புள்ளியில் மறையும் சூட்சுமம்

பிசாசுகளை பிசாசு என்று சொல்லக்கூடாது நாம் புள்ளியில் மறைந்திருக்கலாம் படைப்பின் சூட்சுமம் மனிதனின் தேடுகையும் மனிதனை தேடுதலும் வித்தியாசப்படலாம் பிசாசு என்று சொல்லாதீர்கள் உக்கிரமாய் உதவலாம் அவை தேடுதலில் நான் பிசாசா என்று என் பிசாசிடம் கேட்கிறேன் அரூபமாய் புள்ளியில் மறைந்து…

என் மனைவியின் தாய்க்கு

சு.மு.அகமது   முடிவின் ஆரம்பம் அழுகுரல் விசும்பலுடன் ஒரு சகாப்தத்தின் இறுதியை நிச்சயப்படுத்தும் மரணம் என்ற சொல்லுக்கு அருகிலான பயணமும் நிச்சயப்படாத இலக்கு நோக்கின முன்னேறுதலும் சுருங்கின வயிறின் முடிச்சுக்களாய் உயிர்ப்பின் முகவரி தொலைத்து தொலைப்பில் உழலும் அறிமுகம் தேசாந்திரியின் அழுக்குப்பையில்…

எல்லாம் தெரிந்தவர்கள்

அதைப் பற்றி அப்பொழுதே எனக்கு தெரிந்து விட்டிருந்தது அனைவரும் அதை ஆமோதிக்கத் தொடங்கியிருந்தார்கள் இடுப்பில் இருக்க மறுத்து நழுவியோடும் கீழாடையாய் மீண்டும் ஏற்றி அந்நிகழ்வுகளை பத்திரப்படுத்தினார்கள் மாந்தர்கள் வல இட உள் வெளி புறமெல்லாம் உறுப்புகள் நீண்ட ஆக்டோபஷாய் அதற்கு உருவமிடத்…

வெறுமன்

பூனைகளைப் பற்றி கவிதை எழுதுபவன் நிறையாத அரங்கத்தின் காலி இருக்கையில் அனந்த சயனத்தில் மனப்பால் புசிக்கிறான் அதீத ஞானம்பெற்றவன் போல் போதியின் நிழலில் நின்று எதேதோ பிதற்றுகிறான் இலையுதிர்த்த விருட்சத்தின் கடைசி இலையை கையிலெடுப்பவன் இயற்கையின் வெறுமையை ரசிக்கிறான் போலப் பொழிதலும்…

கவிப்பொழுதின் அந்திமக்காலம்…

ஒரு பறவையின் கடைசி சிறகு   இலை உதிர்த்த மரம் சப்தமின்றி மறைந்து போன செப்புக்காசு மணி அற்றுப்போன கால் கொலுசு எதுவாகவும் இருக்கக்கூடும்   விடியல் என்பது குஞ்சுப் பறவையின் பிசுபிசுத்த இறகாயும் தளிர் இலை தாங்கிய புது மரமாயும் படபடக்கும்…

முகமற்றவனின் பேச்சொலி

பாவனைகளும் தோரணைகளும் எங்கோ கண்டதின் சாயலில் வழிகாட்டியோ பின் தொடர்ந்தோ அருகுணர்த்தும் நம் நிழல் போல் சுவர்களை மீறி வரும் ஒலி அறையின் வெக்கையாய் அனல் பரத்தும் நெஞ்சக்கூட்டினுள் உஷ்ணப்பந்தை விழுங்குதல் போல் ஒளிரும் நினைவுகளில் உள்ளக்கிடக்கை விழித்திருக்கும் தன் கண்களை…

நனைந்த பூனைக்குட்டி

சென்னை மழையில் நனைந்த பூனைக்குட்டி பங்களா கேட்டின் முலையில் நடுங்கியபடி   ஒண்டிய அதன் தனிமையை குலைத்தபடிக்கு தெருவில் கூடின நாய்கள்   ஒற்றை நாயொன்று முன்னிறுத்தப்பட்டு ’உர்’ரென்றது சிலிர்ந்து நின்றதைப்பார்த்து   பூனைக்குட்டி சிலிர்ப்பை விடுத்து ஒடுங்கிய விதத்தை ஆக்ரோஷம்…

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்

  வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில் கந்தலாய் அவனது வழித்தடங்கள் ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய் பாவக்கனியின் அழுகல் பிசிறுகள் தொற்றாய் கிருமிகளென   வார்தெடுத்த சர்பமொன்று சாத்தானின் நிழலென ஊடுருவி மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும் எரிமலையின் பொருமலாய்  …

மழையாகிவிட்ட தவளையின் சாகசம்

ஒரு முறைமையின் உதறலில் எலும்புக்கூடாய் நிழலும் துரத்தும் சதைக்கூளங்களை எண்ணிய எண்ணியாங்குபடி நிறுத்த கயமை குடி கொள்ளும் நேசப் பறவைகளின் கூடுகளில் பஞ்சுப் பொதியினும் ஈரம் புகுத்தி பாசமாய் பாரம் சுமக்கும் சுமைகளை தாங்கிய பாறை மனது கெக்கலித்து புரளும் நினைவில்…

கனவுகளின் விடியற்காலை

அது ஒரு கனவுப்பொழுது இலைகளின் மீதமர்ந்து தவழ்ந்த காலம் படர் கொடியின் நுனி பிடித்து ஊஞ்சலிட்ட பருவம் கனவுகளடர்ந்த விடியற்காலைப்பொழுதுகளில் விரலிடுக்குகளிலிருந்து வழிந்து புள்ளிகளால் நீட்சியுறும் கோலம்... கோலப்பொடியாய் நானிருந்த தருணம் சலனமற்ற நீரோடையில் வீழ்ந்த கல்லாய் அலை கழிந்த நேரம்…