Posted in

சொர்க்கமும் நரகமும்

This entry is part 3 of 54 in the series 4 செப்டம்பர் 2011

நீள் பயணங்களில்
நெரியும் சனத்திரளில்
பாரம் தாங்கமுடியாமலோ
பத்திரமாய் உறங்கட்டுமெனவோ

நம் மடிமீது வலிய
இறுத்தப்படும் குழந்தையின்
எப்போதாவது இதமாய்
உந்தும் பிஞ்சுப்பாதம்
இதழ்வழியே தவழ்ந்து
ஈரமூட்டும் எச்சிலமுதம்
கனவுகளில் தேவதைகள்
கூட்டிடும் குறுஞ்சிரிப்பென
என்னதான் சொர்க்கத்தை மீட்டினாலும்

இறுதியாய் எப்போது
சிறுநீர் கழித்திருக்குமென
நச்சரிக்கும் சிந்தனை
நரகத்திலிருந்து
தப்பிக்க முடிவதில்லை
பல நேரங்களில்!

Series Navigationஅப்பா…! அப்பப்பா…!!வண்ணார் சலவை குறிகள்

One thought on “சொர்க்கமும் நரகமும்

Leave a Reply to ramani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *