதி விலக்காக அவை தமக்குள்ளும் பவுத்தம் சமணம் ஆகியவற்றோடும் மோதிக் கொண்டபோதெல்லாம் அவை சில சமயம் சமரசம் செய்துவைத்தும் சில சமயம் அரசன் எவ்வழி , அவ்வழி குடிகள் என்ற நிலைமையின்படியும் தீர்க்கப் பட்டிருகின்றன.
உங்களுடைய அடுத்த கேள்வி:
சமயக் கோட்பாடுகளை மக்களிடையே எடுத்துச் சொல்வதற்காகவும், சமயக் கோட்பாடுகள் சீராகத் தொடரத் துணை நிற்கவும் உருவானவைதான் எல்லா மடங்களும். காலப்போக்கில் அவை சமூக நலனையும் கருத்தில் கொள்ளலாயின. ஆகையால் அவற்றை சமய அடிப்படையில் சமூக நலனையும் பேணும் அமைப்புகளாகக் கொள்ளலாம். சைவ, வைணவ மடங்கள் சமூக அம்சங்களில் ஒன்றான மொழிக்குப் பெரும் தொண்டாற்றியுள்ளன. சில கல்வி, பொருளாதாரம் போன்ற சமூக அம்சங்களில் கவனம் செலுத்துகின்றன. சிருங்கேரி சங்கர மடம் தெற்கே முகமதியம் அத்து மீறி அட்டகாசம் செய்யவிடாமல் அரண் போல் காத்து நிற்பதில் உறுதி பூண்டு நின்றது. ஸ்ரீ வித்யாரண்யர் வலுக்கட்டாயமாக முகமதியராக்கப்பட்ட ஹரிஹரர் புக்கர் ஆகியோரைத் தாய் மதம் திரும்பச் செய்து அவர்கள் ஒரு ஹிந்து சாம்ராஜயத்தை நிறுவி க்ஷத்திரிய தர்மம் காக்கத் தூண்டினார். குமரகுரபரர் காசியில் தாரா ஷூகோவை இணங்க வைத்து முகமதியர் ஆக்கிரமித்திருந்த இடத்தை மீட்டு சைவ மடத்தை அங்கு நிறுவினார். தாயுமானவ சுவாமிகள் போர்த்துக்கீசிய மத மாற்றிகளை எதிர்த்து நிற்கத் தூண்டுதலாய் இருந்து அதற்கென மடம் நிறுவினார். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். மக்களுக்காகத்தான் மதம். மக்கள் இல்லையேல் அங்கு மதத்திற்கு இடமில்லை. மக்கள் என்பது சமூக அமைப்பே. சமூகத்தைப் பேணுவது சமயத்தின் கடமைகளில் ஒன்று. சமயத்தின் ஆளுமை சமூகத்தின் மீது குறைந்த போது இயல்பாகவே சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக உருவாகும் பிரிவுகள் தங்கள் நலனுக்கு ஏற்பச் சட்ட திட்டங்களைச் செய்துகொண்டு அதைச் சமயத்தின் பெயரால் நியாயப்படுத்தி விடுகின்றன. இவ்வாறு ஆதிக்க சக்திகள் எவ்வாறு உருவாகின்றன? தாதாக்கள் உருவாகிற மாதிரிதான்! சமுதாயத்தில் எல்லோராலும் தாதாக்கள் ஆக முடிகிறதா? இல்லைதான். ஆனால் சமூகமே தாதாக்கள் உருவாக இடமளித்துவிடுகிறது! சில மடங்கள் இவ்வாறு உருமாறியதும் உண்டு! போதுமா?
-மலர்மன்னன்
Thanks Shri Malarmannan. Great article.This should shut up the noisy but ill informed anti Brahmin crowd.The proverb is very true. Empty vessels make loudest noise.
It is pathetic to see people commenting on articles they have not read fully.
I have read not only his article but also his further comments fully. More comment from me will follow shortly to unearth all and held up.
//Malarmannan is a bundle of contradictions.He says that he is least interested in the temple worship.But he is annoyed in Archagar issue.He says that he is beyond religion.But unduly worried about the presence of huge Gnanavapi mosque very near the Kasi Visvanathar .temple..He used to say that he is a sanyasi.What is the definition of sanyasi in his dictionary?.A sanyasi should not have likes and dislikes.Why then he lauds Varadarajulu Naidu as the first Hinduthva leader?
Another final point.A sanyasi talks about Maanaada Mayilaada? – Paramasivam //
அன்பார்ந்த ஸ்ரீபரமசிவம்,
நீங்கள் சைவ சித்தாந்தம் பயிலச் சென்றதாக முன்பு ஒருமுறை குறிப்பிட்டது நினைவில் இருப்பதால் அந்த மரியாதைக்காகவே உங்களுடைய பொருத்தம் இல்லாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்வதில் நேரத்தைச் செலவிடுகிறேன். ஆனால் நீங்களோ திராவிட அரசியல் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர், அதற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறீர்கள்.
//பொதுவாக எனக்குக் கோயில் ஒழுங்குகளில் ஈடுபாடு இல்லை. வழிபாட்டுக்காக நான் கோயில்களுக்குச் செல்வதென்பது மிகவும் துர்லபமே//
இது என் கட்டுரையில் நான் குறிப்பிடும் வாசகம். இதற்குக் கோயில்கள் மீது எனக்கு அக்கறையே இல்லை என்றா பொருள் கற்பிப்பது? வழிபாட்டுக்காக நான் கோயில்களுக்குச் செல்வது துர்லபம் என்பதற்கு நான் கோயிலுக்கே போக மாட்டேன், அவற்றை நிராகரிக்கிறேன் என்றா திரித்துக் கூறுவது? சிலர் வழிபாட்டையே லவுகீகமான வேண்டுதல்களூக்காகப் போகிற மாதிரி நான் போவதில்லை என்று இதைப் புரிந்து கொள்வது அப்படியென்ன மிகவும் சிரமமா? நான் என்ன அரிச்சுவடிப் பாடமா எடுக்க முடியும்? அல்லது வரிக்கு வரி இப்படிச் சொல்வதற்கு இதுதான் பொருள் என நானே எனக்கு பாஷ்யக்காரனாக ஆக வேண்டுமா? அர்ச்சகர் விவகாரத்தில் உள்ள நிலவரத்தைச் சொல்கிறேன். மற்றபடி இதில் எனக்குக் கோப தாபங்கள் எங்கே உள்ளன? இருகின்ற நிலைமையை எடுத்துக் கூறுவதற்கு எரிச்சல், கோபம் என்றெல்லாமா குற்றம் சாட்டுவார்கள்? குழந்தைப் பிள்ளையாக இருக்கிறீர்களே ஸ்ரீ பரமசிவம்.
ஆனால் ஒருவிதத்தில் நீங்கள் சுட்டிக்காட்டுவது சரிதான். ஒரு உண்மையான யோக்கியதை உள்ள சந்நியாசியாக இருபத்து நான்கு மணி நேரமும் சுய நினைவின்றிப் பேரானந்தப் பெருவெளியில் திளைத்திருக்கவே விரும்புகிறேன். அதிலும் பொல்லாத ஸ்ரீ க்ருஷ்ணனிடம் சல்லாபித்திருப்பது பரம சுகம்! அம்மையின் மடியில் உரிமையுடன் உட்கார்ந்து கொஞ்சல் குறும்புகளில் இறங்குவது வேறுவகை இன்பம்! கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்! ஆகையால் இதற்குமேல் இதுபற்றிப் பேச விருப்பம் இல்லை.
துறவு பூணுவதே உள்ளே அடியாழத்தில் இந்தப் பேரானந்தத்தில் திளைத்துக்கொண்டே சமூகக் கடமைகளையும் ஆற்றுவதற்காகத்
தானே! அவசியம் வருகிற போது எனது ஹிந்து சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துதானே ஆக வேண்டும்? துறவு என்பது யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று சமூகத்தை விட்டு ஓடிப்போவதல்ல!
ஹிந்துக்களுக்கு மிகப் பிரதானமான புண்ணியத்தலம் காசி. இன்னும் சொல்லப்போனால் ஹிந்துக்களுக்கு அது பரம சிவன் கோலோச்சும் புனித பூமி. ஆனால் அங்கு ஆலயத்திற்கு அருகிலேயே ஒரு மசூதி இருக்க வேண்டிய அவசியம் என்ன? முகமதியருக்கு காசி எந்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது? அங்கு ஒரு பிரமாண்டமான மசூதி எதனால், எப்போது, எதன் மேல் கட்டப்பட்டது? பரமசிவம் என்று பெயர் வைத்துக்கொண்டுள்ள நீங்கள் என்னிடம் நீ ஏன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுகிறாய் என்று கேட்பது முறைதானா? ஒன்று கவனித்திர்களா? ஹிந்துக்களின் முக்கியமான புண்ணியத் தலங்களில் எல்லாம், அதிலும் சம்பந்தப்பட்ட ஹிந்து ஆலயங்களுக்கு அருகிலோ அல்லது அவை இருந்த இடத்திலேயோ பிரமாண்டமாக ஒரு மசூதி ஏன் எழுப்பப்பட்டது என எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா? ஹிந்துவைத் தவிர வேறு எவனும் இவ்வாறான நிலையை சகித்துக்கொண்டு இருக்க மாட்டான் என்பது உங்களுக்குப் புரியாதா? ஸ்ரீ க்ருஷ்ணன் அவதரித்த மதுராவில் அவன் பிறந்த தலம் என்று நாம் நம்பும் இடத்திலேயே சம்பந்தா சம்பஃந்தமின்றி ஒரு மசூதி எழும்பியிருப்பதை அறிவீர்களா? நான் அங்கு கண்ணீர் விட்டுக் கதறி அழுதிருக்கிறேன். என்போன்றே கோடிக்கணக்கானோர் கண்ணீர் வடிப்பதை உங்களால் உணர இயலாதா? சந்நியாசியான உனக்கு இதைப்பறியெல்லாம் என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கே மனம் கூசவில்லையா? இதுபற்றியெல்லாம் கவலைப்பட சந்நியாசிகளுக்குத்தானே அதிகம் அக்கறை இருக்க வேண்டும்? நான் சொல்லித்தானா உங்களுக்கு இது தெரிய வேண்டும்? மக்காவிலோ மதீனாவிலோ பல மைல்கள் சுற்றளவுக்கு நீங்கள் காலடி கூட எடுத்து வைக்க முடியாது என்பது உங்களுக்குத் தெரியாதா? இரண்டு நிலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க உங்கள் பகுத்தறிவு இடம் தராமலா போய்விடும்?
நம் நாட்டுத் துறவியர் வழிகாட்டுதலில்தான் நான் நடந்து வருகின்றேன். இன்றைய நிலையில் பிட்சைக்குப் போக முடியாது. அது மக்களைத் தொந்தரவு செய்வதாகும். ஆகவே எனக்குத் தெரிந்த எழுத்துத் தொழிலைச் செய்து பொருளீட்டுகிறேன். அவ்வாறு ஈட்டும் பொருளில் எனது அடிப்படைத் தேவைகளுக்கான செலவைமட்டும் மேற்கொண்டு எஞ்சுவதை தேவைப்படும் பணிகளுக்குக் கொடுத்து விடுகிறேன். எனக்கென்று இருந்த குடும்பத்திற்கு ஒரு பைசா கூடக் கொடுப்பதில்லை! எனது சுய தேவைகள் மிக மிகக் குறைவு. எனவே அதிகம் சம்பாதிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை.
நீங்கள் சொன்னதுபோல் கடைசியாக நானும் ஒன்று சொல்லிவிடுகிறேன். நான் கேட்காமலேயே நான் மறுத்தும் ஒரு தொலைக்காட்சிப் பெட்டி நான் வசிக்கும் அறையில் கொண்டு வந்துவைக்கப்பட்டுள்ளது. அது பெரும்பாலும் இங்கு வரும் மற்றவர்களுக்குத்தான் பயன்படுகிறது. நான் செய்திச் சேனல்களையும் சாஸ்த்ரிய சங்ககீத நிகழ்ச்சிகளையும் பழைய ஹிந்தி- தமிழ்த் திரைப்படப் பாடல் நிகழ்ச்சிகளையும்தான் பார்க்கிறேன். அதுவும் எப்போதாவதுதான். தொலைக் காட்சிப் பெட்டி மட்டுமல்ல, இங்கு கொண்டு வந்து வைக்கப்படும் எந்தப் பொருளும் எனக்குச் சொந்தமானது அல்ல. நான் கேட்டுப் பெற்றதும் அல்ல. என்னைப் போலவே எனது கணினிக்கும் வயதாகிவிட்டது அது மந்த கதியில் வேலை செய்கிறது என்று விளயாட்டாகச் சொல்லப்போய் மறுநாளே ஒரு புதிய கணினியைக் கொண்டு வைப்பதாக முடிவாகிவிட்டது. நாந்தான் உடனே ஒப்புக்கொள்ளாமல் காலதாமதம் செய்து வந்தேன். நீங்கள் கணினியைப் பயன்படுத்துவது பொதுப்பணிகளூக்காகத்தானே என்று சொல்லி சம்மதிக்க வைத்து மறுநாளே ஒரு புத்தம் புது டெல் கணினியை வாங்கி வந்து வைத்துவிட்டார்கள்! இங்கு எனக்கென்று உரிமை கொண்டாட ஏதும் பொருள்கள் இருக்குமானால் அவை புத்தகங்கள், புத்தகங்கள், புத்தகங்கள்தாம்! எனது பலவீனமும் அவைதாம்! ஆகையால் இங்கு வருபவர்களும் மானாட மயிலாட பார்ப்பவர்கள் அல்ல. எல்லாம் நம்பகமானவர்கள் சொல்லக் கேள்விதான்.
உள்ளம் மகிழ்வதற்காக என்னிடம் வேறு எத்தனையோ சாதனங்கள் உள்ளன. ஆனாலும் எனக்கு ஓர் ஆச்சரியம்:
இந்த வயதிலும் பொறுப்புகளிலும் கருணாநிதி மானாட மயிலாட பார்ப்பதாக நான் நினைவூட்டியதைக்கூட உங்களால் பொறுத்துக்கொள்ள இயலவில்லையே! அப்படி அவரிடம் என்ன உங்களுக்கு தேவதா விசுவாசம்?
-மலர்மன்னன்
//அர்ச்சகர்கள் பிராமணர்கள் என்கிற கண்ணோட்டத்துடன் பார்ப்பதால்தான் சாதியை இங்கு கொண்டு வரும் மனப் போக்கு உண்டாகிறது. ஆகம விதிகளின் நிபந்தனைக்கு இணங்க அர்ச்சகர்களை அர்ச்சகர்களாகப் பார்க்கும் பார்வை இருந்தால் பிராமண சாதியினருக்கும் கருவறைக்குள் நுழைய முடியாதுதானே என்கிற புரிதல் உண்டாகும்//
இப்படிக்கண்ணோட்டத்துடந்தான் உலகமே பார்க்கிறது. பகுத்தறிவு வியாதிகள் மட்டுமல்ல. மற்ற வியாதிகளும் பார்க்கின்றன. அவர்கள் மட்டுமன்றி, அந்த அர்ச்சகர்களும் தங்கள் ஜாதித்தொழிலாகத்தான் பார்க்கின்றன. சுமிதாவும் மலர்மன்னனும் ராமாவும் சந்திரமவுளியும் கோபம் கொள்வது எதற்காக? அய்யோ இந்துமதம் தாக்கப்படுகிறதே என்றா? இல்லை. அர்ச்சர்கள் ஜாதி எங்கள் ஜாதி. அவர்கள் விமர்சிக்கப்பட்டால் நாங்கள் சும்மாயிருக்கமாட்டொம் என்றுதானே?
அவர்களைக்குறிப்பிட்டு எழுதிவிட்டால், ஜாதிப்பாசம் பீரிட்டெழுகிறது. பார்ப்ப்ன ஜாதியாளர் படையெடுத்து வந்து எழுதுகிறார்கள். திட்டுகிறார்கள்.
பிராமண சாதியாளர் என்று நீங்கள் குறிப்பிடுவது ஆரை? அவர்களுக்கு எப்படி பிராமணர் என்ற பட்டம்? காயத்திரி மந்திரத்தையும் பூனாலையும் போட்டுக்கொண்டால் பிராமணனா? அவ்வளவு சீப்பா இந்து மதம்?
மேலும். பிராமண சாதியாளர்கள் கூட அர்ச்சகர்களாக முடியாதென்றால், ஆகுபவர்கள் மட்டுமென்ன எந்த ஜாதியாளார்கள் மலர்மன்னன் ? உங்கள் ஜாதியினர்தானே? இதையேன் மறைக்கிறீர்கள்?
கேள்வி: எப்படி ஒரு ஜாதியினருக்கு மட்டும் என்பதுதான்?
இங்கே இப்படியிருக்கிறது; அங்கே அப்படியிருக்கிறதெ என்று எழுதினால் மட்டும் ஒரு ஜாதியினருக்கு மட்டும் என்பதை மறைக்கமுடியுமா? ஒரு ஜாதியினருக்கு மட்டுமில்லையென்றால், ஏன் அஜ்ஜாதியினரும், அவருக்காக அஜ்ஜாதியினரான சுப்பிரமணியம் சுவாமியும் கோர்ட்டுக்குப்போக வேண்டும்?
நண்பர்களே நன்றாக உய்த்துப்படியுங்கள் மலர்மன்னனின் தற்போதையக்கருத்தை.
முதலில் ஆகம விதிகள் தடுக்கின்றன. உள்ளே நுழையாதீர் என்ற எழுதிய மலர்மன்னன், இப்போது இறங்கி வந்து ஆகம விதிகளை மாற்றுவது ஆர்? அதாவது மாற்றவேண்டுமென்கிறார்.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்.
இன்னும் பாக்கியிருக்கிறது. ஏன் ஒரு ஜாதிக்கு மட்டும் என்ற கேள்வி இன்னும் தொக்கி நிற்கிறது.
மதிப்பிற்குரிய மலர்மன்னன் அவர்களுக்கு,
வணக்கம்.
ஆகமவிதி பற்றிய உங்கள் கருத்துகள், சமூகப்பிரச்சனை வேறு, சமயப்பிரச்சனை வேறு என்ற உங்கள் பார்வை இத்தியாதி
எல்லாமே ஓரளவு எதிர்பார்த்தது தான்.
உங்கள் கட்டுரையை வாசித்தவுடன் பலமுறை நான் ஏற்கனவே வாசித்திருந்த கீழ்கண்ட புத்தகத்தை வாசித்தேன்.
சாதி ஒழிப்பு என்ற தலைப்பில் டாக்டர் அம்பேத்கர் எழுதிய அந்தப் புகழ்மிக்க ஆய்வுக்கட்டுரை தான்.
http://www.thamizhagam.net/thamizhagam/elibrary/Dr%20B%20R%20Ambedkar/SAthi%20Ozhippu.pdf
எனக்குத் தெரியும் கட்டாயம் நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று. அதிலிருந்து மேற்கோள்களைக் காட்டி நான் பதில் சொல்வதும் அதற்கு நீங்கள் பதில் சொல்வதும்…தெரியும், அந்த விவாதம் தொடர்கதையாகவே தொடருமே தவிர முடிவுக்கு வரமுடியாதது என்கிற உண்மை. இதை என்னை விட அனுபவமிக்க நீங்கள் மிக நன்றாகவே அறிவீர்கள்.
மிக மிக எளிய என் கேள்விகள் என்னளவில் மிகவும் நியாயமான கேள்விகள். ஓர் இந்துவாக பிறந்து இந்துவாகப் பிறந்ததாலேயே இந்துவாக வாழ இந்திய சட்டப்படி நிர்பந்திக்கப்பட்டிருக்கும் எனக்கு “அது அப்படித்தான், இது இப்படித்தான் ‘ என்ற பதில் மட்டுமே உங்களால் தரமுடியும்.
அது மட்டுமே சாத்தியம் என்பதற்கு உங்கள் கட்டுரையே மிகச்சிறந்தப் பதிவாக இருக்கிறது.
கட்டுரையில் ” சொன்னதைத் திரித்துச் சொல்வது, சொன்னதற்கு பதில் சொல்ல ஏதுமில்லாவிட்டால் சொன்னவரை மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது, தெரிந்தே திசை மாறிப் போவது இவையெல்லாம் தொன்று தொட்டு வரும் திராவிட அரசியல் சம்பிரதாயம். இவையெல்லாம் இந்த அர்ச்சகர் விசயத்திலும்..” என்று எழுதியிருக்கின்றீர்கள்.
இதுதான் மிகவும் ரசித்தவரிகள். இதெல்லாம் திராவிட அரசியல்
சம்பிரதாயமா என்னவோ எனக்குத் தெரியாது, ஆனால் அறிஞர் அண்ணா போன்றவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்! , திண்ணையில் வரும் குறிப்பிட்ட சிலரின் பின்னூட்டங்களை இவ்வளவு சரியாக எவராலும் எழுதியிருக்கமுடியாதுதான். என்ன, உங்களுக்கு எரிச்சல் வந்தால் உடனே அவர்களை எல்லாம் திராவிட அரசியல் சம்பிரதாயம், ஈவேரா அடிப்பொடிகள் என்று அர்ச்சனை செய்வதை எப்படி எடுத்துக் கொள்ளட்டும்?
‘அடே அப்பா, இந்த ஈரோட்டுக் கிழவன் இன்னும் சிம்ம சொப்பனமாக இருப்பதன் சூட்சமம் என்ன? என்று பெரியாரின் பழைய கட்டுரைகள் எல்லாம் தேடித்தேடி வாசிக்க வைத்துவிடுகின்றீர்கள். பெரியார், அம்பேத்கர் கட்டுரைகளை
மீண்டும் மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும் ஏதொ ஒரு வகையில் உங்கள் அனுபவக்கட்டுரைகள் உதவியாக இருப்பதற்கு
மிகவும் நன்றி.
அன்புடன்,
புதியமாதவி
தமிழ் கூகிள் தேடலில் அர்சகர் ஆகலாம் என்று டைப்செய் சில வலை தளங்களை பார்வையிட்டேன். சில படங்களையும் பார்வையிட்டேன். அதில் ஒன்று பழைய துக்ளக்கில் வந்த அட்டை படம். படத்தில் பெரியார் சிலை அதற்கு கிழே உள்ள வாசகம் “ கடவுளை கற்பித்தவன் முட்டாள் – கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி – கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன் ” இது எல்லா பெரியார் சிலையின் அடியிலும் காணப்படும் வாசம். சிலையின் அருகிலே கருணா-வீரமணி உரையாடல் –
கருணா- பெரியார் கனவை நிறைவேத்தறேன். இனி எல்லா ஜாதிக் காரர்களும் அர்சகர் ஆகலாம். எல்லோரும் வாங்க ! எல்லோரும் அயோக்கியன் ஆயிடலாம் ! வாங்க நிறைய காட்டுமிராண்டிகளை உருவாக்கலாம் வாங்க !!!!
வீரமணி – அப்பாடா பெரியார் நெஞ்கிலே தைச்ச முள்ளை எடுத்தாச்சு !!!!
இது ஒரு நகைசுவை என்று எடுத்துக்கொள்ள முடியாமல் அருகிலேயே மற்றொரு படம். அர்சகர் தேர்வில் வெற்றிபெற்றவர்கள் என்று சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் பட்டையும் ருத்திராட்சமும் பூநூலும் அணிந்து ஊர்வலமாக சென்று பெரியார் சிலைக்கு மாலையிடுகிறார்கள் நாத்திகர்கள் உருவங்களை ஆத்திக கோவில் நுழைவாயில் கதவுகளில் செதுக்கும் வேலை துவங்கிவிட்டது. சகஸ்ரநாம அர்சனை போற்றிகளில் பகுத்தறிவு புகழ் பாட தொடங்கியாகிவிட்டது. வைதீகம் இல்லா பதிவுதிருமணங்களை போல் எல்லா கோவில் அருகில் இருக்கும் பெரியார் அண்ணாதுரை சிலைகளை கோவிலில் உள்ள பொய்யான கடவுளை தூக்கி கடலில் எறிந்துவிட்டு இந்த பகுத்தறிவு சிலைகளையும் மேரி ஏசு சிலைகளையும் உள்ளே பிரதிஷ்டை செய்தால்தான் சமய சமுதாய சீர்திருத்தம் நிறைவுரும். கோவில் கொண்ட தமிழகம் – பக்திமார்க தமிழகம் என்பது உலகத்திற்கு நிறுபணமாகும்.
தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா !!!!!??????
well said v gopal.
நீங்கள் எழுதியவைகளுக்கும் கட்டுரைப்பொருளுக்கும் தொடர்பேயில்லை. அர்ச்சகர் ஏன் ஒரு ஜாதியினருக்கு மட்டுமே என்பதுதான் கேள்வி. அதை நேர்கொண்டால் போதும். அரசியலவாதிகளும் மற்றவரும் செய்பவைகளை ஒரு தனிக்கட்டுரையில் வரையலாமே? இங்கு ஏன் பிறருடைய வாதங்களிலிருந்து மற்றவர்களைத் திசை திருப்பும் முயற்சி?
\இதில் வேடிக்கை, இப்படிக் குறைப்பட்டுக் கொள்பவர் களில் மிகப் பெரும்பான்மையினர் ஹிந்து கோயில்களைப்பற்றி அக்கறை ஏதும் இல்லாதவர்கள். இன்னும் சொல்லப் போனால் ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று தேடுவதற்காகவே ஹிந்து ஆலயங்களுக்கு உள்ளே நுழைபவர்கள்.\
ப்ரச்னையின் சமூஹம் சார்ந்த விஷயங்களை தெளிவு படுத்திய ஸ்ரீமான் மலர்மன்னன் மஹாசயருக்கு வந்தனங்கள். ஹிந்து ஆலயங்களில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்களை முடிவு செய்ய வேண்டியவர்கள் ஹிந்துக்கள் மட்டும் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. இஸ்லாமியர்களோ க்றைஸ்தவர்களோ அல்லது அவர்களுக்கு வால்பிடிப்பவர்களுக்கோ இதில் பங்கில்லை.
\ மேலும் ஆகமங்கள் தோன்றியது தெற்கில்தான் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவை சமஸ்க்ருதத்திலும் கிரந்தத்திலும் இருந்தாலும்கூட!. மேலும் கிரந்தம் தென்னாட்டிற்கே உரித்தானதாகவும் கருதப்படுகிறது\
மேற்கண்ட வாசகத்தில் மொழியின் பெயரும் லிபியின் பெயரும் இணைந்து வருகிறது. இது பிழையாக தோன்றுகிறது. தேவநாகர மற்றும் க்ரந்த லிபியில் என்று எழுதப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என்பது அடியேன் அபிப்ராயம். க்ரந்தம் தமிழகம் மட்டும் கேரளத்தில் மட்டும் புழங்கியதா அல்லது தக்ஷிண பாரதம் முழுதும் புழக்கத்தில் இருந்ததா தெரியவில்லை.
———–
இதற்கு முன் இது போன்றதொரு இழையில் (பூசாரியாகலாம் அர்ச்சகராக முடியாது) ஸ்ரீமான் / ஸ்ரீமதி காவ்யா என்பவர் பதிவு செய்திருந்த உத்தரங்களையும் வாசித்தேன்.
தமிழ் ஹிந்து தளத்தில் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோ என்ற பெயரிலும் பின்னர் ஜோ அமலன் என்ற பெயரிலும் அதன் பின்னர் ஜோ என்ற பெயரிலும் கருத்துக்கள் பதிவு செய்தது இதே அன்பர் தான் என எண்ணுகிறேன். தவறெனில் திருத்திக்கொள்கிறேன்.
அன்பர் ஜோ அவர்களுக்கு க்றைஸ்தவ மதமாற்ற கும்பல்களுடன் என்ன நெருக்கம் என்பதை ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் அவருக்கும் ரெவரெண்டு சில்சாம் அவர்களுக்கும் இடையே இணையத்தில் நிகழ்ந்த சம்பாஷணங்களை தேதி வாரியாக பிட்டுப்பிட்டு வைத்ததை படித்து அதிர்ச்சி அடைந்தவர்களில் அடியேனும் ஒருவன்.
இதுபோன்றோர் ஹிந்துக்கள் பற்றி கருத்து சொல்லக்கூடாதா என யாரேனும் கேழ்க்கலாம். கருத்து சொல்ல காசா பணமா என்ன. காழ்ப்பை மட்டும் கருத்துக்களாக பக்கம் பக்கமாக நிரப்ப ஸ்ரீமான் / ஸ்ரீமதி காவ்யாவுக்கு உரிமை உண்டு தான்.
ஆனால் ஃப்ரான்சிஸ் க்ளூனி போன்றோர் ஹைந்தவ சாஸ்த்ரங்களைப் படித்து வ்யாக்யானங்கள் செய்வது அதை பைபிளில் கரைக்கத்தான் என்பதை ஹிந்துக்கள் அறிந்தே உள்ளனர். அது போன்ற ஒரு நோக்கில் தான் ஸ்ரீமான் / ஸ்ரீமதி காவ்யா அவர்களின் கருத்துக்களும் சம்சயத்துடன் ஹிந்துக்களால் நிறுக்கப்படும்.
இப்போது அன்பர் காவ்யா அவர்கள் இந்த இழையுடன் ஒத்த முந்தைய இழையில் உதிர்த்த ஃபத்வாக்களை பார்ப்போம்.
\எப்படி எவர் கோயிலுக்குப்போகவில்லை? எவர் போனார்? எவர் கடவுள் மறுப்பாளர்; எவர் கடவுள் உண்டென்று தொழுபவர் என்று கண்டுபிடித்தீர்கள்?\
\நண்பரே, கட்டுரை எழுதியவர் ஜாதகம் நமக்கெதற்கு? அவர் கருத்துக்கள் எவை? அதை நாம் எதிர்நோக்கி நம் கருத்துக்களை வைப்போமா?\
\ ஏன் பரமசிவனைப்ப்பார்த்து, வழக்குப்போட்டுப்பார் என்று அநாகரிகமாக ஆங்கிலத்தில் சொல்லவேண்டும்?\
\ஆகம விதிகளின்படி நடக்கா கோயில்களில் எவரும் அர்ச்சகர்களாகலாம்; அவ்விதிகளின்படி நடக்கும் கோயில்களில் மலர்மன்னனின் ஜாதியினர் மட்டுமே அர்ச்சகர்கள் ஆக வேண்டும்.\
எப்படி எவர் கோயிலுக்குப்போகவில்லை? எவர் போனார்? எவர் கடவுள் மறுப்பாளர்; எவர் கடவுள் உண்டென்று தொழுபவர் என்று கண்டுபிடித்தீர்கள்? என்றெல்லாம் எவர் எவர் என அடுக்கும் அன்பரே!!!!!!!
பரலோகத்தில் இருக்கும் ஏக இறைவன் ஸ்ரீமான் மலர்மன்னன் அவர்களின் ஜாதி என்ன என்று ஸ்ரீமான் / ஸ்ரீமதி காவ்யாவுக்கு கனவில் ஏதும் சொல்லியுள்ளாரா அல்லது இவர் மலர்மன்னனின் ஜாதிசான்றிதழை பரிசீலனை செய்துள்ளாரா. எதன் அடிப்படையில் ஸ்ரீமான் மலர்மன்னன் அவர்கள் ஜாதி இன்னது என இவர் தீர்மானித்துள்ளார்?
அன்பரே உங்கள் ஃபத்வாவை உங்களிடமே திருப்பி வாசிக்கிறேன். கட்டுரையோ கருத்துக்களையோ வைப்பவரின் ஜாதகம் உங்களுக்கெதற்கு? அவர் கருத்துக்கள் எவை? அதை நாம் எதிர்நோக்கி நம் கருத்துக்களை வைப்போமா?
பரசிவனைப்பார்த்து வழக்குப்போட்டுப்பார் என்றதில் என்ன அநாகரீகம் உள்ளது எனத் தெரியவில்லை. ஆனால் இன்னாரை ஜபர்தஸ்தியாக இன்ன ஜாதி என்று சொல்லி அந்த முன்தீர்மானத்தின் படி அவர் கருத்தை விமர்சனம் செய்வது அநாகரீகத்தின் உச்சம்.
\ நல்லவேளை இங்கு எழுதும் எவரும் தமிழ்வைணவர்களில்லை (சிரிவைணவர்கள்). இராமானுஜரை ஒரு தமிழ்ப்பார்ப்ப்னராக எடுத்துப்பார்ப்பது, பேசுவது இவை ஒரு மஹா பாவமாகும். இதற்கு மன்னிப்பே கிடையாது.\
வைணவச்சுடராழி ஸ்ரீமான் ஜோசஃப் அவர்கள் ப்ரவசனங்கள் பல கேட்டு பயனடைந்தவன் அடியேன். அவர் கருத்துக்கள் ஸ்ரீ வைஷ்ணவ சான்றோர் கருத்துக்களை ஒட்டியே அமைந்திருக்கும். ஆனால் வாய்க்கு வாய் ஆழ்வார் ஆசார்யர்களது பெயரை உதிர்க்கும் தங்கள் கருத்துக்கள் ஹிந்து சாஸ்த்ர கருத்துக்களை பைபளில் கரைக்க விழைந்த விழையும் கால்டுவெல் மற்றும் ஃப்ரான்சிஸ்ல் க்ளூனி போன்றோர் கருத்துக்களுடன் ஒத்தமைகின்றன என்றால் மிகையாகாது.
வள்ளுவப்பெருந்தகை இதற்காகத்தான் சொல்லியுள்ளார்
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
பாப புண்யங்கள் பற்றி நீங்கள் பேசுவது என்பது தெருமுனையில் போவோர் வருவோரை முனைந்து கூவிக்கூவி பாவிகளே என்றழைக்கும் க்றைஸ்தவ ப்ரசாரகர்களின் நெடி நிறைந்தது என்றால் மிகையாகாது.
“கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையோர் எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணனே” என்ற வாக்கின் படியும் “ஹரயே நம இத்யுச்சை: முச்யதே ஸர்வ பாதகாத்” என்ற வாக்கின் படியும் நீங்கள் ஹிந்து மதத்தவருக்கு தீங்கிழைக்க விழையினும் ஆழ்வார்கள் கருத்தை முனைந்து திரிபு செய்ய விழைகினும் இறைவனின் பெயரை திரிக்க முனையும் தங்களுக்கு ஆழ்வார் பெயருரைப்பவர் (களங்கமான உள்நோக்கின் படியாயினும்) என்ற படிக்கு பொய்யா மறை நன்றே செய்யட்டும்.
அந்த ஜோசஃப் ஸ்வாமி என்ற ஸ்ரீவைஷ்ணவ ச்ரேஷ்டரின் பாதரேணுவை சிரஸில் தரித்து உங்களுடைய விதண்டாவாதத்தை பரிஹரிக்கிறேன்.
தமிழையும் ஸ்ரீவைஷ்ணவத்தையும் ஒருங்கே அவமதிக்க உங்களாலேயே இயலும்.
ஸ்ரீமான் கந்தர்வன் (நீங்களே “ஜோ” அவர்கள் என்று நினைத்து சொல்கிறேன்- தவறெனில் திருத்திக்கொள்கிறேன்) அவர்கள் தமிழ் ஹிந்து தளத்தில் ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்ரீ என்ற ஸம்ஸ்க்ருத பதத்தை தமிழில் எடுத்தாள்கையில் “சிறீ” என்றே எடுத்தாண்டுள்ளனர் என உங்களுக்கு எண்ணிறந்த உதாஹரணங்களால் நிர்த்தாரணம் செய்துள்ளார். ஆழ்வார்கள் எடுத்தாண்டுள்ளது வல்லின “ற”.
தங்களை ஸ்ரீமான் கந்தர்வன் இடித்துரைத்த பின்னும் உள்நோக்கத்துடன் முனைந்து தாங்கள் அவஹேளனமாக கையாளும் எழுத்து இடையின “ர”. சிரி வைணவர்கள் சிரி ரங்கம் என தாங்கள் உள்நோக்கத்துடன் முனைந்து இடையின “ர” வை உபயோகிப்பது ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு உகப்பளிக்கும் என்று நினைப்போ. இடையின “ர” சேர்ந்த சிரி “நகைப்புக்குள்ளாகும்” என்ற அர்த்தம் தருவது. வைணவர்கள் மற்றும் ரங்கம் இதன் முன் தாங்கள் சேர்க்கும் சிரி நகைப்புக்குள்ளாகும் வைணவர்கள் நகைப்புக்குள்ளாகும் ரங்கம் என்ற கருத்தை தொனிப்பதில்லை? இது பாபகரமான காரியமில்லை? அதுவும் ஸ்ரீமான் கந்தர்வன் உங்களை இடித்துரைத்த பின்னும் தவறான எழுத்தை முனைந்து ப்ரயோகிப்பது பாபமில்லை?
ஆக ராமானுஜாசார்யர் பெயர் சொல்லி தாங்கள் பாப புண்யம் பற்றி ப்ரசங்கிப்பது “ஆடு நனைகிறதே என ஓநாய் அழுதலுக்கு” சமம்.
\ அச்சட்டம் அந்து ஒரு சிலராலும், அவர்களின் ஆதரவாளர்களான சுப்பிரமணியம் சுவாமியாலும் எதிர்க்கப்படுகிறது.\
அட கஷ்ட காலமே, ஸ்ரீமான் சுப்ரமண்ய ஸ்வாமி அவர்களின் மனைவி பார்ஸி. அவரது ஒரு மருமகன் உத்தர பாரதத்து ப்ராம்மணர். ஒரு மருமகன் முஸல்மான். ஸ்ரீமான் மலர்மன்னனை அவர் இன்ன ஜாதி என அநாகரிகமாக ஜபர்தஸ்தியாக சுட்டும் அன்பர் காவ்யா என்ன ஜாதி என்ன மதம் என்றெல்லாம் கேழ்க்க மாட்டேன். இது போன்ற அநாகரீகம் அன்பர் காவ்யாவிற்கு மட்டுமே உரித்தாகுக. காவ்யா அத்ருச்யமானவரானாலும் ஸ்ரீமான் சுப்ரமண்ய ஸ்வாமி த்ருச்யமானவர். பரந்த மனமுள்ள ஒரு ஹிந்துவிற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டு. அவரைப்போன்றோரை இடித்துரைப்பவருக்கு தகுதிகள் என்ன என்பது பார்க்கப்படும். க்ஷமிக்கவும் அன்பர் காவ்யா அவர்களே. ஜோஸஃப் ஸ்வாமி மற்றும் சுப்ரமண்ய ஸ்வாமி அவர்களை ஹிந்துக்களான நாங்கள் போற்றுவதிலும் தங்களை சம்சயத்துடன் நோக்குவதிலும் வியப்பில்லை.
\மலர்மன்னன் தன் தவறை உணர்ந்து இனியாவது\
தங்கள் பக்ஷம் தவறுகள் உள்ளன என்பதை உணர்வீர்கள் என நான் இவற்றை எழுதவில்லை. தங்கள் கூற்றுக்கள் இங்கு கருத்துக்கள் பதியும் ஹிந்துக்களால் கவனமாக நிறுக்கப்பட வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன்.
ஸ்ரீமான் கந்தர்வன் அவர்கள் எழுதிய படி அந்தப் பரலோகத்து ஏக இறைவன் தான் தங்களுக்கு த்ருட விச்வாசத்தை நல்கட்டும்.
உங்களுக்கு தமிழ்மேல் பெருவெறுப்பு போலும். புரியா சொற்களைப்போட்டு என்ன பின்னூட்டமிது ? தமிழ் சொற்கள் தெரியாவிட்டால் எவரிடமாவது கேட்டுத் தெரிந்த பின்னர் எழுதலாமே?
“சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே
அதனைப் போற்றித் தொழுது படித்தடி பாப்பா!”
இதை எழுதியவர் ஒரு தமிழ்ப்பார்ப்பனரே. ஆனாலும் என்ன செய்ய நிறைய உங்களைப்போன்றவர்கள் தமிழை வெறுக்கிறார்களே! திரு என்றெழத மறுக்கிறார் மலர்மன்னன். பாரதியார் ஒரு பெருந்தவறைச் செய்து விட்டார். பாப்பா பாட்டு என்றவுடன் பெரியவர்கள் கண்டுகொள்வதில்லை. அட கடவுளே! அது உங்களுக்குத்தான் ப. தமிழை மதியுங்கள்.
மலர்மன்னன் எழுத்துக்களில் உள்ளிருப்பது அவரின் பிறந்த ஜாதிப்பாசம் என்பது வெள்ளிடை மலை. அல்லது ஒரு நீருக்கடியில் மிதக்கும் பனிமலை. தமிழ்ப்பார்ப்ப்னர்களை விமர்சித்து ஒரு கட்டுரை போடுங்கள். உடனே ஆஜராகி விடுவார். பதிலை அவ்வளவு சூசகமாக எழுதிவிடுவார்.
அர்ச்சகர் எவரும் ஆகலாமென்ற விவாதத்தில் கேட்கவே வேண்டாம். இவர் மட்டுமன்று; ஒருசிலரைத்தவிர மற்றெல்லாத்தமிழ்ப்பார்ப்பனர்களும் இதைத் தங்கள் ஜாதிப்பிரச்சினையாக எடுத்துக்கொண்டுதான் உணர்ச்சிவசப்படுகிறார்கள். ஆனால், அதை ஹிந்துப்பிரச்சினை என்ற போர்வையைப் போட்டு மூடிக்கொள்கிறார்கள். மற்றவர்களும் எதிர்க்கலாம். அவர்களே ஹிந்துப்பிரச்சினையென்று கொள்வர்.
தமிழ்ப்பார்ப்ப்னர் என்றால் ஜாதிப்பாசமோ, வெறியோ இருக்கத்தேவையில்லை. அவர்களுள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். பாரதியார் இல்லையா? கம்யூனிஸ்டுகள் இல்லையா? அமிர்தலிங்க ஐயர் இல்லையா? முத்தையா இல்லையா?
மலர்மன்னன் ஒரு பார்ப்பனர் (ஐயர்) என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு மட்டுமே தெரியவில்லை. அவர் திண்ணையிலேயே சுந்தர ராமசாமியின் மனைவியார் தன் உறவினர் என்றெழுதியிருக்கிறார். ஐயர் என்று சொல்லக்காரணம் ஐயங்கார் என்றால் இராமனுஜரைப்பற்றி நாக்கூசாமல் அப்படி எழுதியிருக்கமாட்டார். எல்லா ஐயர்களையும் நான் குறிப்பிடவில்லை. ஆழ்வார்களைப்பற்றி நான் நிறையத்தெரிந்து கொண்டது கோபாலையரிடம்தான்.
ப்ரச்னையின் சமூஹம் சார்ந்த விஷயங்களை தெளிவு படுத்திய ஸ்ரீமான் மலர்மன்னன் மஹாசயருக்கு வந்தனங்கள். ஹிந்து ஆலயங்களில் நிகழ வேண்டிய சீர்திருத்தங்களை முடிவு செய்ய வேண்டியவர்கள் ஹிந்துக்கள் மட்டும் தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவியலாது. இஸ்லாமியர்களோ க்றைஸ்தவர்களோ அல்லது அவர்களுக்கு வால்பிடிப்பவர்களுக்கோ இதில் பங்கில்லை.//
இக்கருத்துடன் உடன்படுகிறேன். இன்துக்கள் பிரச்சினையை இன்துக்கள் மட்டுமே பங்கேற்கவேண்டும்.
அதே சமயம், அந்த இந்துதுக்கள் எவர் என்றும் பார்க்கவேண்டும். அவர்களின் உள்ளோக்கமென்ன என்றும் பார்க்கவேண்டும். அவர்கள் உள்ளோக்கம் தங்கள் ஜாதி வளர்ப்பே என்றால் மற்ற இந்துக்கள் ஒன்று சேர்ந்து அவகளை வெளியேற்ற வேண்டும். அல்லது அவர்களின் தாக்கம் படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
இன்னொன்றையும் சொல்லிவிடுவது அவசியம்.
அதாவது மதமும் அரசியலும் சேர்ந்த்தே வருவது தொன்று தொட்டுவருவது. அரசியல் என்றால் அம்மதத்திற்கு வெளியிலிருப்போர். ஏனெனில், மத நம்பிக்கை என்ற பேரில் மக்கள் அவதிக்குள்ளாவதும், மதத்தை வைத்து தின்று கொழுத்து வயிறு வளர்ப்பவர்களையும் நலிந்தோரை ஆட்படுத்தி சித்திரவதைப்படுத்துதலும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
எல்லாமதங்களிலும் உண்டு. இந்துமதத்தில் நிறைய. பெண்களைக்கட்டிப்போட்டு சவுக்கால் அடிப்பதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. பிராமணன் என்று சொல்லி ஏமாற்றிக்கொண்டு, நான் சாப்பிட்ட எச்சில் மீது புரண்டால் தோல் நோயை சுப்பிரமணியர் குணப்படுத்துவார் என்று ஏமாற்றினால் சட்டம் பாய்ந்து கைது செய்ய வேண்டும். சமூஹமே ஒன்று திரண்டு எதிர்க்கவேண்டும். இதில் எவரும் பங்கேற்பது ஒவ்வொருவரின் சமூகக்கடமை.
தீண்டாமைக்கொடுமையை கிருத்துவனும் இசுலாமியனும் தட்டிக்கேட்கலாம இந்துகளே அதை ஆதரித்தால்.
இந்துக்கள் முதலில் எதிர்க்கவேண்டும். அவர்கள் எதிர்ப்பு உதவவில்லையென்றபோது மற்றவர்கள் நுழையலாம். நுழைய வேண்டும். அவர்கள் எதிர்க்கவேயில்லையென்றலும் மற்றவர்கள் எதிர்க்கவேண்டும்.
மதம் வேறு; ஆன்மிகம் வேறு. மதம் என்பது சமூகத்தோடு வரும். எனவே மற்றவர்களும் பாதிக்கப்படுவார்கள். இல்லையா குமார்?
//கட்டுரையோ கருத்துக்களையோ வைப்பவரின் ஜாதகம் உங்களுக்கெதற்கு? அவர் கருத்துக்கள் எவை? அதை நாம் எதிர்நோக்கி நம் கருத்துக்களை வைப்போமா//
கிருஸ்ண குமார்
சிலசமயங்களில் அவசியமாகிறது. அஃதெந்த பிரச்சினை விவாதிக்கப்படுகிறது எனபதைப்பொறுத்தமையும்.
அர்ச்சகர் பிரச்சினையில் புகுபவர்கள் எதற்காக என்று பார்க்கப்படவேண்டும். நிறைய பேர் சொன்னது போல பகுத்தறிவு வியாதிகள் புகுவதற்கும் உள்ளோக்கமிருக்கலாம். அதே போல அர்ச்சகர்களை தங்கள் ஜாதிக்காரர்களாக நினைத்து எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக உள்ளோக்கம் இருக்கிறது. அதை சுமிதாவோ வெளிப்படையாகச்சொன்னபிறகு நீங்கள் ஏன் மறைக்கவேண்டும்? உள்ளோக்கம் கொண்டோர் ஒரு பிரச்சினைக்கு நீதி நெறியில் நின்று வாதாட முடியாது குமார். We ought to expose those ppl
இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்!
ஸ்ரீ க்ருஷ்ணகுமார்,
நீங்கள் சொல்வது சரியே. கிரந்த எழுத்து என்று எழுதியிருக்க வேண்டும். கிரந்த எழுத்தில் ஸமஸ்க்ருதம் எழுதப்பட்டது. இது தென் ஹிந்துஸ்தானம் முழுவதுமே புழக்கத்தில் இருந்ததுதான். கேரளம் தமிழகத்தின் அங்கமாகவே இருந்ததுதான் என்பது உங்களுக்குத் தெரியும்தானே. அதேபோல் இன்றைய கர்நாடக, ஆந்திர எல்லையோரங்கள் பலவாறான தமிழ் வழக்குகள் நடைமுறையில் இருந்தவைதாமே! சமஸ்க்ருதத்தை கிரந்த லிபியில் எழுதும் வழக்கம் இங்கெல்லாம் இருந்துள்ளன என்பததற்குக் கல்வெட்டு, சுவடி, பத்திரச் சான்றுகள் உள்ளன. மலையாளம் கிரந்த லிபியில் எழுதப்பட்டமைக்குச் சான்று உள்ளது. அதேபோல் பாலக்காட்டுத் தமிழர்கள் மலையாள லிபியில் தமிழை எழுதி வந்ததும் உண்டு! இவையெல்லாம் மொழிகளை துவேஷத்துடன் பாராமல் யாவும் நம்முடையதே என மக்கள் வாழ்ந்த காலம்!
ஸ்ரீ ரமேஷ்,
ஒரு விஷயத்தை நினைவு படுத்த வேண்டும். 1969-ல் ஹிந்து தர்மக் காவலர் குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் அவர்கள் நம் நாடு முழுவதிலுமிருந்து ஹிந்து சமய மடாதிபதிகள், ஹிந்து சமயப் பிரிவுகள் அனைத்தையும் சேர்ந்த குரு மஹராஜ்கள், துறவியர், பண்டித சிரோமணிகள் ஆகியோரை ஒன்று திரட்டி, ஒரே மேடையில் அமர்த்தி தீண்டாமைக்கு ஹிந்து சமயத்தில் சாஸ்திர சம்மதம் இல்லைட் இத்தீய சமூகப் பழக்கம் உடனடியாக நிராகரிக்கப் படவேண்டும் எனக் கூட்டுப் பிரகடனம் வெளியிடச் செய்தார். அப்போது நான் ஒரு செய்தி ஸ்தாபனத்தின் கர்நாடக மாநில தலைமைச் செய்தியாளனாக இருந்தேன். குருஜி உடுப்பியில் கூட்டிய அந்த மாநாட்டில் ஒரு செய்தியாளனாக நானும் கலந்து கொண்டு செய்தி சேகரித்து அனுப்பினேன். பகல் உணவுக்குப்பின் நான்கு மணிநேரம் குருஜியைப் பேட்டிகாணும் அரிய வாய்ப்பினையும் பெற்றேன். இதுபற்றி முன்பு திண்ணையிலும் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். இதை எதற்காக இப்போது சொல்கிறேன் என்றால் 1969-ல் சகல ஹிந்து மதத் தலைவர்களும் கூட்டாக பிரகடனம் செய்தும் இன்றளவும் தீண்டாமைக் கொடுமைகள் சமுதாயத்தில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முந்தைக்கு இப்போது நிலைமை எவ்வளவோ மேல் என்று சமாதானப் படுத்திக் கொண்டாலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை என்பதை இந்த 2012 லிலும் காண்கிறோம். எனவே ஆகம விதிகளைக் கைவிடவோ அவற்றில் திருத்தம் செய்யவோ சகல ஹிந்து மத குருமார்களும் ஒன்று திரண்டு கருத்தொற்றுமை யுடன் முடிவு எடுத்தாலும் அது எந்த அளவுக்கு நடைமுறைக்கு வரும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. காலப் போக்கில்தான் இவை சாத்தியமாகக் கூடும்.
-மலர்மன்னன்
//முத்தலிப்புகள் முகமதிய மதத்திலும்//
‘முத்தவல்லிகள் இஸ்லாமிய மார்க்கததிலும்’ என்று வர வேண்டும்.
‘அடே அப்பா, இந்த ஈரோட்டுக் கிழவன் இன்னும் சிம்ம சொப்பனமாக இருப்பதன் சூட்சமம் என்ன? என்று பெரியாரின் பழைய கட்டுரைகள் எல்லாம் தேடித்தேடி வாசிக்க வைத்துவிடுகின்றீர்கள். பெரியார், அம்பேத்கர் கட்டுரைகளை
மீண்டும் மீண்டும் வாசிக்கவும் யோசிக்கவும் ஏதொ ஒரு வகையில் உங்கள் அனுபவக்கட்டுரைகள் உதவியாக இருப்பதற்கு
மிகவும் நன்றி. அன்புடன், புதியமாதவி
மாதவி அவர்களுக்கு, ராமசாமியை புகழ்ந்துவிட்டு அண்ணல் அம்பேத்காரின் சுட்டியை கொடுத்து விட்டீர்கள். திசை திருப்புவது என்று ஐயா மலர் மன்னன் இதைத்தான் சொன்னாரோ என்னவோ.
The link which you have given is an excellent topic by ambedkar. I read and re read many times. I would appreciate if you share some similar topic on these from evramasamy.
Dont go and pull support from Ambedkar also. You are expected to defend from Dravidian frame only.
Ambedkar is national leader whom i will consider as hindu reformist and openly done so much dialogue with hindu organisation. He stand for hindu nation. He strongly recommended sanskrit as indian language. Yes, he had many disagreements with hindu religion and always fighting for it. Never taken stand on opportuntistic method.
Please let us not go by diverting topic to ambedkar.. Seems your ground is shaken. STand on only EVR platform and discuss. Only discussion is on Aagkama temples..
Ambedkar felt religion is important for people. He cared more for all sect of people. Not just only in reservation and abusal.
Well we cant expect each leader to have same style of funcation. It is upto them to have their own Style.
You dont need to surprise. Oh.. அடே அப்பா, இந்த ஈரோட்டுக் கிழவன் இன்னும் சிம்ம சொப்பனமாக இருப்பதன் சூட்சமம் என்ன? – pls note there is no need for these absolutely no sense comment.
For your information still Hitler and musolini are talked analysed equal by each generation – may be more than gandhi like leader. Hitler was hot topic in last few years, marx had been once again reviewed after market collapse.
Still there is hard core hitler fans are there in globe.
No harm in going back to EVR Article and read it.
அது தான் பிரச்சனையே. அதையே படித்து கொண்டிருந்தால் என்னாவது ? எதிர்மறை கருத்துக்களுக்கு எப்போதும் ஒரு வசீகரம் இருக்கும்.. அதுவும் அது சொல்லப்பட்ட விதம், அதை காதால் கேட்டு மகிழ்ந்த மனம்.. எல்லாம் சேர்ந்து கிட்டதட்ட பூஜை பொருளாகவே மாறிவிடுகிறது.. என்ன பெரியார் பூசை. அவ்வளவு தான்..
//முத்தவல்லிகள் இஸ்லாமிய மார்க்கததிலும்’ என்று வர வேண்டும். -ஸ்ரீ சுவனப்ரியன்//
என் அன்பார்ந்த் ஸ்ரீ சுவனப்ரியன்,
தவறைத் திருத்தியமைக்கு நன்றி.ஆனால் கைஃப்ய்த்தைக் கைபீது என்றும் உஸ்தாதை வஸ்தாது என்றும் மெக்காவை மக்கம் என்றும் பேச்சு வழக்கில் சொல்வதுபோல் முத்தலிப்புகளை முத்தவல்லிகள் என்பது வழக்கதுக்கு வந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்த மொழியிலுமே புலமை இல்லைதானே? அன்பு கூர்ந்து தெளிவு படுத்துங்கள். மேலும் நான் முகமதிய மதம் எனக் குறிப்பிடுவதற்குப் பெரிய சர்ச்சை நடந்தது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நான் அவ்வாறு குறிப்பிடுவது எவர் மனதையேனும் புண்படுத்துகிறதா என்றுகூடக் கேட்டுப்பார்த்தேன். எவரும் அறிவு பூர்வமாக எதுவும் கூறமல் ஒருவர் பிறக்கும்போதெ முஸ்லிமாகதான் பிறக்கிறார் என்றெல்லம் ஆச்சரியப் படுத்தினார்கள்.கோபால் ராஜாராமும் திகைப்பும் வேடிக்கையுமாய் அதற்கு எதிர்வினை செய்தார். ஆனால் முகமதிய மதம் என்பது உங்கள் மனதைப் புண்படுதுகிறது என்றால் அன்பு கூர்ந்து உறுதி செய்யுங்கள். நீங்கள் குறுப்பிட்வாறே இனி எழுதுகிறேன். ஏனெனில் எவர் மனதையும் புண்படுத்தி மகிழும் குரூர சுபாவம் எனக்கு இல்லை.
-மலர் மன்னன்
திரு ரமேஷ் அவர்களுக்கு,
>ஒருவர் சொன்னதைச் சொல்லவில்லை என்பதுபோல் சொல்லிச் செல்வது, சொல்லாததைச் சொன்னதாகக் குறிப்பிட்டு அதற்கு பதில் சொல்வது, சொன்னதைப் புரிந்துகொள்ளாமல் ஆனால் புரிந்துகொண்டதுபோல பாவனை கொண்டு அதற்கேற்ப சம்பந்தமில்லாமல் பதில் சொல்வது, சொன்னதைத் திரித்துச் சொல்வது, சொன்னதற்கு பதில் சொல்ல ஏதுமில்லாவிட்டால் சொன்னவரை மனம்போன போக்கில் விமர்சனம் செய்வது, தெரிந்தே
திசைமாறிப்போவது….”
முதலிரண்டு வரிகள் உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களுக்காகவே
மலர்மன்னன் எழுதியது.
நீங்கள் நான் எழுதியிருந்ததையே சரியாக வாசிக்காமல் எழுதியிருக்கும்
லட்சணமே சொல்கிறது நீங்கள் எந்தளவுக்கு அம்பேத்கரின் கட்டுரையைப்
புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதை. மாற்றமுடியாத இந்து மத சாத்திரங்களைப்
பற்றி, அதன் சமூக விளைவுகளைப் பற்றி அம்பேத்கர் தன் ஆய்வில்
இறுதிப்பகுதியில் குறிப்பிடுகின்றார். சமயப்பிரச்சனை, சமூகப்பிரச்சனை,
இந்து மதத்தின் மாற்றமுடியாத சாத்திரங்கள் , அதை மாற்றும் அதிகாரம்
யாருக்கும் இல்லை என்று மலர்மன்னன் அய்யா கட்டுரையில் குறிப்பிட்டிருந்த
ஒவ்வொரு கருத்துகளுக்கும் அந்த ஆய்வுக்கட்டுரையில் பதில் இருக்கிறது.
இந்த விவாதம் மலர்மன்னன் அய்யா அவர்கள் எழுதிய ஒரு பின்னூட்டத்தில்
விளைவாக நான் எழுதிய பூசாரி ஆகலாம்! அர்ச்சகராக முடியாது? என்ற
கட்டுரையில் ஆரம்பித்ததை நினைவு படுத்த வேண்டி இருக்கிறது.
ஏனேனில் என்னுடைய அக்கட்டுரையில் அம்பேத்கர் இதற்கெல்லாம்
தீர்வு காண விரும்பி சேர்க்க நினைத்த அந்த ஒற்றைவரியை
கொடுத்திருந்தேன். அப்போதெல்லாம் நீங்கள் கேட்கவில்லை,
நீ ஈவேரா பற்றி மட்டும் தான் எழுத வேண்டும், அம்பேத்கர் தேசியவாதி,
என்றெல்லாம். ஆனால் உங்களால் பதில் சொல்ல முடியாத
அவரின் ஆய்வுக்கட்டுரையைக் கொடுத்தவுடன் உடனே பதறிப்போய்
நீ ஈவேரா பற்றி மட்டும் தான் பேச வேண்டும் என்று ஆணையிடுகின்றீர்கள்.
நான் ஈவேரா பற்றி பேசுவதற்கோ அல்லது அம்பேத்கர் பற்றி பேசுவதற்கோ
எழுதுவதற்கோ உங்கள் அனுமதி எனக்குத் தேவையில்லை என்பதை
உங்களுக்கு நினைவு படுத்த வேண்டி இருக்கிறது.
கட்டுரை அளவுக்குப் பின்னூட்டங்களும் முக்கியமானவை என்று கருதுபவள் நான்.
மேலோட்டமாக
வாசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்து அவசரத்தில் நீங்கள் அள்ளித் தெளித்திருப்பதால் யாருக்கு நஷ்டம்?
வாசிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் உங்கள் நோக்கத்தையும்
உங்கள் வாசிப்பின் ஆழத்தையும்.
.
Earnest request for புதியமாதவி
Can you please write an article on women/their rights and place in Islam? It will ALSO be enlightening to read from your own words on the plight of the Bangladeshi author Talisman Na-sari and other women in Islam. Who else, but you,who is so well read and with so much talent, can write on these topics? Thank you
Another request to Mr Kavya:
Can you please write an article on the Pedophile activities of the Christian clergy? Thank you
அன்புள்ள திரு மலர் மன்னன்!
//ஆனால் முகமதிய மதம் என்பது உங்கள் மனதைப் புண்படுதுகிறது என்றால் அன்பு கூர்ந்து உறுதி செய்யுங்கள். நீங்கள் குறுப்பிட்வாறே இனி எழுதுகிறேன். ஏனெனில் எவர் மனதையும் புண்படுத்தி மகிழும் குரூர சுபாவம் எனக்கு இல்லை.//
முகமதிய மதம் என்று பலரும் வழக்கமாக பயன்படுத்தி விடுகின்றனர். முகமது நபி மனிதர்களுக்குரிய சட்டங்களை இறைவனிடமிருந்து வாங்கித் தந்திருக்கிறார் எனபது இஸ்லாததின் நம்பிக்கை. இதற்கு முன்பு ஆதமிலிருந்து ஏசுநாதர்வரை எந்த செய்தியை இறைவனிடமிருந்து கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் முகமது நபியும் கொண்டு வந்திருக்கிறார். இது இறைவனை வணங்குவதற்குரிய வழி. எனவே இதனை மதம் என்று கூறாமல் இஸ்லாமிய மார்க்கம் என்று கூறுவதே குர்ஆனின சொல்படி சரியாகும்.
முத்தவல்லி என்ற வார்த்தைக்கு தலைவர், பாதுகாவலர் என்ற பொருள்களை கொள்ளலாம். பள்ளியை நிர்வகித்து அதன் வரவு செலவுகளை பராமரிப்பவரை முத்தவல்லி என்று அழைப்பர்.
இந்த வயதிலும் அயராது பக்கம் பக்கமாக பதில்களை தந்து கொண்டிருக்கும் உங்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.
சுமிதாவும் மலர்மன்னனும் ராமாவும் சந்திரமவுளியும் கோபம் கொள்வது எதற்காக? அய்யோ இந்துமதம் தாக்கப்படுகிறதே என்றா? இல்லை. அர்ச்சர்கள் ஜாதி எங்கள் ஜாதி. அவர்கள் விமர்சிக்கப்பட்டால் நாங்கள் சும்மாயிருக்கமாட்டொம் என்றுதானே?
அவர்களைக்குறிப்பிட்டு எழுதிவிட்டால், ஜாதிப்பாசம் பீரிட்டெழுகிறது. பார்ப்ப்ன ஜாதியாளர் படையெடுத்து வந்து எழுதுகிறார்கள். திட்டுகிறார்கள்.
Kavya,
U are excellent in diverting the issue. U always attack hinduism via brahmins & when we reply, U find that offensive?
Have U dared to talk about casteism in islam or christianity? U will conveniently use the ewords – groups & not caste.
But as I said – thalaivar (EVR) evvazhiyo, thondargal (kavya, piriyan) avvazhi.
சமயப்பிரச்சனை, சமூகப்பிரச்சனை, இந்து மதத்தின் மாற்றமுடியாத சாத்திரங்கள், அதை மாற்றும் அதிகாரம்
யாருக்கும் இல்லை என்று மலர்மன்னன் அய்யா கட்டுரையில் குறிப்பிட்டிருந்த… புதிய மாதவி //
மாதவி, நான் ஹிந்து சமய விதிகளை மாற்ற இயலாது என்று கூட அல்ல மற்றுவத்தில் உள்ள பிரச்சினை என்றுதான் சொல்லியிருக்கிறேன். ஹிந்து சமூக விதிகளை அல்ல. நான் சொன்னதை நீ தவறாகப் புரிந்துகொண்டது மட்டுமின்றி மாற்றியும் எழுதிச் செல்கிறாய். விதிகள் என்பதற்கும் பிரச்சினைகள் என்பதற்கும் வித்தியாசமுண்டு. மேலும் சமூக விதிகளை கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மதங்களைவிட ஹிந்து சமூகம் ஆட்சியாளர் சட்டங்களின் மூலம் ஏற்கத் தவறியதில்லை. இருதார மணம், தீண்டாமை, அனைவரும் ஆலயங்களுக்கு வந்து வழிபடும் உரிமை, தேவதாசி முறை ரத்து ஆகிய சமூக விதிகள் சட்ட ரீதியாக உறுதி செய்யப்படுகையில் அவற்றுக்கு சில தரப்புகளிலிருந்து எதிர்ப்பு கிளம்பிய போதிலும் ஹிந்துக்களே அவற்றைப் பிரேரேபித்து நிறைவேற்றப்படவும் வழி செய்தனர். ஆனால் சமய விதிகள் இவ்வாறு மாற்றக் கூடியவை அல்ல. மாற்றுவது எளிதும் அல்ல. காரணம் ஹிந்து சமயத்தில் ஒரு புத்தகம், ஒரு தலைமை அல்லது தலைமை சபை இல்லை. இந்த நுட்பமான விஷயத்தை சர்வ சதாரணமாக உனது வசதிக்கு மாற்றிக்கொண்டு பதில் சொல்வதுதான் திராவிட அரசியல் சம்பிரதாயம்.
அம்பேத்கர் ஹிந்து ச்மயக் கடவுளர் மீது நம்பிக்கையற்றவர் எனினும் வீர சாவர்க்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக்காக உருவாக்கிய பதித பாவனர் ஸ்ரீமன் நாராயணனுக்கான ஆலய நிகழ்ச்சியில் பங்கேற்றது உனக்குத் தெரியுமா? மேலும் சாவர்க்கருக்கே கூட உருவ வழிபாட்டில் ஈடுபாடு இல்லை! இருவருமே மகக்ளின் நம்பிக்கையை மதித்தவர்கள்.
அன்புடன்,
மலர்மன்னன்
அன்புள்ள சுவனப்பிரியன்,
சரியான சொல் எது என விளக்கியமைக்கு நன்றி.
முகமதியர்கள் என்று எழுதுவது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. தயவு செய்து அவ்வாறு எழுதாதீர்கள் என்று எனக்குச் சில முஸ்லிம் அனப்ர்களிடமிருந்து மின்னஞ்சல்கள் வந்தன. எனவே இனி அவ்வாறு குறிப்பிடுவதில்லை என்று முடிவு செய்து கொண்டேன். எனினும் பழக்கம் காரணமாக அவ்வப்போது அப்படி எழுதிவிடுகிறேன். ஆனாலும் இதில் உள்ள தர்க்கம் எனக்குப் புரியவிலை. முகமது அவர்கள் இறைத் தூதுவர் என்று நம்புபவர்கள்தானே முஸ்லிம்கள். அப்படியிருக்க முகமதியர் எனக் குறிப்பிடுவது அவர்களைப் பெருமைப் படுத்துவதாகத்தானே இருக்கும், ஏன் புண்படுத்துவதாகக் கூறுகிறார்கள்? விளக்க இயலுமா?
அன்புடன்,
மலர்மன்னன்
சுவனப் பிரியன்,
இன்னொன்று கேட்க மறந்தேன். முத்தவல்லி என்பது எந்த மொழிச் சொல்? திரிபு எனில் மூல மொழி எது? உங்களுக்கு இங்கே சென்னையில் எனக்கு வீட்டுக்கு அரபு மொழி கற்றுத் தருபவர் எவரையும் தெரியுமா? எனது உடல்நிலை ஆசிரியர் வீடு சென்று கற்கும் நிலையில் இல்லை. நான் உங்கள் மத சம்பந்தமான எல்லாவற்றையுமே ஆங்கிலத்தில்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். அது மொழிபெயர்ப்பாளர் புரிந்துகொண்ட முறையில்தானே இருக்கும்?
-மலர்மன்னன்
With regard, I put a qoustion to Thiru. Malarmannan.Had any God/Goddess told that THEY need an Archahar? You may say it is a traditional syestem.No. It is a racial syestem.It should be abolished at once.
சோமசுந்தரம், அல்லா என்ன சௌதி அரசரே தனது இரு இட காப்பாளராக இருக்க வேண்டும் எனச் சொன்னாரா…? இயேசு என்ன வாடிகனில் மண்டியிடச் சொன்னாரா…? அதக் கேட்க தைரியமில்லாமல் இது ஏன்…. இந்துமதத்திற்கு வழிபாட்டு இடங்கலோ இல்லை தெய்வ உருவங்களோ தேவையில்லை… அர்ச்சகர்களும் தேவையில்லை… அனைத்து மதங்களுமே வலிமையில்லா மனங்களை சில திருடர்கள் ஆட்சி செய்வதற்கான ஆயுதம்….
ஆதமிலிருந்து ஏசுநாதர்வரை எந்த செய்தியை இறைவனிடமிருந்து கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் முகமது நபியும் கொண்டு வந்திருக்கிறார். –> அப்புறம் ஏன் நீங்கள் ஆதமிலிருந்து ஏசுநாதர் வரை உள்ளவர்களை வழிபடாமல், இவர் சொன்னதன்படி மட்டும் நடக்கிறீர்கள். முன்னாலேயே ஏசுநாதர் கொண்டுவந்து விட்டார் எனில் புதிதாய் ஒரு மதம் ஏன்…?
//With regard, I put a qoustion to Thiru. Malarmannan.Had any God/Goddess told that THEY need an Archahar?–SOMASUNDARAM//
இதென்ன கேள்வி? இப்படியெல்லாம் கூடவா கேட்கத் தோன்றும்? எங்கும் நிறை பரம்பொருள் எனக்கு இருக்க ஒரு கோயில் வேண்டும் என்று மட்டும் மனிதனிடம் கேட்குமா என்ன? அப்படிக் கேட்ட பிறகெல்லாம் அல்லவா அர்ச்ச்கர் பூசாரி, வள்ளுவர், பாதிரியார், முத்தவல்லி என்றெல்லாம் அந்த இறைச் சக்தி மனிதனிடம் கேட்க வேண்டிய அவசியம் ஏற்படும்?
உணவுக்காக எதற்கு சமைக்குமிடம் அடுப்பு நெருப்பு பண்டம் பாத்திரம் தட்டு கிண்ணம் இலை தொன்னை எல்லாம் என்று வயிறு நம்மிடம் கேட்டதா? நேரடியாக மேய்ந்துவிட்டே வந்துவிடலாமே என்றுகூடக் கேள்வி வரும்போலிருக்கிறதே! தனக்கென வழிபாட்டுத்தலம் வேண்டுமென மனித இனம் உணர்ந்ததன் விளைவு, கோயில். அதற்கென அது சில விதிமுறைகளையும் வகுத்துக் கொண்டது, ஆங்காங்குள்ள கலாசரத்தின்படி. இதில் ரேஸிஸம் எங்கே வந்தது? அப்படி என்ன ரேஸிஸம் இங்கு இருக்கிறது? திரும்பவும் ஆரிய- திராவிட என்று ஆரம்பித்துவிடப் போகிறீர்கள். அது என்றோ வெறும் புரட்டு என்று நிரூபணமாகிவிட்டது!
-மலர்மன்னன்
மலர்மன்னன் திராவிட ஆரிய சமாச்சாரம் புரட்டு அல்ல…. தொடங்கிய நிலையில் அதன் தலைவர்களுக்கு ஒழுக்கம் இல்லாததால் குறிக்கோள் சிதறி விட்டது. கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் எதேச்சிகார ஆளும் வர்க்கத்தின் மெஸ்மரிசம் மூலம் மனிதர்களை மூலச் சலவை ஆக்கும் இடங்கள். உதாரணம், வெள்ளையாய் இருந்து தாடி வளர்த்தால் இரண்டு பொண்டாட்டி, மாதநாவல் புரடக்ஷன், என்று வாழ்ந்தவன் எல்லாம் இன்று சித்தர் என்று அழைக்கப்படும் நிலை…. கேடுகெட்ட நித்தி மாதிரி ஆட்கள் முன்பு கலைந்த புடவை தெரியாமல் அவன் மடியில் தன் முகம் புதைத்து அமைதி தேடும் வெளிநாட்டில் செட்டில் ஆன படித்த மேன்நிலை பெண்கள்… லெவிட்டேஷன் என்று குதி குதி என்றால் குதிக்கும் வசதியான பெண்கள்…. இதெல்லாம் என்ன மனநிலை..? ஏன்..? அய்யர்கள் தவிர பிரிதோர் கூட்டம் முக்தி அடைய முடியாது… “ஆயர் பாடி மாளிகையில் என்று இவர்கள் பாடும் கண்ணன் என்ன அய்யரா…? இன்று இவர்களுக்கு நம்பிக்கையாய் இருக்கும் மோடி என்ன அய்யரா…? எல்லோரையும் படைத்தவன் இறைவன் என்றால் அவனுக்கு சமஸ்கிருதத்தில் மட்டுமா பூஜை மொழி புரியும்…? தமிழ்நாட்டில், இங்கு தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று போர்டல்லவா மாட்டியுள்ளார்கள்… மசூதிக்கு போனால் அரபிக்… சர்ச்சில் லட்டின்… என்னங்கடா..? அப்ப தமிழும் திருவள்ளுவமும் என்னதற்கு..? …..க்கவா…? இந்துவாய் ஒருத்தன் பிறப்பால் தான் வர முடியும் என்கிறார் சோ… அப்ப தமிழர்கள் எப்படி பிறப்பாலா இந்துக்கள். திருவேங்கடாத்தனை துயிலெழுப்ப ஒரு எம்.எஸ் அம்மா வேண்டும்… ஆனால், அவர் அய்யர் போல் தோற்றப் பொலிவுடன் இருக்க மேக்கப் வேண்டும்… இது ஆதிக்கம் இல்லாமல் என்ன…?
இதில் ரேஸிஸம் எங்கே வந்தது? — அய்யர்கள் மட்டுமே பூஜாரிகள் என்பது ரேஸிசம் இல்லாமல் பிறகென்ன… இன்று கறி தின்னும் பிறாமனன், அரங்கேற்றம் செய்த பிறாமணாள், கல்வி எனும் பெயரில் கொள்ளையடிக்க்கும் ஒரு பிறாமணாள் கூட்டம், ஆடிட்டர் எனும் பெயரில் கொள்ளையடிக்கும் பிறாமணாள், வக்கீல் எனும் பெயரில் உண்மைக்கு புறம்பாய் கொள்ளையடிக்கும் பிறாமணாள், என்று தகிடுத்தித்தம் அந்த ஜாதியிலும் உண்டு என்றபின், ஒழுக்கமுடன் வாழ்பவன் பூஜை செய்தால் என்ன…? கண்ணப்பர் கால்மிதித்து தந்த கறியை ஏற்றான் இறைவன் எனில் சுத்தமாய் யார் வந்து பூஜை செய்தால் தான் என்ன… என் ஆர் ஐ என்றால் பக்கத்தில் அழைத்து காசு வசூல் பண்ணும் காஞ்சிமடம், கஞ்சிக்கு செத்தவனை பற்றிக் கவலைப்பட்டதுண்டா..? நீங்கள் அந்த சின்னவரின் சின்னத்தனமான லீலைகளை கண்டித்ததுண்டா..?
ரேசிசம் இருக்கிறது.
இறைவன் தனக்கென எதுவும் கேட்கவில்லை. ஓகே. மனிதனேதான் இறைவனை வழிபட ஒரு வழிபாட்டுத்தலம் வேண்டுமென நினைத்தான். ஓகே. அவ்வழிபாட்டுத்தலம் எப்படி இருக்கவேண்டும். அதன் வழிமுறைகள் வேண்டுமென நினைத்து அவற்றை வகுத்தான் என்பதும் ஓகே.
ஆனால், அப்படி வகுத்தவர்கள் ஆர்? அதைப்பொறுத்தே அங்கு ரேசிசமா இல்லையா என முடிவு செய்யலாம். இந்துமதத்தின் வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டது பார்ப்பனர்களாலேயே. அவர்களுக்கே கல்வி கற்கும் உரிமையயும் வருணத்தையும் மதம் கொடுத்தது. எனவே அவர்கள் வகுத்ததுதான் கோயில் சட்டங்கள்.
அவர்களுள் ஆயிரம் நல்லவர்கள் இருந்தாலும், பத்து கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பல வழிமுறைகள் அவர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்குமென்பது காமன் சென்ஸே சொல்லும்.
அப்படி வகுக்கப்பட்டவைகள்தான் ஆகம விதிகள். அவ்விதிகளை மலர் மன்னன் சொல்லவில்லை. லேசாக ஏதோ சொன்னார். அவற்றை நன்கு ஆதாரத்தோடு விளக்கினால் எங்கெங்கு தங்களுக்குச் சாதகாம எழுதிக்கொண்டார்கள் என்று தெரிய வரும்.
இப்போது சர்ச்சைக்குள்ளாகி இங்கு வாதிக்கப்படும் கட்டுரைப்பொருள் அப்படி அவர்களுக்குச்சாதகமான ஒன்றைப்பற்றியே பேசுகிறது. குணங்களைத்தெரியாமல் பார்ப்பன ஜாதியில் பிறந்த ஒரே காரணத்தால் அர்ச்சகர் ஆகிறார்கள். இதற்கு ஆகம விதிகள் உதவுகின்றன.
ஒரே ஜாதிக்கே அத்தகுதிகள் இருக்கின்றன என்கிறார் சுமிதா. அதையே வேறுவிதமாகச் சொல்லி எழதியிருக்கிறார். இதன் பெயர் ரேசிசம் இல்லாமல் வேறென்ன மலர்மன்னன்?
காவ்யா என்ற நபர் சொல்கிறான் என்றெழுதாமல் நேரடியாக இது ரேசிசமா இல்லையா என்று சொல்வும்.
Dear Thiru.punaipeyaril. The Indian Constituon states that’those who are not Muslims, Christians,Parsis etc.are Hindus.”In this way, we are compelled to called ourself “HINDUS”.As a hindu, it is not fair to critices other realigions. The articleis speaks about the Archahas.Not about Allah or Jesus.Please explain how the Archahas are very nearer to God.
சோமசுந்தரம், அர்ச்சகர்கள், கடவுளுக்கு அருகில் கிடையாது. மௌனமே உள்மனது வரை சென்று தேடலை தொடக்கி வைக்கும்…. யோகா, தியானம் என்பதை கற்றவர் சிலர் எப்படி கடைச்சரக்காகி வைத்தனரோ அது மாதிரியே அர்ச்சகர்களும் , பூசாரிகளும். இதில் எல்லா ஜாதியினரும் ஒன்று தான். இதே நிலை தான் இஸ்லாம், கிறிஸ்துவம் ஏன்…. உன்னையே உணர்வாய் எனும் தத்துவம் தந்த பௌத்தத்திலும் இதே நிலை தான். நமக்கோ பயம்… அது கொண்டுசெல்லும் இடம் இவர்களது தீபாரதனை தட்டு. கடவுள் இல்லையென்று பாசாங்கு செய்த பெரியார் கூட்டமும் இந்த அர்ச்சகர் மனநிலையில் தான் உள்ளன. மதுவும் மதமும் ஒன்றே…. இரண்டும் டாஸ்மாக் சரக்கு. இதில் வேதனை தத்துவங்கள் தெளிவாய் கொண்ட இந்துமதத்தை எதேச்சிகார நாட்டினரில் கத்தி முனையில் நம்மவர்கள் காட்டிக்கொடுப்பதே….
I am a reguler reader of Thinnai.I expect a polite language on my comments.Thanks.
அன்புள்ள ஸ்ரீ சோமசுந்தரம்,
உங்கள் கேள்வி அர்ச்சகர்களைப் புண்படுத்துவதாய் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் திண்ணை வாசகர்களில் நீங்கள் மட்டுமின்றி அர்ச்சகர்களும் உள்ளனர். அதிலும் இந்த அர்ச்சகர் சம்பந்தமான கட்டுரையை நிறைய அர்ச்ச்கர்கள் மிகுந்த ஆர்வத்துடன் படித்து வருகிறார்கள் என்பதையும் அறியுங்கள்.
ஆலயங்களில் அர்ச்சகர் நியமனம் குறித்து நீங்கள் தாரளமாகக் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம். ஆனால் எந்த இறைவனோ இறைவியோ தனக்கு அர்ச்சகர் வேண்டும் எனக் கேட்டார்கள் என்பது அர்ச்ச்கர்கள் பணீயையே துச்சமாக மதித்து நீங்கள் கேட்பது பொலைட்னஸ் இல்லாமல் கேட்கும் கேள்வியாகும். நீங்கள் மட்டும் பொலைட்டாகக் கேட்க மாட்டீர்கள் ஆனால் மற்றவர்கள் உங்களுக்குப் பொலைட்டாக பதில் சொல்ல வேண்டும் என எதிர்பார்க்கலாமா? மேலும் உங்களூக்கு அளிக்கப்ப்ட்ட பதிலில் பொலைட்டாக இல்லை என்று சொல்லும்படியாக ஏதும் இல்லவும் இல்லை! அடிப்படை உண்மையை நினைவூட்டுதல்தான் உள்ளது! -மலர்மன்னன்
திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,
சில மாதங்களுக்கு முன் ஸ்ரீமதி கமலா சுந்தர ராமசாமி தம் கணவர் பற்றி எழுதிய நூலுக்கான மதிப்புரையை முதலில் கணையாழியில் எழுதியபின் உலகளாவிய வாகசகர்கள் படிக்க வேண்டி உங்களுக்கும் உரிய தகவலுடன் நான் அனுப்ப, நீங்களூம் அதைப் பிரசுரம் செய்தீர்கள். மேற்படி மதிப்புரையில் பரந்தாமன் என்ற நாரயணனும் நானும் பத்திரிகைத் துறையில் ஒரே இடத்தில் சில காலம் சேர்ந்தே பணி செய்திருக்கிறோம் என்ற தகவலை வெளியிட்டிருந்தேன். அவர் சுந்தர ராமசாமியின் வழியில் கமலாவுக்கும் உறவினரானதால் ஸ்ரீமதி கமலா சுந்தரராமசாமியின் உறவினரான பரந்தாமன் என்கிற நாராயணனும் நானும் ஒரே இடத்தில் பணி செய்தோம் என்று குறிப்பிட்டிருந்தேன். இதை வழக்கமாக எதையும் அரைகுறையாகப் படித்துவிட்டு, அரை குறையாகவே புரிந்துகொண்டு மனம்போன போக்கில் எதாவது எழுதும் காவ்யா என்கிற நபர் நான் ஸ்ரீமதி கமலா சுந்தர ராமசாமியின் உறவினர் என்று சொல்லிக்கொண்டதாக சமயம் கிட்டும் போதெல்லாம் எழுதி வருகிறார். இவ்வாறு திரும்பத் திரும்ப அவர் எழுதுவது நான் அவ்வாறு சொல்ல்லிக்கொள்வதை ஏற்பதாகவும் இதுவே பதிவாவிடுமாதலாலும் தேவையற்ற பிரசினைகளைத் தோற்றுவித்துவிடும் என உங்கள் மூலமாகத் திண்ணை வாசகர்களுக்கும் காவ்யா என்கிற நபருக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். ஆகையால் இப்பின்னூட்டத்திலேயே இதனை வெளியிட வேண்டுகிறேன். மேலும் இந்த நபர் நான் எழுதாததையெல்லம் தொடர்ந்து திரித்து எழுதி வருகிறார். ஜயகாந்தன் என்னை சந்திக்க மறுத்து விட்டார் நான் எழுதியதாகக் குறிப்பிட்டுத் தேவையின்றி அவருக்கும் எனக்கும் மனஸ்தாபம் ஏற்பட வழி செய்கிறார். இதேபோல் மண்டைக்காடு விவகாரம் சம்பந்தமாகவும் நான் எழுதாததையெல்லாம் எழுதியதாக சாதித்து வருகிறார்.
இவையெல்லாம் தேவையில்லாத பின்விளைவுகளை உண்டு பண்ணும்.
மேலும், கவ்யா என்ற இந்த நபர் ஒரு கிறிஸ்தவராக இருந்துகொண்டு ஒரு ஹிந்துவைபோல் தன்னை பாவனை காட்டி அந்தச் சாக்கில் ஹிந்து சமயத் தத்துவங்களையும் நடைமுறைகளையும் கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பதும் தெளிவாகியுள்ளது. இவ்வாறு அவர் ஹிந்துவாகத் தன்னைக் காண்பித்துக் கொள்வது மாற்று மதத்தினனாக இருந்துகொண்டு ஹிந்து மதத்தைக் கடுமையாக விமர்சிப்பதும் சாதி அடிப்படையில் ஹிந்து சமயத்தைப் பிளவு படுத்துவதும் உள்நோக்கம் கொண்டதாகும். மேலும் கிறீஸ்தவராக இருந்துகொண்டு ஹிந்துவைப்போல் நடிப்பது நேர்மையற்ற உள் நோக்கம் கொண்ட குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் வரக் கூடியதாகும். ஆகையால் திண்ணையின் ஆசிரியர் குழு என்ற உரிமையுடனும் அதிகாரத்துடனும் அவரை அடையாளம் காட்டுமாறு கேட்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன். அவர் இவ்வாறு ஆள் மாறாட்டம் செய்தபடி பின்னூட்டம் இடுவது மொட்டைக் கடிதம் எழுதுவதற்கு இணையாகும். ஆகையால் அவர் தமது உண்மைநிலையை அடையாளம் காட்டாதவரை அவரது பின்னூட்டங்களை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். தனது மதம் இன்னதென்று அடையாளம் காட்டாதவரை அவர் ஹிந்து சமய நடைமுறைகள் குறித்தும் கோட்பாடுகள் பற்றியும் ஒரு ஹிந்து என்கிற உரிமையுடன் பரிந்துரைப்பதும் ஆலோசனைகள் கூறுவதும் முற்றிலும் முறைகேடாகும். ஆகவே அன்பு கூர்ந்து ஹிந்துவைப்போல் ஆள்மாறாட்டம் செய்யும் அவர் ஹிந்து சமயம் தொடர்பாக பரிந்துரைகள் செய்வதும் ஹிந்துக்களிடையே பிளவுண்டாக்குவதும் முறைகேடு என்பதை அவருக்கு உணர்த்தி அவரது அத்தகைய பின்னூட்டங்களை உடனடியாக நிறுத்தவும். முக்கியமாக இவர் ஒரு ஹிந்துவைப்போலவும் அந்த அக்கறையில் ஹிந்து மத நலனுக்காக ஆலோசனை செய்வதுபோல் நடிப்பதும் நேர்மையற்ற செயல் என்பதை அவருக்கு உணர்த்த வேண்டுகிறேன். இது உள்நோக்கத்துடன் தெரிந்தே செய்யும் ஆள் மாறாட்டம் ஆகும். இதற்குமேல் நான் விவரிக்க விரும்பவில்லை. ஒரு கிறீஸ்தவராக இருந்துகொண்டு ஹிந்துக்களிடையே குழப்பமும் பிளவும் உண்டாக்குகிறார் என இவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஏனெனில் இவரைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு விட்டன. தயை செய்து திண்ணை வாசகர்கள் அறியும் வண்ணம் இதனை இப்பின்னூட்டத்திலேயே வெளியிடவும்.
அன்புடன்,
மலர்மன்னன்
மேலும் கிறீஸ்தவராக இருந்துகொண்டு ஹிந்துவைப்போல் நடிப்பது நேர்மையற்ற உள் நோக்கம் கொண்ட குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் வரக் கூடியதாகும்//
இதுவும் குற்றவியலில் வருவதாகும். எப்படி என்னையறியாமல் என் புனைப்பெயரை வைத்து கிருத்துவன் என்று மலர்மன்ன இந்த நபர் சொல்லலாம்?
திரும்பத்திருமப் மாற்று மதத்தவன் என்று எழுதிக்கொண்டிருப்பது குற்றம். எப்படி சொல்கிறார் இந்த மலர்மன்னன் என்ற இந்த நபர் ?
உங்களின் ஜாதியை வெளியில் காட்டிவிடுங்கள். பிரச்சினையே இல்லை. ஏற்கனவே புனைப்பெயரில் என்பவர் கேட்டிருந்தாரல்லவா? சாதிகளின் அவசியம் என்ற கட்டுரை எழுதிவிட்டு பின்னர், சுய விவரங்களை மற்றவர்கள் காட்டவேண்டுமென்றும் எழதிய நீங்கள் உங்கள் ஜாதியைக் காட்டிவிடுவதில் என்ன ஆட்சேபம்?
அர்ச்சகர் விடயத்தில் நீங்கள் பார்ப்பனர்கள் சார்பாகப்பேசுகின்றீர்கள் என்பது உங்கள் பின்னூட்டங்களில் எனக்குப்புரியவருகிறது. ஆனால் அதை நேரடியாகச் சொல்லமுடியாதபடி பலவிடயங்களை போட்டு எழுதுகிறீர்கள். இங்குள்ள விவாதமும் அப்படித்தான் இருக்கிறது. பார்ப்பனரே அர்ச்சகராக வேண்டும் என்ற கட்சி எவரும் அர்ச்சகராகலாம் என்ற கட்சியோடு மோதுகிறது. முன்கட்சியில் மலர்மன்னன் இருக்கிறார் என்பது உண்மையா பொய்யா? இல்லையென்றால், ஏன் ஆகம விதிகள் தடுக்கின்றன என சொல்லவேண்டும்?
மலர்மன்னன், பிறஜாதியினருக்காகவும் பேசவேண்டும். தமிழகத்தில் மற்ற இந்துக்கள் கோடானுகோடி. அவர்களை வைத்துத்தான் இந்துமதம் போகவேண்டும். தமிழ்ப்பார்ப்பனர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறக்குடியேற அவர்கள் எண்ணிக்கை குறைந்துவர, தமிழகத்தில் இந்துமதத்துக்கு அவர்களால் ஒரு உதவியுமில்லை.
இதை மலர்மன்னன் உணர்ந்து கொண்டு, பிறஜாதியினரைமட்டுமே முன்வைக்கவேண்டும். அபபடி பார்க்கையில் ஆகம விதிகள் சொன்னது தமிழ்ப்பார்ப்ப்னர்கள் மட்டுமே அர்ச்சகர்களாகலாம் என்ற் பேச்சுக்கே இடம் வராது.
என்னிடம் நேரடியாக விவாதம் செய்ய வேண்டும். காவ்யா என்ற நபர் என்றெழுத வேண்டும்? ஏன் வெட்கம் நேரடியாகப்பேச. திககாரர்களை தீவிர இந்துவாக மாற்றினால் போதுமா? என்னையும் எப்போது தீவிர இந்துவாக மாற்றுவது? நான் சாதா இந்துவாக அல்லவா இருக்கிறேன்!
மாற்றம் வந்தால் மதத்துக்கு நல்லது. மதமா ? ஜாதியா?
I fully agree. Admin should take some serious action on this request.
//அத்தகைய பின்னூட்டங்களை உடனடியாக நிறுத்தவும்.//
அப்படியே நிறுத்திவிட்டு, மலர்மன்னனை மட்டும் எழுத விட்டால் என்ன ஆகும்?
இந்துமதம் என்றால் “தீவிர இந்துமதம்” (இஃது உங்கள் சொல்மலர்மன்னன்) என்று மட்டுமே வரும்.
தீவிர இந்து என்பதும் தீவிர இசுலாமியன் என்பதும் ஒன்றே.உங்கள் ‘தீவிர’ கருத்துக்களே திண்ணையில் நடமாடும்.
குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து எடுப்பது’
பெண்களைச்சாட்டையால் விலாசுவது
பக்தர்களில் மண்டைகளை தேங்காய்களால் உடைப்பது
ஒன்றுமறியா இளங்குழந்தைகளுக்கு இருமுடி போட்டு சபரிமலைக்குக் கொண்டு செலவ்து
அவர்களில் கன்னக்களிலும் நாக்குகளிலும் அலகு குத்துவது (திருவீதியம்மன் ஆடித்திருவழாவில் இவ்வாரம்)
பிராமணர் என்போர் சாப்பிட்ட எச்சில் புரண்டால் நோய்கள் குணமாகுமென்பது
சிதம்பரம் பூஜாரிகள் சிவனின் அவதாரங்கள்
தலித்துகளுக்கு வருணமே கிடையாது; அவர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்று தடுப்பது
இன்ன பிற செயல்களை தட்டிக்கேட்பவன் இந்துமதத்துரோஹி. பார்பனத்துவேசி (ஏனா எல்லா எச்சிலுமே சுஹாதாரக்கேடு. இதிலெப்படி பார்ப்ப்னர் எச்சில் புனிதமாகும் என்று கேட்டானல்ல்வா?). இக்கருத்தை எல்லாரும் சரியென்னும் நிலைவரும்.
ஆகவே திண்ணை ஆசிரியர் குழு காவ்யா போன்ற் இந்துத்துரோஹிகளை இத்தளத்திலிருந்து உடனே நீக்கிவிடவும் என்று தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
திண்ணை ஆசிரியர் குழுவிற்கு,
நன்றியும் வணக்கமும்.
மேலும், காவ்யா என்ற அந்த நபர் என்னைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதுகையில் நான் ஸ்ரீ ராமானுஜாசாரியார் பற்றி நாக்கூசாமல் ஏதோ எழுதிவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்:
“மலர்மன்னன் ஒரு பார்ப்பனர் (ஐயர்) என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு மட்டுமே தெரியவில்லை. அவர் திண்ணையிலேயே சுந்தர ராமசாமியின் மனைவியார் தன் உறவினர் என்றெழுதியிருக்கிறார். ஐயர் என்று சொல்லக்காரணம் ஐயங்கார் என்றால் இராமனுஜரைப்பற்றி நாக்கூசாமல் அப்படி எழுதியிருக்கமாட்டார்”
மேற்படி காவ்யா என்கிற நபர் என் மீது ஐயங்கார் என்ற பிரிவினருக்கு வெறுப்பும் விரோதமும் உண்டாக்கும் உள் நோக்கத்துடன் இவ்வாறு எழுதியிருப்பது அவரது உண்மையான நோக்கம் என்னவென்பதைப் புலப்படுத்துகிறது. எனது வணக்கத்திற்கும் மரியாதைக்கும் உரிய ஸ்ரீ ராமானுஜரை நான் நாக்கூசும் விதமாக எதுவும் எழுதாதபோதே நான் அவ்வாறு எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டு இருப்பது ஸ்ரீ வைணவர்கள் அனைவரையுமே எனக்கு எதிராகத் திருப்பும் முயற்சியாகும். இது முற்றி, தமிழ் நாட்டிலும் தமிழ் மக்கள் வாழும் இடங்களிலும் ஹிந்து சமூகத்தில் உள்ள அனைத்து ஸ்ரீ வைணவர்களுக்கும் சைவர்களுக்கும் விரோதம் உண்டாக்கிக் குழப்பம் விளைவித்து ஒரு மோதல்கூட உருவாகிவிட வாய்புள்ளது எனத் தெரிவித்துக்கொள்கிறேன். ஏனெனில் இது வெளியாகியுள்ள திண்ணை இணைய இதழ் நீண்ட பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் படித்து இதன் நம்பகத் தன்மையை நன்கு உணர்ந்திருப்பவர்களூம் ஆவார்கள். இது சாதி மத கொள்கை கோட்பாடு வித்தியாசமில்லாமல் அனைவருக்குமான ஒரு பொதுத் தளம் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஒருவர் என்னைப் பற்றி நான் ஸ்ரீ ராமானுஜரைக் குறித்து நாக்கூசாமல் எழுதியுள்ளதாக ஒருவர் ஆதாரமற்ற குற்றம் சாடும்போது திண்ணைக்கு உள்ள நம்பகத் தன்மையின் காரணமாக காவ்யா என்ற நபர் என்னைப் பற்றி அவ்வாறு எழுதியிருப்பது சரியாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம் தோன்றி உறுதியும் ஆகிவிடும். இதனால் என்னை முன்வத்து சைவ- வைணவ விரோதம் உண்டாக வாய்ப்புள்ளது. இதையும் அறிவார்ந்த திண்ணை ஆசிரியர் குழு கருத்தில்கொள்ள வேண்டுகிறேன். நண்பர்கள் பலர் நான் இது பற்றியெல்லாம் வாளாவிருப்பது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும், அப்போது காலம் கடந்துவிடும், முன்பே நீங்கள் ஏன் இதற்குக் கண்டனமும் எச்சரிக்கையும் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழும் என்கின்றனர்.
தாமும் ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் என்பதுபோல நடித்து நான் ஸ்ரீ ராமானுஜரைப் பிராமணர் என்று குறிப்பிட்டது மஹா பாபம் என்று இவர் எழுதியதைப் படித்துவிட்டு இப்போதே இன்னொரு வாசகர் இங்கு ஐயங்கார்களூம் ஸ்ரீ ராமானுஜரை ஏற்கமாட்டார்கள் என்று எழுதியுள்ளார். ஆனால் கவ்யா என்ற நபர் இங்கு எழுதுகையில் ஐயங்கார் என்றால் நான் அப்படி எழுதியிருக்க மாட்டேன் என்று சொல்லி ஒருபுறம் ஐயங்கார்கள் பிராமணர் என்று ஒப்புக்கொண்டே மறுபுறம் ஐயங்கார்கள் பிராமணர் அல்ல என்று தெரிவிப்பதுபோலவும் குறிப்பிடுகிறார். ஏனெனில் முந்தைய பின்னூட்டம் ஒன்றில் ஸ்ரீ ராமானுஜர் பிராமணர் அல்ல என்று இவர் சொல்லி, ஸ்ரீ ராமானுஜரை நான் பிராமணர் என்று எழுதியது மஹா பாபம் இதற்கு மன்னிப்பே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். இவை யாவும் காவ்யா என்ற நபர் வேற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு ஹிந்து மதத்தில் இருதரப்பாரிடையே விரோதம் உண்டாக்க முயற்சி செய்கிறார் என்பதை உறுதி செய்கின்றன. தான் ஒளீந்துகோண்டு ஹிந்து என்பதுபோல் ஏமாற்றுவதற்கு வசதியாக cyber space- ல் உள்ள பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் இவர் துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இது ஒரு கிரிமினல் குற்றமாகும். இதையும் காவ்யா என்ற நபரும், திண்ணை வாசகர்களூம் அறியும் பொருட்டு இப்பின்னூட்டத்தில் இக்கருத்தை வெளியிடுமாறு அறிவார்ந்த திண்ணை ஆசிரியர் குழுவை வேண்டுகிறேன். மிக்க நன்றி.
-மலர்மன்னன்
அதீத கற்பனை.
ஐயங்கார்கள் என்ற சொல் வேண்டாம். இராமானுஜரின் தொண்டர்கள் என்று சொல்வோம். நீங்கள் பார்ப்பனர்கள் சேவை செய்தார்கள் என்று எழுதிய இடத்தில் இராமானுஜரையும் குறிப்பிட்டதேன்? இராமானுஜர்களும் பார்ப்பனரகளும் ஒன்றா? அவருக்கேன் ஜாதியடையாளம்? என்றுதான் கேள்வி.
இது அவரின் தொண்டர்களைப்புண்படுத்தும் என்பதுதான் நான் எழுதியது.
புண்படுத்தவில்லையென்றால்,அந்த நபர் ஒரு போலி தொண்டர்.
Thanks Mr.MM. i already requested to Admin that whatever publishing by Kavya, admin should get some proof and admin itself search and find himself then only he should decide whether comments can be published or not.
You may help the Thinnai editor how to find a proof for the comment I made apropos MM’s referring to Ramanujar as a paarppnar. My comment was:
It is sacriligeous, which will deeply hurt the feelings of the followers of Ramanujar, to say as MM said. What proof do u need to say that? You can help.
U may bring one Shrivaishanva to this forum to contradict my comment that it is wrong to call him a paarpanar and make him one of your caste.
U may not be the follower of Ramanujar. Does it give the temerity to hurt the followers ?
புனை பெயரில்!
//ஆதமிலிருந்து ஏசுநாதர்வரை எந்த செய்தியை இறைவனிடமிருந்து கொண்டு வந்தார்களோ அதே செய்தியைத்தான் முகமது நபியும் கொண்டு வந்திருக்கிறார். –> அப்புறம் ஏன் நீங்கள் ஆதமிலிருந்து ஏசுநாதர் வரை உள்ளவர்களை வழிபடாமல், இவர் சொன்னதன்படி மட்டும் நடக்கிறீர்கள். முன்னாலேயே ஏசுநாதர் கொண்டுவந்து விட்டார் எனில் புதிதாய் ஒரு மதம் ஏன்…?//
‘இஸ்ரவேலர்கள் உங்களை நம்புவார்கள் என்று ஆசைப்படுகின்றீர்களா? அவர்களில் ஒரு பகுதியினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்’
-குர்ஆன் 2:75
பைபிள் ஏசுநாதருக்கு இறைவன் அருளிய வடிவில் பாதுகாக்கப்படவில்லை. ஏசுநாதர் ஒரு இறைத்தூதராகத்தான் பிரசாரம் செயதார். ஆனால் இன்று அவரே கடவுளாக்கப்பட்டு விட்டார். முக்கடவுள் கொள்கை தாராளமாக கிறித்தவ மதத்தில் பரவி விட்டது. எனவே தான் முகமது நபிக்கு ஒரு வேதத்தை அருளி அவரை நபியாக இறைவன் நியமித்து குர்ஆனையும் அருளினான். பைபிளில் ஒரு இடத்தில் கூட தன்னை வணங்கச் சொல்லி ஏசு கூறவில்லை. பவுல் அடிகள் தனக்கு ஒரு கூட்டத்தை சேர்ப்பதற்காக இறைவன் வார்த்தையையும் பவுலின் சொந்த கருத்தையும் கலந்து உருவாக்கப்பட்டதே இன்றைய பைபிள்.
ஏசுநாதர் என்று ஜஸ்ட் லைக் தட் சொல்லமுடியும் உங்களால் முகமது நபிக்கு மட்டும் நீண்ண்ட அடைமொழியோடு சொல்லவேண்டும் எனும் மிரட்டல் ஏன்…?
திராவிடர் கழகம் ஒரு தனி மதம் அல்ல. அதில் உள்ளவர்கள் தாம் ஹிந்துக்கள் என்ற உரிமையில் ஹிந்து மதத்தையும் ஹிந்து சமூகத்தையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இதன் பொருட்டே இவர்கள் ஈ.வே.ரா. அவர்கள் வழியில் மதம் மாறாமல் ஆவணத்தில் ஹிந்துவாகவே நீடிக்கிறார்கள். ஈ.வே.ரா. அவர்களிடம் எனக்குள்ள மரியாதைக்குக் காரணமே , அவர் ஹிந்துக்கள்தான் ஹிந்து சமய, சடங்குகளையும் நடைமுறைகளையும் இஸ்லாமியர் இஸ்லாமிய சமய சமூக நடைமுறைகளயும் அதேபோல் கிறிஸ்தவர் அவர்களின் மத சம்பந்தமான விவகாரங்களையும் விமர்சிக்கலாம் எனத் தமது தொண்டர்களுக்கு அறிவுறுத்தியிருந்ததுதான். அவரிடமிருந்து நாம் இதுபோன்ற விவேகமுள்ள கற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. தனிப்பட்ட முறையில் பழகுகையில் பல திராவிடர் கழக ஆதரவாளர்களூம் தொண்டர்களூம் மிகவும் மரியாதை யோடும் பண்போடும்தான் பழகுகிறார்கள். இவர்களீல் 99.5 சதம் ஹிந்துக்களே. எனவே அவர்களில் சிலரை என்னால் மனம் திரும்பச் செய்ய முடிந்தது. அவ்வாறு மனம் திரும்பியவர்களீல் ஒருவர் தீவிர ஹிந்துவாக விசுவ ஹிந்து பரிஷத்திலும் பொறுப்பு வகித்தார். அவர் சீர்காழியைச் சேர்ந்தவர் என நினைவு. இது சுமார் 30 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. நான் எனது உடல் எனும் கருவியை முற்றிலும் பயன்படுத்தி இனி அது பயன்படாது எனத் தூக்கி எறிவதற்குள் திராவிடர் கழகச் சார்புள்ள உள்ள மேலும் சில ஹிந்துக் களையாவது மனம் திரும்பச் செய்வேன் என்கிற நம்பிக்கை உள்ளது. இதற்கு திராவிடர் கழகச் சார்புள்ள பலரிடம் காணப்படும் இனிய பண்பே காரணம். நீங்கள் எழுதுவதையெல்லாம் படித்தால் எங்கள் மனம் மாறிவிடும்போலிருக்கிறது. ஆகையால் நீங்கள் எழுதுவதைப் படிப்பதில்லை என்று என்னிடமே சொல்லும் ஈவேரா அன்பர்கள் உள்ளனர். ஆனால் அவர்களைக் காட்டிக்கொடுத்து அவர்களுக்குச் சங்கடம் உண்டாக்க விரும்பவில்லை!
– மலர்மன்னன்
சுவனப்பிரியன்,
இங்கு மூன்றாம் நபர்களது தொலைபேசி எண் முகவரி ஆகியவற்றை தருவதை தவிருங்கள்.
நன்றி
////மேலும் கிறீஸ்தவராக இருந்துகொண்டு ஹிந்துவைப்போல் நடிப்பது நேர்மையற்ற உள் நோக்கம் கொண்ட குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் வரக் கூடியதாகும்//
ஒரு நபரை தெரியாமல், அவர் புனைப்பெயரை வைத்துக்கொண்டு அவரை மாற்றுமதத்தவன் என்று ஜோடிப்பது குற்றவியல் சட்டவிதிகளில் கீழ் வரக்கூடியதாகும். இவர் என்னை அறிந்தார? என் பெற்றோரை இவருக்குத் தெரியுமா? எப்படி சொல்கிறார் இவர் நான் கிருத்துவன் என்று?//
//மேலும் கிறீஸ்தவராக இருந்துகொண்டு ஹிந்துவைப்போல் நடிப்பது நேர்மையற்ற உள் நோக்கம் கொண்ட குற்றவியல் சட்ட விதிகளின் கீழ் வரக் கூடியதாகும்//
ஒரு நபரை தெரியாமல், அவர் புனைப்பெயரை வைத்துக்கொண்டு அவரை மாற்றுமதத்தவன் என்று ஜோடிப்பது குற்றவியல் சட்டவிதிகளில் கீழ் வரக்கூடியதாகும்.
இவர் என்னை அறிந்தார? என் பெற்றோரை இவருக்குத் தெரியுமா? எப்படி சொல்கிறார் இவர் நான் கிருத்துவன் என்று?
But we know him. He often reveals his bio data here.
எவரும் இங்கு தன் சுயவிவரங்களை வெளியிடத்தேவையில்லை. திண்ணையில் அப்படி எந்த சரத்தும் போடப்படவில்லை.
இணைய தள விவாதம் ஒரு திறந்த மேடையாகவும், அல்லது சிலருக்கு மட்டுமே என்றும் இருவகைகளாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக: சில மதவாதிகளின் தளங்கள், சில ஜாதித்தளங்கள் என்று இணயதள விவாத அரங்குகள் இருக்கின்றன. அவற்றுள் அக்குறிப்பிட்ட வகையினர் மட்டுமே உறுப்பினர்களாகச்சேர்க்கப்படுவர்.
இதைபோல திண்ணை செய்து விடவேண்டும். அப்படிச்செய்து விட்டால், மலர்மன்னன் கோரிக்கையை – அதாவது தங்களைப்பற்றிய விவரங்கள் அனைத்தையும் வெளியிடுபவர்கள் – மட்டுமே சேர்ந்துவிட்டால் தொல்லையேயில்லை. சுயவிவரங்களை வெளியிடாதவர்கள் திண்ணையில் கருத்துக்களை போடப்படக்கூடாதென்று சொல்லிவிட வேண்டும். என்னைப்போன்றவர்கள் இங்கெழுத மாட்டார்கள்.
திண்ணை ஆசிரியர் குழு தங்கள் கருத்தைச்சொல்லவும்
Admin — when kavya ask what is your caste to anyone you are happily publishing but when i use those type of words those comments are censored. do not know what is your concern here?
பிராமிணர்களை பற்றி இழித்தும் பழித்தும் ஒரு பிராமணர் பெயரிலைய ஒரு பத்திரிகையில் கட்டுரை ஒன்று வந்தது , கடைசியில் அப்படி ஒரு நபர இல்லை என்று நீருபணம் ஆகிவிட்டது . பத்திரிக்கை வியாபரதிற்காக, ஹிந்துக்கள் தங்களுக்குள் அடிதுகொள்ளட்டும் என்று ஒரு நல்ல எண்ணத்தில் அது திட்டமிட்டு பண்ணப்பட்ட செயல் . திண்ணையில் அது நடந்துவிடுமோ என்ற பயம் இப்பொழுது உள்ளது.
‘பிராமணர்கள்’ என்று எவருமேயில்லை. அதை ஒரு ஜாதியின் பெயராக்க இந்துமதம் சொல்லவில்லை. பின்னர் ஏன் பிராமணர்கள், பிராமணர்கள் என்று இல்லாதவர்கள் பெயரைச்சொல்லுகிறீர்கள் ?
பிராமணத்துவம் என்பதுண்டு. அதை அடைய இன்றைய காலகட்டத்தில் எவராலும் முடியாது. ஆளானப்பட்ட சாமியார்களே திணறும் நீங்கள் ஆக முடியாது.
//மதத்தைக் கடுமையாக விமர்சிப்பதும் சாதி அடிப்படையில் ஹிந்து சமயத்தைப் பிளவு படுத்துவதும் உள்நோக்கம் கொண்டதாகும்.//
சாதிகளின் அவசியம் என்ற கட்டுரை எழுதியவர் நீங்கள். நான் அதை மறுத்தவன்.
சாதிகள் இருந்தால் அது இந்துமதத்தை நாசம் பண்ணும். பண்ணியது. அது பிளக்கும் என்றெல்லாம் சொல்லியவன் நான்.
எவர் சாதிகள் அவசியம் என்கிறாரோ, எவர் சாதியொழிப்புக்காக போராடவில்லையே அவரே உள்ளோக்கம் கொண்டவர். அவரே இந்துமதத்துக்கு ஆபத்தானவர்.
கேள்வி:
சாதிகளை ஆதரிப்பவன் இன்துமதத்துரோஹியா?
எதிர்ப்பவனா?
பதில் சொல்லுங்கள்.
பச்சிளங்குழந்தைகளை மண்ணில் போட்டு புதைப்பீர்கள்; பிராமணன் எச்சிலுக்குப்புனிதம் என்பீர்கள்; மண்டையை உடைப்பீர்கள்; சிறுவர்களை கால்கடுக்க சபரிமலைக்கு நடக்க வைத்தும், அலகு குத்தியும் குழந்தைவதை பண்ணுவீர்கள்.
இதைகேட்டால் அது கடுமையான விமர்சனமா?
//ஸ்ரீ ராமானுஜரை நான் பிராமணர் என்று எழுதியது மஹா பாபம் இதற்கு மன்னிப்பே கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார்//
மன்னிப்பே கிடையாதென்பதை தெய்வத்தில் மன்னிப்பு கிடையாதென்றுதான் பொருள் எடுக்கவேண்டும்.
ஒரு செயல் பாவமா இல்லையா என்பதை ஒருவருக்கொருவர் மாறுபடும்.
சைவர் அல்லது பொது இந்து (அம்மன் வந்து என்னிடம் தவழ்கிறாள்; கிருஸ்ணனுடன் விளையாடுகிறேன் என்றால் பொது இந்துதான்) இதைப்பாவமாக நினைக்கமாட்டார்கள்.
ஏனெனில் வரலாற்று குறிப்புக்கள் இராமானுஜரை அந்தணர் குலத்தில் பிறந்தார் என்றும் வைணவ குறிப்புக்களும் அவ்வாறே என்றும் சொல்கின்றன. அதைத்தான் எல்லாரும் படிக்கிறார்கள். எழுதுகிறார்கள். அதைப் பொது இந்துக்களும் சைவர்களும் சொல்லிக்கொள்ளலாம்.
அதே வேளையில், சிரிவைணவர்கள் (I dont know how to type the sanskrit Shri. Mahodaya Krishna Kumar can guide me!) என்பவர்கள் அதாவது ஆழ்வார்களையும் இராமானுஜரையும் தங்கள் மதமாக ஏற்றுக்கொண்டவர்கள். ஆழ்வார்களையும் இராமனுஜரையும் தெய்வத்திற்கு ஈடாக வைத்து கோயிலிலும் வீட்டிலும் வணங்குகிறார்கள். இவர்கள் வடிவுடை அம்மன் வந்தாள் என்னிடம். கிருஸ்ணரும் வந்தார் என்று வாழ்வதில்லை. ஆடிக்கு அம்மன் கோயில்; ஜன்மாஸ்டமிக்கு கோபாலன் கோயில் என்று போவதில்லை. ஒரே கோயில்தான் ஒரே சாமிதான். இதை மலர்மன்னன் கண்டிப்பாக புரிய வேண்டும்.
அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகிறேன் இங்கே தொடர்ந்து. அவர்கள் என்றுமே இராமனுஜரை ஒரு ஜாதியாகப்பார்ப்பதில்லை. அப்படிப்பார்ப்பதை அவர்கள் பாவமாக நினைக்கிறார்கள். எனவேதான் அது ஒரு பாவச்செயல் என்றேன். அது அவர்களைப்புண்படுத்தும். மலர்மன்னன் பிறரைப் புண்படுத்தலாகாது என்பதே என் கருத்து.
அன்புள்ள மலர் மன்னன்!
//முகமது அவர்கள் இறைத் தூதுவர் என்று நம்புபவர்கள்தானே முஸ்லிம்கள். அப்படியிருக்க முகமதியர் எனக் குறிப்பிடுவது அவர்களைப் பெருமைப் படுத்துவதாகத்தானே இருக்கும், ஏன் புண்படுத்துவதாகக் கூறுகிறார்கள்? விளக்க இயலுமா?//
ஏசு கிறித்துவை வணங்குபவர்கள் கிறித்தவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதேபோல் முகமது நபியை வணங்குபவர்கள் முகமதியர்கள் என்று காலப் போக்கில் திரிபு படுத்தப்படும். தற்போது அவ்வாறு இல்லையானாலும் ஏசுவுக்கு நிகழ்ந்ததுபோல் முகமது நபிக்கும் ஆகி விடக் கூடாது என்பதற்காகத்தான் ‘முகமதியர்கள்’ என்ற வார்த்தை பிரயோகத்தை தவிர்த்துக் கொள்ளச் சொல்கிறோம்.
இறந்து போகும் சில நாட்கள் முன்பு கூட முகமது நபி ‘என் அடக்கத்தலத்தை விழா நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். ஏசுவுக்கு செய்தது போனற தவறை எனது அடக்கத் தலத்தில் அரங்கேற்றி விடாதீர்கள்’ என்று பலமுறை சொன்னதை வரலாறில் பார்க்கிறோம். எனவேதான் ஏசு நாதருக்கு நிகழ்ந்தது போன்ற கடவுளாக்கும் தன்மை முகமது நபிக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகவே முகம்மதியர் என்று அழைப்பதை தவிர்க்க சொல்கிறோம்.
//இன்னொன்று கேட்க மறந்தேன். முத்தவல்லி என்பது எந்த மொழிச் சொல்? திரிபு எனில் மூல மொழி எது?//
‘வலி’ என்ற அரபு மூலச் சொல்லிலிருந்து மருவி முத்தவல்லியாக உருப்பெற்றுள்ளது.
//உங்களுக்கு இங்கே சென்னையில் எனக்கு வீட்டுக்கு அரபு மொழி கற்றுத் தருபவர் எவரையும் தெரியுமா? எனது உடல்நிலை ஆசிரியர் வீடு சென்று கற்கும் நிலையில் இல்லை. நான் உங்கள் மத சம்பந்தமான எல்லாவற்றையுமே ஆங்கிலத்தில்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். அது மொழிபெயர்ப்பாளர் புரிந்துகொண்ட முறையில்தானே இருக்கும்?//
நான் சில செல்போன் எண்களை தந்தேன். திண்ணை நிர்வாகம் அனுமதிக்கவில்லை. எனவே என்னை மெயிலில் தொடர்பு கொண்டால் உங்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முயற்ச்சிக்கிறேன். நன்றி.
எனது மெயில் ஐடி
Nazeer65@gmail.com
மிக்க நன்றி, நண்பர் சுவனப்பிரியன். உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.
அன்புடன்,
மலர்மன்னன்
இந்துக்கள் பலவகை.
1. தீவிர இந்து.
2 பொது இந்து
3. சிவனை மட்டுமே முழுமுதற்கடவுளாகக்கொண்டு வாழும் இந்து
4. சிவனிடன் அன்னாரின் குடும்பத்தினரையும் சேர்த்து வணங்கி வாழும் இந்து
5. திருமாலையும் திருமால் அவதாரங்களையும் நித்திய சூரிகளையும் ஆழ்வாரகளையும் ஆச்சாரியர்களையும் வணங்கும் சிரிவைணவர்கள்
6. திருமாலின் ஒரே ஒரு அவதாரத்தை மட்டும் எடுக்கும் ஹரே கிருஸ்ணா இயக்க இந்துக்கள்.
7. பொது இந்து. (இந்து மதத்திலுள்ள எல்லாச்சாமிகளும் வேண்டும்)
8. தமிழ்நாட்டு பொது இந்து. (வேளாங்கண்ணிக்கும் போவார்கள். தெற்கு மாசி வீதி மசூதியில் குழந்தைகளைக்கொண்டு போய் மந்திரித்தும் வருவார்கள்.
இவை போக இன்னும் நிறைய உண்டு.
திண்ணையில் மலர்மன்னனும் அவரைப்போன்றொரும் தீவிர இந்துக்களின் பிரதிநிதிகளாக எழுதுகிறார்கள். மற்றவர்கள் பொது இந்துக்களாக எழுதிவருகிறார்கள்.
தீவிர இந்துக்கள் மற்ற் மதத்தினரை ஏற்றுக்கொள்வதேயில்லை. பிறமதங்கள் போலியானவை. தம் மதமே உண்மையென்ற கொள்கையுடையவர்கள். இவர்கள் தம் மதத்தில் வைக்கப்படும் எந்த விமர்சனததையும் ஏற்றுக்கொள்வதில்லை. அதை வைப்பவைன இந்துத்துரோஹி என்று வைவார்கள். கிருத்துவர்கள், இசுலாமியர்களை மத மாற்றம் செய்து தீவிர இந்துக்களாக்க வேண்டுமென்ற் நோக்கமுடையவர்கள்.
பொது இந்துவுக்கும் தீவிர இந்துவுக்கும் உள்ள வேறுபாடு, தீவிரம் முன்னவருக்கு கிடையாது. அனுசரித்துபோகுபவர்கள். ஒற்றுமை, எல்லாக்கடவுளர்களும் சரி.
இதில் ஒன்று கண்டிப்பாக கவனிக்கப்படவேண்டும். தீவிர இன்து தம்மால் மட்டுமே இன்துமதம் செழிப்படையும் என்பதுதான். காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை.
இவர்கள் இன்துமதத்தின் பிரிவுகளை விரும்பார். ஆனால் பிரிவுகள் ஏன் தோன்றின என்பதை அணுகார். சைவமும் வைணவமும் தனித்தே இருன்தன. இன்று ஒன்று சேர்க்க முனைகிறார் தீவிர இன்து. காரணம் இசுலாமியர் கிருத்துவர் நெருக்குகிறார்கள்.
இணைன்தால் சைவம் வைணவத்தை விழுங்கி விடும். ஆழ்வார்களும் இராமனுஜரும் காணாமல் போய்விடுவார்கள். பிளவு இருன்தே தீரவேண்டும்.
மலர்மன்னனுக்குப் பிரிவுகள் இருக்கக்கூடா. எனக்கு இருக்க வேண்டும் சிரிவைணவத்தை நிலைநிறுத்த. We shd agree to disagree.
Historically, religion and politics lived w/in one another. Still, there r sects which saved themselves from religio-politicians. Hope Shrivaishanavism will save herself from these malefactors by steadfastly retaining her own beauty.
திராவிடார்ச்சனை – 2 :
” முதலிரண்டு வரிகள் உங்களைப் போன்றவர்களின் பின்னூட்டங்களுக்காகவே மலர்மன்னன் எழுதியது ”
See the fun and Maya of the world. I exactly thinking it is pointing towards all paramasivam, kavya and you. From last few feed back i am trying to analyse the pattern in which you(r team) all defending and offending when argument comes.
I am not pundit in the matter you all discussing. I am learner and reader having great respect for hindusiam and interested in bringing all changes which will make my religion better and better.
But, I am concern about how malar mannan was unjustifiably attacked with silly comments. Some are doing bluntly, particularly you are arguments are அரைச்ச மாவு.. Same stuff. From same stand, not willing to change with motive of pulling down and pin pointing. With your writing skills you are jumping out of windows when u r cornered with truth.
These Feed back is request you to do critical internal analysis on the Frame you argue. Whether we like or not we are bound by conditioning. How too much caste attachment is bad- the same manner – attachment with ideology will corrupt your entire frame work of argument and thinking. I honestly request you get in to these by following few indicators :
1)
” அடிக்க, அடிக்க அம்மியும் அசையும் ” – what a non sense comment madam. Please, i request you to read the sentiment and attitude of these statement.
Most of DK team feels a) All problem related to the religion will be cleared once Brahmin domination is over b) only because of our pressure changes has come ( அடிக்க, அடிக்க..)
இந்து மத மாற்றத்திற்காக மதத்திற்குள்ளேயிருந்து உழைத்த அத்தனை நபர்களின் முகத்திலும் காறி உமிழ்கீறிர்கள். மலர் மன்னன் தனது ஓவ்வொரு பதிவிலும் இந்த பெயர்களை சொல்லிக்கொண்டே வருகிறார்.
வைத்தியநாதன்(கோவில் நுழைவுப்போராட்டம்) பெயரை சொன்னால் – அவர் ஒருவர்தானே என்று ஒரு எகத்தளமான கேள்வி, ராமனுஜர் ஒரு பார்ப்பனராக கருதக்கூடாது – என்று ஒரு வாதம் – இதே போல ஏதோதோ வாதங்கள் – for just sake of arguments.
இப்படி எல்லாவற்றையும் திருப்பி திருப்பி அடிப்பது, பின் பிசைவது, பின் இழுத்து வாணெலியில் புரட்டுவது, எண்ணெய் விட்டு புரட்டுவது – கிட்டத்தட்ட தமிழக கடைகளில் புரோட்டோ போடும் விதமாக ஒரு மதமாற்றத்தை, ஒரு ஆதிகால மதத்தை திருத்தலாம் என்று நினைத்த ராமசாமியின் அதே மெத்தாடாலஜியோடு தான் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது எனது நிலை.
இத்தகைய நிலைப்பாடுகள் பிளவையும், பிரிவையும் தான் கொடுக்குமேயொழிய எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வராது. ( இந்த நூற்றாண்டில் நடந்த மாற்றத்திற்கு ஓரே காரணம் ராமசாமிதான். என்று யாராவது ஒரு புத்தகம் எழுதலாம்..)
கிறிஸ்துவ கோயில்களையெல்லாம் இடித்த லெனின் செய்தது வெளியுலக வன்முறையென்றால், ராமசாமி செய்தது கருத்துல வன்முறை. அறுவை சிகிச்சைக்கு கடப்பாரை தேவையில்லை.(நன்றி : jeyamohan) அம்பேத்கார் செய்தது ஒரு அறுவை சிகிச்சை. நாராயண்குரு செய்தது இன்னொரு மெத்தட்..
ஏன் ராமசாமி அப்படி செய்தார் என்பது உளவியல் பிரச்சனை. அது ஒரு பார்மேட். பிரேம். அந்த பிரேமிற்குள்ளிருந்து நீங்கள் செய்யும் வாதம் ஒரு பிரிவினைக்கு இட்டு செல்லும்.
ஐயோ பரிதாபம், அது தான் உங்கள் பின்னூட்டத்தில் நடந்திருக்கிறது.
அ) மலர் மன்னன் ஐயாவின், நுட்பமான புள்ளியை உங்களால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ( சரியம்மா, நான் தான் நுனிப்புல்.. படித்த இலட்சணம் கம்மி.. நீங்களாவது வேர்வரை சுவைத்திருக்கலாமே..) நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்களென்று அவர் உங்களுக்கு இன்னொரு விளக்கவுரை தரவேண்டியிருக்கிறது. உங்களுக்கு புரிந்திருக்கலாம். அதற்கு மேல் பேச பொதுவான கட்டம் எதுவுமில்லை என்று வந்தபிறகு, “ இத்தனை காலத்திற்குபிறகும் சிம்ம சொப்னம். “ பழைய கட்டுரை படித்தேன் – இந்த சுயபுராணமெல்லாம் எதற்கு..
These is my concern. I may be completely wrong or biased. with your mind set it is very clear that you want some body to do exhaust work and come with logic and you will run away by just giving link..
ஹிந்து மதத்திலுள்ள ஒரு மதம், ஒரு நூல், ஒரு மடம் இல்லை என்கிற காரணத்தினால் அத்தகைய மாற்றங்களை கொண்டு வர முடியாது என்பதைத்தான் மலர் மன்னன் இத்தனை நீளமான கட்டுரை எழுதி சொல்ல வந்திருக்கிறார். ( இதைப்படிப்பதற்கே சில பரலோக ஜீவன்களுக்கு (kavya) ஸ்டெமினா இல்லை. ஆனால் கமெண்ட் போட மட்டும் கை வந்துவிடுகிறது. இது தான் இழவு திராவிட பிரேம் என்று நான் சொன்னால் – அதற்காக் கோபம் வேறு கொள்கிறீர்கள்.
நான் சொல்ல வந்தது இந்த மைண்ட் பேட்டணை. திங்கிங் மெத்தடாலஜியை.. நீ ஏன் கோர்ட்டில் கேசு போடுவது என்று ஒருத்தரை எப்படியம்மா கேட்பது..
எனது பின்னூட்டமும் ஆய்வு பின்னூட்டமா என்ன, நீங்கள் எழுதுவதை திராவிட பிரேம் என்று சுட்டி காண்பிப்பதுதானே தவிர வேறென்றுமில்லை..
1) அம்பேத்காரை நீங்கள் எடுத்ததை நான் சுட்டிக்காட்டுவது பெரியாரின் போதாமையாத்தானே காட்டுகிறது. நான் சொல்ல வந்ததும் இதைத்தான். இரு கருத்தாங்களுக்கான வேறுபாட்டை, நடை முறையில் இரு வேறு ஆளுமைகள் எடுத்த விளைவினால் இந்து மதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை. ஒரு விளைவு – ஒரு இண்டகேரஸனை கொடுத்தது. இன்னொரு விளைவு வெறும் இரைச்சலையும், காழ்ப்புணர்வையும் கொடுத்தது.
மலர் மன்னன் கட்டுரை படித்து பாசம் பொங்க ஈரோட்டு கிழவனை மறுபடி படித்ததாக நீங்கள் சொன்ன உணர்ச்சி சொல்லில் தான் எத்தனை கசடு. அதற்கான மறு சொல்லாடல் தான் எனது கேள்வியின் மையம்.
அந்த பின்னூட்டத்தில் உங்கள் தொனி, இப்படி ஒருவரை வாட்டி எடுப்பதை மிக சந்தோசமாக அநுபவிக்கும் ஒரு ஸ்டாஸ்டு மனநிலையை காட்டுகிறது. அப்பா, இன்னும் இந்த பசங்க அவரோட கேள்விக்கு என்னமா திணர்றாங்க பாருப்பா என்கிற சந்தோசம். இந்த மனநிலையிலிருந்தே திராவிடத்தின் பழைய பெருங்காய டப்பா இன்னும் பேசிக்கொண்டிருக்கிறது. பெருங்காய டப்பா – வன்சொல் எனில், ப்ரேம் – நற்சொல்.
உங்கள் வார்த்தைகளை விட மனநிலையைப் பற்றி நான் அதிகம் பேசுகிறேன் என்று தோன்றுகிறது. அங்கிருந்துதான் வார்த்தைகளின் பிரவாகம் எழுகிறது.
இருதலைவர்களின் மனநிலை வேறுபட்டது. கருத்து கிட்டதட்ட ஓன்றாயினும் மனநிலை வேறுபாட்டில் வார்த்தைகளில், செயல்களில் / விளைவுகளில் தான் எத்தனை வித்தியாசங்கள்.
அம்பேத்கார் மதித்தவைகளை நான் சுட்டிக்காட்டினேன். பெரியார் மதிக்காதவைகளை நான் சுட்டியிருந்தேன். நிறைய இந்துக்கள், சமூதாயத்தில் மாற்றம் வேண்டிய இந்துக்கள் அவரோடு தோள் கொடுத்தனர். இந்திய தேசம் மீது அவருக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அதில்லாமல் ஒரு பொறுப்பிலும் இருந்தார்.பெரியார் அப்படியில்லை. பிரிவினை (பிராமண, அப்பிராமண பிரிவினையோடு ) அவர் இயங்கியது மோசமான பின்விளைவுகளை இன்றும் தோற்றுவித்துக்கொண்டிருக்கிறது என்பதான கருத்துகளை கொண்டு தான் நான் வித்தியாசப்படுத்துகிறேன்.
அம்பேத்காரின் இந்த புத்தகத்தின் மீதான் விவாதங்கள், ஜெயமோகனின் இன்றைய காந்தி புத்தகத்திலும், அருண்ஸோரியின் புத்தகத்திலும், தமிழ் இந்து இணைய தளத்திலும் விரவிக்கிடக்கிறது.
நம்புங்கள் நண்பரே, அம்பேத்கார் சொன்ன நிறைய கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன்- என் தனிப்பட்ட முறையில்.
சில நேரங்களில் இந்து மத திருத்தத்தை விட காந்தியின் மீதான காட்டம் அம்பேத்காரிடம் சில சமயம் அதிகமாய் இருந்ததுண்டு. அதற்கான அவரின் காரணங்கள் மிகச்சரியே என நான் எண்ணுவதுண்டு.
அவர் சொன்னது போல நிறுவனம் உடைந்து போகும் என்கிற பயத்தால் நிறைய இந்துக்கள் முன்னும், பின்னும் போகமுடியாமல் தவி(ர்)த்துக் கொண்டிருந்திருக்கலாம்.
இந்து மதத்தை திருத்தவே முடியாது என்று அவர் முடிவு செய்தாலும் மதம் வேண்டுமென்று நினைத்தார், இஸ்லாமிய மதம் (ராமசாமி கிட்டதட்ட அந்த மதத்தில் சேரப்போகி, பின் கடைசி நேரத்தில் விலகி வந்த்தாக செய்தியுண்டு) எப்படி நமது ஹிந்து கலாச்சராத்திலிருந்து விலகியிருந்தது என்பதில் அவருக்கு ஒரு தெளிவு இருந்தது.
ஆகவே, நண்பரே எனது ஓரே வேண்டுகோள். இரண்டும் வேறு வகையான தாவரங்கள், செடிகள். ஒரு ஸ்கேலை வைத்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள், படக்கென்று ஒரு லிங்கை காட்டி ஒடிப்போவது, நான் எதுவேனா கொடுப்பேன் என்று சொல்வது நல்ல விவாதத்திற்கான ரூல்ஸ் அல்ல.
அர்ச்சகர், ஆகம விதிகள் – இதுபோல நிறைய மாற்றங்களை இந்து மதம் கடந்துவந்திருக்கிறது என்பதால் இதுவும் கடந்து போகும் என்பது என் எண்ணம், திண்ணம். இருக்கிற ஆகம நிலைகளால் சமூக, பொருளாதார பயன் இலலை என்கிற நிலையில் அவை வெறும் சடங்காக, புத்தகத்தின் பக்கமாக, மாற்றப்பட்டு புது ஸ்மிருதி வரும். காலம் ஆகமங்களை கரையான் போல அரித்துக்கொண்டு போகலாம்.
என்ன அந்தயிடத்தில் இன்னொரு காலத்திற்கேற்ற ஆகமம் இருக்கும்.
எனது பதில் சிறுபிள்ளைத்தனமாகயிருக்கலாம். நான் பண்டிதனல்ல..
ஆனாலும் எனது பின்னூட்டத்தின் ஹைலெட் பாயிண்டு, உங்களின் மனநிலையே தவிர வேறொன்றுமில்லை..
(மலர் மன்னன் ஐயா, சங்கரமடத்தின் மீதான ஒரு கேள்வியில் திண்ணையில் இதையொட்டி ஒரு பதில் எழுதியிருந்தார் என்று நினைப்பு )
[அம்பேத்காரின் கேள்விகள் என்ன, பத்தாம் வகுப்பு ஒரு மார்க் கேள்விகளா, உடனே பதில் கொடுத்து உட்கார்ந்து கொள்ள.. என்னமோ அவர் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமாம். மலர் மன்னன் இந்து மதத்தின் ஓற்றைத் தலைவரா.. எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்லி உடனே இம்ப்ளிமெண்ட் பண்ண.
ஏன் நீ கோர்ட்டுக்கு போய் கேசு போடுவில்லை என்று கேட்கிற மகா கேனத்தனத்திற்கும் – உங்களது கேள்விக்கு எந்த வித்தியாசமும் இல்லை..
மறுபடியும், மேடம், திராவிட ப்ரேமின் பலத்தை பார்த்தீர்களா..
Bulletted points please.
I put a question to Thiru.Punai peyaril.But Thiru.MalarMannan reply to it.MalarMannan may have an another name,PunaiPeyaril.Surely, it is his freedom.My pertinent question//How the Archahas are very nearer to God// have not been adressed.Rather wonder, how these words are wounded the Archahas?Really, they are only-ONLY they are-permitted to standing or sitting near the statuette of God.Please believe me that this is also wounded me.
முகம்மது நபிக்கு கொடுத்த வேதத்தை அவரும் அரபியர்களும் திரித்துவிட்டார்கள். அதற்கு தவறான பொருளையும் கொடுத்துவிட்டார்கள். ஆகையால், பஹாவுல்லாஹ் அவர்களை இறைதூதராக இறைவன் அனுப்பியிருக்கிறான்.
மிகக்கடுமையான அடக்குமுறை இருந்தாலும், பஹாய் மதம் இன்று உலக மதங்களில் ஒன்றாக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தவறாக திரிக்கப்பட்டுவிட்ட இறைவனின் வார்த்தையிலிருந்து விடுபட்டு ஏராளமான முஸ்லீம்கள் தற்போது பஹாய்களாக ஆகிவருகின்றனர்.
இதற்கு இறைவனின் இறையருளே காரணம்.
அன்பர் ரஹமத், பஹாய்களூம் அஹமதியாக்களூம் என்னுடன் தொடர்பு கொண்டு அவர்கள் இஸ்லாமிய விதிகளின்படி நடக்கும் நாடுகளீல் படும் கஷ்டங்களைச் சொல்கிறார்கள்.
அஹமதியாக்கள் ‘நமது க்ருஷ்ணர்’ என்ற அவர்களின் வெளியீட்டை எனக்கு அனுப்பி மகிழ்வித்தனர். அந்த நூலில் ஸ்ரீ க்ருஷ்ணர் ஒர் மகா புருஷர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
என்னை ஒரு கூட்டத்தில் பேசவும் அழைத்தனர். எனக்குத்தான் அவகாசம் இல்லை.
அன்புடன்,
மலர்மன்னன்
//With regard, I put a qoustion to Thiru. Malarmannan.Had any God/Goddess told that THEY need an Archahar? You may say it is a traditional syestem.No. It is a racial syestem.It should be abolished at once.SOMASUNDARAM//
இது நீங்கள் என்னிடம் நேரடியாகக் கேட்ட கேள்வி. அதற்குத்தான் நான் என்னுடைய பதில் அமைந்துள்ளது. மற்றபடி மலர் மன்னன் என்ற பெயர் தவிர வேறு எந்தப் பெயரிலும் நான் எழுதுவது கிடையாது. நான் எழுதுவதற்கு எல்லாம் நானே பொறுப்பு என்பதை உறுதி செய்ய எப்போதும் ஒரே பெயரில்தான் எழுதி வருகிறேன். எனது அடையாளம் தேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது அல்ல.
-மலர்மன்னன்
//இந்துக்கள் பலவகை.//
I like this comedy. after vadivel, thinnai can promote so many vadivel to cini industry
இதில் என்ன நகைச்சுவையைக் கண்டுவிட்டீர்கள்? இந்துக்களில் பலவகையினர் இல்லை என்றால் கோயிலில் இன்னார்தாம் அர்ச்சகராகலாம் என்னும் விவாதமெல்லாம் இங்கே ஏன் நடந்துகொண்டிருக்கிறது?
ஆடிக்கு அம்மனுக்குக் கூழ் ஊற்றி, கருவாட்டுசமையல் படைப்பவரும்
பெரியபாளையத்துக்கு யாத்திரை சென்று அங்கு மட்டன் குழம்பு சமைத்து வணங்குபவரும்
கருப்பசாமிக்கு அருவாளும் சாராயமும் வைத்து வணங்கும் மதுரை மக்களும்
சக்கிலியன் மதுரை வீரனைக் குலதெய்வமாக வழிபடும் தேனி மாவட்ட மக்களும் (பல தேவமார் குடும்பங்களுக்கு அவந்தான் குலதெய்வம் எனபது வியப்பான செய்தி!).
அதே சமயம்,
இவையனத்தையும் செய்யாதவர்கள் மட்டுமல்லாமல், இத்தெயவங்களை
வணங்காத நீங்களும் இந்துக்கள்தான்.
ஆனால் இருவகையல்ல, பலவகை இந்துக்கள்.
இல்லை நாங்களும் வணங்குவோமென்று வாதத்துக்கு ஜோடித்தீர்களேயானால்
சிவனை வணங்காத சிரிவைணவர்களும், சிவனை வணங்கும் மற்றவர்களும்
இந்துக்கள்தான். ஆனால் இருவகையான இந்துக்கள். அவ்ர்கள் வந்து இல்லை…இல்லை நான்கள் சிவனையும் திருமாலையும் ஒன்றாக வண்ங்குவோம் என்று சொலல்மாட்டார்கள். கோமதிநாராயணன் என்று சங்கரன்கோயிலில் உண்டு. அது சிரிவைண்வார்களால் ஏற்றுக்கொள்ள்ப்பட்டதன்று. சைவர்களால் ஜோடிக்கப்பட்ட தெய்வம். அல்லது பொது இந்துக்களால். அக்காலத்தில் சைவ வைணவ சண்டையிருந்தது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் நாயக்க மன்னனால் ஜோடிக்கப்பட்ட கற்ப்னை. அதே காரணத்தால்.
வடிவேலு காமெடி இப்படியிருக்காது. சொலலப்பட்ட உண்மைகளை எதிர்நோக்க அஞ்சி ஏதோவொன்றைச் சொல்லிவிட்டு மறைப்பதுதான் அவர் காமெடி வகை. பின்னர் மக்களிடம் உதைபடுவார். ஆனால் அந்நகைச்சுவையில் ஒரு கருத்தை நமக்குச்சொல்கிறார். உண்மையைத் தனக்கு வசதியாக மாற்றிக்கொண்டு திரிபவன் கடைசியில் அமபலப்படுத்தடுவான் எனபதே.
இபோது சொல்லுங்கள்: ஆர் அந்த காமெடியை இங்கே செய்கிறார்கள்.?
சொல்லுங்கள். வைதீக மதத்தவரான உங்களுக்கும் அம்மனுக்கு கருவாடு படையல் வைக்கும் மற்றவர்களும்
ஒரே வகையான இந்துக்களா?
வேறுபாடுகள் இந்துமதத்தினை அழித்துவிடா. அவை நன்கு வளர்க்கும்.
மலர்மன்னன் போன்ற தீவிர இந்துக்கள் பயப்படலாம். சாதா இந்துக்களாகிய (நாங்கள் பயப்பட மாட்டோம்.
வேறுபாடுகள் வாழ்க ! பல்லாண்டு வாழ்க!
பாண்டியன், ஆலமரத்தில் பலவகையுண்டு… 1.வேர், 2.விழுது 3.கிளை 4. கொப்பு 5. இலை 6.பூ 7.காய் 8.பழம் 9.அதில் கீழ் மல்லாந்து படுத்து எச்சில் துப்பும் கூட்டம்….
//இதில் ரேஸிஸம் எங்கே வந்தது? — அய்யர்கள் மட்டுமே பூஜாரிகள் என்பது ரேஸிசம் இல்லாமல் பிறகென்ன…புனைப் பெயரில்//
ரேஸிஸம் என்றால் என்ன? அய்யர் என்பது ஒரு ரேஸா?
’வேளாளர்கள் தம்முள் நுண்ணறிவாற் சிறந்தாரை அறிவுநூல் ஓதுதற்கும் திருக்கோயில்களிற் கடவுள் வழிபாடு ஆற்றுவதற்கும் ஒரு வகுப்பினரப் பிரித்து வைத்தார்கள். இவர்களே தமிழ் நாட்டு அந்தணராவார். இவர்தம்மை இக்காலத்தார் ஆதிசைவர் என்றுங் குருக்கள், பட்டர், நம்பியார் என்றும் அழைப்பர்’ என்று மறைமலை அடிகள் ’வேளாளர் நாகரிகம்’ என்ற தமது நூலில் குறிப்பிடுகிறார் (பக்கம் 19 வ.உ.சி. நூலகம் சென்னை 600 014). அதாவது அர்ச்சர்கள் வேளாளர்களில் ஒரு பிரிவினர் என்கிறார். இன்னொரு இடத்தில் வேளாளரே சமஸ்க்ருதத்தில் பல நூல்கள் இயற்றினர் என்றும் கூறுகின்றார். இதை ஏற்பாரும் உள்ளனர், மறுப்பாரும் உள்ளனர் (முக்கியமாக கோபாலையர் ஒப்புக்கொள்ள மாட்டார்! புதுச்சேரி ஃப்ரெஞ்ச் இன்ஸ்டிடியூட்டில் பணீயாற்றிய மறைந்த ஸ்ரீ கோபாலையர் என்னை நன்கு அறிந்திருந்தார்!). என்ன செய்யலாம் சொல்லுங்கள். எனவேதான் நான் சொல்வது மண்டையைக் குழப்பிக்கொள்ளாமல் ஸ்டேட்ஸ்கோ வாக இருந்துவிட்டுப் போகட்டும் என்பதே. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்த விஷயம் காத்திருக்கிறது. நாமும் காத்திருப்போம். மற்றபடி எனக்குத் தெரியாத விஷயங்களைப்பற்றியெல்லாம் நான் விமர்சிக்க வேண்டும் என்று ஏன் வற்புறுத்துகிறீர்கள்? எந்த மடத்துடனும் எந்தக் கோயிலுடனும் எனக்குத் தொடர்பில்லை. நான் புலனாய்வுப் பத்திரிகை நிருபனும் அல்ல. இதைப்பற்றி வேண்டுமானால் தனியாக விவாதிக்கலாம். இங்கு தொடர்பில்லாத பின்னூட்டங்கள் மேலும் மேலும் வளர வேண்டுமா? அர்ச்சகர் விவகாரம், அது தொடர்பான அவசரச் சட்டம், அதன் இன்றைய நிலை ஆகிய இக்கட்டுரை தொடர்பான விஷயங்களூக்கு மட்டுமே இனி பதில் அளிப்பேன்.
அன்புடன்,
மலர்மன்னன்
ரேசிசம் என்ற சொல் ஆங்கிலம். அது ஐரோப்பியர்களிடையே புழங்கும் பொருளை அப்படியே இங்கெடுத்தாளப்பட்வில்லை.
என்னதான் எவர் சொன்னாலும், எழுதினாலும், இங்கே பலர் போட்ட பின்னூட்டங்களும் ஒரு ஜாதியினர் மட்டுமே உச்சநீதிமன்றத்தில் எதிர்த்துவருவதாலும், அந்த ஒரு ஜாதிக்கே பரம்பரைபரம்பரையாக இத்தொழில் போய்ச்சேருவதாலும், ஒரு ஜாதிக்கொரு நீதி என்ற அசிங்கமான் கோட்பாட்டிற்குள் கீழ் வருகிற்து எல்லாமே இங்கே.
அப்படியில்லையென்றால் ஏன் மற்றவரும் அர்ச்சகராகலாமென்பது எதிர்க்கபபடுகிறது?
திருப்பரங்குன்றத்தில் ஒரு தலித்து அர்ச்சகராக முடியுமா? அல்லது இன்றைய சைவப்பிள்ளை ஆக முடிய்மா? தேவரோ, முதலியாரோ ஆக முடியுமா? மற்ற கோயில்களில் இருக்கிறார்கள் என்று பேசாதீர்கள். திருப்பரங்குன்ற்த்தில், சிரிரங்கத்த்தில் பழனியில் திருத்தணியில்….ஆக முடியுமா? மறக்காமல் நினைவில் கொள்க. அந்த தலித்து, அந்த தேவர், அந்த பிள்ளை, அந்த முதலியார் எவ்வளவுதான் ஆன்மிக நெறியில் நின்றாலும் அவர் வேண்டாம். ஆனால் தேவ்நாதன் இலகுவாக அர்ச்ச்காரகலாம். பெண்ணிடம் சல்லாபித்து குருக்கள் ஆகலாம். எனவேதான் ஒரு ஜாதிக்கொரு நீதி. தராதரத்தை பரிசோதிக்காமல், ஆளை ஜாதிக்காக கோயிலுள் இறக்குகிறீர்கள். இதுவே ரேசிசம் என்ற சொல்லால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது நம் கண்ணால் காணும் காட்சி. பொய்யா?
மறைமலை எழதிய சங்ககால வரலாறு நமக்குத்தேவையில்லை. மலர்மன்னன்.
காவ்யா , முனியாண்டி கோவில், சென்னை பாடிகாட் ஈஸ்வரன் கோவில், அங்கங்கு இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் முதலில் நீங்கள் குரல் கொடுத்து தாழ்த்தப்பட்டவர்கள் பூஜை செய்ய அனுமதி வாங்கித் தாருங்கள்…. அப்புறம் வருவோம் சிதம்பரத்திற்கு….
அங்கெங்கே இருக்கும் அம்மன், முனீஸ்வரன், கருப்பசாமி போன்ற கிராம தெய்வங்களுக்கான கோயில்கள் முதலில் ஆங்கு வாழும் ஒரு மக்கள் குழுமத்தால் எழப்பட்டவை. அக்காலத்தில் மக்கள் ஜாதிவாரியாகக்தான் வாழ்ந்தனர். ஆக, ஜாதிக்கோயில்கள் ஒரு ஜாதியினருக்காக என்று. பின்னர் அவற்றுள் சில பெருங்கோயில்களானது வேறுகதை.
ஜாதிக்கோயில்களில் தலித்துக்கள் தங்களுக்கான கட்டிய கோயில்களும் உள. எ.கா, மதுரைத்தமிழ்சங்கசாலை சிம்மக்கல் சந்திக்கும் பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன் கோயில். அதன் உச்சியில், ‘இது மதுரை (தெருவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) தலித்து மக்களுக்குப்பாத்தியப்பட்ட கோயில்’ என்று எழுதியிருக்கும். குலசேகரப்பட்டினம் முத்துமாரியம்மன் கோயில்.
இதே வண்ணம், சின்ன சொக்கிக்குளம், நவநீதகிருஸ்ணன் + கூரத்தாழ்வார் கோயில் யாதவர்களுக்குப் பாத்தியப்பட்டது என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இராமாயணச்சாவடி கோயில அல்லது வடக்கு கிருஸ்ணன் கோயில் (யாதவர்களுக்கு), மறவன் சாவடி மாரியம்மன் கோயில் (தேவர்களுக்கு), மேலமாசிவீதி மாரியம்மன் கோயில் (பாண்டிய குல வேளாளர்களுக்கு) தெற்கு கிருஸ்ணன் கோயில் சௌராட்டியர்களுக்கு. இவைபோக பலபல கோயில்கள் பலபல ஜாதியின்ரகளால் தங்களுக்காகவே உருவாக்கப்பட்டு தங்களாலேயே நிர்வாகம் செய்யப்பட்டுவருகின்றன ஆதிகாலம் முதல். மதுரையைப்பொறுத்தவரை எல்லாரும் சென்று வணங்கலாம். கிராமங்களில் தலித்துக்களுக்குத்தடை உண்டு.
அதே சமயம், முருகனின் அறுபடை வீடுகள், மற்றும் ஏழாவது வீடான மருதமலை, பெருமாளில் திவ்ய தேசங்கள், மீனாட்சியம்மன் கோயில், இன்ன பிற, ஜாதிக்கோயில்கள் அல்லவே அல்ல. ஆனாலும், அவைகளில் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் என்றால் அஃது ஆகம விதிகளின்படி என்கிறார் மலர்மன்னன். அவ்வளவுதான்.
நான் சொல்லும் சாராம்சம். ஜாதிக்கோயில்களும் பெருங்கோயில்களும் வெவ்வேறானவை.சேர்த்துப்பேச வேண்டாம். இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகும். பிறஜாதியினர் போல தமிழ்ப்பார்ப்பனர்களும் தங்களுக்கெனவே ஒரு கோயில் கட்டிக்கொண்டால் எந்தக்கேள்வியும் எழாது. அப்படிக் கட்டிக்கொண்டதாக நான் அறியேன். தெரிந்தவர்கள் சொல்லலாம்.
இது மதுரை (தெருவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) தலித்து மக்களுக்குப்பாத்தியப்பட்ட கோயில்’ — அதில் ஒரு தேவரோ, பிள்ளையோ பூசாரியாக முடியுமா..? இல்லை மதுரை பாண்டி கோவிலில் ஒரு தலித் பூசாரியாக முடியுமா..? அய்யர்களாவது இன்று நாம் எப்படியாவது அவர்கள் போல் வாழ வேண்டும் என்று பெருவாரியான மக்களுக்கு வழிகாட்டியாக :) இருக்கிறார்கள்…. அந்த அய்யர்கள் இந்த கோவிலுக்கு வராததை கண்டித்து, “முனீஸ்வரன், பாண்டி கோவிலுக்கு அய்யரைகளை இழுத்து வரும் போராட்டம்” ஒன்றை திக வோ திமுகவோ நடத்துமா…? சொல்லுங்க காவ்யா…
Cynical view and probably right. Thinnai, I suspect, allows Kavya and co to come out with atrocious statements to ? increase the net traffic to the site. My past comments, benign in comparison, never saw the light of the day. I just cannot put it down to any other reason for these vile comments getting the publicity they hardly deserve.
Or Thinnai tries hard to be politically correct. I hope I am wrong on both counts.
இன்றைக்கும் குருக்கள், பட்டர், நம்பியர் என அழைக்கப் படுபவர்கள்தான் இன்றைய அர்ச்சகர்கள் என்று மறைமலை அடிகள் சொல்கிறார். இதை முன்பே குறிப்பிட்டாகிவிட்டது. சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. வேளாளர் நாகரிகம் என்ற மறைமலை அடிகள் எழுதிய நூல் பற்றிய எனது விமர்சனம் விரைவில் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு வரும் ஆழம் மாத இதழில் வெளிவரும். அதன் பின் மறுபிரசுரத்திற்காகத் திண்ணைக்கு அனுப்புவேன். மறு பிரசுரம் செய்வதும் செய்யாததும் திண்ணை ஆசிரியர் குழுவின் முடிவு.
-மலர்மன்னன்
சூப்பர்மேஷிஸ்ட் என்றொரு ஆங்கிலச் சொல். அது தமிழர்களில் பலருக்கு ஒத்துவரும். அப்படிப்பட்ட பலர் பலஜாதிகளிலும் உள்ளனர். இவர்களின் முட்டாத்தனமும் திமிரும் நிறைந்த கொள்கை தங்கள் ஜாதிமக்கள் பிறரைவிட உயர்ந்தவர்கள் என்றாகும். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு குருத்துவாராவில் சீக்கியர்களைக்கொன்றவன் இப்படிப்பட்ட ஒரு ஆள்.
இங்கே சொல்லக்காரணம். வேதாச்சலம் என்ற மறைமலையை நான் படிக்கும்போது அவர் கிட்டத்தட்ட ஒரு சூபர்மேஷிஸ்ட் என்றுதான் தோன்றும். ஏன்?
சைவப்பிள்ளைகள் மற்றெல்லா ஜாதியினரையும் விட உயர்ந்தவர்கள். அவர்களே ஆன்மிக நிலையில் நிலைக்கும் வரப்பிரசாதத்தைப்பெற்றவர்கள். அவர்களே தமிழருக்கு ஆன்மிக நிலையைப்பற்றிச் சொல்லி, சிவனாரை முழுமுதற்கடவுளாக ஏற்றுக்கொள்ளவைத்து, தங்கள் ஜாதியினரையே அர்ச்சகர்களாக்கி தமிழருக்கு உதவினர். அப்படிப்பட்ட சைவப்பிள்ளை அர்ச்சகர்கள், வடக்கிலிருந்து வந்த ஒரு சில வடநாட்டுப்பார்ப்பனர்களுடன் சேர்ந்து கோயில்பணியில் நிலைத்து ஒரு காலகட்டத்திற்குப்பின், தங்கள் மூதாதையர் குலமான சைவப்பிள்ளைமார்களிலிருந்து விலகி, தங்களை வடக்கிலிருந்து வந்த பார்ப்ப்னர்களோடு இணைத்து, இன்று நாம் அழைக்கும் ‘ஐயர்’ களாகிப்போனார்கள்.
இஃதோடு விட்டாரா வேதாச்சலம்? அப்படிப்பட்ட ஐயர்கள் தங்களை சைவப்பிள்ளைமாரை விட உயர்ந்தவர்களாக காட்டிக்கொண்டி திரிகிறார்கள். ஐயர்கள் என்பவர்கள் போலிப்பார்ப்பனர்கள்; அல்லது கலப்புப்பார்ப்பனர்கள். cross between Saivappillais and the Northern imported Brahmins.
இதுவரை சொன்னதை நான் விட்டுவிடலாம். இதற்குமேல் அவர் சொன்னதை நாம் விடக்கூடாது. அஃதென்ன?
மாரியம்மன், பேச்சியம்மன், இசக்கியம்மன், கருப்பசாமி, மாடசாமி, போன்ற கிராமத்து தெய்வங்கள் தொன்று தொட்டு வணங்கப்பட்டுவருகின்றன தமிழர்களால். வேலவன், கொற்கை என்று சங்கம் காட்டும். இவர், அத்தெய்வங்களை ‘பேய்கள்’ என்கிறார்கள். கால்டுவெல்லைப்போல.
வேதாச்சலம் ஒரு தீவிர இந்து வகையில் தாராளமாக வருவார். அவர் சிவனைத்தவிர தெய்வமில்லை. மற்றெல்லாத்தெய்வங்களும் சிவன் காலடியில் கீழ். இந்த விடயத்தில் இவருடன் அனைத்து சைவச்சித்தாந்திகளும் ஒன்றே.
மேலும் இவர் சொல்வது, உலகமெங்கும் சிவானரைத் தெய்வமாக அதாவது உண்மைத்தெய்வாமாகக் காட்டியது அல்லது இங்கிருந்துதான் (தமிழக்த்திலிருந்துதான்) சிவன் வழிபாடு எங்கேயும் சென்றது என்பது. இது வைதீகப்பார்ப்ப்னர்களில் கொள்கைக்கு நேர்மாறானது. கா.சு.பிள்ளை ஒருபடி மேலே சென்று, நான்குமறை எனபது வேதங்கள் அல்ல. அவை தொல்தமிழர்களால் எழுதப்பட்டவை நான்கு ஆன்மிக மறைகள். பின்னர் காலவெள்ளத்தில் காணாமல் போனவை என்றும் எழுதுகிறார். (கழகத்தமிழ் வரலாறு)
கடைசியாக, எல்லாஜாதியினரையும் வேதாச்சலத்துக்குப்பிடிக்கும் தமிழ்ப்பார்ப்பனர்களை மட்டும் பிடிக்காது. ஏன்? அவர்கள் சைவப்பிள்ளைகளைவிட ஜாதியில் குறைந்தவர்கள். ஆனால், பிள்ளைகளைவிட உயர்ந்தவர்களாகச் சித்தரித்துக்கொள்கிறார்கள்.
படியுங்கள். பார்ப்பனத்துவேசம் மண்டிக்கிடப்பதைப் பார்க்கலாம்.
முனீஸ்வரனை பேய்த்தெயவமென்னும் இவர் பழந்தமிழர்களால் பெரிதும் வணங்கப்பட்ட தெய்வமிது என்பதை மறைப்பார்.
உ வே சா இப்படியன்று. அவர் எழுதிய சங்ககாலத்தெய்வங்கள் என்ற சிறு நூலில், சதுக்கப்பூதத்தைப்பற்றிச் சொல்கிறார். சிலப்பதிகாரம் அத்தெய்வத்தைப்பற்றிப்பேசுகிறது. எனவே ஆதிதமிழர்களின் தெய்வமது என்கிறார்.
அதன் வேலையென்ன? கெட்ட ஆவிகள் (bad spirits)அலையும், மக்களைத்தாக்கி அவர்கள் குருதியைக்குடிக்கும். பேய்களாக, பிசாசுகளாக. அவை பெரும்பாலும் மக்கள் பயணிக்கும்போது தன்னந்தனியாக வந்தடித்து சாகடிக்கும்.
முனீசுவரனே அந்த ஆவிகளுடன் பொருது அவைகளை அடக்கியோ விரட்டியோ மக்களை காப்பாற்றுவான். சதுக்கப்பூதத்தின் வேலை தெருமுனைகளின் சந்துகளின் தன்ந்தனியான் இடங்களில் கெட்ட ஆவிகளிடமிருந்த மக்களைக்காப்பாற்றுவது. காவிரிபூம்பட்டினத்தில் இப்பூதத்துக்கு கோயில் இருந்தது என்று இளங்கோ சொல்கிறார் என்று உவேசா எழுதுகிறார். சதுக்கப்பூதமே இன்னாள் முனீசுவரன்.
மதுரை மீனாட்சி கோயில் வடக்கு கோபுர நுழைவாசலில் உள்ள முனீசுவரன் கோயில் பிரசித்து பெற்றது. தாங்கள் கார்களை ஓட்டிச்செல்லும்போது காடுகளில் அல்லது வழியில் இரவில் பேயகள் தங்களைத்தாக்காமைலிருக்க முனீஷ்வரன் அருள்புரியவேண்டுமெனப்தற்காக பல்லவன் பஸ் ஓட்டுனர்களால் கட்டப்பட்ட சென்னை ப்ல்லவன் சாலை முனீசுவரன் கோயில் சென்னையில் பிரசித்துப் பெற்றது.
இந்த முனீஷ்வரனை மறைமலை என்ற வேதாச்சலம் ‘பேய்’ என்கிறார்.
” காவ்யா , முனியாண்டி கோவில், சென்னை பாடிகாட் ஈஸ்வரன் கோவில், அங்கங்கு இருக்கும் மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் முதலில் நீங்கள் குரல் கொடுத்து தாழ்த்தப்பட்டவர்கள் பூஜை செய்ய அனுமதி வாங்கித் தாருங்கள்…. அப்புறம் வருவோம் சிதம்பரத்திற்கு… ” punai peiyaril
திரு புனை பெயரில், Read the ambedkar link which has given by madhavi. There he had mentioned one point, as long as these caste structure exist, always one caste would blame the other caste to get integrate with lower caste and come back. Every caste has comfort of dominating the lower one and not interested in getting out the power they enjoy.
So i am wondering how come keeping the same caste structure and provide solutions to archakar issues.
Aiya malar mannan can thro some light speicfically with some earlier cases of hinduisam that had we faced any similar situations in olden days and come out of it.. ?
சாதி கட்டமைப்பு இருக்காது என்று அம்பேத்கார் நினைத்திருந்தால் அது அவரின் நிதர்சன புத்திசாலித்தனைத்தைக் கேள்விக்குறியாக்குகிறது. நாஸி, வெள்ளை, அரேபியன், சன்னி, சியா, லெபனீஸ், சீனன், கொரியன், கறுப்பு என எல்லாம் இருக்கும் ஆனால், நம்ம நாட்டில் மட்டும் சாதியற்ற நிலையில் ஒரு சமுதாயம் இருக்கும் என்று நினைப்பது ??… இதில் வாழும் முறை கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள் முறையாக வரையறுக்கப்பட வேண்டும்.
\இதை யாராவது தமிழில் மொழிபெயர்த்து எழுதினால் நன்றாக இருக்கும்!\
அன்பர் பாலா, அத்யாரோபம் (மிகைப்படுத்திய அவதூறு?). ஆங்காங்கு சில சம்ஸ்க்ருத பதங்களும் கலந்து நான் எழுதியுள்ளேன். உண்மை தான். அவ்வாறான ஓரிரு பதங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையாய் இருக்கலாம். பின்னூட்டத்தின் மிகப்பெரும் பகுதி பேச்சு வழக்குத்தமிழில் தான். வல்லின ற மற்றும் இடையின ர விற்கும் கூட தங்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு தேவையா!!!!!!
மற்றபடி உங்கள் தமிழ்ப்பற்றை பறைசாற்ற இது போன்ற அவதூறுகள் உங்களுக்கு அவசியமெனில் இது போன்று நீங்கள் அவசியம் அத்யாரோபம் செய்யுங்கள். பணமா காசா அவதூறு செய்ய.
மேலும் ஸ்ரீமான் மலர்மன்னன் மற்றும் அன்பர் காவ்யா (க்ஷமிக்கவும் இவர் ஸ்ரீமானா ஸ்ரீமதியா அறியேன்) இவ்விருவரின் பின்னூட்டங்கள் என் பின்னூட்டத்தில் அலசப்பட்ட விஷயங்கள் சார்ந்தவை என்பது தங்கள் கருத்து தவறானது என்பதை நிரூபணம் செய்கிறது.
என் மொழி நடையை அவதுறு செய்வதில் தங்களுக்கு மகிழ்ச்சி எனில் அது போன்ற அவதூறுக்கு பாத்ரமாவதில் எனக்கு நிறைவே. என் பொருட்டு தவறாகவேனும் இன்னொரு மனுஷ்யர் சுகிக்கிறார் என்பது எனக்கு பாக்யமே. வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்வுடன்.
\உங்களுக்கு தமிழ்மேல் பெருவெறுப்பு போலும். புரியா சொற்களைப்போட்டு என்ன பின்னூட்டமிது ? தமிழ் சொற்கள் தெரியாவிட்டால் எவரிடமாவது கேட்டுத் தெரிந்த பின்னர் எழுதலாமே?\அதே வேளையில், சிரிவைணவர்கள் (I dont know how to type the sanskrit Shri. Mahodaya Krishna Kumar can guide me!)\
மற்ற மொழிச் சொற்களை தமிழில் கலப்பதற்குக் காரணம் தமிழ் மேல் பெருவெறுப்பு என்ற தங்கள் கண்டுபிடிப்பு??????
பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
பரமபதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
காரோன் அனுகூலனுக்கு கன்னி மரி சேயனுக்கு
கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு
சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம்
என்று இனிமையான ஒரு க்றைஸ்தவ பாடல். இதில் பாதிக்கு மேல் தமிழ்ப்பதங்கள் இல்லை. ஆனால் அன்பர் காவ்யா போல இப்பாடல் எழுதியவர் தமிழ் மேல் பெருவெறுப்பு கொண்டவர் என்றெல்லாம் நான் சாதிக்க மாட்டேன். தமிழின் ஒரு மொழிநடை இது அவ்வளவு தான்.
மற்ற படி சொல்லாததை சொன்னதாகச் சொல்வது கருத்துத் திரிபு செய்வது இதெல்லாம் நீங்கள் கையாளும் யுக்திகள் என இங்கு பலர் செய்யும் ஆரோபம்.
ஒரு பின்னூட்டத்தில் இடப்படும் சில சொற்களைக்கூட அடுத்தவரிடம் சம்பாஷித்து பின்னூட்டம் இடுவது என்பது கஷ்டமான கார்யம். பின்னூட்டம் இடுவதில் கால தாமதமேற்படும். மூன்று வருஷ காலமாய் இணைய தளங்களில் எழுதி வருகிறேன். இயன்றவரை எனது மொழிநடையை சரி செய்தும் வருகிறேன் அன்பரே. இன்னமும் சரி செய்ய விழைகிறேன்.
ஆனால் முழு பின்னூட்டத்தையும் ஆங்க்ல பாஷையில் எழுதுபவர்களை என் செய்ய?
உங்களுக்கு “ஸ்” எழுத வரும். ஆனால் “ஷ்” எழுதவோ அல்லது “ஸ்ரீ” எழுதவோ வராது என்பது புரிகிறது. நீங்கள் தமிழில் பேரறிவு படைத்தவர் வைணவத்தை கரைத்துக் குடித்தவர் அல்லவா?
ஆழ்வார் ஆசார்யர்கள் “ஸ்ரீ” என்ற சொல்லை தமிழில் கையாள்கையில் அதை “சிறீ” எனவே கையாண்டனர் என ஸ்ரீமான் கந்தர்வன் எண்ணிறந்த உதாரணங்களுடன் தங்களுக்கு தமிழ் ஹிந்து தளத்தில் நிரூபணம் செய்துள்ளார் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.
“சிரி” என்பது நகைப்புக்குள்ளாக்கும் என்ற கருத்து தொனிக்கும் சொல் என்பதையும் சொல்லியிருந்தேன். பின்னும் ஜபர்தஸ்தியாக சிரிவைணவர்கள் என்று தாங்கள் எழுதுவது ஸ்ரீவைஷ்ணவர்கள் பால் தங்களுக்கு எவ்வளவு வன்மம் என்பதையே பறைசாற்றுகிறது. வைணவர்கள் என்று எழுதலாம். அல்லது வைணவ சான்றோர்கள் சொற்ப்ரயோகப்படியென்றால் சிறீவைணவர்கள் என எழுதலாமே.
உள் நோக்கம் என்ன என்பதை பரலோகத்தில் இருக்கும் ஏக இறைவன் அன்றோ அறிவான்.
வைணவச்சுடராழி என்றும் ஜோசஃப் ஸ்வாமி என்றும் ஜோசஃப் பாகவதர் என்றும் போற்றப்படும் ஸ்ரீ வைஷ்ணவ ச்ரேஷ்டரின் கருத்துக்களை வாசித்துள்ளேன். ப்ரசங்கங்கள் கேட்டுள்ளேன். எங்கும் அவர் தாங்கள் ப்ரயோகிக்கும் அவதூறான “சிரிவைணவம்” “சிரிரங்கம்” போன்ற பதங்களை உபயோகித்ததாய் கண்டதில்லை கேட்டதில்லை.
ஒரு வைஷ்ணவ அடியார் (பெயர் நினைவில் இல்லை). அவர் நிமித்தமாய் சொல்லப்படும் வைஷ்ணவ லக்ஷணம். “கொக்கைப்போல் இருப்பான் கோழியைப் போல் இருப்பான் உப்பைப் போல் இருப்பான் உம்மைப் போல் இருப்பான்”. இதில் அவருடைய திதிக்ஷையை (அதீத தன்னடக்கம், பொறுமை என தமிழ்ப்படுத்தலாம் என நினைக்கிறேன். தெளிவான மொழி பெயர்ப்பு அறிந்தவர்கள் பகிரலாம்) குறிக்க “உம்மை” என்ற சொல்லால் அந்த வைஷ்ணவரை அடையாளப்படுத்துவர்.
வாய்க்கு வாய் ஆழ்வார் ஆசார்யர்களை பற்றியும் வைஷ்ணவம் பற்றியும் பேசும் தங்களுடைய பின்னூட்டங்களில் தன்னடக்கம் மற்றும் பொறுமை இவைகள் உள்ளனவா என்பதை தங்களுக்கும் வாசிக்கும் வாசகர்களிடமும் விட்டு விடுகிறேன்.
அடியேன் வைஷ்ணவன் அல்லன். ஆனால் வைஷ்ணவ லக்ஷணங்கள் மிக உயர்வானவை என கருதுபவன்.
\மலர்மன்னன் ஒரு பார்ப்பனர் (ஐயர்) என்பது எல்லாருக்கும் தெரியும். உங்களுக்கு மட்டுமே தெரியவில்லை.\
ஸ்ரீமான் மலர்மன்னன் ஐயரா தாங்கள் க்றைஸ்தவரா ஆணா பெண்ணா என்பதெல்லாம் எனக்குத் தேவையே இல்லை.
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
அவ்வளவே
\//கட்டுரையோ கருத்துக்களையோ வைப்பவரின் ஜாதகம் உங்களுக்கெதற்கு? அவர் கருத்துக்கள் எவை? அதை நாம் எதிர்நோக்கி நம் கருத்துக்களை வைப்போமா//
கிருஸ்ண குமார்
சிலசமயங்களில் அவசியமாகிறது. அஃதெந்த பிரச்சினை விவாதிக்கப்படுகிறது எனபதைப்பொறுத்தமையும்.\
“”””அஃதெந்த பிரச்சினை விவாதிக்கப்படுகிறது எனபதைப்பொறுத்தமையும்”””” – இல்லையில்லை. அன்பர் காவ்யா அவர்களின் உபதேசங்கள் ஊருக்குத்தான். அவருக்கு இல்லை என்பதை இப்படி பூசி மெழுகத் தான் இது போன்ற வாதங்கள்.
\மலர்மன்னன், பிறஜாதியினருக்காகவும் பேசவேண்டும். தமிழகத்தில் மற்ற இந்துக்கள் கோடானுகோடி.\
ஸ்ரீமான் மலர்மன்னனை ஊரறியும். வனவாசி மற்றும் தலித் சஹோதரர்களுக்காக வெறும் பேச மட்டும் செய்தவர் அல்லர் அவர். வெறும் வாயில் முழம் அளந்தவர் அல்லர். வனவாசி மற்றும் தலித் சஹோதரர்களுக்கு அவர் ஆற்றிய தொண்டை ஊரறியும்.
அன்பர் காவ்யாவும் பெரும் தொண்டராக இருக்கலாம். ஆனால் ஊரறியாது. நீங்கள் தான் ஜோ அமலன் ரேயன் ஃபெர்னாண்டோவா என வினா எழுப்பியிருந்தேன். பதிலில்லை. திருவாழ்மார்பன் என்ற பெயரிலும் தாங்கள் கருத்து பதிந்துள்ளீர்கள் என நினைவு. இந்த தள நிர்வாகத்தினர் ஒரே நபர் பல பெயரில் கருத்துப் பதியலாகாது என குறிப்பிட்டிருந்தனர். இது தவறு என்பதனால் தான் அல்லவா? இது தங்களைக் குறித்துத் தானல்லவா?
\தீண்டாமைக்கொடுமையை கிருத்துவனும் இசுலாமியனும் தட்டிக்கேட்கலாம இந்துகளே அதை ஆதரித்தால்.\
ஹிந்துஸ்தானத்தில் க்றைஸ்தவனும் இஸ்லாமியனும் ஹிந்துக்களும் ஒருத்தருக்கொருத்தர் அடித்துக்கொள்வதில் ஆனந்திப்பவர் அன்னிய ஏகாதிபத்ய சக்திகளும் அவர்களுக்கு வால்பிடிப்பவர்களும். மதங்களைப் பேணல் என்ற விஷயத்தில் இக்கரைக்கு அக்கரைப்பச்சை அவ்வளவே. அடுத்த மதத்தைப் பற்றி பிற மதத்தவர் ஆயிரம் நொட்டை சொல்ல இயலும். அவரவர் மதத்தைப் பேணும் விஷயங்களை ஆலோசிப்பது மற்றும் முடுவெடுக்க வேண்டியது அந்தந்த மதத்தினர் மட்டும் தான். மிகக் குறிப்பாக எந்த ஒரு மதத்திற்கும் தீங்கு நினைப்பவரின் கருத்துக்களை அடியோடு ஒதுக்குதுல் நன்று.
மாற்று மதத்தைச் சார்ந்தவர்களில் பண்பு குன்றாது சம்பாஷிப்பவர்களில் ஒருவராக நான் அறிவது ஜெனாப் சுவனப்ரியன் அவர்களை. அன்பருக்கு என் மனதார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிறைந்த பண்பும் தங்களுக்கு இறைவன் நல்க எமது ப்ரார்தனைகள்.
சுடுசொற்களுக்கு எதிராகக் கூட பண்பு குன்றா தங்கள் நிறைவான சம்பாஷணம் மெருகு பெறட்டும்.
இன்று தமிழில் உள்ள பிற மொழி சொற்களுக்கு மாற்றாக தூய தமிழ் சொற்களை பயன் ”படுத்தி” எழுதினால் நம்மில் எத்தனை பேருக்கு புரியும்?
தான் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கான காரணங்களை கிருஷ்னகுமார் அய்யா அவர்கள் குறிப்பிட்ட பிறகும் மீன்டும் மீன்டும் அதையே குறிப்பிட்டு அவரை கிண்டல் செய்வது ஏன்?
கிருஷ்ணகுமார் அய்யா அவர்களே……. ஆங்கில சொற்களை கலக்கலாம்…..சமஸ்கிருதம் ஆகாது என்பதெல்லாம் வெறும் துவேஷம்…….வடையை தின்பதை விட்டுவிட்டு துளையை எண்ணுபவர்களை நாம் புறக்கணிப்போம்……. நீங்கள் உங்கள் கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்……
[கிருஷ்ணகுமார் அய்யா அவர்களே……. ஆங்கில சொற்களை கலக்கலாம்…..சமஸ்கிருதம் ஆகாது என்பதெல்லாம் வெறும் துவேஷம்……]
இங்கே பின்னூட்டமிட்டவர்களில் ஆங்கிலத்தைக் கலக்கலாம் என்று சொன்னவர் யார்?
//வனவாசி மற்றும் தலித் சஹோதரர்களுக்காக வெறும் பேச மட்டும் செய்தவர் அல்லர் அவர். வெறும் வாயில் முழம் அளந்தவர் அல்லர். வனவாசி மற்றும் தலித் சஹோதரர்களுக்கு அவர் ஆற்றிய தொண்டை ஊரறியும். //
சாதிகள் உண்டு; அவை அவசியம் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு தலித்துகள் தன் சஹோதரர்கள் என்று சொல்லி இந்துக்களாக்க முடியாது. அவர்கள் ஏற்க மாட்டார்கள்.
ஏனெனில், தலித்துகளுக்கு தனிநாயகனாக விளங்கும் அம்பேத்கர் அன்னைஹிலே காஸ்ட்ஸ் (annihilate castes) என்றார். சாதிகளை மறுத்தோரே தலித்துகளிடம் போய் பேச தகுதி உள்ளவராவார்.
நீங்கள் எழுதியதை மறுமொழியென்று சொல்லமுடியாது. மறுமொழிகள் என்றே சொல்ல முடியும். பல போயிண்டுகளுக்குப்பதில்கள் எழுதியிருக்கிறீர்கள். அவைகளுக்கு ஒவ்வொன்றாகத்தான் பதில் சொல்லவியலும். பதிலகள் கண்டிப்பாகப் போடப்படவேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் கருதியவைகளச்சரியென்று நினைத்தே வாழ்வீர்கள். மற்றவர்களும் அந்த இக்கட்டுக்குள் தள்ளப்படுவார்கள் என்பது என் பார்வை.
அது கிடக்க. இப்போது கீழே காணபது நீங்கள் முதலில் எழுதியது:
//அன்பர் பாலா, அத்யாரோபம் (மிகைப்படுத்திய அவதூறு?). ஆங்காங்கு சில சம்ஸ்க்ருத பதங்களும் கலந்து நான் எழுதியுள்ளேன். உண்மை தான். அவ்வாறான ஓரிரு பதங்களுக்கு மொழிபெயர்ப்பு தேவையாய் இருக்கலாம். பின்னூட்டத்தின் மிகப்பெரும் பகுதி பேச்சு வழக்குத்தமிழில் தான். வல்லின ற மற்றும் இடையின ர விற்கும் கூட தங்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பு தேவையா!!!!!! மற்றபடி உங்கள் தமிழ்ப்பற்றை பறைசாற்ற இது போன்ற அவதூறுகள் உங்களுக்கு அவசியமெனில் இது போன்று நீங்கள் அவசியம் அத்யாரோபம் செய்யுங்கள். பணமா காசா அவதூறு செய்ய.என் மொழி நடையை அவதுறு செய்வதில் தங்களுக்கு மகிழ்ச்சி எனில் அது போன்ற அவதூறுக்கு பாத்ரமாவதில் எனக்கு நிறைவே. என் பொருட்டு தவறாகவேனும் இன்னொரு மனுஷ்யர் சுகிக்கிறார் என்பது எனக்கு பாக்யமே. வாழ்க வளமுடன் வாழ்க மகிழ்வுடன்.//
இங்கே முதலில் அத்யாரோபம் என்ற வட சொல்லுக்குத் தமிழீடு கொடுத்தபின்னர், அதே சொல்லை மீண்டும் எழுதக்காரணமென்ன? மிகைப்படுத்திய அவதூறு என்றெழுதியிருக்கலாமே?
