Posted in

தவம்

This entry is part 7 of 18 in the series 21 ஜூன் 2020

       

என் தெளிவான கேள்வி

ஒரு குழப்பமான சூழலில்

தத்தளிக்கிறது

சொற்கள்

சுழலும் மனத்தில்

என் கேள்விக்கான

உன் பதிலை ஏந்தி மகிழக்

காத்திருக்கிறேன்

அதிக மௌனத்தை

உருவாக்கி

மலையாய்க் குவித்து

வைத்திருக்கிறாய் நீ

தேடும்

என் கரங்களுக்கு அகப்படாமல்

ஓடி ஒளிந்துகொள்ள

உன்

சொற்களுக்குத் தெரிந்திருக்கிறது

உன் மௌனம் திறப்பதற்காக

என் தவம் நீள்கிறது …..

நீண்டுகொண்டே இருக்கிறது

           ————-

Series Navigationகிணற்றுத்தவளையாக இருக்காதே – அறிஞர் ந சி கந்தையா பிள்ளை‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *