மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
நேற்றுக் கடந்த இரவை நான்
மீட்டு வருவ தெப்படி ?
வீணாய் விழிகள்
ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ?
இந்த அங்கியை அணிவாய்
என் நண்பனே !
இந்தப் பூமாலை பாரமாய்த்
தெரியும் !
ஏகாந்தியாய்க் காத்திருக்கேன்
படுக்கையில்,
இம்மாதிரி இரவு
கடந்து செல்லட்டும் !
நான் வந்திப்பது யமுனா
நதிக் கரைக்கு
நண்பனை தேடி !
இன்னும் வந்திலன் அவன் !
இதயத்தில்
வீணாய் நம்பிக்கை கொண்டு
நான் அதிகமாய் நேசித்தேன்
இரவு விடியும் போது
கருகிய முகம், களைத்த பாதம்
கவன மில்லா மனம் !
விருப்ப மற்ற எந்த வீட்டுக்கு நான்
திரும்பவும் போகிறேன் ?
அந்தோ மறப்பது நல்லது
சிந்த வேண்டும் ஏன்
இன்னும்
வீணாய் விழிநீர்த் துளிகளை ?
நான் போக வேண்டும்
அந்தோ !
ஏன் திரும்பி நோக்குது
என் இதயம் ?
காலை வந்தது
ஓலைக் குடில் ஓரத்தில் !
காத்துக் கிடக்கிறேன் நெடு நேரம்
மூடனைப் போல் !
என் வசந்த காலம்
இப்பிறப்பில்
தப்பிச் சென்றது
இச்சமயம் !
+++++++++++++++++++
பாட்டு : 247 தாகூர் தன் 32 ஆம் வயதில் எழுதியது (ஜூன் 29, 1893).
+++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 4, 2012
- நிலைத்தகவல்
- அவன் – அவள் – காலம்
- சீறுவோர்ச் சீறு
- அரிமா விருதுகள் 2012
- ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..
- உருக்கொண்டவை..
- சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி
- பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்
- மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “
- ஊமைக் காயங்கள்…..!
- தங்கம்10 தொழில்நுட்பத்தில் தங்கம்
- நினைவுகளின் சுவட்டில் – 88
- திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் பார்வை
- இதுவேறு நந்தன் கதா..
- பாரதி
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (முதலாம் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5
- ருத்ராவின் குறும்பாக்கள்
- ருத்ராவின் குறும்பாக்கள்
- மலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 29
- துருக்கி பயணம்-5
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் 16
- 2012 ஜுனில் பூமிக்கு நேராகச் சூரியனைக் கடந்து சென்ற சுக்கிரன்
- ஜுமானா ஜுனைட் கவிதைகள்
- அன்பின் தீக்கொடி
- நெஞ்சு பொறுக்குதில்லையே
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 23)
- பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-5)
- முள்வெளி அத்தியாயம் -12
- தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்
- திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்
- ஒரு விவாகரத்து இப்படியாக…!
- வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்
- கன்னியாஸ்திரிகளின் சிலுவைகளும் சில பிரார்த்தனைகளும்
- பிரேதம்
- பஞ்சதந்திரம் தொடர் 47
- புதிய கட்டளைகளின் பட்டியல்..
- தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்
- வருகை
- காசி யாத்திரை
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் தொண்ணூற்றுமூன்று
- கணையாழியின் கதை
மதிப்பிற்குரிய திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு,
கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாமே…
அருமையாக படைக்கிறீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.
இந்த “விருப்பமற்ற இல்லம்..” அவளின் உள்ள உணர்வுகளை
அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்களே…தாகூர்
///என் வசந்த காலம்
இப்பிறப்பில்
தப்பிச் சென்றது///// வரிகளில் வாழ்க்கையே வந்து விட்டது.
கவிதைகள் அற்புதமான வடிகால்.
வணக்கத்துடன்,
ஜெயஸ்ரீ ஷங்கர்.
அன்புமிக்க ஜெயஸ்ரீ ஷங்கர்,
நீங்கள் திண்ணையில் எழுதும் சிறுகதை ஒவ்வொன்றும் மெல்லுணர்வில் பெருங் கருத்தைச் சொல்லாமல் சொல்லும். சிறுகதைச் செல்வியான உங்கள் அரிய பாராட்டைப் பெற ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று நான் பெருமை அடைகிறேன்.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்.