எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
கோயில் கோபுரங்களில்
குருவிகள் இல்லை
கைபேசிக்கான கோபுரங்கள்
ஏகப்பட்டவை வந்து விட்டன
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
சிறுவர்கள் தெருவில்
விளையாடுவதில்லை
கணிப்பொறி தொலைக்காட்சி
திரைகளின் முன்னே சிறுவர்கள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
வரப்புக்களின் இடையே
பயிர்கள் இல்லை
வீட்டுமனைக்கான விளம்பரப் பலகைகள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
நட்பு உறவுக்குள்
கைமாத்து கொடுப்பதில்லை
அடகுக் கடைகளில்
வரிசையில் மக்கள்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
மாணவரும் ஆசிரியரும்
ஒரே இடத்தில்
மது அருந்துகிறார்கள்
நூலகத்தில்
புத்தகங்கள் தூசியுடன்
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
நெடுஞ்சாலையில்
சுமைதாங்கிகள் இல்லை
வாகனக் கட்டண வசூல்
தடுப்புகள் வந்தன
எங்கள் ஊர்
நிறையவே மாறி விட்டது
விசேஷங்களில் முன்வரிசையில்
குடும்பப் பெரியவர் இல்லை
அரசியல்வாதிகளே
அமர்கிறார்கள்
ஒன்றே ஒன்று மட்டும்
மாறவில்லை
கரு சுமக்கும் தாயின் கண்ணில்
நம்பிக்கை
ஒளி
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
- “நீள நாக்கு…!”
teruvil . illai vilaiyaaddu pillaikal. anraya kiraamattu vaazhvai ninaittu indru eekkamudan paddaana vaazhvil eenggukiren