மொழிநடையைப்பற்றி.
நீங்கள் எழுதுவது மணிப்பிரவாளம். மணிப்பிரவாளம் விமர்சிக்கப்பட்டது அஃதெழுந்த காலத்தில். வைணவ உரைகள் எழுதப்பட்ட போது. அவ்வுரைகாரர்கள் அந்நடையினை சமணர்களிடமிருந்து எடுத்துக்கொண்டார்கள். மணிப்பிரவாளம் ஆழ்வார்கள் பாசுரங்களுக்கு உரையெழுதப்பட்ட போதுமட்டுமே கையாளப்பட்டது. கிட்டத்தட்ட நம்ம ராயல் இங்கிலீசு போல. இன்னும் ராயல் இங்கிலீசுதான் சட்டம் போடும்போது கையாளப்படுகிறது. அதற்கு காரணம் அது மற்ற நடைகளிலிருந்து மாறுபட்டு மக்களிடயே தனியாகப்போற்றப்படவேண்டுமென்பதே.
அதே போல மணிப்பிரவாளம் தெய்வததைப்பற்றிப்பேசும்போது கையாளப்பட்டது மக்கள் அவற்றைப்படிக்கும்போது தம்மை ஒரு தனிநிலைக்குக் கொண்டுபோக வேண்டுமெனபதற்காகவே.
கோயிலுக்குள் உங்களுக்கு ஒரு தனி ஆன்மிக நிலை கிடைக்கிறதல்லவா? அதே.
சரி போகட்டும். உங்களுக்கு ஏன் தனித்தன்மை சுவாமி? இங்கு திண்ணைப்பின்னூட்டத்திற்கு தெய்வத்தன்மை வேண்டுமா?
நோ ஃபர்தர் டைம். லெட்மி மீட் ய் டுமாரோ
//Aiya malar mannan can throw some light specifically with some earlier cases of hinduism that had we faced any similar situations in olden days and come out of it.. ? -Ramesh//
ஸ்ரீ ரமேஷ்,
நம்முடைய சாதிக் கட்டமைப்பு மேலிருந்து கீழாக செங்குத்தாக அமைந்தது அல்ல. அது படுக்கைவாட்டில் அதாவது ஹரிஸான்டல் என்போமே அதுபோல் அமைந்தது. ஆனால் மேற்கத்திய ஆய்வாளர்களின் பார்வையிலேயே நாமும் பார்த்துப் பழகிவிட்டதால் அவர்கள் சொல்வதுபோல் நமது சாதி அமைப்பு மேலிருந்து கீழ் என்றே நாமும் சிந்தித்துப் பழகி விட்டோம்.
நீங்கள் கேட்டுள்ளது பற்றி எல்லாம் எழுதுவதானால் ஏராளமான ஆதாரங்களை முன்வைத்து நீண்ட கட்டுரையாகத்தான் எழுத வேண்டும். எனக்கு அவகாசம் இல்லை. கேள்வி சிறிதானாலும் பதிலுக்கு நிறைய வரிகள் தேவைப்படும்!
-மலர்மன்னன்
சகோ க்ருஷ்ணகுமார்!
//மாற்று மதத்தைச் சார்ந்தவர்களில் பண்பு குன்றாது சம்பாஷிப்பவர்களில் ஒருவராக நான் அறிவது ஜெனாப் சுவனப்ரியன் அவர்களை. அன்பருக்கு என் மனதார்ந்த ரமலான் நல்வாழ்த்துக்கள். நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நிறைந்த பண்பும் தங்களுக்கு இறைவன் நல்க எமது ப்ரார்தனைகள்.
சுடுசொற்களுக்கு எதிராகக் கூட பண்பு குன்றா தங்கள் நிறைவான சம்பாஷணம் மெருகு பெறட்டும்.//
முதலில் உங்களுக்கும் எனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சில வாரங்களுக்கு முன் மெக்காவும் சென்று வந்தேன். என்னைப் பற்றி தாங்கள் வைத்துள்ள நல்லபிப்ராயத்திற்கு நன்றி கூறிக் கொள்கிறேன்.
மற்றபடி எந்தவொரு கருத்தாடலுமே பாமரனுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும். மணிப்பிரவாள முறையைப் பின்பற்றி நீங்கள் எழுதும் பின்னூட்டங்களை சில முறை இரு முறை படிததாலே விளங்குகிறது. எனவே இனி வரும் பின்னூட்டங்களில் தூய தமிழில் எழுதினால் பலரும் உங்கள் கருத்தினால் பயன் பெறுவர். இது எனது வேண்டுகோளே! நன்றி!
[மற்றபடி உங்கள் தமிழ்ப்பற்றை பறைசாற்ற இது போன்ற அவதூறுகள் உங்களுக்கு அவசியமெனில் இது போன்று நீங்கள் அவசியம் அத்யாரோபம் செய்யுங்கள். பணமா காசா அவதூறு செய்ய]
உங்கள் பின்னூட்டததைத் தமிழ்மட்டுமே அறிந்தவர்களால் முற்றிலும் புரிந்துகொள்ள இயலாதுதான் என்று நீங்களே விளக்கமளித்த பிறகு நான் அவதூறு செய்வதாக ஏன் கூறுகிறீர்கள்?
எது அவதூறு என்று தெரிவித்தால் மகிழ்வேன்.
Mr க்ருஷ்ணகுமார்
Loved your response and love the way you write. Please continue your good work.
It would have been a surprise if you had not loved his response and his manipravalam.
மலர் மன்னன் அய்யா,
அர்ச்சகர் சாதியினர் மட்டுமே ஆகம விதிகளின் படி பூசை செய்ய முடியும் என்று வெளிப்படையாக் சொன்னதற்கு பாராட்டுக்க்ள்!!!.
ஆனால் இது தவறு!!!!!!!!!.
ஆகம விதிகளை வழிவழியாக் பின்பற்றும் சாதியினர் மட்டுமே புது கோயில்களைக் கட்டி அதில் பூசை செய்யுங்கள் !!!!!
மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கோயில்கள் அனைத்து மக்களுக்குமே சொந்தம்& உரிமை !!!!!!!!!!!!!!
அர்ச்சகர் பணி என்பது ஒன்றும் அனைவரும் விரும்பும் பணி அல்ல!!
ஆயினும் பிறப்பின் அடிப்படையில் ஒருவன் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும் என்பது பெரும்பானமை மக்களை இழிவு படுத்துவது போல் உள்ளது!!!!!!.
இந்தக் காலத்திலேயே இப்படி இருக்கிறீர்களே!!!!!!!!!
அனைவரும் இந்து எனில் சாதி பேதமற்ற கலப்புத் திருமணமே சரி!!!
அதை விட்டு சாதி இருக்கனும்,ஏற்றத் தாழ்வு கூடாது என்பது சிரிப்பு வருகிறது!!!!!!!
உங்கள் போன்ற மனிதர்களினால்தான் இப்படிப்பட்ட இழிவு கண்டு பலர் மதம் மாறினார் என் குற்றம் சாட்டுகிறேன்!!!!!!!!!
கடும் கண்டனம்!!!!!!!!!!!
நன்றி
Malarmannan in his comment dated 8th August stated his anguish about the presence of mosques near Hindu temples.He also says that he is passionate about protection of Hindu culture and tradition.But he is least bothered about the plight of 1790 Hindu widows in Vrindavan.As per news reports,these destitute widows have to be rehabilitated by Sulabh International as recommended by SC.He could not tolerate the views of Katherine Mayo on the treatment meted out to widows in India.The book was written in 1927.But,even now the plight of widows remain the same.One possible reason may be the objections raised by the so called protectors of Hindu culture against remarriage of widows.
//பத்து லக்ஷணத்தனுக்கு நித்யனுக்கு மங்களம்
பரமபதத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
காரோன் அனுகூலனுக்கு கன்னி மரி சேயனுக்கு
கோனார் சஹாயனுக்கு கூறு பெத்தலேயனுக்கு
சீரேசு நாதனுக்கு ஜெய மங்களம்
என்று இனிமையான ஒரு க்றைஸ்தவ பாடல். இதில் பாதிக்கு மேல் தமிழ்ப்பதங்கள் இல்லை. ஆனால் அன்பர் காவ்யா போல இப்பாடல் எழுதியவர் தமிழ் மேல் பெருவெறுப்பு கொண்டவர் என்றெல்லாம் நான் சாதிக்க மாட்டேன். தமிழின் ஒரு மொழிநடை இது அவ்வளவு தான்.
//
ஒரு மதத்தவர் ஒரு மொழியை தம் மதவிடயங்களுக்காக எப்படி பயன்படுத்த விரும்புகிறாரோ அப்படிச் செய்வது தவறில்லை. அஃது அவர் சொந்த விடயம். அதே சமயம், அவர்கள் பொது வாழ்க்கையில் பிறமக்களிடம் பழகும்போது அம்மொழியை அம்மக்களுக்குப் புரியும் வகையில்தான் பயன்படுத்தவேண்டும். பயன்படுத்துவார்கள்.
கிருத்துவர்கள் எவ்வண்ணம் தமிழைப்பயன்படுத்தி கீர்த்தனைகள் எழுதினார்கள் என்பது பிரச்சினையேயில்லை. அதைப்பிரச்சினையாக்கிப்பார்ப்போர் ஒரு வக்கிரத்தைத்தான் காட்டுகிறார்கள். கிருத்துவர்கள் எப்படி பிறமக்களிடம் அல்லது தம்மக்களிடம் அம்மொழியை பயன்படுத்துகிறார்கள்? கீர்த்தனையில் உள்ள மணிப்பிரவாளம் போலா? இல்லவே இல்லை.
திண்ணை தளம் பொது இடம். இங்கு மணிப்பிரவாளத்தில் எழுதுவது முற்றிலும் தவறு. அதைச்சரியென்போர் தமிழைத் தாய்மொழியாகக்கொண்டவராக இருக்கமாட்டார்.
மொழிநடைகள் வெவ்வேறு. ஒவ்வொன்றுக்கும் பயன்படுத்தும் இடங்கள் இருக்கின்றன. அங்குதான் பயன்படுத்தப்படவேண்டும்.
மதம் வேறு; பொது வாழ்க்கை வேறு. இந்தப்புரிதல் அவசியம்.
இந்து மதம் மனித குலத்தை கூறுபோடுகிறது. மனிதர்கள் பிறப்பால் சமம் என்பதை இந்து மதம் நிராகரிக்கிறது. பவுத்தம், இஸ்லாம், கிறித்தவம் போன்ற மதங்கள் எல்லோரையும் அணைத்துக்கொள்கிறது. இந்து மதம் புறக்கணிக்கிறது. சங்கராச்சாரியார் சேரி மக்கள் காலைத் தொட்டுக் கும்பிட்டால் தீட்டு எனக் கருதி காலைத் துணியால் கட்டுகிறார். ஏனைய மதங்களில் யாரும் படித்து குருமார் ஆகலாம். ஆனால் இந்து மதம் மட்டும் ஒரு குறிப்பிட்டவர்கள் மட்டும் அவர்கள் பிறந்த சாதியின் அடிப்படையில் அர்ச்சகர்கள் ஆகலாம் என்கிறது. ஜெயேந்திரர் இன்னொரு பிராமணனைக் கொலைசெய்தார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள வழக்கில் முதல் குற்றவாளி. ஆனால் அவர் சங்கரமடத்தில் இருந்து வெளியேற்றப் படவில்லை. வழமைபோல் மற்றவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறார். ஏனைய மதங்கள் வளர்ந்து வர இந்து மதம் மட்டும் தேய்ந்து போவதற்கு அது பிறப்பின் அடிப்படையில் காட்டும் பாகுபாடுதான் காரணம்.
அர்ச்சகர் கட்டுரையில் ஆகமம் படாதபாடு படுகிறது
அது என்ன என்று யாரவது கூறுங்களேன்
பத்ரிநாத் என்று ஒரு புண்ணிய ஸ்தலம் உண்டு.பல முறை அங்கு சென்றிருக்கிறேன்
அது புத்த விஹாராக இருந்து ஆதிசங்கரரால் ஹிந்து கோவிலாக மாற்றப்பட்டது என்று வரலாறு உண்டு.புத்த விஹாரம் ஆவதற்கு முன் ஹிந்து கோவில் தான் என்றும் கதைகள் உண்டு
அதற்க்கு அர்ச்சகர் பணி செய்ய ஆதிசங்கர தன் சாதியினரை நியமித்தது தான் உலகின் முதல் இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும்.
மன்னராட்சியி பதவிகள் குடும்பத்திற்கு தான்
ஒதுக்கீடு சாதிகளுக்கு அல்ல
இது தான் முதல்முறையாக சாதிக்கான ,அதுவும் அது நூறு சதவீத இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீட்டின் தந்தை என்பதற்கு பொருத்தமானவர் அவர் தான்
பல கை மாறிய கோவில்களில் ஆகமம் எங்கே வருகிறது
ஆனால் இங்கே தென்னகத்தை சார்ந்த குருக்கள் என்பதால் பிரசாதம் தூக்கி தான் போடப்படும்
பத்ரிநாத் செல்லும் வழியில் உள்ள கோவில்களில் (கர்ண மோட்சம்,பாண்டவர் கோவில்கள்,மறைந்த காசி(குப்ட்காசி ),ஆதி பத்ரி கோவில்கள் என்று எங்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது,மூலவரை தொட்டும் பூசை செய்யலாம் ,நீங்களே நீர் ஊற்றலாம் .அது எப்படி
கேடர்நாதில் நீங்கள் மூலவரை கட்டிபிடிக்கலாம்.பாவம் அனைத்தும் போய் விடும் என்ற நம்பிக்கையில் அனைவரையும் கட்டி பிடிக்க சொல்லி குருக்களே கூறுவார்
பக்கத்தில் இருக்கும் நம்ம திருப்பதிக்கு வருவோம்
புத்தர் ,காளி,சிவன்,முருகன் கோவில் என்று அதற்க்கு பல சர்ச்சையான வரலாறுகள் உண்டு
ராமானுஜர் அதை எப்படி வைணவர்களுக்கு மாற்றினார் என்பதை பற்றி பாடல்களும் உண்டு
ஐயர்கள் பூசை செய்வதை அவர் ஐயங்கர்கள் பூசை செய்யும் கடவுளாக மாற்றினார் ,சங்கு சக்கிரம் வர வைத்தார் எனும் போது ஆகமம் எங்கே வருகிறது
அதே ஆந்திரத்தில் ஸ்ரீகுருமம் என்ற ஊரில் உள்ள பழமையான பெருமாள் கோவிலில் மூலவர் ஆமை வடிவத்தில்
கோவிலிலேயே ஆமை எல்லாம் வளர்க்கிறார்கள்
மிகவும் சின்ன மூலவர் என்பதால் அனைவரும் கர்ப்பகிருகம் சென்று வழிபடலாம் .
மூலவரின் உருவத்தை வைத்து தான் எவ்வளவு அருகில் செல்லலாம் எனபது தீர்மானிக்க படுகிறது
இதில ஆகமம்,தீட்டு என்ற கதை எதற்கு
Nakkeeran,
Ur points are not right. In islam, person from any sect cannot become a priest. U have spoken of the Jayendrar case here.
We come across numerous cases of rape by christian presists. There was recently a huge controversy in kerala where a former Nun wrote a book on how she & others were exploited by the persists.
The Church even admitted that the issue is serious.
Hindu religion is alive & kicking & can never be destroyed. It has withstood the onslaught of all other religions & come out unscathed.
Have you been to a country like Turky. Just look at the life style of the muslims there. Most of them are non religious.
Based on this, can I say Islam is a dying religion?
As Swami Vivekananda pointed out, Hinduism is the mother of all religions.
As for only brahmins having the right to become archakars, there is enough material in this article to justify that.
No matter how many kavyas or nakkeerans or piriyans come, hinduism will remain. Simply because, it is not just a religion but a way of life.
//The Church even admitted that the issue is serious.//
இதைப்போல ஹிந்து மடங்களும் தங்கள் சாமியார்கள் செய்யும் ஏமாற்று வேலைகளை ஏமாற்றுக்கள் என்று ஏற்றுக் கொள்ளவேண்டும்.
// Hindu religion is alive & kicking & can never be destroyed. It has withstood the onslaught of all other religions & come out unscathed.//
அதற்குக்காரணம் ஹிந்துமதம் ஒரு மோனோலித் அன்று. அஃது எல்லாருக்கும் ஒன்றே ஒன்றாக இருப்பதில்லை. அனுட்டிக்கப்படுவதுமில்லை. ஒரு வைதீகப்பிராமணன் அனுட்டிப்பதும், ஒரு பறையர் அனுட்டிப்பதும் ஒன்றன்று. ஆனால் இருவருமே ஹிந்து என்று சொல்லப்படும்
சுமிதா சொல்லியது போல, அஃது ஒரு மதமன்று. வாழ்க்கை முறை மட்டுமே. எப்படிப்பட்ட வாழ்க்கை முறை? எப்படியும் இருக்காலமென்றதுதான்.
எனவேதான் எவரும் ஹிந்து. கருநாநிதியும் ஹிந்து; சங்கராச்சாரியாரும் ஹிந்து. கடவுளைத் திட்டுபவரும், போற்றுபவரும், இருவருமே ஹிந்துதான்.
சாதிப்படிதான் எல்லாம் என்று ஹிந்துமதத்துக்கு குழிவெட்டுபவரும் ஹிந்துதான். அப்படியிருக்க்கூடாதென்பவரும் ஹிந்துதான்
இக்கருப்பொருளை வைத்து நான் ஏற்கனவே ஒரு கட்டுரைத் திண்ணையில் எழுதியிருக்கிறேன்.
இப்படிப்பட்ட மதம், அல்லது வாழ்க்கை முறை அழியும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதற்குத்தான் ஒரு உருவமென்றேயில்லையே? பின் எப்படி அழியும் சுமிதா?
// As for only brahmins having the right to become archakars, there is enough material in this article to justify that.//
இதுதான் இங்கு விமர்சிக்கப்படுகிறது பின்னூட்டங்களில். அதாவது நீங்கள் தீவிரவாதிபோல. விடாப்பபிடி. இப்படிப்பட்ட விடாப்பிடி ஹிந்து தர்மத்துக்கு எதிரானது. அல்லது ஹிந்து மதம் வளர்ந்த நோக்கிலே இஃதில்லை.
நினைவிருக்கட்டும். மலர் மன்ன்ன் இப்படிப்பட்ட வாத்த்துக்கு எதிர்ப்பு ஹிந்துக்களிடமிருந்தே உண்டு. தமிழ் ஹிந்து.காமைப்படிக்கவும்.
அய்யா நக்கீரன் அவர்களே காவ்யா, சுவனப்பிரியன் , பூவண்ணன் போன்றவர்கள் ஹிந்து மதத்திற்கு எதிராக லாரி லாரி யாக குப்பையை கொட்டி விட்டார்கள். ஒரு மாதம் கழித்து அதே மாதிரி குப்பையை கொட்டி ஆரம்பித்துள்ளீர்கள்.அலுத்து விட்டது. வேறே ஏதேனும் உருப்படியாக எழுதுங்களேன்.
இடிப்பாரையில்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானும் கெடும்.
இடிப்பாரையில்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரிலானும் கெடும்.
என்றார்.
ஆக விமர்சன்ங்கள் வாழவைக்கும். பாராட்டுக்கள் தூங்க வைக்கும் போதையினால்.
எது வேண்டும் ?
கேட்பது இட ஒதுக்கீடு
முழுமையான இட ஒதுக்கீடு ஒரு சமூகத்திற்கு இருப்பது சட்டப்படி செல்லாது .அவர்கள் இருக்க கூடாது என்று யாரும் சொல்லவில்லை அவர்களும் குறிப்பிட்ட அளவு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கலாம்,போராடலாம்
நில உச்சவரம்பு சட்டம் வரவில்லையா.
பல நூற்றாண்டாக அனுபவித்த நிலங்கள் பிரித்து கொடுக்கபடவில்லையா
க்ஷத்ரிய வேலையான ராணுவம் போன்றவை கூட குறிப்பிட்ட சமூகங்களிடம் மட்டும் தான் இருந்தது
ராஜ வம்சம் மட்டும் தான் அதிகாரியாக முடியும் என்று இருந்தது
அது மாற்றப்படவில்லையா
வாணிபம் செய்ய விதிகள் ,ஆகமம் இல்லையா
இப்போது எல்லா சாதிகளும் வைஸ்யர் ஆகவில்லையா
ராஜாவிடம் இருந்த அரசாங்கங்கள் மக்களிடம் மக்களாட்சியில் வரவில்லையா
அதில் இட ஒதுக்கீடு வரவில்லையா
அரசியலில் இப்போது பெண்களுக்கும் இட ஒதுக்கீடு வந்து விட்டதே
மன்னன்.போர் வீரன்,வணிகன்,தேரோட்டி,சிலை செய்பவர்,வீடு கட்டுபவர் ,முடி திருத்துபவன் (பியுட்டி பார்லர் நடத்துவரில் அனைத்து சாதிகளும் இன்று உண்டு)போன்றவர்களுக்கு ஆகமம் கிடையாதா
அது என்ன ஐயா ஒரு வேலைக்கு மட்டும் ஆகமம் வந்து குதிக்கிறது
ஸ்மிதா!
//Ur points are not right. In islam, person from any sect cannot become a priest.//
தவறான தகவல்.
தொழுகைக்காக கொடுக்கும் பாங்கு சத்தத்தை உலகிலேயே முதன் முதலாக கொடுத்தவர் பிலால் என்ற கருப்பு நிறத்தவர். மத குரு என்ற ஒரு அமைப்பே இஸ்லாத்தில் இல்லை. பள்ளிக்கு யார் தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களில் ஓரளவு நன்றாக ஓதத் தெரிந்தவர் தொழ வைக்கலாம்.
சவுதி பள்ளிகளில் வாரத்தில் இரண்டு முறை நான் தொழ வைத்திருக்கிறேன். நான் தாடி கூட இன்னும் வைக்கவில்லை. தமிழகத்தில் இஸ்லாத்தை ஏற்ற பல தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்கள் தமிழக பள்ளிகளில் தொழ வைக்கும் ஹஜ்ரத்களாக உள்ளதை பரவலாக பார்கலாம்.
Piriyan,
I stand corrected but then here again there is a distinction between shia & sunnis.
Pls read this :
The Sunni branch of Islam does not have imams in the same sense as the Shi’a, an important distinction often overlooked by those outside of the Islamic faith.
In every day terms, the imam for Sunni Muslims is the one who leads Islamic formal (Fard) prayers, even in locations besides the mosque, whenever prayers are done in a group of two or more with one person leading (imam) and the others follow by copying his ritual actions of worship.
Friday sermon is most often given by an appointed imam. All mosques have an imam to lead the (congregational) prayers, even though it may sometimes just be a member from the gathered congregation rather than officially appointed salaried person.
Women may not lead prayers other than if it is an all female group.
The person that should be chosen according to Hadith is one who has most knowledge of the Qu’ran and of good character, the age is immaterial.
ஸ்மிதா!
//In every day terms, the imam for Sunni Muslims is the one who leads Islamic formal (Fard) prayers, even in locations besides the mosque, whenever prayers are done in a group of two or more with one person leading (imam) and the others follow by copying his ritual actions of worship.
Friday sermon is most often given by an appointed imam. All mosques have an imam to lead the (congregational) prayers, even though it may sometimes just be a member from the gathered congregation rather than officially appointed salaried person. //
இது பின்னால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு முறை. முகமது நபி காலத்தில் தொழுகை வைத்த நபருக்கு சம்பளம் கிடையாது. முகமது நபியோ அதற்கு பின் வந்த அபுபக்கர், உமர், உதுமான், அலி யாருமே சம்பளம் பெறவிலலை. அவர்களுக்கு விவசாயம், ஆட்டுப் பண்ணை, ஒட்டகப் பண்ணை என்று வருமானத்துக்கு வேறு வழிகள் இருந்தது.
ஆனால் பள்ளியை கூட்டி சுத்தமாக வைத்திருக்கும் நபருக்கு மாத சம்பளம் உண்டு. அவரை மோதின் என்பர். ஐந்து நேரமும் நேரத்துக்கு பாங்கு சொல்லி பள்ளியை சுத்தமாக வைத்திருப்பது இவரது பொருப்பு.
தற்போது தமிழகத்தில் அந்த மார்க்க அறிஞர் குழந்தைகளுக்கு காலையில் அரபி பாடம் படித்துக் கொடுப்பதற்காகத்தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது. அவர் தொழ வைப்பதற்காக அல்ல. சிலர் இதனை தவறாக புரிந்து வைத்துள்ளார்கள்.
//The person that should be chosen according to Hadith is one who has most knowledge of the Qu’ran and of good character, the age is immaterial.//
And he may be a child of any parent, unlike Hinduism where he must be the child of a brahmin parents. True or false?