This entry is part 15 of 46 in the series 19 ஜூன் 2011

கட்டங்கள் வரைந்து

சொற்களை உள்ளே இட்டேன்

அவற்றுக்குள் தொடர்பு

ஏற்படுத்த கோடுகள் இழுத்தேன்

கட்டங்கள் ஒன்றோடொன்று

இணைந்தன

சொற்கள் அடைபட்டுப்போய்

பேச மறுத்தன

கட்டங்களை நீக்கி விட்டு

சொற்களையும் கோடுகளையும்

இணைத்து விடலாம் என

எண்ணினேன்

கட்டி வைத்த சொற்களும்,

இணைக்க இழுத்த கோடுகளும்,

ஒட்ட மறுத்தன

மீண்டும் கட்டங்களை

வரைந்தபோது அந்த அதிசயம்

நிகழ்ந்தது.

கட்டங்களும், இணைப்புக்கோடுகளும்

ஒரு சேரக்காணாமல் போயின

எஞ்சிய சொற்கள்

என்னைக்கேலி

செய்து கொண்டிருந்தன.

 

– சின்னப்பயல் ( chinnappayal@gmail.com )

 

Series Navigationமுதுகெலும்பா விவசாயம் ?இரண்டு கவிதைகள்