Posted in

அட்டாவதானி

This entry is part 17 of 29 in the series 25 டிசம்பர் 2011

சிலிக்கான் சில்லில் சேமித்து வைக்காத

எதுவும் நினைவிலிருப்பதில்லை

இரண்டையும் நான்கையும் கூட்ட கை

விரல்கள் நீட்டி யாரும் முயற்சிப்பதில்லை

மின்தூக்கிக்கென அரை மணி நேரம் காத்திருப்பினும்

நான்கே நான்கு படிகள் ஏறிச்செல்ல யாருக்கும் முடிவதில்லை.

ஃபேஸ்புக் நினைவூட்டாவிடில் தனது பிறந்தநாளை

யாரும் கொண்டாடுவதேயில்லை.

தீர்ந்துவிட்ட எரிவாயு உருளைக்கு பதிவு செய்ய

செல்பேசி நினைவூட்டாவிடில் இயல்வதில்லை

இவையெல்லாவற்றையும் அதிகாலையில்

நினைவூட்ட அலாரம் இன்றி எழ முடிவதில்லை

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

Series Navigationஎப்போதும் புத்தாண்டே! என்றும் புத்தாண்டே!அம்மாவும் பூனக்குட்டியின் கனவுகளும்

One thought on “அட்டாவதானி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *