This entry is part 1 of 21 in the series 15 ஜூன் 2014
ஸ்வரூப் மணிகண்டன் 

நிலா தெரியாத இரவில்
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருந்தோம்.
பின்
நிலவு தெரிந்த பொழுதில்,
எண்ணி முடித்த
நட்சத்திரங்களைப் பறித்து
நமது தோட்டத்தில்
நட்டு வைத்தோம்.
விரிந்து நிற்கும்
நட்சத்திரங்களின் வாசத்தில்
மயங்கி நின்றது
நிலவும்.
Series Navigation