தாகூரின் கீதப் பாமாலை – 17 விருப்பமற்ற இல்லம்

This entry is part 29 of 41 in the series 10 ஜூன் 2012

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நேற்றுக் கடந்த இரவை நான்
மீட்டு வருவ தெப்படி ?
வீணாய் விழிகள்
ஏன் கண்ணீர் துளிகள் சிந்தும் ?
இந்த அங்கியை அணிவாய்
என் நண்பனே !
இந்தப் பூமாலை பாரமாய்த்
தெரியும் !
ஏகாந்தியாய்க் காத்திருக்கேன்
படுக்கையில்,
இம்மாதிரி இரவு
கடந்து செல்லட்டும் !

நான் வந்திப்பது யமுனா
நதிக் கரைக்கு
நண்பனை தேடி !
இன்னும் வந்திலன் அவன் !
இதயத்தில்
வீணாய் நம்பிக்கை கொண்டு
நான் அதிகமாய் நேசித்தேன்
இரவு விடியும் போது
கருகிய முகம், களைத்த பாதம்
கவன மில்லா மனம் !
விருப்ப மற்ற எந்த வீட்டுக்கு நான்
திரும்பவும் போகிறேன் ?

அந்தோ மறப்பது நல்லது
சிந்த வேண்டும் ஏன்
இன்னும்
வீணாய் விழிநீர்த் துளிகளை ?
நான் போக வேண்டும்
அந்தோ !
ஏன் திரும்பி நோக்குது
என் இதயம் ?
காலை வந்தது
ஓலைக் குடில் ஓரத்தில் !
காத்துக் கிடக்கிறேன் நெடு நேரம்
மூடனைப் போல் !
என் வசந்த காலம்
இப்பிறப்பில்
தப்பிச் சென்றது
இச்சமயம் !

+++++++++++++++++++
பாட்டு : 247 தாகூர் தன் 32 ஆம் வயதில் எழுதியது (ஜூன் 29, 1893).
+++++++++++++++++++

Source

1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 4, 2012

Series Navigationமுள்வெளி அத்தியாயம் -12திலக பாமா – தனித்து நிற்கும் ஒரு கவிஞர்

2 Comments

  1. மதிப்பிற்குரிய திரு.ஜெயபாரதன் அவர்களுக்கு,

    கவிதை, நாடகம், கட்டுரை என்று எல்லாமே…
    அருமையாக படைக்கிறீர்கள். நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

    இந்த “விருப்பமற்ற இல்லம்..” அவளின் உள்ள உணர்வுகளை
    அப்படியே படம் பிடித்து காட்டியிருக்கிறீர்களே…தாகூர்

    ///என் வசந்த காலம்
    இப்பிறப்பில்
    தப்பிச் சென்றது///// வரிகளில் வாழ்க்கையே வந்து விட்டது.

    கவிதைகள் அற்புதமான வடிகால்.
    வணக்கத்துடன்,
    ஜெயஸ்ரீ ஷங்கர்.

  2. அன்புமிக்க ஜெயஸ்ரீ ஷங்கர்,

    நீங்கள் திண்ணையில் எழுதும் சிறுகதை ஒவ்வொன்றும் மெல்லுணர்வில் பெருங் கருத்தைச் சொல்லாமல் சொல்லும். சிறுகதைச் செல்வியான உங்கள் அரிய பாராட்டைப் பெற ஒரு வாய்ப்புக் கிடைத்ததே என்று நான் பெருமை அடைகிறேன்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

Leave a Reply to சி. ஜெயபாரதன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *