கோவர்தனா
கரும் மை இட்டு கடமையாற்ற சென்றவனே
மறைக்காமல் சொல்
நடந்தது என்ன?
அந்த மறைவுக்குள்
அசைவின்றி கிடந்த
அந்த இயந்திரத்தின் விசையை
அழுத்தியது யார்?
வாக்கை விற்று
இல்லை இல்லை
உன்னை விற்று
நீ ஈட்டிய
பணமா?
பன்னுக்கும் உதவாது
மண்ணுக்குள் புதையாது
உயிரை உறிஞ்சும்
மதமா?
அஃறிணையும் பரிகசிக்கும்
பெருமையென நீ நினைக்கும்
சாதியத்தின் பலமா?
பால்குடித்து வளர்ந்த கதை
மறந்துவிட்டு
பால் பொருத்து மலர்ந்த
பேத மொட்டு
பரப்பிய மணமா?
மேனி முதல் மொழி வரை
படிந்திருக்கும் இரத்தக்கரை
காய்ந்திடாமல் காக்கும்
இழவெடுக்கும் இனமா?
பத்துபேரிடம் கணித்து
மொத்த ஊரின் கருத்து
இதுவென்றே திணித்து
ஊடகங்கள் அழுத்திவிட்டதா?
ஊகங்கள் ஊடாக
வறுமைக் கோட்டை வாழவைக்கும்
வள்ளல்களிடம் கொடைபெற்று
கடை விரிக்கும் கட்சிகள்
வாரிகொடுத்த
இலவசம் அழுத்திவிட்டதா?
இலேசாக
நிற்பவரின் தகுதிகளை ஒதுக்கி
சிற்றறிவை அப்படியே முடக்கி
வெற்று சின்னம்
அழுத்திவிட்டதா முற்றாக?
சரி விடு.
நீ தான் அழுத்தினாய்
விசையை.
அழுத்தியது யார்?
உன்னை…
-கோவர்தனா
- பாரதி யார்? – நாடக விமர்சனம்
- மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை
- தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்
- அழுத்தியது யார்?
- ஒரு தமிழ்ச்சிறுகதை; ஒரு வாசிப்புணர்வு..
- ஜெயகாந்தன் மறுவாசிப்பு மெல்பனில் நடந்த வாசகர் வட்டத்தின் சந்திப்பில் படைப்பும் படைப்பாளியும் – காலமும் கருத்தும்
- வளையாபதியில் இலக்கிய நயம்.
- கடைசி கடுதாசி
- ஊழ்
- என்னோடு வாழ வந்த வனிதை மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- எதிர்பாராதது
- பார்த்தேன் சிரித்தேன்
- கம்பராமாயண போட்டிகள்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது
- சூழ்நிலை கைதிகள்
- வலி
- இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து நடத்தும் “இரா. உதயணன் இலக்கிய விருது” அயலகப்பிரிவில் இருவருக்கு அளிக்கப்படுகிறது.
- தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.
- நெய்தல்-ஞாழற் பத்து
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை
Super G!
அருமை!
Sirappana kavithai, kavinaru valthuzal.