This entry is part 10 of 48 in the series 15 மே 2011
 

வெளிறிய கோடை இலைகளே.. 

வறண்டு போன

நடை பாதைகளே..

நீருடை பூணும்

கானல்களே..

ரத்தமற்று சுருங்கிப் போன

நதி தமநிகளே..

கருகி விழுந்த

பூவிதழ்களே..

எனதிந்த

வெற்றுக் காகிதங்களிடம்

இனிவரும்

வசந்தத்தின் பெயரை மட்டும்

சொல்லுங்கள்..

*

***

Series Navigationஅரூப நர்த்தனங்கள்ஒரு பூவும் சில பூக்களும்