ஏரி நீர்ப்பரப்பில்
மீன் கொத்தி
லாகவமாக
இறங்கி மேலெழும்பிய போது
அதன் அலகில் மீன்
இருந்ததா
என அவதானிக்கவில்லை
வரப்பு வளையில் பதுங்கும்
நண்டு
வேட்டையிலிருந்து தப்பித்த
ஒன்று தான்
முட்டையிலிருந்து வெளி வந்த
சில மணி நேரத்தில்
வல்லூறுக்கு அகப்படாதவையே
கடலுள் உயிர்க்கும்
ஆமைகள்
தராசுத் தட்டுக்கோ
செண்டுக்கோ சரத்துக்கோ
போகாமல்
செடியிலுருந்த மலர்கள்
விழும்முன் சருகாய்
மனவெளிக்கும் சொற்களுக்கும்
பிடிபடாத ஒரு கவிதை
எரிகல்லாய்
யதார்த்தத்திலிருந்து தப்பிப்பு
உண்டு
விடுதலை இல்லை என்றது
கீறி
காலைச் சவரம்
காட்டிய ரத்தம்
- தப்பிப்பு
 - திரைப்படம்: ஹாலிவுட்டின் கதைச்சுரங்கம்
 - நினைவுகளின் சுவட்டில் (102)
 - வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் –33
 - பஞ்சதந்திரம்
 - மீந்த கதை!
 - நிலவின் பனிப்பாறைச் சேமிப்புக்கு நீர் வாயு பரிதிப் புயல் வீச்சில் பெற்றிருக்கலாம்
 - மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் -7
 - கதையே கவிதையாய்! (10)
 - நான் ரசித்த முன்னுரைகளிருந்து…. 1. இராஜாஜி – வியாசர் விருந்து.
 - வாக்கியமொன்று தானாய் உள்புகுந்தது….. திராவிட மொழிகளின் கவிதைச் சங்கமம்
 - மொழிவது சுகம் அக்டோபர் -20
 - கம்பன் விழா அறிக்கை
 - கவிதையாக ஒரு கதை
 - அனுராக் பாசுவின் “ பர்·பி ‘
 - வானவில் வாழ்க்கை
 - ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 42) காதற் களவு
 - தாகூரின் கீதப் பாமாலை – 36 யார் ஊக்குவது என்னை ?
 - அக்னிப்பிரவேசம் – 6
 - தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவின் வைகறை என்ற சிறுகதைத் தொகுதி வெளியிடப்பட இருக்கிறது.
 - உண்மையின் உருவம்