(Song of Myself)
வாழ்வின் அர்த்தம் என்ன ?
(1819-1892)
(புல்லின் இலைகள் –1)
மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா
இதுதான் அந்த நகரம் !
அதனில் நானொருக் குடிப்பிறவி !
அரசியல், போர், கல்விக்கூடம், செய்தித் தாள்,
அங்காடி வாணிப நிலவரம்,
எவையெலாம் பிறருக்கு விருப்பமோ
அவை எனக்கும் விருப்பமே !
நகராண்மை அதிபர், உறுப்பினர்,
வங்கிகள், நீராவிக் கப்பல், தொழிற்கூடங்கள்,
சுங்க வரிகள்,
ஏற்றுமதி, இறக்குமதி வாணிபங்கள்
வீடு, கடை, நில விற்பனை;
என்ன வென்று அறிவேன்,
என்னைப் போலிருக்கும்
இரட்டையரை அறிந்து கொள்வேன்;
பலவீனரை,
ஆழ்மனம் இல்லாதவரை
அறிவேன்;
மரண மில்லை அவர்க்கும்
என்னைப் போல் !
நான் சொல்வதும், செய்வதும் கூட
பொறுத்தி ருக்கும் அவர்க்கு !
எனக்குத் தடுமாறும் ஒவ்வோர் எண்ணமும்
அவர்க்கும் தடுமாறும்.
எனக்கு நன்கு தெரியும்
என் தற்பெருமை முரசடிப்பு,
கண்டதைப் புசிப்பது,
இவற்றைக் குறைத்துக்
கூற முடியாது என்னால் !
கொடுத்திடச் சுமந்து வருவேன்
எனக்குத் தோழனாய்
இருப்போ னுக்கு.
எனது இப்பாடல்
வாடிக்கை யான வேடிக்கை
வார்த்தைகள் அல்ல !
நேரடி வினாவைக் கேட்பவை
அண்டையில் உள்ள வற்றைத் தாண்டி
அப்பால் செல்பவை !
எப்போதும் வானவெளி மேலே
இருக்குது !
ஆயினும் இங்கே,
அடுத்த வீட்டு வாசலில்,
எதிர்த்த தெருவில்
புனிதர்கள்
வரலாற்று முனிவர்கள்
வசித்து வருகிறார் !
ஆனால் நீ
நீயாக இருக்கிறாயா
மதப் போதனைகள், சமயத் தத்துவங்கள்,
திருமறை நியதிகள்
இருந்தும் ?
ஆயினும் ஆழம் காண முடியா
மானிட மூளை !
ஏன் என்று கேட்ப தென்ன ?
காதல் என்ப தென்ன ?
வாழ்வின் அர்த்தம் என்ன ?
+++++++++++++
தகவல்:
- The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
- Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
Cowley [First 1855 Edition] [ 1986] - Britannica Concise Encyclopedia [2003]
- Encyclopedia Britannica [1978]
- http://en.wikipedia.org/wiki/
Walt_Whitman [November 19, 2012] - http://jayabarathan.wordpress.
com/abraham-lincoln/
[ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]
********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (July 9, 2013)
http://jayabarathan.wordpress.
- கதவு
- விடுப்பு
- மருத்துவக் கட்டுரை தற்கொலை முயற்சி
- புகழ் பெற்ற ஏழைகள் 15. உலகை உலுக்கி அச்சுறுத்திய ஏழை
- தாகூரின் கீதப் பாமாலை – 73 பரிவான விருந்தோம்பல் .. !
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து…………27 சி.சு. செல்லப்பா – ‘ நீ இன்று இருந்தால்’
- வால்ட் விட்மன் வசனக் கவிதை -32 என்னைப் பற்றிய பாடல் – 25
- போதி மரம் சத்யானந்தன் பாகம் 2 – புத்தர் அத்தியாயம் 28
- நீங்காத நினைவுகள் – 10
- வேதாளத்தின் மாணாக்கன் (The Devil’s Disciple) அங்கம் -3 பாகம் -10 மூன்று அங்க நாடகம்
- கூரியர்
- மாற்றுக் கோணம் : எதிர்த்தோடிகளின் குரல்- 01 ஒடுக்கப்படுவோரின் விடுதலைக்கான உரையாடல்வெளி….
- வேர் மறந்த தளிர்கள் – 17,18,19
- முப்பத்தாறு ஆண்டுகளில் பரிதி மண்டலம் தாண்டி 11 பில்லியன் மைலுக்கு அப்பால் பால்வீதி ஒளிமீன்கள் அரங்கம் புகுந்த நாசாவின் முதல் விண்வெளிக் கப்பல்
- குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 18
- சாத்தானும் சிறுமியும் _ ‘யூமா வாசுகி’யின் கவிதைத் தொகுப்பு _ வாசக நோக்கில்
- உமா மகேஸ்வரி கவிதைகள்: ‘இறுதிப் பூ’ தொகுப்பு வழியாக…
- வாழ்வு எனும் விளையாட்டு மைதானம்
அருமையான அழகுத் தமிழில் கவி பாடியுள்ளீர்கள் கவிஞர் ஜெயபாரதன் அவர்களே ! அறிவியல்., விண்வெளி , நாடகம் ,கவிதை வரி என எழுதிக் குவிக்கும் முத்தமிழ் வித்தகரே! …’டாக்டர் ஜி.ஜான்சன்.
நண்பர் டாக்டர் ஜி. ஜான்ஸன்,
தமிழில் கசப்புள்ள மருத்துவக் கட்டுரைகளையும், மெய்க் கதைகளையும் தொடர்ந்து திண்ணையில் சுவைப்பட எழுதுபவர் நீங்கள் ஒருவர்தான். கோடியில் ஒருவர். அதற்கு எனதினிய பாராட்டுகள்.
உங்கள் பாராட்டுக்கு எனது பணிவான நன்றி.
சி. ஜெயாரதன்.