Posted in

தங்கம்மூர்த்தி கவிதை

This entry is part 3 of 41 in the series 23 செப்டம்பர் 2012

தங்கம்மூர்த்தி

எனக்கே
எனக்கென்றிருந்த
ஒரே ஒரு நட்சத்திரமும்
நேற்றிரவு
திருடு போய்விட்டது.

நெடுவானில்
தவித்தபடி அலையும்
என்னைக்
கவ்விக்கொள்கிறது
இருள்.

இருளோடு
இணைந்து பயணித்து
ஒளி தேடி அலைந்து
களைத்து
இருளுக்குள்
இருளாகிறேன்

புலரும் கலை
புரியாமல்.

Series Navigationபயண விநோதம்விடுதலையை வரைதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *