கருத்து அதிகாரம்
எது? எதில்?
நூறு பேர் சபையில்
நாலு பேர்
மேடைக்கு அழைக்கப் படுவதில்
அவருக்குள்
ஒலிவாங்கி வசப்படும்
வரிசையில்
இறுதிச் சொற்பொழிவு
இவரது என்பதில்
கருத்துச் சுதந்திரக்
கனவு வெளியில் ஒரு
தீவு
கருத்து அதிகார
பீடம்
ஒலிபெருக்கிகள் ஓய்ந்து
கரவொலி உரிமை
மட்டுமுள்ளோர்
கருத்து அதிகாரப் பேச்சாளர்
யாவரும் வெளியேற
வெற்றிட அரங்கம்
தோற்றம் மட்டுமே
அங்கே எங்கும்
வியாபித்திருக்கும்
சபைக்கு வரமுடியாத
கேள்விகள்
- புறநானூற்றில் மனிதவள மேம்பாடு
 - மிருக நீதி
 - ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
 - நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்
 - மிதிலாவிலாஸ்-20
 - தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்
 - பரிசுத்தம் போற்றப்படும்
 - “என்னால் முடியாது”
 - அந்தப் புள்ளி
 - ஒலி வடிவமில்லாக் கேள்விகள்
 - எழுத நிறைய இருக்கிறது
 - ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்
 - வடு
 - தங்கராசும் தமிழ்சினிமாவும்
 - திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள்
 - சும்மா ஊதுங்க பாஸ் – 3
 - நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7
 - விளம்பரமும் வில்லங்கமும்
 - பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்
 
சத்யானந்தன் கவிதைகளில் இடை இடையே வினாக்கள் வரும். ஆழமான வினாக்கள் தாம் அவை சில கவிதைகளில் கவித்வம் கூடிய வரிகள் கவிதை இடை வந்து புன்னகைக்கும்.கவிதைளில் முடியும் வரிகள் ஆழமான எண்ணத்தை வெடித்துக்கொணர்வது என்பது வாசகனுக்கு க்கூடுதல் நிறைவு தருபவை.அந்த வகையில் அமைந்தது இந்தக்கவிதையின் கடைசி வரிகள் வெற்று அரங்கம் எங்கும் வியாபித்திருக்கும் சபைக்கு வராத கேள்விகள். வாழ்த்துக்கள்