போகும் வழியில்
புரிந்து போனது..
சமுதாயம்..ஜனநாயகம்..
சமத்துவம்..கற்றுத்தந்தது..
வழியிலொரு ஆலமரம்..!
சுமை தாங்கும்
நிம்மதியில் தான்..
எத்தனை விழுதுத்தூண்கள்..!
மரத்தின் விழுதுகளா…?
அத்தனையும் மதவிழுதுகள்…
தாங்குகிறது இந்தியா..!
நடுப்பரப்பை பிடிக்கவென்றே…
பறவையாய் விரித்தது கிளைகள்..
அத்தனையும் சாதிக்கிளைகள்…
விழுதுகளை தாங்குமா….கிளைகள்..?
மரத்தின் நடுமுதுகில்…
எதையோ…எதிர்த்து
கொத்திவிடும் மரங்கொத்தி…
பொந்துக்குள்ளே .புதையலாய் நாகம்..!
ஊரஊர தேயாத பாதை நீ…!
கலவரக் கட்டெறும்பின்
கட்டாயப் படையெடுப்பு..!
கிளைகொன்றாக…
வண்ணக் கொடிகள்..
தாவும் குரங்குகள்
சண்டையிட்டு விளையாட
ஊழல் அரசுகள்…
வந்துபோன அடையாளங்கள்..!
இருக்கும் இடத்தில்
தனக்கென கொஞ்சமாய்
கூடு கட்டி வாழ்ந்த
பறந்த பறவைகளின்..
நினைவுச் சின்னங்கள்…
ஆன்மீக அடையாளம்..!
வழிப்போக்கரின் கையகலப்
பொட்டலம் விரித்துப்
பசியாற்றி..போகும்
பாதசாரிகளின் இளைப்பாற்றும்
மெத்தை நிழல்….!
நீ… தென்றலுக்கு
இடம் கொடுத்து
மோன தவமிருந்தாலும்…
உன்னில் அமர்ந்து..நித்தம்..
தவம் கலைக்கும்
மோகக் கிளிகள்..!
======================================
- தாகூரின் கீதப் பாமாலை – 1 எங்கு போய் மறைந்தாள் ?
- அ. முத்துலிங்கம் – ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்
- நினைவுகளின் சுவட்டில் – (87)
- பேரதிசயம்
- முனைவர் மு.வ நூற்றாண்டு விழா
- அப்பாவின் சட்டை
- புலம்பெயர்வு
- சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற காவல் கோட்டம்—-ஒரு ார்வை
- மானம்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 8) எழில் இனப்பெருக்கம்
- குரு அரவிந்தனுக்கு தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012
- ஜென் ஒரு புரிதல்- பகுதி 31
- பேஸ்புக் பயன்பாடுகள் – 3
- பட்டறிவு – 2
- பஞ்சதந்திரம் தொடர் 32- பாருண்டப் பறவைகள்
- முன்னணியின் பின்னணிகள் – 29
- பழமொழிகளில் துரோகங்களும் துரோகிகளும்
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 1
- விவேக் ஷங்கரின் ‘ தொடரும் ‘ மேடை நாடகம்
- s. பாலனின் ‘ உடும்பன் ‘
- பாலாஜி மோகனின் ‘காதலில் சொதப்புவது எப்படி? ‘
- வுட்டி ஆலனின் ‘ மிட் நைட் இன் பாரீஸ்
- ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ‘ வார் ஹார்ஸ் ‘
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி
- வரலாற்றை இழந்துவரும் சென்னை
- எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள்
- இன்கம் டாக்ஸ் அரசு இணைய தளத்தில் 16A மாதிரி ஃபார்மில் தமிழன் குசும்பு…
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 12
- எழுத்தாளர்கள் ஊர்வலம் (3 ஆம் பாகம்)
- சந்ததிகளும் ரப்பர் உறைகளும்
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 15
- கவிதை
- கால காலன் “நெருஞ்சி” கவிதைத் தொகுதி எனது பார்வையில்
- ஆலமும் போதிக்கும்….!
- மீண்ட சொர்க்கம்
- அதையும் தாண்டிப் புனிதமானது…
- சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பிர்த்வ்ஸ் ராஜகுமாரன் – மீரான் மைதீன் பதிவுகள்
- இஸ்லாமிய அரசியலில் மாற்றுவாசிப்பு
- “தா க ம்”
- விளிம்பு நிலை மக்களின் உளவியல்: நீர்த்துளி: சுப்ரபாரதிமணியனின் புதிய நாவல்
- விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தெட்டு
- அனைத்திந்திய இதழியல் கழகத்தின் 4ஆம் கருத்தரங்க நிகழ்வு
- மலேசியத் தமிழ் இலக்கியத்தில் பெண்ணிலக்கியவாதிகள்: கருத்தரங்கம்.
- உயிர்த்தலைப் பாடுவேன்!
The writer’s imagination in comparing our social activites with aalamaram is excellent….well written keep it up!