குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

This entry is part 23 of 33 in the series 14 ஏப்ரல் 2013

குழந்தைகளின் கல்விபெறும் உரிமை

மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா?

 

ASER [Annual Status Of Education Report] 2012] வருடாந்தர கல்விநிலை ஆய்வறிக்கை தமிழ்நாடு நிலவரம் சென்னை, மியூஸிக் அகாதெமியில் 8.02.2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள்

 

 _லதா ராமகிருஷ்ணன்

[11]

 

 

image002

முனைவர் வசந்திதேவி தன்னுடைய உரையில் தனிநபரையும், சமூகத்தையும் மேம்படுத்துவதில் கல்விக்குள்ள முக்கியப்பங்கை வலியுறுத்திப் பேசினார். அதிலும் ஆரம்பக்கல்வியின் மேலதிக முக்கியத்துவம் இன்னும் அதிகம் என்று குறிப்பிட்டவர் ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை ஆரம்பக்கல்வியின் தரம் மிகவும் அவலமான நிலையில் இருப்பதாக அஸெர் சுற்றாய்விலிருந்து தெரிய வருவதாக வருத்தத்துடன் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் இலவசக் கட்டாயக் கல்வி அரசுப்பள்ளிகளில் தரப்படும்போதிலும் அதிகதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் தனியார் கல்வி நிறுவனங்களிலேயே சேர்க்கப்படுகின்றனர் என்ற நடப்புண்மையைச் சுட்டிக்காட்டிய வசந்திதேவி எதனால் இந்த நிலை என்ர கேள்வியை எழுப்பினார். தனியார் பள்ளிகளில் அளிக்கப்படும் கல்வியின் தரம் உயர்ந்ததாக இருப்பதாக ஒரு பிரமை மக்கள் மத்தியில் நிலவுவதாகவும் ஆனால், அஸெர் ஆய்வறிக்கை-2012 அது வெறும் பிரமையே என்பதைப் புலப்ப டுத்துவதாகவும் தெரிவித்தார். தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுமொழி யாக இருத்தல் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை அதிகப் பணத்தைச் செலவழித்துச் சேர்ப்பதற்குரிய முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக் கிறது என்று சுட்டிக்காட்டியவர் அந்தப் பள்ளிகளில் சேர்த்தால் தங்களுடைய குழந்தைகளால் நன்றாக ஆங்கிலம் பேச முடியும் என்ற நினைப்பே பெற்றோர் களைத் தூண்டுவதாகவும், ஆனால், நடப்பில் பெரும்பாலான ஆங்கில வழிக் கல்விதரும் பள்ளிகளில், குறிப்பாக கிராமப்புறப்பகுதிகளில் அமைந்துள்ள ஆங்கிலப் பள்ளிகளில் முறையான ஆங்கிலப் பயிற்சியோ, தேர்ச்சியோ இல்லா தவர்களே ஆசிரியர்களாகப் பணீபுரிந்துவருகின்றனர் என்ற உண்மையை எடுத்து ரைத்தார்.

 

’ட்யூஷன்’ என்பது நம் கல்வியை, சமுதாயதைப் பீடித்துள்ள பெரும்பிணி என்று சுட்டிக் காட்டிய வசந்திதேவி அவர்கள் ட்யூஷன் வகுப்புகளில் சேரும்படி மாணாக்கர்கள் பலவழிகளிலும் கட்டாயப்படுத்தப்படுவதையும், ட்யூஷன் வகுப்பு என்ற பெயரில் அலைக்கழிக்கப்படு வதையும் எடுத்துரைத்தார்.

 

பள்ளிக்கட்டணமே எக்கச்சக்கமாக இருக்கும் நிலையில் அதோடுகூட தனியார் பள்ளிகளில் படித்துவரும் குழந்தைகள் ட்யூஷன் வகுப்புகள் என்ற பெயரிலும் கூடுதலாகக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கிறது. அஸெர் ஆய்வறிக்கை – 2012-ன் படி அரசுப்பள்ளி மாணாக்கர்களில் 15.7% பேரும், தனியார் பள்ளி மாணவர்களில் 26.7% பேரும் ட்யூஷன் வகுப்புகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அப்படிச் செல்லும் மாணாக்கர்கள் [முக்கியமாக, தனியார் பள்ளி மாணாக்கர்கள்] ட்யூஷன் வகுப்புகளால் மிகவும் குறைந்த அளவாகவே பயன்பெறுகிறார்கள் என்பதையே அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

 

குழந்தைகள் கல்விபெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வகுத்துரைக்கப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றுவதில் அகில இந்திய அளவில் பிற மாநிலங்களை விட தமிழ்நாடு எத்தனையோ மேலாகத் திகழ்கிறது. அதுவும் 2012க்குப் பிறகு இந்த நிலை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. என்றாலும், கல்வித்திறனாற்றல் களைப் பெறுவதில் நாட்டின் வளர்ந்த மாநிலங்களின் சராசரியளவைக் காட்டி லும் அதிகஅளவு பின் தங்கியிருக்கிறது தமிழகம் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டினார் வசந்திதேவி.

 

அரசின் அதிகாரத்திற்குக் கீழே இல்லாமல் சுயமாகச் செயல்படக்கூடிய உரிமை பெற்ற பள்ளி மேலாண்மைக் குழு ஒன்று அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் அமைக்கப்படவேண்டிய தேவையை எடுத்துரைத்த அவர் அஸெர் கல்வி யாய்வில் பங்கேற்ற அனைத்து அமைப்புகளின் சார்பாகவும் இதற்கான விழிப்பு ணர்வுப் பிரச்சார இயக்கம் விரைவில் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

 

image003பத்திரிகையாளரும் சமூகப்போராளியுமான திரு ஞாநி பள்ளிகளின் கல்வித்தரம் பற்றிப் பேசும்போது ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் பற்றியே நாம் அதிகம் பேச வேண்டிய ஆராய வேண்டிய தேவையிருக் கிறது என்று சுட்டிக்காட்டினார். அஸெர் சுற்றாய்வு இந்த உண்மையை கணக் கிலெடுத்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். பள்ளிக் குழந்தைகளிடம் அஸெர் சுற்றாய்வு மேற்கொள்ளப்படும்போது ஓரிரு கேள்வி கள் அவர்களுடைய ஆசிரியர்களைப் பற்றியதாகவும் இடம்பெறவேண்டியது அவசியம் என்றார் ஞாநி. கல்வி வணிகமயப்படுத்தப்பட்டுள்ள நிலையும் ஆசிரியர்களின் பங்காற்றலும் நம்முடைய ஆய்வலசலுக்கும் கூர்கவனிப்பிற்கும் உட்படுத்தப்படவேண்டியது மிகவும் முக்கியம் என்பதை பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து எடுத்துரைத்தார் அவர். மேலும், அர்ப்பணிப்பு மனம் கொண்ட, கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் இருந்தாலும்கூட பொறுப்பேற்புடை மையும், பதிலளிக்கும் கடமையும் அவர்களுக்குக் கட்டாயமாக்கப்பட வேண்டியது இன்றியமையாதது என்று குறிப்பிட்டார். சரியான முன்னுதாரணங் கள் இல்லாத நிலைகாரணமாக இன்றைய குழந்தைகள் பெரும்பாலும் சின்னத் திரை, பெரிய திரை மனிதர்களையே தாங்கள் பின்பற்றத் தகுந்த ஆளுமை களாக பாவிக்கும் அவலநிலை. சின்னதிரையும், பெரிய திரையும் முன்வைக்கும் கதாநாயக, கதாநாயகி பிம்பங்கள் எத்தகையவை? கட்டுப்பாடற்ற வாழ்க்கையும், அறவே வாழ்வுமதிப்புகளற்ற போக்கும், வன்முறையும் அன்னபிறவுமே இன்று வாழும்வழியாக உருவேற்றப்பட்டுவருகின்றன. எனவே, பள்ளிக்கல்வி சீர்திருத்தம் என்பதில் நாம் இவையனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான தீர்வு ஒன்றை நாடவேண்டிய, வகுக்கவேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார் திரு. ஞாநி.

 

image004திரு. சித்தார்த் வரதராஜன், தி ஹிந்து நாளிதழின் பொறுப்பாசிரியர், தன்னுடைய உரையில் சமூகத்தின் அடித்தட்டு மனிதர்களுக்கு அளிக்கப்படுவரும் கல்வி தரமானதாக இருப்பதை உறுதிப்படுத்த நாடுதழுவிய அளவில் அரசுகள் தவறிவிட்ட அவலநிலையை அஸெர் ஆய்வறிக்கை அழுத் தமாகப் புலப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். இந்தப் பிரச்னையின் தீவிரத்தை நாம் புறக்கணித்துவிடலாகாது என்றும், உடனே உரிய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவேண்டும் நெறும் வலியுறுத்தினார் அவர். பள்ளிகளின் உள்கட்ட மைப்புவசதிகளைப் பொறுத்தவரை 20 வருடங்களுக்கு முன்பிருந்த நிலையை விட இன்று பன்மடங்கு முன்னேறியிருக்கிறோம் என்றாலும் இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் என்பதை நாம் மறக்கலாகாது என்று குறிப்பிட்ட அவர், உள்கட்டமைப்புவசதிகள் முன்னேறியிருந்தாலும் குழந்தைகளுக்கு அளிக்கப் படும் கல்வியின் தரம்  ,இகவும் தாழ்ந்துபோயிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய திரு. சித்தார்த் வாதராஜன், எதனால் இந்நிலை என்ற கேள்வியை எழுப்பினார்.  ஆசிரியப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும், கல்விப்பணியில் தொடர்புடைய மற்ற அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும்  என்னவகையான பயிற்சியும், ஊக்கு விப்பும், அளிக்கப்பட்டுவருகிறது என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண் டிய தேவையை சுட்டிக்காட்டினார். ஆசிரியர்களின் கற்பித்தல் சார் தேர்ச்சி, பயிற்சி, குழந்தைகளை அவர்கள் நடத்தும் விதம், அவர்களுடைய மனப்போக்கு, அர்ப்பணிப்பு என பலவும் ஆழ்ந்த பரிசீலனைக்குட்படுத்தப்படவேண்டியது இன்றி யமையாத ஒன்றாகும் என்றும் வலியுறுத்திக்கூறினார் அவர். அஸெர் ஆய் வறிக்கையும் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களும் அகல்விரிவா னவை என்று குறிப்பிட்ட அவர் இந்த அறிக்கையின் முடிவுகளை அரசுகள் பொருட்படுத்த வில்லையானால் நலிந்தபிரிவுக் குழந்தை களுக்குத் தரமான கல்வி வழங்குவதில் அரசுகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்றாகிவிடும் என்று சுட்டிக்காட்டினார்.

 

 

image006’பீப்பிள்ஸ் வாட்ச்’ என்ற மனிதஉரிமைப் பாதுகாப்பு அமைப்பின் செயலாண்மைத் தலைவரான திரு.ஹென்றி டிபாக்னே [Mr.Henry Tiphagne], அஸெர் ஆய்வில் பங்கேற்ற 630 தன்னார்வத் தொண்டர்களுக்குத் தன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

 

கடந்த சில வருடங்களாக தங்களுடைய அமைப்பின் மூலம் ‘சமூகத் தணிக்கை’யும் மண்டல அளவிலான பொதுவிசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர் இதன் மூலம் முதன்முறையாக அரசு அதிகாரி கள் பொதுமக்களுக்கு பதிலளிக்கும் கடமையும் பொறுப்பும் தங்களுக்கு இருப் பதை உணர்ந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று சுட்டிக்காட்டினார். மேலும், கிராமப்புறப் பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியான நேரத்திற்குப் பள்ளிக்கு வராத நிலையும் அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் பாதியிலேயே பள்ளியை விட்டு நின்றுவிடுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று என்று தெரிவித்தார்.

 

பள்ளி மேலாண்மைக் குழு என்பது ஒரு மோசடி என்று குறிப்பிட்ட திரு. ஹென்றி சடுதியில் இந்தக் குழுமங்கள் பல பள்ளிகளில் ஏனோதானோவென்று அதற்குரிய தகுதியோ, பயிற்சியோ, நுண்ணுணர்வோ அற்றவர்களை உறுப்பினர் களாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டுவிட்ட நிலையை எடுத்துரைத்தார். பள்ளி களில் மாணாக்கர்களை அவமதிக்கும் வார்த்தைகள் அவர்கள் மீது சகஜமாக வீசப்படுவதாகவும், சாதி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் மாணாக்கர் களிடையே அதிக அளவு பாரபட்சம் காட்டப்படுவதாகவும், மாற்றுத்திறனாளி களாக உள்ள குழந்தைகள் விஷயத்தில் இது இன்னும் அதிகமாகக் காணப்படுவ தாகவும் எடுத்துரைத்த திரு.ஹென்றி  மாணாக்கர்களை அடிப்பதும், உதைப்ப தும்,கேவலப்படுத்துவதும் மிகப்பரவலாகப் பள்ளிகளில் நடந்துவருவது கவலைக் குரிய விஷயம் என்றார்.

 

உள்ளூராட்சி அமைப்புகளை கல்வித்திறன் சார் கண்காணிப்புவட்டத்திற்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்று எடுத்துரைத்த திரு.ஹென்றி பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதி பள்ளி மேலாண்மைக் குழுவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட் டினார்.

 

ஓர் அரசுப் பள்ளியின் கணக்குவழக்குகளை மாதத்தின் கடைசி வார வெள்ளிக் கிழமையில் போய்ப் பார்வையிட யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், கல்வித் துறை இத்தகைய நியாயமான தலையீடுகளை வரவேற்பதில்லை, ஊக்குவிப்ப தில்லை என்று குறிப்பிட்டவர் தன்னுடைய அதிகார எல்லைக்கு வெளியே உள்ள எந்த அதிகாரிகளையும் உள்ளே நுழைந்து கல்வித்துறையின் செயல்பாடு களைப் பார்வையிட அரசுகள் அனுமதிப்பதில்லை என்று குறிப்பிட்டார். மேலும், அரசுப்பள்ளிகளில் சனிக்கிழமையும் மதிய உணவு போடப்படவேண்டும் என்றி ருக்கிறது. ஆனால், அதற்கான கணக்குகள் பதிவேடுகளில் காட்டப்பட்டு விடு கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார் திரு.ஹென்றி.

 

 

image008திரு.ரவிசங்கர், ஏய்ட் இண்டியா அமைப்பின் இணைச் செயலாளர் பேசுகையில் அஸெர் ஆய்வு குறித்து ஆரம்பத்தில் கேலியாக சிலர் பேசினார்கள், இதனால் என்ன பயன் என்று கேட்டார்கள் என்றாலும் வருடா வருடம் இந்தக் கல்வியாய்வின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றார். அதன் விளைவாகப் பெற்றோர்கள் தமது குழந்தைகளைக் காப்பாற்ற, அவர்களுக்கு தரமான கல்வியை சாத்தியமாக்க ஏதாவது செய்யச்சொல்லி எங்களை அதிகஅளவில் கேட்டுக்கொள்கிறார்கள் என்று தெரிவித்த திரு.ரவிசங் கர் கல்வித்துறை என்ற சிக்கலான இயந்திரத்தில் ஆசிரியர்கள் ஒரு பகுதி மட்டுமே என்று கருத்துரைத்தார்.

 

நகரில் அமர்ந்துகொண்டு கருத்தரங்குகளை நடத்துவதால் இந்தப் பிரச்னை தீராது என்று குறிப்பிட்ட அவர் கிராமப்புறப் பெற்றோர்கள் மத்தியில் அவர்க ளுடைய பிள்ளைகளுக்கு அளிக்கப்பட்டுவரும் கல்வியின் தரம் குறித்த அவசிய மான விழிப்புணர்வைப் பரவலாக்க இத்தகைய கருத்தரங்குகளும் கூட்டங்களும் கிராமப்புறங்களில் நடத்தப்படவேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். சமூகத்திலுள்ள அனைவரும் இந்தப் பணியில்  பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

 

image009திரு.பாலாஜி சம்பத், ஏய்ட் இண்டியா அமைப்பின் நிறுவனர்-செயலர் தன்னுடைய உரையில் கடந்த ஏழு வருடங்களாகத் தொடர்ந்த ரீதியில் கல்வித்தரம் குறித்த தங்களுடைய அகல்விரிவான ஆய்வு களை நடத்தி அவற்றின் முடிவுகளை வெளியிட்டுவரும் போதும், அதன் மூலம் ஆரம்பப்பள்ளிகளில் அளிக்கப்பட்டுவரும் கல்வியில் நிலவும் அவலங்களையும், தவிர்க்கக்கூடிய குறைபாடுகளையும், அவை அதிகரித்துக்கொண்டேபோகும் போக்கையும், நிலைமையை சீர்செய்யவேண்டிய அவசியத்தையும், தொடர்ந்து கவனப்படுத்திவரும்போதும் அதிகாரப்பொறுப்பிலுள்ளவர்கள் அஸெர் ஆய்வறிக் கையைப் பொருட்படுத்தாமல் இருந்துவருவது வருத்தத்திற்குரியது என்று குறிப்பிட்டார். நம்முடைய குழந்தைகளுக்கு தாய்மொழியில் கூட படிக்கவர வில்லை என்ற உண்மை நமக்குத் தெரியவந்தால் நாம் எத்தனை வேதனைப் படுவோம், எத்தனை விரைவாக அந்த நிலையை மாற்றுவதற்கான நிவாரண நடவடிக்கைகளில் இறங்குவோம். ஆனால், ஏழைக்குழந்தைகளின் நலவாழ்வுக்கு அடித்தளம் அமைத்துத் தருகின்ற கல்வியைப் பொறுத்தவரை நாம் எத்தனை ஆதாரபூர்வமாகச் சுட்டிக்காட்டியும் அதில் நிலவும் அவலங்களையும், குறைபாடு களையும் களைய அதிகாரப்பொறுப்பிலுள்ளவர்கள் ஆர்வம் காட்டாதது வேதனையளிக்கிறது”, என்று வருத்தம் நிறைந்த குரலில் கூறினார் திரு. பாலாஜி சம்பத்.

 

மேலும், இத்தனை இடர்ப்பாடுகளையும் மீறி நலிந்த பிரிவு மாணாக்கர்கள் பெரு முயற்சி செய்து படித்து முன்னேறிவிட்டால் உடனே அவர்களின் வெற்றியில் சொந்தங்கொண்டாட, அதிகாரப்பொறுப்பிலுள்ளவர்கள் முண்டியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். அந்த மாணாக்கரின் முன்னேற்றத்தில்  தங்களுக்கும் பங்குண்டு என்று உரிமைகோர பிரயத்தனம் செய்கிறார்கள். வெற்றி பெற்ற மாணாக்க ருக்கே உதவி மேல் உதவியாகக் குவிக்கிறார்கள். ஆனால், சராசரி மாணவர் களைப் பற்றியோ, கற்கத் திணறும் மாணாக்கர்களைப் பற்றியோ நாம் அக்கறை கொள்வதேயில்லை. ஏனெனில், சிலருகு மட்டுமே கல்வி வரும் என்ற எண்ணப்போக்கு நம்மிடையே வேரூன்றிவிட்டது. வேறுவிதமாகச் சொல்வ தென்றால்,  அடித்தட்டு மனிதர்களின் பிள்ளைகள் படிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் நமக்குள் நிலைகொண்டுவிட்டது. இந்த மனப்போக்கு மாறவேண்டியது மிகவும் இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டிய திரு.பாலாஜி சம்பத்  தன் பொறுப்பிலுள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் கல்வி புகட்டவேண்டியது தனது கடமை என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஏற்படவேண்டும்; நன்றாகப் படிக்கும் மாணவர்கள் மீது மட்டுமே அக்கறை காட்டலாகாது என்று வலியுறுத் திக் கூறினார். அதிக மதிப்பெண்கள் எடுக்கும் மாணாக்கர்களின் முன்னேற்றத் தில் மட்டுமே கவனம் செலுத்தும் போக்கும் கொள்கையளவில் மாற வேண்டி யது அவசியம். தரமான கல்வி அனைத்து நலிந்த பிரிவு குழந்தைகளுக்கும் கிடைக்கவேண்டும்”, என்பதே நம் நோக்கமாக இருக்கவேண்டும் என்று சுட்டிக் காட்டினார் அவர்.

 

 

மொத்தத்தில், அஸெர் சுற்றாய்வு-2012ன் தமிழ்நாடு குறித்த விவரங்களை வெளியிடும் கூட்டம் நம் தேசிய அளவிலும், மாநில அளவிலும் நிலவும் கல்விச்சூழல் குறித்து பல உண்மைநிலவரங்களை உணர்த்துவதாய் அமைந்தது. நலிந்த பிரிவு மக்களுக்காகக் குரல்கொடுப்பதாகச் சொல்லிக்கொள்ளும் அரசி யல் கட்சிகள் அந்தக் குழந்தைகளின் கல்வித்தரம் குறித்து ஏன் தொடர்ந்து பாரா முகமாக இருந்துவருகின்றன என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் மனதிற்குள் எழுந்தது. இந்த அவலநிலையை மாற்ற சமூகம் எந்த அளவுக்குச் சிறப்பாகப் பங்காற்ற முடியும் என்பதை இந்தக் கூட்டம் எடுத்துக்காட்டியது.

 

அஸெர் சுற்றாய்வு-2012 வெளியீட்டுக் கூட்டம் தொடர்பாக நான் முன்வைக்க விரும்பும் கருத்துகள் பின்வருமாறு:

 

  • முதலில், இந்தச் சுற்றாய்வு நகர் சார்ந்த பள்ளிகளையும் உள்ளடக்குவது அவசியம். ஏனெனில், நகர்ப்புறத்திலுள்ள அரசுப் பள்ளிகளிலும் மேற்கண்ட குறைபாடுகளும், அவலச்சூழல்களும் நிலவுகின்றன என்பது வெளிப்படை.
  • ஒருபுறம், தமிழின் காவலர்களாகவும், புரவலர்களாகவும் தங்களைத் தம்பட்டமடித்துக்கொள்ளும் போக்கு. ஆனால், தமிழைப் படிப்பதில், தமிழில் தேர்ச்சி பெறுவதில் மாணாக்கர்களிடையே ஆர்வமுண்டாக்க எந்த நேரிய முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை.
  • தனியார் பள்ளிகளில் கூட தாய்மொழியான தமிழை சரியாக வாசிக்கவும், எழுதவும் தெரியாத நிலை பரவலாக மாணாக்கர்களிடையே நிலவிவருகிறது. ஆங்கிலத்தைப் பழிப்பதால் மட்டும் தமிழை வளர்த்துவிட முடியாது.
  • மொழிப்பாடங்களில் பின் தங்கியுள்ள மாணாக்கர்களுக்கு உதவ சிறப்பு வகுப்புகள் நடத்தப்படலாம். ஆனால் போதிய கவனமோ அக்கறையோ இந்தக் குறைபாடை களைவதில் காட்டப்படுவதில்லை.
  • அதைவிட அவலம், மொழிப்பாடங்களில் பின்தங்கியுள்ள மாணாக்கர்கள் வேறு பல கல்வி சார் செயல்பாடுகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கணினிப் பயிற்சியாகட்டும், சதுரங்க விளையாட்டுப் பயிற்சியாகட்டும், இந்தக் குழந்தைகள் ஓரங்கட்டப்படுகிறார்கள். இதன் விளைவாக இந்தக் குழந்தைகளின் தன்னம்பிகையும், சுயமதிப்பும் பெரிய அளவு பாதிக்கப்படுகிறது. அவர்கள் பலவகையான மனபாதிப்புகளுக்கு ஆளாகி றார்கள்.  
  • பிள்ளைகளுக்கு தாய்மொழியைக் கற்பதில் ஆர்வத்தை உண்டாக் குவதற்கு பதிலாக, மொழிகளில் தமிழோ, ஆங்கிலமோ அர்த்தத்தைப் புரிந்துகொண்டு வாசிக்கும்  எழுதும் திறனாற்றலை அவர்களிடம் வளர்ப்பதற்கு பதிலாக, பக்கம் பக்கமாக அர்த்தம் புரியாமல் மனப்பாடம் செய்து தேர்வில் எழுதும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள் பிள்ளைகள். இது குழந்தைகளுக்கு மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்தக்கூடியது.
  • எந்தவொரு கணினிமையத்திற்குச் சென்றாலும் சரி தமிழ் எழுத்துருக் களே இருக்காது. இதனால், தமிழ் மட்டுமெ தெரிந்த பிள்ளைகளுக்கு கணினியால் கிடைக்கக்கூடிய பயன்பாடுகள் மறுக்கப்படுகின்றன என்றால் மிகையாகாது.
  • அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தை நாம் பழிக் கத் தேவையில்லை. ஏனெனில், அது பல போராட்டங்களுக்குப் பிறகு சாத்தியமான வாழ்வூதியம். சொல்லப்போனால், தனியார் பள்ளிகளும், அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிகளும் ஆசிரியர்களுக்கு முறையான ஊதியம் அளிப்பதில்லை என்பதே உண்மை. அதேசமயம், தங்கள் ஊதியத்திற்கு ஏற்ற அளவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப் பணிப்பு மனோபாவத்துடன் பணியாற்ற வேண்டியது அவசியம். தவிர, அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்தில் கையூட்டுக்கு இடமிருப்பதா கவும், அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது மிகவும் அவலமான நிலை.
  • எட்டாம் வகுப்பு வரை மாணாக்கர்கள் தேர்வெழுதவேண்டியதில்லை என்பதால் அவர்களுடைய கற்றலின் தரமும் அளவும் எவ்வாறு உள்ளது என்பதை தொடர்ந்த ரீதியில் மதிப்பாய்வு செய்ய மாற்றுவழிகள் உருவாக்கப்படவேண்டியது அவசியம்.
  • அஸெர் ஆய்வறிக்கை வெளியீட்டு விழாவில் கிராமப்புறப் பிள்ளை களின் பெற்றோர்கள், ஆசிரியர்களும் இடம்பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
  • மேலும், அந்த ஆய்வறிக்கையின் பிரதிகள் கூட்டத்திற்கு வந்திருந்தவர் கள் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
  • ஆய்வறிக்கை புள்ளிவிவரங்களையே அதிகமாகத் தந்திருந்தது. அவை சார்ந்த சில சிந்தனைகளையும், ஆலோசனைகளையும் அதில் இடம்பெறச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 

அஸெர் ஆய்வறிக்கை வெளியீட்டு விழாக் கூட்டம் முடிந்து அரங்கை விட்டு வெளியேறுகையில் மனதை ஆக்கிரமித்திருந்தது வேதனையோடு திரு.பாலாஜி சம்பத் முன்வைத்த அந்த ஒற்றைக் கேள்வி:

 

நம்முடைய குழந்தைகளுக்கு தாய்மொழியில் கூட படிக்கவரவில்லை என்ற உண்மை நமக்குத் தெரியவந்தால் நாம் எத்தனை வேதனைப் படுவோம், எத்தனை விரை வாக அந்த நிலையை மாற்றுவதற்கான நிவாரண நடவடிக்கைகளில் இறங்குவோம்?

 image011

Series Navigationநீல பத்மம் – திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் பவளவிழா கருத்தரங்கம்குழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1
author

லதா ராமகிருஷ்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *