This entry is part 24 of 46 in the series 26 ஜூன் 2011

ஆள்காட்டி மழை

ஜன்னல் கம்பிகளில்
தொற்றிக்கொண்டிருந்த
மழை நீரை
ஆள்காட்டி விரல் கொண்டு
ஒரு முனையிலிருந்து
மறுமுனை வரை
அழுத்தி வடித்து விட்டேன்.
மறு நாள் மழை
வரவில்லை.
ஆள்காட்டி விரல்
காரணமாயிருக்குமோ ?

அஞ்சறைப்பெட்டி

அஞ்சறைப்பெட்டியில்
அம்மா போட்டு வைத்த
மீதக்காசில்
சீரகத்தின் மணமும்
கடுகின் வாசமும்
வெந்தயத்தின் நெடியும்
மஞ்சள்பொடியின் கமறலும்
மிளகின் காரமுமாக
அடித்த வாசம்
இன்னும் என் மனதினுள்
வட்டமடிக்கிறது
அந்தக்காசில்
வாங்கித்தின்ற
மிட்டாயின் மணம்
ஏனோ நினைவில் இல்லை.

சின்னப்பயல்
– chinnappayal@gmail.com

Series Navigationஒரு புளியமரத்தின் கதை: திரு.சுந்தர ராமசாமிகாகித முரண்