வழி நெடுக இரு மருங்கிலும் வரிசை வரிசையாக ஓங்கி வளர்ந்த இரப்பர் மரங்களும், செம்பனை மரங்களும், தூரத்தில் தெரியும் உயர்ந்த மலைகள் வரைத் தெரியும் பச்சைப் பசெலெனும் வனப்பும் கண்களுக்கு மட்டுமல்ல, சிந்தைக்கும் விருந்தாகும்! இடையிடையே சில பெரிய நதிகளையும் கடந்து செல்வோம்.
எப்படித்தான் இந்தக் காட்டிலும் மேட்டிலும் கால் கடுக்க நடந்து சென்று இந்த மரங்களை நாட்டிருப்பாரோ நம்முடைய தோட்டத்து தமிழ் மக்கள் என்று வியந்தேன்!
எப்படி ஒரு மரத்துக்கும் அடுத்த மரத்துக்கும் இப்படி ஒரே அளவிலான இடைவெளி விட்டு நாட்டார்களோ என்றும் யோசிப்பேன்.
குறிப்பாக, வரிசை வரிசையாக உயர்ந்து ஆடாமல் அசையாமல் நிற்கும் செம்பனை மரங்களைப் பார்க்கும் போதெல்லாம் அவை இராணுவ வீரர்கள் அணிவகுத்து நிற்பதையே நினைவூட்டும். அவை மரங்களாக இருந்தாலும் அவற்றுக்கும் உயிர் உள்ளதுதானே எனவும் எண்ணுவேன்.
புகைவண்டி லாபீஸ் அடைந்ததும் அங்கே பெரியப்பா வாடகை வண்டியுடன் காத்திருப்பார். அங்கிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவிலிருந்த ச்சாஆ செல்வோம். அங்கு சீனர் உணவகத்தில் தேநீர் அருந்திய பின் ஒரு சில சாமான்கள் வாங்கிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடருவோம்.
ஜோகூர் லாபீஸ் தோட்டத்தின் செம்மண் சாலையில் புழுதியைக் கிளப்பிக்கொண்டு டிவிஷன் மூன்றுக்குச் செல்வோம்.
அவருடைய வீடு மரத்திலானது. மரப்படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.
பெரியப்பாவின் பெயர் எசேக்கியேல். அப்போது அவர் ஜோகூர் லாபீஸ் தோட்டத்திலுள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகளுக்கும் தலைமை ஆசிரியர்.
( தொடுவானம் தொடரும் )
- கருகத் திருவுளமோ?
- ஒரு டிக்கெட்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 69 ஆதாமின் பிள்ளைகள் – 3
- சில நினைவுகள் – குஷ்வந்த் சிங் மறைவைத் தொடர்ந்து
- திராவிட இயக்கத்தின் எழுச்சியும் சரிவுகளும் – 1
- தினமும் என் பயணங்கள் – 11 எந்திரத்தனம்
- புகழ் பெற்ற ஏழைகள் – 52
- பிரான்ஸ் வள்ளுவர் கலைகூடம்.
- மருத்துவக் கட்டுரை – காச நோய்
- சீதாயணம் நாடகப் படக்கதை – 27
- நரகம் பக்கத்தில் – 1
- வாழ்ந்து காட்டிய வழிகாட்டி
- திரை விமர்சனம் விரட்டு
- நிகழ்வு பதிவு அன்னம் விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ஷங்கரநாராயணன்
- சில்லியில் நேர்ந்த 8.2 ரிக்டர் பூகம்பத்தில் சுனாமி எச்சரிக்கை, சிதைவுகள், மனிதர் புலப்பெயர்ச்சி !
- பார்த்ததில்லை படித்ததுண்டு
- சத்யம் சிவம் சுந்தரம் ஃபிஸிக்ஸ் (அறிவியல் கட்டுரை)
- பச்சைக்கிளிகள்
- தொடுவானம் 10. தினம் ஒரு குறள்
- ”செல்வப் பெண்டாட்டி”
- திண்ணையின் இலக்கியத் தடம் -29
- நெய்வேலி பாரதிக்குமார் கவிதைகள்
- நீங்காத நினைவுகள் 41
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் -அத்தியாயம்-28 யாதவர்களின் முடிவு