எதிரி நாட்டு
வீரன் மீது
கூர் வாளை
வீசிக் கொல்வது
வீரம் அல்லவா?
மிரளும் கண்களுடன்
மாமிச மலையாய்
ஓடி வரும்
காளையை விரட்டி
விரட்டி
வாலைப் பிடித்து
வளைத்து வளைத்து
திமிலைப் பிடித்து
முதுகில் ஏறி
அடக்கி நிமிர்வதை
விட
வீரம் எது உண்டு?
வீரம் மட்டுமா?
நேயமுமுண்டு
என்
வளர்ப்பு மிருகம்
பசியால் வாடினால்
மற்றொரு மிருகத்தின்
சதைத் துண்டுகளை
அறுத்துத் தருவேன்
இரு முகம்
பல முகம்
நிஜத்தில் முடியுமா?
அதனால் தான்
முகமூடிகள்
உள்ளே இருப்பது
புத்தன் முகம்
சத்யானந்தன்
- அவுரங்கசீப் சாலை பெயரை அப்துல் கலாம் சாலை என்று மாற்றும் செய்தி கேட்டதும் நான் ஏன் ஆனந்தக் கூத்தாடினேன் ?
- மருத்துவக் கட்டுரை – பக்கவாதம்
- தொடுவானம் 93. விடுதி விழா.
- பொன்னியின் செல்வன் படக்கதை – 11
- அவன், அவள். அது…! -9
- புறநானூற்றில் ‘ சமூக அமைதியை ’ வலியுறுத்தும் பொருண்மொழிக்காஞ்சித் துறை
- இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர அமைப்புத் திறனும்
- செம்மொழிச் சிந்தனையாளர் பேரவை 02 நவம்பர் 2015 பரிதிமாற் கலைஞரின் நினைவு நாள் (1903)
- கொடுமுடி கோகிலமும் சீமைக்கருவேலம் முள்ளும்
- தேவகி கருணாகரனின் ‘அன்பின் ஆழம்’ நூல் விமர்சனம்
- புத்தன் பற்றிய கவிதை
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- ஆறு கலை – இலக்கிய அரங்குகளில் அவுஸ்திரேலியாவில் தமிழ் எழுத்தாளர் விழா 2015
- உனக்கென்ன வேணும் சொல்லு – திரை விமர்சனம்
கவிஞ்ர் சத்யானந்தனுக்கு அன்பு வணக்கங்கள். இந்த வார த்தங்கள் கவிதையில் வரும்’உள்ளே இருப்பது புத்தன் முகம்’ என்பதனை கொஞ்சம் விளக்கமாய் கூறுங்களேன். நன்றி எஸ்ஸார்சி
அன்பு எஸ்ஸார்சி மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பணிவான வணக்கங்கள். தாமதமான பதிலுக்கு மிகவும் வருந்துகிறேன்.
இந்தக் கவிதை ஜென் பற்றிய ஒரு கவிதரிசன முயற்சி. ஜென் சாராம்சம் ‘இயல்பாய் இருத்தல்”. எது இயல்பு? என்பதுவே நாம் ஆன்மீகத்தின் அடிப்படைக் கேள்வியாகக் கொள்ளலாம். நூற்றாண்டுகளாகவும் இப்பிறப்பிலும் நம்மீது சுமத்தப்பட்டுள்ள அடையாளங்கள் பிரபஞ்ச உயிரினங்களின் அடிப்படை இயல்பை நமக்கு அன்னியமாக்கி விட்டன. எனவே என் நல்லதனம் போல்லாத்தனம் இவை யாவுமே முகமூடிகளே. என்னால் எல்லா முகமூடிகளையும் கடக்க முடியுமென்றால் உள் ளே இருப்பது புத் தன் முகமே. இயல்பாயிருக்கும் முகமே. அந்த இயல்பு என்பது பற்றிய என் புரிதலுக்கு ஒரு உதாரணம் காட்டி நிறைவு செய்கிறேன். எல்லாக் குயில்களும் காக்கையின் கூட்டில் அதன் குஞ்சுகளுடன் முட்டைகளிலிருந்து பரிணமித்தவையே. காக்கை குயில் இரண்டுக்குமே இதை ஏற்று கூடி வாழ்வது இயல்பானது. அன்பு சத்யானந்தன்.