நீ தானா

This entry is part 22 of 48 in the series 15 மே 2011
 

வேடங்களில் 

மூடி வைத்த

மேடை நாடகமாய்

ஓடிக்கொண்டிருக்கிறது

மண்ணில்

மனித வாழ்க்கை !

உறவின் மடியில்

உல்லாசத்தில் இருப்பவன்

போதிக்கிறான்

துறவின்

தூய்மை பற்றி !

பாலுக்காகக் கூட

பிள்ளைக்கு அவிழ்க்காத

மார்பை

காசுக்காக எவனுக்கோ

காட்டும்

காரிகை பேசுகிறாள்

கற்பைப் பற்றி !

ஆடுமுதல்

அனைத்து ஜந்துவையும்

அடித்துத் தின்பவன்தான்

அடியாராம்,

அவன் போதனைதான்

சுத்த சைவமாம் !

சம்பளம் ரூபாய்

மாசம் பத்து,

சம்பாதித்தது

மா சம்பத்து,

மற்றவரையும்

மனச்சாட்சியையும் ஏய்க்கும்

அவன்தான் அதிகாரியாம்

லஞ்ச ஒழிப்புக்கு !

அடிமைகளைக்

கொள்முதல் செய்துவிட்டு

பேசுகிறான்

அன்பைப் பற்றி !

மாறுபாடே

நீ தான்

மனிதன் என்பதோ !

செண்பக ஜெகதீசன்

Series Navigationபம்பரக் காதல்ஒலிபெறாத பொய்களின் நிறங்கள்
author

செண்பக ஜெகதீசன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *