Posted inகவிதைகள்
நிலை மயக்கம்
ஸ்வரூப் மணிகண்டன் நிலா தெரியாத இரவில் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம். பின் நிலவு தெரிந்த பொழுதில், எண்ணி முடித்த நட்சத்திரங்களைப் பறித்து நமது தோட்டத்தில் நட்டு வைத்தோம். விரிந்து நிற்கும் நட்சத்திரங்களின் வாசத்தில் மயங்கி நின்றது நிலவும்.