- வழிகாட்டிக்குறிக்கோள்கள் சில….
இடையறாது வெறுப்புமிழ்ந்துகொண்டேயிருக்கவேண்டும்
இருபதாயிரம் பக்கங்களிலிருந்து இரண்டேயிரண்டு பக்கங்களை
திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டவேண்டும்;
ஆகாயவிமானத்தில் பறந்தவண்ணமே
அதலபாதாளத்தில் புதைக்கப்பட்டிருப்பதாய் அடித்துப்பேச வேண்டும்;
அப்பாவிகளாய்ப் பார்த்து அறுக்கப்படும் தலைகளைக் கண்டு
குறையாத உவகைகொள்ளும் உலகளாவிய அன்பு மனம் வேண்டும்
புரையோடிய வன்மத்தில் யாரோ எழுதிய அற்ப வாசகத்தைத் தப்பாமல்
தன் முகநூலில் பதிவேற்றம் செய்து யுகப்புரட்சி செய்துவிட வேண்டும்!
பொறுப்பேற்பில்லா அரியாசனத்தில் பெருமையோடு அமர்ந்துகொள்ள வேண்டும்
’குரலற்றவர்களின் குரலாக’த் திகழும் அதிகாரப் பெருவிருப்பில்
கழுத்துகளைக் கணக்கெடுத்துக் கயிறா லிறுக்கியபடியே கவிதை யெழுத வேண்டும்!
*****
- ரத்தக்காட்டேரியும் பட்டாம்பூச்சியும்
பட்டாம்பூச்சியின் மென் இறகுகளை ஒவ்வொன்றாய்ப் பிய்த்தெறிந்தபடியே
ஒரு தொழில்முறைக் கொலையாளியின் துல்லியத்தோடு
அவள் அறிவிக்கிறாள்:
“என்றாவது நீ பட்டாம்பூச்சியைப் பிரியத்தோடு பிடிக்க முயற்சி செய்திருக்கிறாயா?
என்றாவது அதை உன் கைவிரல்களுக்கிடையில் அன்போடு ஏந்தியதுண்டா?
இந்த அழகிய பூச்சியைப் பொருட்படுத்தி அதன் அருகே போகத்தான்
என்றேனும் அக்கறை காட்டியிருக்கிறாயா?
நான் இவற்றையெல்லாம் செய்திருக்கிறேன்; இதற்கு மேலும்.
எனவே இந்தப் பூச்சியை சித்திரவதை செய்ய நான் உரிமை படைத்தவள்;
வண்ணத்துப்பூச்சியை வதைப்பது என் விருப்பத்தேர்வு _”
பிரகடனம் செய்தபடியே
இதோ நவீனப்பிறவி, இதோ கற்கால வாதி என
பச்சோந்தியாய் நிறம் மாறியவாறு, தான்
முடமாக்கிய வண்ணத்துப்பூச்சி மீது
மாகவிதை ஒன்று எழுதி முடிக்கிறாள்.
மிகவான அச்சத்தின் பிடியில் நான் இங்கே
அவளுடைய அன்புக்குரியவர்களின் நலனுக்காய் பிரார்த்தித்தபடி….
*****
- நுண்ணுணர்வு
நடைபழகிக்கொண்டிருக்கிறேன்
அகவுலகப் பசும் எல்லையின்மையின் அகண்ட வெளியெங்கும்;
அங்கீகாரம் எனக்கும் என் தேடல்களுக்கும் இடையேயான
தேவையற்ற குறுக்கீடு;
கைத்தட்டல், பாராட்டு
படைப்பின் ஆனந்தத்திற்கு ஒருபோதும் பதிலியாகாது;
காலம் எல்லையற்ற எட்டு மணி சாகரமாக நிலைத்திருந்தது
கடிகாரம் தன் டிக் டிக் டிக் ஐ நிறுத்திவிட்டதை நான் உணரும் வரை;
இன்றிரவு நான் முழுவிழிப்போடிருப்பேனாக
கனவற்ற ஆழ் உறக்கத்தில்;
கவிதையில் சொற்கள்
தெய்வாதீன வனமொன்றில் முள்ளும் மலருமாக _
கவிதை எதுவுமே சொல்வதில்லை
வேறோர் கூடு பாயாதவரை
- மிதிலாவிலாஸ்-26
- தொடுவானம் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்
- மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்
- காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
- வீடெனும் பெருங்கனவு
- அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
- மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4
- காரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழா
- கெளட் நோய் ( Gout )
- பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி
- மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு
- ஆறாண்டு காலத் தவிப்பு –
- வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- சிவப்பு முக்கோணம்
- ‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
- சொல்லின் ஆட்சி
- எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?
- தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
- அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு
- சினிமா பக்கம் – பாகுபலி
- நேர்த்திக் கடன்
- நெசம்
- வழி தவறிய பறவை
- ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை
- கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்