Posted in

கனா தேசத்துக்காரி

This entry is part 3 of 47 in the series 31 ஜூலை 2011


கனவுகளில் தன்னைத்  தொலைத்தபடியவள்
என்றுமே தனித்திருந்தாள்
அம் மாய உலகில் தனக்கெனவோர்
அரியாசனம் அமைத்தவள்
பிரஜைகளையும் உருவாக்கினாள்

அவளின் பதிவுகளைத் தாங்கியே இருந்தனர்
அதில் அனைவரும்
பதிப்பிக்கப்படாமல்  இருந்தன பொய்களில் சாயல்கள்
அங்கிருந்த நிழல்களெல்லாம் கருமையின் பிம்பங்கள்
வெளிர் நிறங்கள் தாங்கிய
போர்க்கொடியும் ஏற்றப்படுவதேயில்லை

மனதின் நீரூற்றுகள்  பல வண்ணங்களில்

வாரி இறைத்தபடியிருந்தன
தனக்கென ஓர் குணத்தைக் கொண்டுமிருந்தன
ஒவ்வொரு நிறமும்

கோரமாய்  குணம் கொண்ட
வல்லூறொன்றின்  பார்வையில் சிக்கின அவள் கனவுகள் இறுதியில்
நனைந்த கோழிக் குஞ்சொன்றாய்
தப்பும் எண்ணம் ஏதுமற்றுப்
பலியானது மௌனமாய்…
கனாக் காண்பதேயில்லை இப்போதெல்லாம் அவள் ..
ஷம்மி முத்துவேல்
Series Navigationமுரண்கோள் வெஸ்டாவை முதன்முதல் சுற்றிவரும் நாசாவின் விண்ணுளவி புலர்ச்சிகுங்குமச்சிமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *