மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
கண்ணீர்த் துளிகள் நிற்காது
சொட்டக்
காரண மாகுது என் மனதே !
அதைப் புரியா திருப்பதும்
என் மனதே !
திரிகிறேன் உலகில்
அறிவிலா மனதுடன் !
அந்த மனதை
விட்டு விலக நினைத்தால்
வெட்டி விடு !
நியாயமா அது கண்மணி
மாற்றவனை நீ
மனதில் வைத்திருப்பது ?
யார் அறிவது
அடுத்தவன் மனதை ?
ஆத்மாவின் தாகம் அழுகிறது
கடுமையாய் ஓலமிட்டு!
அடுத்தவன் இதயத்தில் ஏன்
இடம் பெற ஆசை ?
எல்லாம் கனவு போல் உள்ளது
இது புரிய வேண்டும்
இவ்வுலகில் உனைப் போல்
எவரும் இல்லை !
நினைத்தபடி செல்லும்
ஒருத்தியுடன் நீ
விரும்பித் திரிவதும் சரியா ?
திரும்பிப் பார்
கண்களைத் திறந்து
உன்னை நோக்கித் தேடி வராத
ஒருத்தியை !
அமைதி அளிப்பாய்
உனது மனதுக்கு மட்டும் !
தனது சுயப் பெருமையில்
மனது வாழட்டும் !
+++++++++++++++++++
பாட்டு : 362 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888).
+++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University
Press, Translated
from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 2, 2012
- ஆண்ட்ரூ லூயிஸின் “ லீலை “
- சயந்தனின் ‘ஆறாவடு’
- ஆர். பெஞ்சமின் பிரபுவின் “ படம் பார்த்துக் கதை சொல் “
- குறுந்தொகையில் நம்பிக்கை குறித்த தொன்மங்கள்
- தங்கம் 5- விநோதங்கள்
- பில்லா 2 இசை விமர்சனம்
- மூன்று தலைவர்களும் நம் அடையாளமும்
- தாகூரின் கீதப் பாமாலை – 12 உன்னைத் தேடி வராத ஒருத்தி !
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் — 11
- முள்வெளி – அத்தியாயம் -7
- “பெண் ” ஒரு மாதிரி……………!
- அகஸ்டோவின் “ அச்சு அசல் “
- பஞ்சதந்திரம் தொடர் 42- அரசனைத் தேர்ந்தெடுத்த பறவைகள்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம், இறுதிக் காட்சி) அங்கம் -3 பாகம் – 22
- ’சாலையோரத்து மரம்’
- புதுக்கோட்டை ஞானாலயாவுக்கு நிதி உதவி வழங்க விரும்புவோருக்கு:
- சித்திரைத் தேரோட்டம்…!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 18) தோழி மீது ஆழ்ந்த நேசம்
- கொத்துக்கொத்தாய்….
- பங்கு
- ஈரக் கனாக்கள்
- பாரதிதாசனின் குடும்பவிளக்கு
- விதை நெல்
- கால இயந்திரம்
- மகன்
- புத்தகம்: லண்டன் வரவேற்பதில்லை ஆசிரியர்: இளைய அப்துல்லாஹ்- புத்தக வெளியீடு
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தெட்டு இரா.முருகன்
- இறந்தவர்கள் உலகை யோசிக்க வேண்டியிருக்கிறது
- சாயப்பட்டறை
- மலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 24
- ரௌத்திரம் பழகு!
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! முடங்கிய விண்மீனை விழுங்கும் பூதக் கருந்துளை
- ‘சென்னப்பட்டணத்து எல்லீசன்!’
- “என்ன சொல்லி என்ன செய்ய…!”
- இலங்கை மண்ணுக்கு புகழ் பெற்றுத் தந்த பெண் அறிவிப்பாளர் திருமதி இராஜேஸ்வரி சண்முகம் அவர்களது ஞாபகவிழா அழைப்பிதழ்!
- “பேசாதவன்”
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் – 57
- தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”
- மலைகள்.காம் – இலக்கியத்திற்கான இணைய இதழ்
- எனக்கு மெய்யாலுமே ஒரு உண்மை தெரிஞ்சாகணும்
கவிஞர் உயர்திரு .ஜெயபாரதன் அவர்களுக்கு…!
கீதாஞ்சலி கீதப் பாமாலை….ஒவ்வொன்றும் புதிய
கோணத்தில்..தாகூரின் ஆழமான உருக்கமான
நினைவு சின்னங்களை அப்படியே ரசம் சிதறாமல்
பிழிந்து தருகிறீர்கள்…தங்களின் முந்தைய தமிழாக்கம்
“கீதாஞ்சலி” போலவே….இதிலும் தாகூர் சோகமாகப்
பாடி வளைய வருகிறார்..அற்புதக் கவிஞர்…அவரின்
காலத்தைக் கடந்த எண்ணங்கள் மீண்டும் உங்கள்
மூலம் பேசும்போது..உயர்ந்தவர்களை அடையாளம்
காட்டும் உங்கள் மேன்மை போற்றத் தக்கது..!
நன்றி..
ஜெயஸ்ரீ ஷங்கர்…
விரிவான பாராட்டுக்கு நன்றி ஜெயஸ்ரீ.
சி. ஜெயபாரதன்
அன்பின் திரு ஜெயபாரதன்,
இன்று தாகூரின் 151 பிறந்த நாள் (மே 7- 1861) இந்த நந்நாளில் அவரை நினைவுகூரும் முகமாக இக்கவிதையை வாசித்து நேசிக்க முடிகிறது.. பகிர்விற்கு நன்றி. நல்லதொரு மொழிபெயர்ப்பு.
அன்புடன்
பவள சங்கரி
கவிமேதை தாகூரின் பிறந்த நாளை நினைவூட்டியதற்கு நன்றி பவள சங்கரி.
////அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கி யுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா
அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும்,
பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும்
மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள்
பொழிய வைப்பாய் நீ! /////
தாகூர்
பாராட்டுக்கு நன்றி பவள சங்கரி
அன்பின் திரு ஜெயபாரதன்,
ஆகா, அருமை தாகூரின் கீதங்கள் கேட்கக் கேட்க இனிமை. தங்கள் எளிய நடை தமிழாக்கம் மேலும் சுவை கூட்டுகிறது. மிக்க நன்றி.
அன்புடன்
பவள சங்கரி