ஏசு மகான் உயிர்த்தெழ வில்லை !

This entry is part 12 of 13 in the series 11 ஏப்ரல் 2021

ஏசு மகான் உயிர்த் தெழவில்லை

 

Pray As You Can

 

சி. ஜெயபாரதன், கனடா

 

சிலுவையைத் தோளில் சுமந்து

மலைமேல் ஏறி

வலுவற்ற நிலையில் ஆணியால்

 அறையப்பட்ட தேவ தூதர்

மரித்த பிறகு,

மூன்றாம் நாளில் தோன்றி

உயிர்த் தெழ வில்லை !

ஆணி அடித்த கைகளில்

துளை தெரிகிறது !

ஆணி அடித்த பாதங்களில்

துளை தெரிகிறது !

சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில்  

இரத்தம் தெரிகிறது !

குருதி சிந்தி, சிந்தி,

கும்பி வெம்பி, வெம்பி,

வந்தது பசி மயக்கம் !

தேவ தூதர் மரிக்க வில்லை !

வான் இடிந்து

பேய் மழைக் கண்ணீர் வடிக்கும் !

ஆவி போனதாய்,  

ரோமர் எண்ணித் தூதர்  உடலைக்

மூடினர் குகையில்  !

மூன்றாம் நாளில் மயக்கம்

தெளிந்தது,  

தூங்கி எழுந்து, பல் துலக்கப்

போனார்

புனித தூதர் !

Series Navigationநீதிபதி அய்யாவுக்கு ஒரு சேதி!மனிதர்களுக்கு மரணமில்லை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *