எங்கள் ஊர்

This entry is part 4 of 29 in the series 18 நவம்பர் 2012

 

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

கோயில் கோபுரங்களில்
குருவிகள் இல்லை

கைபேசிக்கான கோபுரங்கள்
ஏகப்பட்டவை வந்து விட்டன

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

சிறுவர்கள் தெருவில்
விளையாடுவதில்லை

கணிப்பொறி தொலைக்காட்சி
திரைகளின் முன்னே சிறுவர்கள்

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

வரப்புக்களின் இடையே
பயிர்கள் இல்லை
வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள்

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

நட்பு உறவுக்குள்
கைமாத்து கொடுப்பதில்லை

அடகுக் கடைகளில்
வரிசையில் மக்கள்

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

மாணவரும் ஆசிரியரும்
ஒரே இடத்தில்
மது அருந்துகிறார்கள்

நூலகத்தில்
புத்தகங்கள் தூசியுடன்

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

நெடுஞ்சாலையில்
சுமைதாங்கிகள் இல்லை

வாகனக் கட்டண வசூல்
தடுப்புகள் வந்தன

எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது

விசேஷங்களில் முன்வரிசையில்
குடும்பப் பெரியவர் இல்லை

அரசியல்வாதிகளே
அமர்கிறார்கள்

ஒன்றே ஒன்று மட்டும்
மாறவில்லை

கரு சுமக்கும் தாயின் கண்ணில்
நம்பிக்கை
ஒளி

Series Navigationசுரேஷின் ‘வவ்வால் பசங்க’‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’

1 Comment

  1. Avatar a.v.david

    teruvil . illai vilaiyaaddu pillaikal. anraya kiraamattu vaazhvai ninaittu indru eekkamudan paddaana vaazhvil eenggukiren

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *