Posted in

சொல்லின் ஆட்சி

This entry is part 20 of 29 in the series 19 ஜூலை 2015

 

 

சத்யானந்தன்

 

ஒரு உறைவிடத்தில்

அமைவதோ

அதை நீங்குவதோ

சொற்களே

தீர்மானிக்கும்

 

அதிகார முத்திரையுள்ள

சொற்கள்

பெரிய வளாகங்களை

எழுப்பி விடுகின்றன

 

அவற்றுக்கு அன்னியமான

விளிம்பு நிலையினனுக்கு

கூரை என்னும்

கொடுப்பினை இல்லை

 

சொல்லாடல்கள் சூழ

சுவர்கள் எழும்பியதென்றே

குகைகளை

அடைந்தான்

சித்தார்த்தன்

 

ஒரு துடைப்பக் குச்சி

சணல் துண்டு

உடுப்புக்களாய் இருந்த

துணிகளின் துணுக்குகள்

காகம் அறியும்

மனித வசிப்பில் எதைக்

கவ்வி எடுத்தால்

கூடு அமையுமென்று

Series Navigation‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *