பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை
பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர்
காவலூர் ராஜதுரை
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் அனுதாபச்செய்தி
கலை , இலக்கியம், வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம், மற்றும் விளம்பரம் முதலான துறைகளில் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தி நீண்ட காலமாக இயங்கிய காவலூர் ராஜதுரையின் மறைவு ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு என்று அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் அதன் நடப்பாண்டு தலைவர் டொக்டர் நடேசன் வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமது பூர்வீக ஊருக்குப்பெருமை சேர்க்கும் வகையில் தனது இயற்பெயருடன் ஊரின் பெயரையும் இணைத்துக்கொண்டு நீண்ட நெடுங்காலமாக கலை, இலக்கியம் சார்ந்த பல்வேறு துறைகளில் தனது ஆற்றலையும் ஆளுமையையும் வெளிப்படுத்திவந்த காவலூர் ராஜதுரை தமது 83 வயதில் அவுஸ்திரேலியா சிட்னியில் காலமாகிவிட்டார் என்பதை அறிந்து எமது சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிக்கின்றோம்.
காவலூர் ராஜதுரை இலங்கையில் மட்டுமல்ல அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாம் சார்ந்திருந்த துறைகளில் ஆக்கபூர்வமாக உழைத்தவர்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியைப்பொறுத்தவரையில் நான்கு தலைமுறைகாலமாக அவர் குறிப்பிடத்தகுந்த பங்களிப்புகளை வழங்கியவர்.
சிறுகதை, விமர்சனம், நாடகம், வானொலி ஊடகம், இதழியல், திரைப்படம், தொலைக்கட்சி, விளம்பரம் முதலான பல்வேறு துறைகளில் அவர் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்துள்ளார்.
எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதன் ஸ்தாபக உறுப்பினராக இணைந்துகொண்டதுடன் – சங்கம் மெல்பன், சிட்னி, கன்பரா முதலான மாநில நகரங்களில் நடத்திய எழுத்தாளர் விழாக்களில் இடம்பெற்ற கருத்தரங்குகளிலும் பங்கேற்றவர்.
மெல்பனில் எழுத்தாளர் விழா நடைபெற்ற சமயம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட சில தரமான குறும்படங்களை காண்பித்தார். அவுஸ்திரேலியாவில் தரமான குறும்பட பிரக்ஞையை வளர்ப்பதற்கும் அவர் கணிசமான பங்களிப்பு வழங்கியவர்.
அவரது பணிகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக எமது சங்கம் சில வருடங்களுக்கு முன்னர் அவருக்கு விருது வழங்கி பாரட்டியிருக்கிறது.
எம்மவர் பலரது நூல்கள் வெளியான சந்தர்ப்பங்களில் அவை குறித்து விமர்சனங்கள் எழுதி ஊக்கமளித்தும் வந்திருக்கும் காவலூர் ராஜதுரை மொழிபெயர்ப்புத்துறையிலும் ஈடுபட்டவர்.
அவரது மறைவினால் கவலையுற்றிருக்கும் அவரது மனைவி உட்பட குடும்பத்தினருக்கும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கும் எமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
—-0—-
- உன் மைத்துனன் பேர்பாட
- புதிய திசையில் ஒரு பயணம் – திலகனின் புலனுதிர் காலம் –
- சங்க இலக்கியத்தில் பயிர்ப் பாதுகாப்பு
- பல்துறை ஆற்றல் மிக்க செயற்பாட்டாளர் காவலூர் ராஜதுரை
- பட்டுப் போன வேர் !
- ஆனந்த பவன் [நாடகம்] காட்சி-9
- தொடுவானம் 38. பிறந்த மண்ணைப் பிரியும் சோகம்.
- வாழ்க்கை ஒரு வானவில் 25.
- தந்தையானவள். அத்தியாயம் 5
- 2014 அக்டோபர் 19 செவ்வாய்க் கோளைச் சுற்றி விரையும் முதல் அபூர்வ வால்மீன்
- என்சிபிஎச் வெளியீடு மெய் வருத்தக் கூலி தரும் : ஸ்டாலின் குணசேகரன் கட்டுரைகள்
- கண்ணதாசன் அலை
- நடிகர் சிவகுமார் உரை: வாழ்க்கை ஒரு வானவில் – கருத்துரை
- சென்னையில் ஒரு சின்ன வீடு
- ஆத்ம கீதங்கள் -1 ஆத்மாவின் உரைமொழி
- ஊமை மரணம்
- என்ன செய்யலாம் தமிழ்நாட்டை :)
- ஹாங்காங் தமிழ் மலரின் அக்டோபர் மாத இதழ்
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் & நியு செஞ்சுரி புக் ஹவுஸ் 26ம் ஆண்டு இலக்கியப் பரிசளிப்பு : 2014
- முதல் சம்பளம்
- மணிக்கொடி எனும் புதினத்தின் ஆங்கில ஆக்கம்
பின்னூட்டங்கள்