கற்றுக்குட்டிக் கவிதைகள்

author
2
0 minutes, 5 seconds Read
This entry is part 23 of 23 in the series 16 ஜூன் 2013

(மலேசியா)

 

யாருக்குத் தெரியும்?

நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை.

இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய்

சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது.

 

அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு.

கேட்டு அலுத்துவிட்டான்.

தன்னை அம்போ என்று விட்டுக் காதலியுடன் ஓடிப்போனான்.

“கொள்ளையிலே போக” என சபித்தாள்.

 

கொள்ளையில்தான் போயிற்று.

 

கழுத்துச் சங்கிலியை இறுகப் பிடித்தாள்.

அறுத்தெடுத்ததில் குரல்வளையில் பெரும்காயம்.

 

ஆனால் மூதாட்டியின் கவலையெல்லாம்

அவள் பொத்திப்பொத்தி வைத்திருந்த

காலஞ்சென்ற கணவனின்

கைக்கடிகாரம் போனதில்தான்.

 

அது தங்க முலாம் பூசப்பட்டு இப்போது கருத்துப் போனது.

கருத்துப் போனாலும் அவள் கருத்தில் போகவில்லை.

 

அதை அவள் ஒளித்திருந்த இடம் யாருக்குத் தெரியும்,

மூத்த மகனைத் தவிர?

————————————————————

எங்கிருந்து?

 

மணக்க மணக்க மீன் குழம்பு ஆக்கி

இறக்கி வைத்தாள் அம்மா.

 

மகன் உடுத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளை

உதைத்து உயிர்ப்பித்தான்.

 

“எங்கடா போற சாப்பாட்டு நேரத்தில?” என்றாள்.

 

“ஃபிரண்டு சாப்பிடக் கூப்பிட்டிருக்கான்” என்றான்.

 

“எங்க?”

 

“பாக் குத் தே ரெஸ்ட்டாரண்ட்.” போய்விட்டான்.

 

“கருமம், இப்படி பண்டிக் கறி சாப்பிடல்லன்னா  தூக்கம் வராது.

எங்கிருந்து கத்துக்கிட்டானோ!”

 

வெளியே போயிருந்த அப்பா பொட்டலத்தோடு வந்தார்.

 

“என்னங்க?”

 

“காட்டுப் பண்டிக் கறி. ரகசியமா சுட்டுக் கொண்டாந்திருக்காங்க!” என்றார்.

இங்கிருந்துதான்!

Series Navigationதண்ணி மந்திரம்
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    சோமா says:

    பெரிதாய் சொல்வதற்கில்லை. முதல் கவிதை நாடகத்தில் இருவர் பேசிக்கொள்ளும் பஞ்ச் டயலாக் போல உள்ளது. புதிய முயற்சி..கற்றுக்குட்டிக்கு..வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *