அம்முவின் தூக்கம்

This entry is part 23 of 34 in the series 6 ஜனவரி 2013
ஷான்
பறித்துப் போன
பாவி மனங்களை
கடை மூடிக் கணக்கிடும்
குறும்பாடும் கண்கள்

மறுநாள் புன்னகைகள்
பதியனிட்டுக் கொண்டு
சிரிப்பாடும் சிறு
குமிழ் இதழ்கள்

தொடுகை முடிந்து
மூடிக் கிடக்கும்
நகம் பூத்த
விரல் தாமரைகள்

தாவிக் குதித்து
ஓடிக் களித்து
ஓரிடம் நின்ற
களைப்பில்லாக் கால்கள்

ஏறி இறங்கும்
சுவாச அசைவில்
உலகம் தாலாட்டும்
இலை வயிறு

இதழின் ஓர் கோடியில்
எப்போதாவது பூக்கும்
இளக்காரப் புன்னகை
புரியாத புதிராய்

அம்மு தூங்கவில்லை

அவள் புரிவது
எங்கள் நாளைய
சந்தோஷங்களுக்கான
இன்றைய தவம்

– ஷான்

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : பூர்வ காலத்துப் பூமத்திய ரேகை ஒரு சமயம் வடதுருவத்துக்கு அருகில் இருந்ததைக் காட்ட பூர்வப் படிவுகள் [Fossils] ஆதாரம்மகாலட்சுமி சுவாமிநாதன்

2 Comments

  1. Avatar punaipeyaril

    அக்கிரமக்காரர்களை, நிலதிருடர்களை அழித்து ஒழிக்கும் வரை, “அம்மு” தூங்க மாட்டார்… :)

Leave a Reply to கே சண்முகம் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *