தாகூரின் கீதப் பாமாலை – 97 உன் இன்னிசை எதிரொலி .. !

This entry is part 18 of 29 in the series 12 ஜனவரி 2014

 

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

 

 

வார்த்தைகள்  என்னிட மில்லை

ஆசைப் பட மட்டும் நான்

அறிந்தவன்  !

உறைந்து போன  இதயத்தை

முறையாக விரிவாக்க

வேண்டும்,

ஒளி படாமல் போன

கரு நிலவின்

ஓர் இரவுப் பொழுது நான்  ! 

கண்கள் போல்

எண்ணற்ற விண்மீன்கள் வானில்

மின்னிடும் !

முடிவிலா நீண்ட பாதையை

நோக்குவேன்

வீணான நம்பிக்கையில்  !

 

ஆழ்ந்த அமைதியில்

அலை யற்ற கடல் உறக்கத்தில்

மயக்கும் தென்றலில் நீ

புல்லாங் குழல் வாசிக்கும் போது

இசை மெட்டு

மெல்ல வந்து மிதக்கும் !

நானுனக்கு அனுப்பி வைப்பேன்

நீ  இசைத்த

கானத்தின்  எதிரொலியை !

நம்மிடையே  உள்ள  

கருமை வெளியைக் கடந்து  

விரைவாக

உன் கனவுக் கடற்கரையை

ஒலி அலை தொட்டதா  

என்று

யாருக்குத் தெரியும் ?

 

++++++++++++++++++++++++++++++

பாட்டு : 226.   1939 ஆண்டில்  தாகூர்  78 வயதினராய்  இருந்த போது  எழுதப் பட்டது.   இப்பாடல்   [Banihara  or  Wordless] வார்த்தைகளற்ற ஷெனாய் ஊதிசைக் கருவி கீதச் சேமிப்புச் சேர்ந்தது.   அவற்றில் தாளத் தட்டிசையும், சொல்லமைப்பு வடிவும்  [Rhythm  & Word Structure]  பன்முறையில் வேறுபட்டு வரும்.

++++++++++++++++++++++++++++

Source

1. Of  Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated from Bengali & Introduced By : Kalpana Bardhan

2. A Tagore Testament,

Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  January 7,  2014

http://jayabarathan.wordpress.com/

Series Navigationகவிதைகள்ஒன்றுகூடல் ( தொடர்ச்சி )
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *