விருந்து

This entry is part 7 of 37 in the series 23 அக்டோபர் 2011

ஒரு நன்கொடைத்
திரட்டுக்காக
அந்த இரவு விருந்தாம்
பத்துப் பேர் மேசைக்கு
இரண்டாயிரம் வெள்ளி

பொரித்த முழு குருவா மீன்
எராலுடன் கனவாய்
தந்தூரிக் கோழியுடன்
முந்திரி வருவல்
வறுத்த சேமியா
பொரித்த சோறுடன்
புரோகோலி சூப்
விருந்து நிறைந்தது

வீட்டுக்கு வந்ததும்
பசியைக் கிளப்பியது விருந்து
பொன்னி அரிசிச் சோற்றில்
பூண்டு ரசம் விட்டு
ஒரு பிடி பிடித்த பின்தான்
வயிறு நிறைந்தது
அமீதாம்மாள்

Series Navigationஒரு படைப்பாளியின்வலியை தன்வலியாய் உணர்ந்து எழுதிய எழுத்துவீட்டுக்குள்ளும் வானம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *