Posted in

மகிழ்ச்சியின் விலை !

This entry is part 11 of 12 in the series 7 ஜனவரி 2018

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

அப்பா நினைவு நாள் காலையில்
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ்
அமர்ந்துள்ள ஏழைகளை
நோட்டமிட்டான் அவன்

மூன்று மாத தாடி மீசை
இனி அழுக்கே ஆகமுடியாமல்
கருத்த வேட்டி
வறுமை துயரமாய் மாறி
அந்தப் பெரியவர்
முகத்தில் ததும்புகிறது
அவர் கையில்
அந்தக் கைலியைக் கொடுத்தான் அவன்

அதை வாங்கிக்
கண்கள் அகலப் பார்த்த அவர்
கைகளை உயர்த்திக்
கடவுளை வாங்கினார்

அந்தக் கணங்களில்
அவர் முகத்தில் அதிக மகிழ்ச்சி

அந்த மகிழ்ச்சியின் விலை
அந்தக் கைலியின் விலைதானா ?

அடுத்த தெருக் கோடீஸ்வரனிடம்
தேவைக்குமேல்
முடங்கிக் கிடக்கும் பணத்தில்
எத்தனை ஏழைகளின் மகிழ்ச்சி
சிறைப்பட்டுக் கிடக்கிறது ?

Series Navigationசிறுவெண் காக்கைப் பத்துஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *