This entry is part 1 of 31 in the series 10 பெப்ருவரி 2013

எமி ஹயகாவா

பௌத்த கோவில்களையும் அதன் ஆவணங்களையும் கொரிய கிறிஸ்துவர்கள் அழிப்பதும் தீ வைத்து கொளுத்துவதும் அதிகரித்து வருகிறது. நாம்டேமுன் வாசல் என்ற இடத்தில் நடந்த பேரழிவுக்கு பிறகு கலாச்சார சொத்துக்களையும் தேசிய சொத்துக்களையும் பாதுகாக்க பல சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டாலும், கொரியாவின் பௌத்த கோவில்களையும் அதன் கலாச்சார சொத்துக்களையும் தீவைத்து அழிப்பதும், நாசம் செய்வதும் தொடர்ந்து நடக்கிறது.

beomeo2012 அக்டோபர் 4ஆம் தேதி ஹ்வாம்ஸா கோவிலின் காக்வாங்ஜெஒன் (Gakhwangjeon Hall of Hwaomsa Temple in Gurye County, Korea) ஹால் சில கிறிஸ்துவர்களால் தீவைத்து அழிக்க முயற்சி செய்யப்பட்டது. பௌத்த துறவிகளால் உடனே கண்டுபிடிக்கப்பட்டதாலும், 2008இல் தீ தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதாலும் வாசல் மட்டுமே சிறிது அழிக்கப்பட்டது.

கண்காணிப்பு தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில், ஒரு மனிதன் ஹால் முழுக்க பெட்ரோலை ஊற்றுவதையும்,அவன் தீக்குச்சி உரசி போடுவதையும் பார்த்த பார்வையாளர்களும் சொல்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் காரணமாக, கொரிய புத்த சமூகம் மீண்டுமொருமுறை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. கொரியாவின் கலாச்சார சொத்துக்களை காக்க இன்னும் தீவிரமான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று போராடிகொண்டிருக்கிறது.

மேலும், ஆகஸ்ட் 20ஆம் தேதி 2012இல் ஒரு புராடஸ்டண்ட் பாஸ்டர் ஸியோங் (Seong) டோங்வாஸா கோவிலின் தர்மா ஹாலை அசிங்கப்படுத்தினார். இந்த பாஸ்டர் சூன்போகெம் சர்ச்சின் பாஸ்டர். இவர் தர்மா ஹாலில் மூத்திரமடித்ததையும், அங்கிருந்த புராதன பௌத்த ஓவியங்கள் மீது அழியாத மை கொண்டு தேய்த்ததையும் பார்த்து பிடிபட்டார்.இவரது தீச்செயல்களும், தர்மா ஹாலில் உள்ள cctv படம் பிடித்திருக்கிறது.

 

பௌத்த சமூகம் இந்த செயல்களால் அதிர்ச்சியடைந்திருக்கிறது. சட்ட ஒழுங்கு அதிகாரிகள் இந்த செயல்களுக்கு தக்க தண்டனை தரவேண்டும் என்றும், இது வெறுமே அனுமதியில்லாத இடத்தில் நுழைந்ததற்காக இருக்கும் சாதாரண தண்டனையை வழங்கி விட்டுவிடக்கூடாது என்றும் கோரிவருகிறது.

ஏற்கெனவே இந்த கிறிஸ்துவ பாஸ்டரை மனநலமில்லாதவர் என்று சாக்கு சொல்லி போலீஸ் விடுவித்துவிட்டது. கொரிய அரசாங்கமும், போலீஸ் சட்ட ஒழுங்கு துறையும் பௌத்த கோவில்களையும் தேசிய சொத்துக்களையும் அழிக்க துணை போகின்றது என்று கருதும் பௌத்த சமூகம் மிகுந்த கோபமடைந்துள்ளது.

நவம்பர் 2011இல் the stupa of National Preceptor Jigwangguksa of Beopcheonsa temple, என்னும் பேஒப்சேனொன்சா கோவிலின் ஸ்தூபம் அசிங்கம் செய்யப்பட்டது. அதன் மீது பெரிய சிலுவை வரையப்பட்டது. இந்த படம் கிறிஸ்துவர்களின் பேஸ்புக் பக்கங்களிலும் ட்விட்டர் பக்கங்களிலும் பகிரப்பட்டது.

2(1)இதே போல நவம்பர் 2011இல் ஹவேண்டே அருகே உள்ள புஸான் என்ற நகரில் நான்கு புத்த கோவில்கள் இது போல கிறிஸ்துவர்களால் அசிங்கம் செய்யப்பட்டன என்று கோவில்கள் புகார் செய்தன. கொரிய கிறிஸ்துவர்கள் புத்த சிலைகள் மீது சிவப்பு சாயத்தை பூசி அசிங்கம் செய்திருந்தார்கள்.

3(1)-1-1197736710

பௌத்த கோவில்கள் மீது தேசிய கலாச்சார சொத்துக்கள் மீதும் பல வருடங்களாக கிறிஸ்துவர்கள் அழிப்பையும் தீவைப்பையும் அசிங்கம் செய்வதையும் செய்து வருகிறார்கள். இதுவே கொரிய மத சமூகங்களிடையே மதநல்லிணக்கம் குலைவதற்கு காரணமாக இருக்கிறது.

1(1)

”1907 மீண்டும் புஸான்” என்ற விழாவை ஜூன் 2006இல் கொரிய கிறிஸ்துவர்கள் கொண்டாடினார்கள். அப்போது அந்த கிறிஸ்துவர்கள் பகிரங்கமாகவே புஸான் பகுதியில் இருக்கும் எல்லா பௌத்த கோவில்களும் புத்த மடங்களும் அழிக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். இந்த விழாவுக்கு கொரிய ஜனாதிபதி லீ ம்யுன்பாக் Korean President Lee MyungBak முக்கிய விருந்தாளியாகவும் இருந்ததை கண்டு கொரிய குடிமக்கள் மனம் நொந்தார்கள்.

பெப்ருவரி 2011இல் மூன்று கிறிஸ்துவ பாஸ்டர்கள் ஜோக்யே கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த பௌத்த துறவிகளை “இயேசுவை நம்பு. நாம் (கொரியர்கள்) அனைவரும் கடவுளின் பிள்ளைகள்“ என்று ஆணையிட்டது பெரிய பிரச்னையை உண்டுபண்ணியது.

2010இல் கிறிஸ்துவ மதத்தை சார்ந்த பாஸ்டரும் கல்லூரி மாணவர்களும் போங்ஜேஉன்ஸா கோவிலுக்குள் நுழைந்து அங்கு புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவ சடங்குகளை நடத்த ஆரம்பித்தார்கள். எல்லா நிலமும் இயேசுவுக்கே என்று சடங்கு நடத்தினார்கள்.

இது யூட்யூப் மற்றும் இணையம் முழுவதும் பகிரப்பட்டது.

இது போன்று கொரியாவில் நடக்கும் அசிங்கப்படுத்தல்களும், பௌத்த ஆலயங்களை அழிப்பதும் பௌத்தர்கள் கொரியாவில் பாரபட்சம் காட்டப்படுகிறார்கள் என்ற எண்ணத்தை வலுவடையச்செய்கிறது. மத நல்லிணக்கம் வேண்டுமென்றால், கொரிய கிறிஸ்துவர்களும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களும் இவ்வாறு அசிங்கங்கள் செய்வதை நிறுத்த வேண்டும்.

மூலம்

உபரி இணைப்பு

தம்மாடைம்ஸ் 2002 செய்தி

 

Series Navigationபலுச்சிஸ்தான் இந்துக்களின் வெளியேற்றம்