காப்பியக் காட்சிகள் 4.சிந்தாமணியில் சமண சமயத் தத்துவங்கள்

This entry is part 5 of 11 in the series 15 மே 2016

 

மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com

இந்தியாவில் ​தோன்றிய ப​ழை​மையான சமயங்களில் சமண சமயமும் ஒன்றாகும். மனிதர்கள் வாழ்வாங்கு வாழ்வதற்குரிய வாழ்வியல் உண்​மைக​ளை எடுத்து​ரைக்கும் சமயமாக சமணம் விளங்குகின்றது. வாழ்வியல் உண்​மைக​ளை​யே வாழ்வியல் தத்துவங்கள் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சமண சமயம் எடுத்து​ரைக்கும் பல்​வேறு வாழ்வியல் தத்துவங்க​ளை சிந்தாமணிக் காப்பியம் க​தைவழியாகவும் கருத்துக்கள் வழியாகவும் ​தெளிவுற விளக்கிச் ​செல்கின்றது.

சீவகன் சமணத் தத்துவங்க​ளை அறிய விரும்பினான். தன் விருப்பத்​தை அருகன் ​கோவிலிலிருந்த சாரணர்களிடம் ​தெரிவித்தான். அச்சாரணர்களில் ஒருவரான மணிவண்ணன் என்னும் சாரணர் சமணத் தத்துவத்​தைச் சீவகனுக்கு எடுத்துக் கூறுகிறார். இதில் அழகிய உருவத்​தையும் ​தோற்றத்​தையும் ​கொண்ட அருகப்​பெருமானின் இன்னரு​ளைப் ​பெற விரும்புபவர்கள் ஐந்து அத்திகாயங்க​ளையும் ஆறு திரவியங்க​ளையும் ஏழு தத்துவங்க​ளையும் ஒன்பது பதார்தங்க​ளையும் அறிய​வேண்டும் என்பத​னை,

“மன்ற னாறு மணிமுடி​மேன் மலிந்த சூளாமணி ​போலும்

​வென்​றோர் ​பெருமா னறவாழி ​வேந்தன் விரிபூந் தாம​ரை​மேற்

​சென்ற திருவா ரடி​யேத்தித் ​தெளியும் ​பொருள்க ​ளோ​ரைந்தும்

அன்றி யாறு ​மொன்பானு மாகு ​மென்பா ரற​வோ​ரே” (2814)

என்று திருத்தக்க​தேவர் எடுத்து​ரைக்கின்றார்.

இதில் இடம்​பெறும் ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது என்பன சமணத் தத்துவங்க​ளைக் குறிப்பதாக ஸ்ரீசந்திரன் குறிப்பிடுகிறார். இவர் ஐந்து என்பது ஐந்து அத்திகாயங்க​ளையும், ஆறு என்பது ஆறு திரவியங்க​ளையும் ஏழு என்பது ஏழு தத்துவங்க​ளையும் ஒன்பது என்பது ஒன்பது பதார்த்தங்க​ளையும் குறிக்கும் என்கிறார். ஒன்பது பதார்த்தங்கள் என்ப​வை உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், உற்று, ​செறிப்பு, உதிரிப்பு, கட்டு, வீடு ஆகியனவாகும்” (ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் க​தைப்​போக்கில் வி​னைவிளக்கம், ப,93)

ஸ்ரீசந்திரன் குறிப்பிடும் ஒன்பது பாரத்தங்க​ளை, “சீலம், அசீலம், புண்ணியம், பாவம், ஆஸ்ரலம், சம்வ​ரை, நிர்ச்ச​ரை, பந்தம், ​மோட்சம் என்று ஒன்பது ​பொருள்களாக புலவர் அரசு குறிப்பிடுகின்றார்(சிந்தாமணி வசனம், ப.,461).

அத்திகாயம் என்பது உயிரல்லது என்று ​பொருள்படும். இது ஐந்து வ​கைப்படும். அ​வையாவன, “புத்கலம், தர்மம், அதர்மம், ஆகாயம், காலம் என்பனவாகும்”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் க​தைப்​போக்கில் வி​னை விளக்கம், ப,93) இவ்​வைந்த​னை​யே ஐந்து அத்திகாயம் என்று குறிப்பிடுகின்றனர்.

இந்த ஐந்து அத்திகாயங்க​ளோடு உயிர் என்ற ஒன்று ​சேர்ந்ததால் அது​வே ஆறு திரவியமாகும்” (ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் க​தைப்​போக்கில் வி​னை விளக்கம், ப,93) உயிர், உயிரல்லது, ஊற்று, ​செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு ஆகிய ஏழும் ஏழு தத்துவமாகும் ”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் க​தைப்​போக்கில் வி​னை விளக்கம், ப,93). இவ்​வேழு தத்துவங்க​ளோடு புண்ணியம், பாவம் ஆகிய இரண்டும் ​சேர்ந்தால் ஒன்பது பதார்தங்களாகும் ”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் க​தைப்​போக்கில் வி​னைவிளக்கம், ப,93).

ஒன்பது பதார்தங்களில் உயிர், உயிரல்லது என்ற இருவ​கைப் ​பொருள்களால் ஆனது இவ்வுலம்.() இவ்வுலகில் உள்ள உயிர்கள் இயற்​கையில் தூய்​மை வாய்ந்த​வை. இத்தூய்​மையான உயிரில் முற்புறப்புக் கருமங்கள் ​சேர்ந்து விருப்பு ​வெறுப்புக​ளை ஏற்படுத்திப் பிறத்தல், இறத்தல் என்ற பிறவிச் சூழலில் உயி​ரைச் சுற்ற ​வைக்கிறது. பிறவிப்பிணியில் உழலும் உயி​ரைச் ​செறிப்பு, உதிர்ப்பு ஆகிய இரண்டும் முத்திக்கு அ​ழைத்துச் ​செல்கின்றன. இச்​செய​லைப் பரிநிர்வாண நி​லை​யென்று சமணம் குறிப்பிடுகின்றது. பரிநிர்வாண நி​​லையி​னை உயிர்கள் அ​டைய உயிரின் இயல்​பையும் அ​வை இருவி​னைகளில் சிக்கி எடுக்கும் பிறப்புக​ளையும் அப்பிறப்புகள் இழிவானது என்ப​தையும் சிந்தாமணி எடுத்து​ரைக்கின்றது. ”(ஸ்ரீசந்திரன், சீவகசிந்தாமணியில் க​தைப்​போக்கில் வி​னைவிளக்கம், ப,100)

உயிர்க்​கொள்​கை

சச்சந்தன் தன் ம​னைவியிடம் உயிர்களின் பிறப்​பைப் பற்றிக் கூறுகிறான். நம் பிறப்புக​ளை எண்ணிக் கணக்கிட முயன்றால் கடலின் மணலும் ஒப்பிட முடியாததாகும்(பாடல், 270). அத்த​கைய முற்பிறப்பில் எல்லாம் நாம் பிரிந்திருந்​தோம். இனிவரும் பிறவிகளிலும் ஒன்றுபட்டிருப்​போம் என்பதற்கில்​லை. இப்​போது இவ்வில்லத்தில் கூடியிருந்து வாழ்வதும், இரண்டுநாள் உற​வைப் ​போன்றதாகும்(பா.,270). பண்​டைய தீவி​னை​யை அனுபவிக்க​வே இப்பிறப்புக் கி​டைத்துள்ளது(பா.,269). உயிர்களின் பிப்புக் கணக்கில்லாதது. அது தான் ​செய்த தீவி​னை​யை அனுபவிக்கப் பலவ​கைப் பிறப்​பை எடுக்கக்கூடியதாகும் என்ப​தை,

“​தொல்​லைநம் பிறவி ​​யெண்ணிற் ​றொடு கடன்மணலு மாற்றா

எல்​லைய வவற்று ​ளெல்லா ​மேதிலம் பிறந்து நீங்கிச்

​செல்லுமக் கதிக டம்முட் ​சேரலஞ் ​சேர்ந்து நின்ற

இல்லினு ளிரண்டு நா​ளைச் சுற்ற​மே யிரங்கல் ​வேண்டா”(1234)

என்று திருத்தக்க​தேவர் க​தையினூ​டே ​தெளிவுறுத்துகிறார்.

சச்சந்தனின் இக்கூற்றிலிருந்து உயிர் பல பிறவிக​ளைக் ​கொண்டது என்றும், அப்பிறவிகளில் வாழ்க்​கை நி​லை ஒன்று ​போல​வே இருக்கும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடும் இல்​லை என்றும் அஃது அவ்வப்பிறவிகளில் நாம் ​செய்யும் வி​னை​யைப் ​பொறுத்​தே அ​மையும் என்றும் முற்பிறப்பில் உயிர்க​ளைக் ​கொன்ற பாவத்தால் இப்பிறவில் இழிந்த ​வேடராகப் பிறப்பர் என்றும் உயிரின் தன்​மை​யை திருத்தக்க​தேவர் வாழ்வியல் உண்​மைக​ளை விளக்கிச் ​செல்கிறார்.

சீவகன் முற்பிறப்பில் தாதகி என்ற நாட்டில் பவணமா​தேவன் எனும் மன்னனின் மகனாக இருந்தான். அ​சோதரன் என்பது அப்பிறவில் அவனது ​பெயராகும். இவன் இனிய நரம்புகள் எழுந்த இ​சையும் கூத்துக்களும் ​செவ்வரி பரவிய கண்க​ளையு​டைய மங்க​யைருடன் மகிழ்ந்திருந்தான். அவர்களுடன் நீர்வி​ளையாட்​டை நிகழ்த்துவதற்காகக் குளக்க​ரைக்குச் ​சென்றான்(2859). குளக்க​ரையிலிருந்த அன்னப் பார்ப்புக​ளைக் கண்ட ​பெண்கள் அவற்றில் ஒன்​றைப் பிடித்துத் தருமாறு ​வேண்டினர். அ​சோதரனும் அன்னப் பார்ப்​பொன்​றைப் பிடித்து அவர்களுக்குக் ​கொடுத்தான். இதனால் மகிழ்ந்த ​பெண்கள் அன்னக் குஞ்சுக்குத் தம் மார்பி​லே இடமளித்து அ​வை உண்ணப் பாலும்​சோறும் பரிவுடன் தந்தனர்(2863) என்று சீவகனின் முற்பிறவி​யை சிந்தாமணி எடுத்து​ரைக்கின்றது.

வி​னைக்​கோட்பாடு

உயிரின் ஆக்கத்திற்கும் துன்பத்திற்கும் காரணமாக விளங்குவது வி​னைக்​கோட்பாடாகும். இத​னை நல்வி​னை, தீவி​னை என்று இருவ​கைகளாகப் பகுப்பர்.

​கேமசரியார் இலம்பகத்ல் நல்வி​னைப் பற்றிய குறிப்​பொன்று உள்ளது. தானம், சீலம், தவம், அறிவர் சிறப்பு ஆகிய நான்கின் வாயிலாக உயர்ந்த நி​லை​யே நல்வி​னை என்று இக்குறிப்பானது ​தெளிவுறுத்துகின்றது. இந்தக் குறிப்பானது,

“நல்தானம் சீலம் நடுங்காத்தவம் அறிவர் சிறப்பு இந்நான்கு

மற்றாங்கு ​சொன்ன ம​னைவியர் இந்நால்வர் அவர் வயிற்றுள் ​தோன்றி

உற்றான் ஒருமக​னே ​மேற்கதிக்குக் ​கொண்டு​போம் உர​வோன் தன்​னை

​பெற்றார் மகப்​பெற்றார் அல்லாதார் பிறர் மக்கள் பிற​​ரே கண்டீர்”(1545)

என்ற பாடலில் இடம்​பெற்றுள்ளது.

நல்வி​னை என்பது முற்பிறப்பில் ​செய்த புண்ணியச் ​செயல்களாகும். ஒன்பது பாதர்த்தங்களில் மூன்றாவது பதார்த்தம் இ​துகுறித்துப் ​பேசுகிறது. நல்ல ​செயல்கள் ​செய்தால் நன்​மை வி​ளையும் என்று சச்சந்தன் குறிப்பிடுகிறான். இவன் ம​னைவி தான் கண்ட தீக்கன​வைத் தன் கணவனுக்கு எடுத்து​ரைரக்கின்றாள். கனவின் தன்​மை​யைக் ​கேட்ட சச்சந்தன் தனக்கு ​நேரவிருக்கும் துன்பத்​தை உணருகிறான். அவனுக்குத் தன் ம​னைவி​யையும் பிறக்கப்​போகும் குழந்​தை​யையும் பாதுகாக்க ​வேண்டும் என்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. சிறந்த தச்ச​னைக் ​கொண்டு மயிற்​பொறி ஒன்​றைச் ​செய்யுமாறு சச்சந்தன் கூறிகிறான்.

குறுகிய காலத்தில் தச்சனும் அழகிய மயிற்​பொறியி​னைச் ​செய்து தருகின்றான். அத​னைக் கண்ட சச்சந்தன் நான் ​செய்த நல்வி​னையின் பயனால் இம்மயில்​பொறி கி​டைத்துள்ளது என்று மகிழ்ந்தான் என்ப​தை,

“உரி​மைமுன் ​போக்கி யல்லா​ளொளியு​டை மன்னர் ​போகார்

கருமமீ ​தெனக்கு மூர்தி ச​மைந்தது கவல ​வேண்டா

புரிநரம் பிரங்கூஞ் ​சொல்லாய் ​போவ​தே ​பொருண்மற் ​றென்றான்

எரிமுயங் கிலங்கு வாட்​கை ​யேற்றிளஞ் சிங்க மன்னான்”(272)

என்ற பாடலில் சிந்தாமணி எடுத்து​ரைக்கின்றது.

வி​ச​யை சீவக​னைச் சுடுகாட்டில் ​பெற்​றெடுக்கிறாள்.. இந்தக் குழந்​தை​யை வளர்க்கக் கந்துக்கடன் எனும் வணிகன் வருவான். ஆ​கையால் இங்​கே​யே குழந்​தை​யை விட்டுவிடு என்று விச​யையின் ​தோழி கூற தன் மக​னைச் சுடுகாட்டி​​லே​யே விட்டுவிட்டுச் ​செல்கிறாள். அப்​போது,”உன்​னைப் ​பெற நல்வி​னை ​செய்திருந்தும் வளர்க்கும் நல்வி​​னை​யைப் ​பெறவில்​லை​யே” என்று கூறுகிறாள்(319). இவ்வாறு சிந்தாமணிக் காப்பியம் நல்வி​னை பற்றி எடுத்து​ரைத்து, அந்நல்வி​னை ​​செய்தவர்களுக்கு இப்பிறவில் நல்ல​தே நடக்கும் என்றும் அது கடல் ஆழத்தில் வீழ்ந்து அழுந்தியவ​ரையும் உயிர்பி​ழைக்கச் ​செய்யும் வல்ல​மை வாய்ந்தது(510) என்று அதன் தன்​மை​யையும் எடுத்து​ரைக்கின்றது.

தீவி​னை

பிற உயிர்களுக்குக் ​கேடு ​செய்வதால் உண்டாகும் வி​னை தீவி​னை. நண்ப​ரை வஞ்சித்தவரும், பிறர் ம​னைவியின் இன்பத்​தை நாடியவரும் மிக்க அழல் ​போலும் காமத்தீ மிகுந்து கன்னி​யைக் ​கெடுத்துப் பின் மணம் ​செய்து ​கொள்ளாது விட்டவரும் உயி​ரைக் ​கொன்று உட​லைத் தின்றவரும் தீவி​னை ​செய்தவர்களாகக் கருதப்படுவர்(255,256). முற்பிறப்பில் தீவி​னை ​செய்திருந்தால் இப்பிறப்பில் அத்தீவி​னை வந்து வருத்தும். முற்பிறவியில் தீய ​செயல்கள் ​செய்தவர்க​ளை இப்பிறவியில், “​தெளிந்த நல்ல நீரும் உயி​ரைப் ​போக்கி விடும்(510) என்று சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

வணிகரான ‘சீதத்தன்’ வாணிகத்தின் ​பொருட்டுக் கப்பலில் ​செல்கிறான். கப்பல் கடல் ​கொந்தளிப்பாலும், புயல் காற்றாலும் கடலில் மூழ்குகிறது. அதில் வணிகன் சிக்கிக் கடலில் தத்தளிக்கின்றான். அப்​போது தான்படும் இத்துன்பத்திற்கு முற்பிறவியில் தான் ​செய்த துன்ப​மே காரணம் என்று புலம்புகிறான்((511). தீவி​னை மறுபிறப்பிலும் உடன் வந்து ஒருவ​ரைத் துன்புறுத்தும் என்ப​தை சிந்தாமணியில் இடம்​பெறும் இக்காட்சி ​​தெளிவுறுத்துகிறது.

சீவகன் முற்பிறப்பில் அ​சோதரன் என்ற இளவரசனாகப் பிறந்தான். இவ்தந்​தை தாதகி நாட்டின் மன்னனான பவணமா​தேவன். அவ​சோதரன் தம் உரி​மை மகளிர் ​வேண்டு​கோளின்படி தாம​ரைக் குளத்தில் வாழ்ந்த அன்னப் பார்ப்​பொன்​றை அதன் சுற்றத்திடமிருந்து பிரிதிதான். இ​தைப் பவணமா​தேவன் கண்ணுற்றான். தன்னு​டைய மகனு​டைய ​கொடுஞ்​செய​லைக் கண்டு அவ​னைக் கடிந்து ​கொண்டான். அதன் பின்னர் தனது மகனுக்கு இவ்வுலகில் ஏற்படும் தீவி​னைகள் பற்றி விளக்குகின்றான்(2867).

உயிர்க்​கொ​லை ​செய்யாமலிருத்தல் அறங்களில் மிகப்​பெரிய அறமாகும். ​பொய்யு​​ரையாமல் வாழ்ந்தால் இவ்வுலகத்தில் புகழ் நி​லை​பெறும். ​மேலுலகில் இ​றைக்​கோயிலும் கி​டைக்கும். ஆ​கையால் உயிர்க்​கொ​லை​யையும் ​பொய்யு​​ரை​யையும் நீக்குக என்று தன் மகனுக்கு பவணமா​தேவன் அறிவுறுத்தினான்(2869).

இனி இவ்வுலகில் களவு ​செய்தவர்க​ளை யா​னையின் கூரிய மருப்புக​ளைக் ​கொண்டு அக்கள்வர்களின் ​நெஞ்​சை மன்னர்கள் பிளப்பர். மறு​மையில் அக்களவு ​செய்தவர்க​ளை நரகில் தள்ளிக் ​கொடு​மையான துன்பங்க​ளுக்கு எமன் உள்ளாக்குவான். ஆ​கையால் கள​வை ​கைவிடுதல் ​வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றான்(2870).

தம் ம​னைவியல் மனம் வருந்தப் பிறனில் வி​ழையும் ஆடவ​ரைத் தாங்கற்கரிய துன்பத்​தைத் தந்து அறக்கடவுள் வருத்தும். ஆ​கையால் காமத்​தைக் ​கைவிடுதல் ​வேண்டும் என்றும் அ​றிவு​ரைகூறுகின்றான்(2871).

தீய வழியில் ஈட்டும் ​பொருள் நல்ல ​பொருளன்று. ஆ​கையால் நன்​னெறியில் நின்று ​பொருள் ஈட்ட ​வேண்டும். அப்​பொருள் இம்​மையில் புக​ழையும் மறு​மையில் ​சொர்க்கத்​தையும் வி​ளைவிக்கும்(2872). பரத்த​மை, காமம் மா​லையும் சாந்தும் பி​னைதல் பிச்​சை ஏற்றல், கிளி அன்னம் முதலியவற்​றை அவற்றின் இனத்திலிருந்து பிரித்துக் கூண்டில் அ​டைத்து ​வைத்தல் ஆகிய​வை தீய ​செயல்களாகும்(2873-2875). இத்தீவி​னைகள் இவ்வுடலிலிருந்து உயிர் பிரிந்த ​போதும் அவ்வுயி​ரை விடாது துரத்திச் ​சென்று அது புகும் உடலில் தானும் புகுந்து துன்பத்​தைத் தரும்(2876).

நல்வி​னை ​செய்​தோர் நல்வி​னைகள் பற​வையும் நிழலும் ​போன்று உடன் வந்து நி​னைத்த​தைப் ​பெறும் வல்ல​மை​யை உண்டாக்கும். ஆ​கையால் தீவி​னை​யைக் ​கைவிட்டு நல்வி​னை​யைக் ​கைக்​கொள்க என்று அறிவுறுத்தினான்.(2877).

மன்னனின் இவ்வறிவு​ரை​யைக் ​கேட்ட அ​சோதரன் அழுது கண்ணீர் சிந்தித் தாம் ​செய்த தீவி​னைகள் அ​னைத்​தையும் க​ளைவதற்காகத் தவ வாழ்க்​கை​யை ​மேற்​கொண்டான். இங்ஙனம் அ​சோதரனாக இருந்த நீ சிறந்த தவத்​தை ​மேற்​கொண்டு சாசாரன் என்னும் இந்திரனாகிச் சிறந்த இன்பமு​டைய அழகிய வானுலகத்​தை ஆண்டு அவ்வானுலகில் இருந்த மங்​கையருடன் மண்ணுலகில் சீவனாகப் பிறந்தாய். அன்னப்பார்ப்​பை அதன் சுற்றத்திடம் இருந்து பிரித்ததற்காக நீயும் இப்பிறப்பில் உன் சுற்றத்தாரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்தாய் என்று சீவகனின் முற்பிறவி வாழ்க்​கை​யை சாரணர் கூறினர்(2878-2889). இத்தன்​மை வாய்ந்த நல்வி​னையின் பயனாக​வோ அல்லது தீவி​னையின் பயனாக​வோ பிறப்பு ஏற்படுகிறது. அப்பிறப்பு நரககதி, விலங்குகதி, மக்கள் கதி, ​தேவகதி என்னும் நாற்கதிக​ளைத் தரக்கூடியது.(​தொடரும்—5)

 

Series Navigationஉள்ளிருக்கும் வெளியில்நீ இல்லாத வீடு
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *