பூகோள ராகம்

This entry is part 1 of 10 in the series 22 மே 2022

சி. ஜெயபாரதன், கனடா

அண்டவெளிக் களிமண்ணை

ஆழியில் சுற்றிக்
காலக் குயவன் கைகள்
முடுக்கிய பம்பரக் கோளம் !
உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !
பூமி எங்கிலும் கடலடியில்
பொங்கிடும்  நாதம் !
ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை !
முதன்முறைப் பதிவு !
இயற்கை அன்னை வீணை நாதம்
மயக்குது மாந்தரை !
துளையிட்டுக் கேட்க பூமிக்குள்
நுழைவது யார் ?
கடற்தட்டுகள் துடித்தால்
சுனாமி அலை அடிப்பு !
புவித் தட்டுகள் மோதினால்
பூகம்ப நடனம் !
குடற் தட்டு நெளிந்தால்
நிலக் குலுக்கல் !
சூழ்வெளி மாசாக
தாரணி வயிற்றுக் குள்ளும்
ஆறாத தீக்காயம்  !

Series Navigationஅவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *