வழி தவறிய பறவை

This entry is part 27 of 29 in the series 19 ஜூலை 2015

சேயோன் யாழ்வேந்தன்

மனசுக்குள் புகுந்துவிட்ட
வழி தவறிய பறவை ஒன்று
வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது
அதன் சிறகடிப்பு
மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும்
படபடப்பது சில சமயம்
பதற்றத்தைத் தருகிறது
கவிதைகளைக் கேட்டபின்பே
உறங்கச் செல்லும் அது
இரவுப் பூச்சிகளின்
ஜல்ஜல் ஒலியை
கொலுசொலியினின்றும்
வேறுபடுத்தத் தெரியாமல்
இரவெல்லாம் விழித்திருக்கிறது
இப்படியொரு பறவையை
எப்போதும் நெஞ்சில் சுமப்பதில்
சிரமமொன்றுமில்லை
எச்சங்களைத் தவிர.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationநெசம்ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *