அந்தக் காலத்தில்

This entry is part 20 of 25 in the series 17 மே 2015

 

எல்லாம் நன்றாக

இருந்த காலத்தில்

 

கைக்குத்தல் அரிசிதான்

கைத்தறித் துணிதான்

 

கட்டை மாட்டு வண்டி

காத்துக்குப் பனை ஓலை

விசிறி

 

தொலைபேசி திரைப்படம்

தொலை நோக்கி விமானம்

பேனா குண்டூசி

எதுவுமில்லை

 

விதவைக்கான இருளைக்

கண்டு பெண்கள்

உடன் கட்டை ஏறி

எரிந்து மறைந்தார்கள்

 

மனைவி இறந்தால்

பன்னிரண்டு வயதில்

மணப்பெண் உண்டு

விதவனுக்கு

 

புகைப்படம் எடுப்போருக்கு

அடுப்புக்கரி ரசயானக்

கலவையை

 

ஆகாய விமான

ஆராய்ச்சிக்கு உதவியாக

புஷ்பக விமானத்தின்

பௌதிகக் கணிதங்களை

 

எபோலா வைரஸுக்கான

மருந்தை

 

செவ்வாய் கிரகத்துக்குக்

காத்தாடி விடும்

வித்தையை

எல்லாம்

பனை ஓலைகளில்

எழுதி வைத்துப்

புதைத்து விட்டார்கள்

 

புதையல் கிடைத்தால்

மின்னஞ்சல் அனுப்புக

 

நம் இருவருக்கும்

உறுதி

முனைவர் பட்டம்

Series Navigationமே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழாவயசு
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *