திராட்சைக்கண்களுடன்
என்னை நீ
திருடிச்சென்ற பிறகு
இந்த பூங்காவே வெறுமை.
பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின.
காதலைப்பற்றி
உருகி உருகிச்சொல்ல
காளிதாசனைத் தான்
வாடகைக்குக்கு கூப்பிட்டேன்.
எழுத்தாணி துருப்பிடித்துக்கிடக்கிறது
பாலிஷ் போட வேண்டும் என்றான்.
கடிதம் எழுதினால்
ஆபாசம் என்பார்களே.
அதனால்
கவிதை தொகுதி வெளியிட்டேன்.
இப்போது
எல்லோரும் உன்னைத்தான்
வாசித்து வாசித்து
மேய்கிறார்கள்.
இன்டர்னெட் பரிணாமத்தில்
இப்போது
செவியில் தான் இதயம்.
செல் விட்டு செல் தாவும்
வண்டுகளுக்கும் பஞ்சமில்லை.
உன் “ஐ லவு யூ டா”
எங்கெல்லாம்
சிந்தி சிதறிக்கிடக்கிறது பார்!
ப்ரைவெசி கொள்ளை போனது.
மயில்ராவணனிடம் சொல்லி
கடலுக்குள் தான்
ஒரு கூடு கட்ட வேண்டும்.
நிலாவுக்குள்
இந்த சொற்களையெல்லாம்
கொட்டி கொட்டி
எத்தனை தடவை தான்
“தண்ணியடிப்பது”
நாற்றம் தாங்கவில்லை என்று
மயில்சாமி அண்ணாத்துரை
கோபித்துக்கொள்வார்.
கனவுக்குள் மட்டுமே இனி
கருவறை கட்டுவோம்.
அப்பா அம்மாக்கள் என்றாலே
ஜுராஸிக் பார்க் தான்
என்பது பழைய இலக்கணம்.
கொலவரியுகத்தில்
அப்பா அம்மாக்கள் காதுகளிலும்
“நீலப்பற்கள்” தான்.
கடிக்காது.பயப்படாதே
சொல்லி விடலாம்.
டீன் ஏஜ் நடத்தும்
இந்த “ஹங்கர் கேம்ஸ்”ல்
வில்லும் அம்பும்
கரும்பில் செய்தது தான்.
ஒரு துரும்புக்கும்
இங்கு காயமில்லை.
நமக்குள் மட்டுமே
ஊமைத்தீ.
==============================
- புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012
- தங்கம் 3 – தங்க விலை ஏற்றம்
- சென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்!
- பஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்
- 2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.
- மங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி ?
- கையோடு களிமண்..!
- ஆலிங்கனம்
- எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9
- புரட்சி
- நிபந்தனை
- சின்ன மகள் கேள்விகள்
- பழமொழிகளில் தெய்வங்கள்
- முள்வெளி அத்தியாயம் -5
- ஒப்பனை …
- பிறந்தாள் ஒரு பெண்
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்
- அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012
- தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ?
- ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012
- சுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்
- ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை
- கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
- சாதிகளின் அவசியம்
- வாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்
- ஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20
- மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22
- கலீல் கிப்ரானின் நியாயங்கள்! (சட்டம்)
- கடவுள் மனிதன்.
- கண்ணால் காண்பதும்…
- தூரிகை
- ஊதாப்பூக்கள் கண்சிமிட்டவில்லை
- நிகழ்வு
- உதிரும் சிறகு
- சூல் கொண்டேன்!
- தூறலுக்குள் இடி இறக்காதீர்
- விஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்
- ஆர்ய பட்டா மண்
- பவித்திரனின் “ மாட்டுத்தாவணி “
- அம்மா
- விபத்தில் வாழ்க்கை
- இந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை
ஒரு பத்து வருடம் தள்ளிப் பிறந்திருந்தால் தங்களுக்கு இன்னும் வசதியாக இருந்திருக்கும்…..என்ன எங்களுக்கு ஒரு கவிதை கிடைத்திருக்காது….ஹி..ஹி….
அன்புள்ள சோமா அவர்களே
கவலை வேண்டாம்.இன்றைய இளைய யுகம் விஞ்ஞான யுகம்.நம் டி.என்.ஏ இழைக்குறியீட்டை பையோ சிப்பில் நியூரானாக்கி விண்வெளி மமெரிஃஸ்பேரில் சீடிங்க் (SEEDING) செய்து விட்டால் நாம் காலத்தை வென்று விடலாம்.உங்களைப்போன்ற இளைய தலைமுறைகள் அந்த உயிரியல் துகள் இயற்பியலில் (பையோ பார்டிகிள் ஃபிஸிக்ஸ்)நிறைய சாதிக்க இருக்கிறீர்கள்.சூப்பர் சிம்மட்ரி கோட்பாட்டில் எலக்ட்ரான் ப்ரொட்டான் ஃபோட்டான் குளுவான் துகள் வேறுபாடுகள் மறையும் நாள் வெகு தொலைவில் இல்லை.(நிறையின் உள் ரகசியம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதாவது ஹிக்ஸ் போஸானை இனம் பிரித்து விட்டால்)நாம் குவாண்டம் டெலிபோர்டேஷன் மூலம் எல்லா வயதுகளுக்குள்ளும் போய் வரலாம்.இந்த இளந்தலைமுறை விஞ்ஞானிகளிடம் இந்த கனவு நிறைவேறும் சாத்தியக்கூறு நிச்சயம் உண்டு.
அன்புடன்
ருத்ரா