வாழிய தோழி
கடலின்மேல் அடிவானில்
கரும்புள்ளியாய் எழுதப்படும்
புயற் சின்னம்போல
உன் முகத்தில் பொற்கோலமாய்
தாய்மை எழுதப்பட்டு விட்டது.
உனக்கு நான் இருக்கிறேனடி.
இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை
உப்புக் கடலாக்காதே.
புராதன பட்டினங்களையே மூடிய
மணல் மேடுதான் ஆனாலும்
தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட
இங்கு தன் முட்டைகள
நெடுநாள் மறைக்க முடியாதடி.
விரைவில் எல்லாம்
அறியபடா திருந்த திமிங்கிலம்
கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும்
அதனால் என்னடி
இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.
அஞ்சாதே தோழி
முன்பு நாம் நொந்தழ
மணல் வீடுகளை ச் சிதைத்த பயல்தான்.
ஆனாலும் காதல் அவனை
உன் காலில் விழ வைத்ததல்லவா.
ஆளரவமுள்ள சவுக்குத் தோப்புக்குள்
முதல் முயக்கத்தின்போதுகூட அவனிடம்
குஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்
கரிசனை இருந்ததல்லவா.
ஆறலைக் கள்வர்போல
சிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்
நீர்ப் பறவைகள் எங்கே போவது.
இனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல
அவன் நகரக்கூலி ஆகான் என்பதும்
உண்மைதான் தோழி.
ஆனாலும் அஞ்சாதே
அவன் நீருக்குள் நெருப்பையே
எடுத்துச் செல்லவல்ல பரதவன்.
அதோ மணல் வெளியில்
முள்ளம் பன்றிகளாய் உருழும்
இராவணன்மீசையை
சிங்களக் கடற்படையென்று
மீனவச் சிறுவர்கள் துரத்துகிறார்கள்.
இனிக் கரைமாறும் கடல்மாறும்
காலங்களும் மாறுமடி.
- கம்பனின் சகோதரத்துவம்
- பெண்மனம்
- விக்னேஷ் மேனனின் ‘ விண்மீன்கள் ‘
- ‘புதுப் புனல்’ விருது பெறும் ம.ந.ராமசாமி
- பழமொழிகளில் ‘வழி’
- மலைப்பேச்சு – செஞ்சி சொல்லும் கதை- 19
- பதின்பருவம் உறைந்த இடம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து -4
- விமோசனம்
- தனிமை உலகம்: வேட்டை :சுப்ரபாரதிமணியன் புதிய சிறுகதைத் தொகுப்பு
- ஒரு மலர் உதிர்ந்த கதை
- அக்கரை…. இச்சை….!
- பர்த் டே
- வாழ்வியல் வரலாற்றில் சில பக்கங்கள் -6
- மனனம்
- முகங்கள்
- தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு
- அரியாசனங்கள்!
- மெங்பெய்யிலிருந்து வந்த பெண்
- முள்வெளி – அத்தியாயம் -2
- அணையா விளக்கு
- பஞ்சதந்திரம் தொடர் 37 – விதிப்படி உரியதை ஒருவன்அடைந்தே தீருவான்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 13)
- ஆலமரத்துக் கிளிகள்…. ஹைக்கூ
- காடும் மலையும் கண்டு (ஒரு உள்தர்சன நெடுங்கவிதை)
- பாரதி 2.0 +
- ஐஸ்வர்யா தனுஷின் ‘ 3 ‘
- ஜெப்ரி ஆர்ச்சரின் ‘ ஸ்டக் ஆன் யூ ‘
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 17
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தி மூன்று இரா.முருகன்
- சிலை உயிர்த்தெழும் ஓர் கணம்
- நட்புறவு – கலீல் கிப்ரான் (மொழி பெயர்ப்பு)
- பாசாவின் கர்ண பாரம்
- இறக்கும்போதும் சிரி
- நீலம்
- நெய்தல் பாடல்
- முனுசாமி பாலசுப்ரமணியனின் ஐந்து நூல்கள்.. ஒரு பார்வை .
- ”பின் புத்தி”
- ரோஜா இதழைப் பற்றி பாடுகிறோம்
- பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள்
Dear Jayabalan…I am confused in your some of the lines. Your lines are speaking abt the positive and negative of men/your object in all the period (past & present).
கவிகொள்கருத்துகள்,கருக்குகள்.